உச்சத்துல சிவா விமர்சனம்

உச்சத்துல சிவா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கரண், நேகா, ஆடுகளம் நரேன், இளவரசு, ரமேஷ் கண்ணா, பேராசிரியர் ஞானசம்பந்தம், கும்கி அஸ்வின், சங்கிலி முருகன், கோவை சரளா (குரல் மட்டும்) மற்றும் பலர்.
இசை : வித்யாசாகர்
ஒளிப்பதிவு : ஹார்முக்
இயக்கம் : ஜேப்பி
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : கே என்டர்டெயின்மென்ட் – தேவி கரண்

karan uchathula siva 3

கதைக்களம்…

கால் டாக்சி டிரைவர் கரண் ஒரு பகவத் கீதை கிருஷ்ண பக்தர். அம்மா சொல் கேட்டும் பிள்ளை.

நாளை காலை பெண் பார்க்க செல்லவிருக்கும் போது, முதல் நாள் இரவு சவாரிக்கு செல்கிறார்.

அப்போது எதிர்பாரா விதமாக மணப்பெண் (நேகா) ஒருவர் இவர் காரில், தன்னை காப்பாற்ற லிப்ட் கேட்கிறார்.

அவர் மீது கரனுக்கு காதலும் வருகிறது. ஆனால் அப்போதுதான் ஹீரோயின் அவர் போதை கும்பலில் சிக்கியது தெரிய வருகிறது.

அந்த பெண்ணை காப்பாற்ற போய், இவர் போலீசில் மாட்டிக் கொள்கிறார்.

அதன் பின்னர் தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? பெண் பார்க்க போனாரா? அல்லது காதலியை கரம்பிடித்தாரா? என பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் இந்த சிவா.

karan uchathula shiva

கதாபாத்திரங்கள்…

நீண்ட நாட்களுக்கு பின் வந்தாலும், அதே இளமை. ரெப்ரிஜிரேட்டில் இருந்து வந்தவர் போல படு ப்ரெஷ்ஷாக இருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்திருக்கிறார். இதில் கொஞ்சம் காமெடிக்கு டிரை செய்து பாஸ் மார்க் பெறுகிறார்.

காதலுக்கும் காதலிக்கும் பெரிதாக வேலையில்லை. நேகா அழகாக வருகிறார்.

இளவரசு, ரமேஷ் கண்ணா காமெடி போலீசாக வந்தாலும், காமெடிக்கு பஞ்சமே.

கும்கி அஸ்வின் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் சிரிக்க வைத்திருக்கலாம்.

வெறும் குரலாக மட்டும் வரும் கோவை சரளாவுக்கு காட்சிகள் கொடுத்திருந்தால், அவர் இன்னும் படத்தை கலகலப்பாக்கி இருப்பார்.

ஆடுகளம் நரேன், டானாக வந்து செல்கிறார். சங்கிலி முருகனும் இருக்கிறார்.

uchathula siva stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டைட்டில் கார்டு பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் வித்யாசாகர். அப்போது வரும் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

பேசு பேசு இசை மொழி … உச்சத்துல சிவன் தான் பாடல்கள் கொஞ்சம் ஓகே. வித்யாசாகரின் வழக்கமான மெலோடி இதில் மிஸ்ஸிங்.

பேராசிரியர் ஞானசம்பந்தன் காட்சிகளில் ஒரே அட்வைஸ் மழையாக இருக்கிறது.

ஜேப்பி இயக்கத்தில் சண்டை காட்சிகள் ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்துதான். ஒரே இரவில் நடக்கும் கதையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இடைவேளை ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.

உச்சத்துல சிவா… ஆக்ஷன் மேஜிக்

பகிரி விமர்சனம்

பகிரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபு ரணவீரன், ஷ்ரவியா, ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன், சுப்ரமணியன் மற்றும் பலர்.
இசை : கருணாஸ் எம்எல்ஏ
ஒளிப்பதிவு : வீரகுமார்
இயக்கம் : இசக்கி கார்வண்ணன்
பிஆர்ஓ : A. ஜான்
தயாரிப்பாளர் : லட்சுமி கிரியேஷன்ஸ் (இசக்கி கார்வண்ணன்)

கதைக்களம்…

தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞனின் கதைதான் இந்த பகிரி.

நாஸ்மாக்கில் (டாஸ்மாக் என்று படித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை) வேலையில் சேரவேண்டும் என்பதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கிறார் ஹீரோ.

இதனிடையில் காதல், விவசாயம் என கதை பயணிக்கிறது.

