பாசமான விவசாயி… பக்ரீத் விமர்சனம் (3.5/5)

பாசமான விவசாயி… பக்ரீத் விமர்சனம் (3.5/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…?

விக்ராந்த் அவரது அண்ணன் ஜெயச்சந்திரன்.

அண்ணன் தம்பி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

விக்ராந்த அவரது மனைவி வசுந்த்ரா. அவர்களுக்கு ஒரு 5 வயது மகள்.

விவசாயம் செய்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு வாழ்கிறார். ஒருமுறை கடன் வாங்க வேண்டி ஒரு முஸ்லீம் பெரியவரிடம் செல்கிறார்.

அங்கு எதிர்பாரா விதமாக அவரிடம் உள்ள குட்டி ஒட்டகத்தை தன் மகளுக்காக வாங்கி வருகிறார். மகளும் அதை அன்பாக வளர்த்து வருகிறார்.

ஆனால் சென்னையில் உள்ள தட்ப வெப்ப காரணமாக ஒட்டகத்தால் இங்கு வாழ முடியவில்லை. அதன்பின்னர் விக்ராந்த் என்ன செய்தார்? ஒட்டகம் என்ன ஆனது? மகள் ஆசை என்னானது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்.?

இதுவரை ரொமான்ஸ், ஆக்சன் என வலம் வந்த விக்ராந்த் இதில் வித்தியாசமாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரு யதார்த்த விவசாயியாகவும், அப்பாகவும், நல்ல கணவனாகவும், பாசமுள்ள மனிதராகவும் என பன்முக நடிப்பை காட்டியுள்ளார் விக்ராந்த். சூப்பர் ப்ரோ.

விவசாயியின் மனைவியாக வசுந்த்ரா. கிராமத்து இல்லத்தரசியாக சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

இவர்களது குழந்தையாக வரும் ஷ்ருத்திகா அழகு தேவதை. அவரின் கண்களும் அவர் பேசும் மழலை பேச்சும் கொள்ளை அழகு.

விக்ராந்தின் அண்ணன் ஜெயச்சந்திரன். பாசத்திலும் கோவத்திலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

லாரி டிரைவர், லாரி கிளீனர், போலீஸ்காரர்கள், முஸ்லீம்பாய், பாரீன்காரன் என அனைவரும் கச்சிதம்.

மோக்லி, ரோகித் பதக் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமானின் இசையில் பாடல்கள் ப்ளஸ். ’ஆலங்குருவிகளா …’ பாடலை கெட்டுக் கொண்டே இருக்கலாம். பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது.

விக்ராந்த் ஒட்டகத்தோடு சேர்ந்து செல்லும் ராஜஸ்தான் பயணம் நம்மையும் அழைத்து செல்கிறது. ஒளிப்பதிவும் சூப்பர்.

ரூபனின் எடிட்டிங்கில் தான் ஒரு குறை. 2ஆம் பாதியை சற்று குறைத்திருக்லாம்.

இயக்கம், ஒளிப்பதிவு என இரண்டையும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு.

ஆடு, மாடு, நாய்களை வீட்டில் ஒரு உயிராகவே சிலர் வளர்க்கின்றனர். அவர்களின் உணர்வுகளை திரையில் கொண்டு வந்துள்ளார்.

சில நேரம் அவை மனிதன் உயிரையும் காக்கும் என்பதையும் அழகாக காட்டியுள்ளார்.

பக்ரீத்.. பாசமான விவசாயி..

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சூர்யாவுடன் மாற்றான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால்.

தற்போது மீண்டும் சூர்யாவின் 39 படத்தில் அவருடன் இணையவுள்ளார்.

சிவா இயக்கவுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கெனவே சிவா இயக்கிய விவேகம் படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் காஜல் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் பாரிஸ் படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

சமூகத்திற்கு தேவையில்லாத பிக்பாஸில் சிக்கிய சேரன்.. அமீர் ஆதங்கம்

சமூகத்திற்கு தேவையில்லாத பிக்பாஸில் சிக்கிய சேரன்.. அமீர் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், உதயா, அமீர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் அமீர் பேசியதாவது…

இங்குள்ள கலைஞர்கள் ஒருவொருவரை எல்லாம் மாற்றி மாற்றி புகழ்ந்து வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இது முதல் மேடை என்பதால் அது சரி.

