தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு உடன் ‘அச்சம் என்பது மடமையடா’, உதயநிதியுடன் ‘இப்படை வெல்லும்’ மற்றும் கௌதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன்.
இந்த சூழ்நிலையில் கௌதம் கார்த்திக்குடன் மஞ்சிமா காதல் கொண்டுள்ளார் என செய்திகள் பரவியது. ஆனால் இந்த செய்திக்கு சமீபத்தில் மறுப்பு தெரிவித்தார் மஞ்சிமா.
இவர் அண்மையில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘எப்ஃஐஆர்’ படத்திலும் 3 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்த நிலையில் ‘எப்.ஐ.ஆர்’ பட இயக்குனர் மனுஆனந்த் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
இதனையடுத்து மனு ஆனந்திடம் உதவி இயக்குநர்களாக பணி புரிய வேண்டுமா? என விளம்பரம் கொடுக்கப்பட்டது.
எனவே… “மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்து… நான் ஏற்கனவே விண்ணப்பித்தேன். ஆனால் என்னை வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார்” என மஞ்சிமா பதிவு செய்துள்ளார்.
மஞ்சிமா பதிவுக்கு மனு ஆனந்த் கொடுத்த பதில் பதிவில்… ’நான் உங்களுடைய விண்ணப்பத்தை பெறவில்லை என்றும் ஒருவேளை இமெயிலில் அது தவறி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
This director rejects Manjima Mohan to this project