மஞ்சிமாவை மறுத்த பிரபலம்..; இன்னாது வேண்டாம்ன்னு சொல்லிட்டாரா?

மஞ்சிமாவை மறுத்த பிரபலம்..; இன்னாது வேண்டாம்ன்னு சொல்லிட்டாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு உடன் ‘அச்சம் என்பது மடமையடா’, உதயநிதியுடன் ‘இப்படை வெல்லும்’ மற்றும் கௌதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன்.

இந்த சூழ்நிலையில் கௌதம் கார்த்திக்குடன் மஞ்சிமா காதல் கொண்டுள்ளார் என செய்திகள் பரவியது. ஆனால் இந்த செய்திக்கு சமீபத்தில் மறுப்பு தெரிவித்தார் மஞ்சிமா.

இவர் அண்மையில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘எப்ஃஐஆர்’ படத்திலும் 3 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ‘எப்.ஐ.ஆர்’ பட இயக்குனர் மனுஆனந்த் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

இதனையடுத்து மனு ஆனந்திடம் உதவி இயக்குநர்களாக பணி புரிய வேண்டுமா? என விளம்பரம் கொடுக்கப்பட்டது.

எனவே… “மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்து… நான் ஏற்கனவே விண்ணப்பித்தேன். ஆனால் என்னை வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார்” என மஞ்சிமா பதிவு செய்துள்ளார்.

மஞ்சிமா பதிவுக்கு மனு ஆனந்த் கொடுத்த பதில் பதிவில்… ’நான் உங்களுடைய விண்ணப்பத்தை பெறவில்லை என்றும் ஒருவேளை இமெயிலில் அது தவறி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

This director rejects Manjima Mohan to this project

3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அப்டேட்

3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்தி பதவி வகித்தனர்.

அதன்பின்னர் கடந்த 2019ல் ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 3 வருடங்களாகவே நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் காத்து கிடக்கின்றன.

கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் தேர்தலை செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. இதனால் பதிவான வாக்குகள் அப்படியே எண்ணப்படாமல் இருந்தன.

தேர்தல் வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்பின்னர் ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு நாளை மார்ச் 20 சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாளை மதியம் அல்லது மாலைக்குள் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.

Nadigar Sangam election result will be announced tomorrow

‘கள்ளன்’ டைட்டிலுக்கு எதிர்ப்பு.. பெண் இயக்குனரிடம் ஆபாச பேச்சு…; சாதி அமைப்புகளை சாடிய சந்திரா

‘கள்ளன்’ டைட்டிலுக்கு எதிர்ப்பு.. பெண் இயக்குனரிடம் ஆபாச பேச்சு…; சாதி அமைப்புகளை சாடிய சந்திரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் நேற்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன.

‘கள்ளன்’ என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இது குறித்து பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ்…

“நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் பெரியார் மண்ணில் சாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மேலும் கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.

ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய அலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார். அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறான்

கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாதை” என்று கண் கலங்கினார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில்…

” ஒட்டுமொத்த தமிழ் திரையுலக பிரச்சினை இது. என் தனிப்பட்டப் பிரச்சனை அல்ல. எனவே இதை புரிந்து கொண்டு தமிழ் திரைப்படத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இந்த வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து இந்த படம் திரையரங்கில் வெளியிடுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.

இந்த திரைப்படத்திற்கு தணிக்கை துறை முறையாக ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அது மட்டுமின்றி இந்த அமைப்புகள் கேட்டபடி வருத்தம் தெரிவித்து கடிதமும் கொடுத்துள்ளோம். இத்தனைக்கும் பிறகும் சில சாதி அமைப்புகள் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட விடாமல் மிரட்டுவது அநீதியின் உச்சம்.

இனிமேல் ஒவ்வொரு தயாரிப்பாளரும் சாதி அமைப்புகளின் விதிகளுக்கு உட்பட்டு தான் படம் எடுக்க வேண்டுமென்றால் சென்சார் போர்டு எதற்கு? நாங்கள் எங்களுக்காக மட்டும் பேசவில்லை தமிழ் சினிமா தொடர்ச்சியாக இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று இருவரும் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தனர்.

Director chandra thangaraj says about kallan movie title issue

ஜூன் 17 முதல் ‘வீட்ல விசேஷம்’ நடத்த வரும் போனிகபூர்-ஆர்ஜே. பாலாஜி

ஜூன் 17 முதல் ‘வீட்ல விசேஷம்’ நடத்த வரும் போனிகபூர்-ஆர்ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ படத்தை அடுத்து உதயநிதி நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர்.

இந்த படம் தயாரிப்பதற்கு முன்பே ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் “வீட்ல விசேஷம்” என்ற படத்தையும் தயாரித்து வந்தார்.

Romeo Pictures ராகுலுடன் இணைந்து Zee Studios & Bayview Projects சார்பில் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் ஹிந்தி பிளாக்பஸ்டர் படமான ‘பதாய் ஹோ’ படத்தின் தழுவலாகும்.

RJ பாலாஜி மற்றும் N.J.சரவணன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை போல N.J.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார்.

RJ பாலாஜி நாயகனாக நடிக்க இவருடன் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை KPAC லலிதா, சீமா, ரமா, பிரதீப் கோட்டயம், புகழ், ஷிவானி நாராயணன், யோகி பாபு, ரவிக்குமார் மேனன், ஷங்கர் சுந்தரம் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பொதுவாக, பெரும்பான்மையான திரைப்படங்கள் கதாநாயகர்களை போலீஸ்காரர்களாகவோ, ரௌடிகளாகவோ அல்லது தீவிரமான பாத்திரங்களாகவோ தான் சித்தரிக்கின்றன. மாறாக, வீட்ல விஷேஷம் ஒரு எளிமையான இளைஞனைப் பற்றியது, அவன் குடும்பத்திற்குள் எழும் சில எதிர்பாரா சிக்கல்களை அசாதாரண சூழலை, அவன் எதிர்கொள்வதை 100% வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் இத்திரைப்படம் சொல்கிறது.

இப்படக்குழுவினர் மூல படைப்பான ‘பதாய் ஹோ’வின் சாராம்சத்தை, பிராந்திய மொழிக்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளனர்.

இது மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்பதால், தயாரிப்பாளர்கள் இத்திரைப்படத்தை குடும்ப பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டனர், அந்த வகையில் ஜூன் 17, 2022 ல் மாணவர்கள் தங்கள் கல்வி ஆண்டை முடித்திருப்பார்கள் என்பதால் அப்போது குடும்பங்களோடு அனைவரும் இப்படத்தை கொண்டாட முடியுமென்று, அன்றைய தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வீட்ல விசேஷம் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வ RK (எடிட்டிங்), கிரீஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), சாந்தனு ஸ்ரீவஸ்தவ்-அக்சத் கில்டியல் (கதை), திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (விஎஃப்எக்ஸ்), ராஜராஜன் கோபால் (DI கலரிஸ்ட்), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), P. செல்வ குமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), MK சுரேந்தர், J ஜெகன் கிருஷ்ணன், கார்த்திக் V, TS கோபி, N சிவகுரு, R குமரன், விஷ்ணு கார்த்திகேயன், சிற்றரசன் (திரைக்கதை குழு) , RJ பாலாஜி மற்றும் நண்பர்கள் (திரைக்கதை & வசனம்) இந்த திரைப்படத்தில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

The title and first look poster of RJ Balaji’s #VeetlaVishesham is out now

ரஜினி தாத்தா.. கமல் பாடலை பாடிய தனுஷ்.. WORST SPEAKER.. பர்கர் ரூ. 200..; ROCK WITH RAAJA ஹைலைட்ஸ்

ரஜினி தாத்தா.. கமல் பாடலை பாடிய தனுஷ்.. WORST SPEAKER.. பர்கர் ரூ. 200..; ROCK WITH RAAJA ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமா இசையுலகை கடந்த 45 ஆண்டுகளாக தன் இசை சாம்ராஜ்யத்தால் ஆள்பவர் இளையராஜா.

எனவே இவரது இசை நிகழ்ச்சிகள் எங்கும் நடந்தாலும் அதனை கண்டு ரசிக்க இசை மழையில் நனைய ரசிகர்கள் கூட்டம் திரளும்.

நேற்று மார்ச் 18ல் சென்னை தீவு திடலில் ROCK WITH RAAJA என்ற இசை நிகழ்ச்சி தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்றது.

டிக்கெட் விலை ரூ. 5000 முதல் 50000 வரை விற்கப்பட்டது. அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்த நிலையில் மாலை 6 மணிக்கே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

ஆனால் வழக்கம்போல சரியாக மாலை 7.35 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது.

இளையராஜாவின் குடும்பத்தினருடன் அவரது இசை குழுவினருடன் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பொதுவாக இளையராஜா இசை நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றாலும் தனுஷ் கலந்துக் கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தனது மகன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோருடன் தனுஷ் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தனுஷை மேடைக்கு அழைத்து பாட சொன்னார் இளையராஜா.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து இளையராஜா இசையில் உருவான ‛நிலா அது வானத்தின் மேலே’ (நாயகன் படம்) என்ற பாடலை பாடினார் தனுஷ். இவருடன் இணைந்து யுவன், கார்த்திக் ராஜா ஆகியோரும் பாடினர்.

இதே பாடலின் டியூனை வைத்து ஒரு தாலாட்டு பாடல் எழுதியுள்ளதாகவும் அதை பாட அனுமதி கேட்டார் தனுஷ். இளையராஜாவின் அனுமதியோடு அந்த பாடலை பாட அரங்கத்தில் கரவொலி எழுந்தது.

அதுபோல் ரஜினி திரைக்கதையில் உருவான ‘வள்ளி’ படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே.. என்னுள்ளே.. என்ற பாடல் முடிந்தபிறகு.. தனுஷை பார்த்து.. இந்த பாட்டுக்கு உங்க மாமனார் தான் SITUATION சொன்னார்.

தனுஷின் மகன்களை பார்த்து… உங்க (ரஜினி) தாத்தா கிட்ட சொல்லுங்க.. உங்க அப்பா பாடினதை என்று சொன்னார் இளையராஜா.

இப்படியாக கலகலப்பாக நிகழ்ச்சி சென்றாலும் SPEAKER SYSTEM பெரும் குறையாக கூறப்பட்டது. பாடல் சரியாகவே ஒலிக்கவில்லை. கடைசியில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது.

ஓரிரு முறை இளையராஜாவே ஸ்பீக்கர் குறைகளை சுட்டிக் காட்டினார்.

அங்கு வாட்டர் பாட்டீல்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. அதுபோல் பர்க்கர், சான்ட்விட்ச் உள்ளிட்ட உணவுகள் ரூ. 200க்கு விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Dhanush makes first public appearance with sons at Rock with Raja concert

சிரஞ்சீவி-ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த நிவேதா பெத்துராஜ்

சிரஞ்சீவி-ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆச்சாரியா என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதனையடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் படத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை பாபி இயக்குகிறார்.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற செய்தியை பார்த்தோம்.

இதில் பிரபல தெலுங்கு ஹீரோ ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடிக்க அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார்.

தெலுங்கில் விராட பருவம், பிளட் மேரி போன்ற படங்களில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivetha Pethuraj is on board for Chiranjeevi – Shrutihaasan’s film

More Articles
Follows