தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கஸ்தூரி ராஜாவின் மகன், செல்வராகவனின் தம்பி, ரஜினியின் மருமகன் என பல அடையாளங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் மீறி தனக்கான அந்தஸ்தை சமூகத்தில் உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் தனுஷ்.
மேலும் திரையுலகின் பல துறைகளிலும் சாதித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷை தங்களது மகன் என சிவகெங்கை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன் – மீனாள் என்ற தம்பதியினர்தான் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் டைம் கீப்பராக பணிபுரிந்து வருகிறார் கதிரேசன்.
இவர் கூறியுள்ளதாவது…
இவருக்கு பிறந்த கலையரசன் என்ற மகன் கடந்த 2002ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது தங்களை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.
அவர்தான் தற்போது சென்னை சென்று தனுஷ் என்ற பெயரில் நடிகராகி விட்டதாக கூறியுள்ளார்.
அதன்பின்னர் சென்னைக்கு தனுஷை தேடி வந்தபோது கஸ்தூரிராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருவதாகவும் கூறியுள்ள்ளார்.
மேலும் காவல் நிலையத்திலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்துள்ளதாகவும் இந்த தம்பதியினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.