ஆனால் எதுவும் நிரந்தரமில்லை. அதுதான் சினிமா. நாம் மின்னிவிட்டு மறைந்துவிடுவோம். அதனால்தான் நம்மை நட்சத்திரங்கள் என்கிறார்கள்.

ஆட்டோகிராப் என்ற படத்தை தயாரிக்கும்போது மிகுந்த சிரமத்தில் இருந்தார் சேரன். அது வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.

அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

அதுபோல் தேசிய கீதம் என்ற ஒரு படத்தை இயக்கி அதில் ஒரு முதல்வரை கடத்தி விவசாயம் செய்ய வைத்தார். அதுபோன்ற துணிச்சல் யாருக்கும் இருக்காது.

ஆனால் அப்படிப்பட்ட கலைஞன், இன்று பொருளாதார நெருக்கடியால் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் சிக்கியிருக்கிறார்.

அவர் போகும்போது என்னிடம் கூறிவிட்டு தான் சென்றார். அது அவருடைய விருப்பம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்க மாட்டேன்.

சேரன் அழும் ஒரு காட்சியை நண்பர் காண்பித்தார். எனவே தான் அதை பார்த்தேன். அது இந்த சமூகத்திற்கு தேவையில்லாத ஒன்று.” என்றார் அமீர்.

கைத்தட்டல்களை கேட்டு வாங்குபவர்களுக்கு செருப்படி கொடுத்த அமீர்

கைத்தட்டல்களை கேட்டு வாங்குபவர்களுக்கு செருப்படி கொடுத்த அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We should not ask for applause says Director Ameerஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அமீர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் அமீர் பேசியதாவது…

வாழ்க்கையில் 3 விஷயங்களை எப்போதும் நாம் கேட்டு பெறக் கூடாது. நன்றி.. வாழ்த்து.. கைத்தட்டல்.. இவை மூன்றும் தானாக கிடைக்க வேண்டும்.

பெரியவர்களிடம் வாழ்த்தை வேண்டுமானாலும் கேட்டு பெறலாம். அது கூட ஓகே. ஆனால் நன்றியை கேட்டு பெற கூடாது. அதுபோல் கைத்தட்டல்களை கேட்டு பெறவே கூடாது.

சினிமாவில் ஒரு காட்சி நன்றாக இருந்தால் மக்களே கைத்தட்டுவார்கள். இந்த காட்சிக்கு கைத்தட்டுங்க என்று வாசகம் வராது.

அதுபோல் மேடையில் நாம் பேசினால் நன்றாக இருந்தால் மக்களே கை தட்டுவார்கள்.

கை தட்டுங்க.. கை தட்டுங்க.. என்று நாம் கேட்க கூடாது. மக்களுக்கு எப்போ கை தட்டனும் என்று தெரியும்.
ஒருவேளை அவர்கள் கை தட்டவில்லை என்றால் நாம் சரியாக பேசவில்லை என்று அர்த்தம். அதை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்” என்றார் அமீர்.

We should not ask for applause says Director Ameer

கேரளா வெள்ளத்திற்கு உதவிய நடிகர் ரகுமான்

கேரளா வெள்ளத்திற்கு உதவிய நடிகர் ரகுமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ரகுமான் தன் சொந்த ஊரான நிலம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்கு விரைந்தார். அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கான உதவிகள் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்தது வருகிறார். மேலும் வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிட்டார்.

MLA P.V அன்வர் அவர்களையும் மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா ஊராட்சியை சேர்ந்த
வெள்ளபாதிப்பில் உதவும் தன்னார்வலர்களையும் சந்தித்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கும் உதவிகளுக்குமான ஏற்பாடுகளை செய்தார்.

முன்னாள் அமைச்சரும் நிலம்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான ‘ஆர்யாடன் ‘
முகம்மது அவர்களை சந்தித்து மக்களின் பிரச்னைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி கேடறிந்தார். ரஹ்மான் மூன்று நாள் அங்கு முகாமிட்டு உள்ளார்.

அமீர்கான் படத்தில் தமிழனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

அமீர்கான் படத்தில் தமிழனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஹாலிவுட்டில் பிரபலமான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இதில் ஹீரோவாக அமீர்கான் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘லால் சிங் சட்டா’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதில் அமீர் கானுடன் இணைந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த படத்தில் உள்ள பப்பா என்ற கேரக்டர் தமிழராக உள்ளதால் அதில் விஜய் சேதுபதி நடிப்பார் எனத் தெரிகிறது.

‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி கேரக்டரில் அமீர்கான் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows