தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பவர் பாண்டி படத்திற்கு முன்பே, கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ்.
இதில் பவர் பாண்டி படம் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டது.
ஆனால் கார்த்திக் சுப்புராஜ் படம் இதுவரை தொடங்கவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் எனத் தெரிகிறது.
இதனிடையில் கெளதம் மேனன் இயக்கி வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் சூட்டிங் கலந்துக் கொண்டார் தனுஷ்.
இடையில் என்ன நடந்ததோ? விஐபி2, வடசென்னை, ஹாலிவுட் பட என பிஸியாகிவிட்டார் தனுஷ்.
தனக்கு பேசிய சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் கௌதம் மேனன் இழுத்தடிப்பதால், தனுஷ் அப்படத்தை முடித்துக் கொடுக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், கௌதம் மேனன் தயாரித்து இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கும் சிம்புவுக்கும் சம்பள பாக்கி வைக்கப்பட்டு, பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே அப்படத்தை சிம்பு முடித்துக் கொடுத்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Do you Know Why Enai Noki Paayum Thota getting delay