ஒரு சூழ்நிலையில நாஸ்மாக் திட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. இதனிடையில் வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களால் தமிழக அளவில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

இதனால் ஹீரோவின் லட்சியம் என்ன ஆனது? நாஸ்மாக் திட்டம் மூடப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Pagiri- Prabhu Ranaveran, Sharviya (2)

கதாபாத்திரங்கள்…

பிரபு ரணவீரன் தன் முதல் படத்திலேயே காதலிப்பதையும் வேலையையும் லட்சியமாக கொண்டு கேரக்டராக வாழ்ந்திருக்கிறார்.

தன் அம்மாவிடம் காதலியை மோதவிட்டு, தன் காதலை சொல்லுமிடத்தில் ரசிக்கி வைக்கிறார்.

நாயகி ஷ்ரவியாவுக்கு அறிமுக காட்சியே அசத்தல். பெண் பார்க்க வந்தவர் இவரது அம்மாவை சைட் அடிக்க, அதன் பின் இவர் எகிறும் காட்சிகள் ரகளை.

இவரிடம் நடிகை விசாகா சிங்கின் சாயல் தெரிகிறது.

காதலனுக்காக இவரும் இவரது அம்மா செய்யும் உதவிகள் ரசிக்க வைக்கிறது.

ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், டிபி.கஜேந்திரன் ஆகியோர் காமெடி ட்ராக்கை கவனித்து கொள்கிறார்கள்.

அதிலும் ரவி மரியாவின் ஆண்ட்டி சைட் அடிக்கும் காமெடி ‘ஜொள்’ ரகம்.

சரவண சுப்பையா, சுப்ரமணியன் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

Pagiri Stills-Prabhu Ranaveera, Shravya, Ravimariya, A (4)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகர் கருணாஸ்தான் இதன் இசையமைப்பாளர். இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே.

வீரக்குமாரின் ஒளிப்பதிவில் பார் காட்சிகள் அச்சு அசலாக உள்ளது.

படத்தின் ப்ளஸ்…

  • சரக்கு பாக்டரியை பெண்கள் நடத்தும் போது நாங்க சரக்கு கடை வைக்க கூடாதா? என கேட்பது நச்.
  • மதுவிலக்கை வைத்து தலைவர்கள் ஆடும் அரசியல் விளையாட்டு
  • மக்களை சுரண்டும் ஊழல் வாதிகளை பற்றிய சாட்டையடி வசனங்கள்
  • போராட்டம் நடத்துபவர்கள் அனைவரும் தினக்கூலியை எதிர்பார்த்து செய்வதன் மூலம் அவர்களின் போலித்தனத்தை காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்…

  • படம் முழுக்க நாஸ்மாக்கை காட்டிவிட்டு க்ளைமாக்ஸில் ஒரு காட்சியில் விவசாயத்தை காட்டியிருப்பது கொஞ்சம் ஒட்டவில்லை. படம் முடிந்துவிட்டதா? என யோசிக்க வைக்கிறது.
  • விவசாயத்தின் அருமையை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்.
  • எடுத்துக் கொண்ட கதையை அரசியல் காரணங்களால் வெட்டி விட்டார்களா? எனத் தெரியவில்லை. கனெக்ஷன் மிஸ்ஸிங்.

Director Esakki Karvannan (3)

இயக்குனர் பற்றி…

படத்தின் ஆரம்பத்தில் வரும் டிவி விவாதங்களும் அதில் முடியும் சண்டை காட்சிகளும் இன்றைய டிவியின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

பொதுவாக இதுபோன்ற பார் சம்பந்தப்பட்ட படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும். ஆனால் இதை குடும்ப கதையோடு கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் இசக்கி.

படம் முழுக்க டாஸ்மாக் காட்சிகள் என்றாலும், ஐட்டம் டான்ஸ் இல்லை என்பது ஆச்சரியம்தான்.

மதுவிலக்கு படத்தை மிக தைரியத்தோடு எடுத்து சொல்லியிருக்கிறார். அதற்கு மஞ்சள் துண்டு போட்ட தலைவர்களை காண்பிப்பதும் ரசிக்க வைக்கிறது.

பகிரி – மது குடிப்பவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.

ரெமோ இசை பாடல்கள் விமர்சனம்

ரெமோ இசை பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்துள்ளது ரெமோ.

சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளதால் இப்படத்தின் பாடல்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

மேலும் இவர்களுடன் பாடல் ஆசிரியர்களாக விக்னேஷ் சிவன், விவேக் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
இதில் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

பாடல்கள் பற்றிய ஒரு பார்வை…

1) ரெமோ நீ காதலன்…..
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் : அனிருத்
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 03 நொடிகள்

பாஸ்ட் பீட்டில் இப்பாடல் ஒலிக்கிறது. இப்பாடலின் சிங்களி முன்பே வெளியானதால் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் இது அவ்வை சண்முகி படத்தில் உள்ள வேலை.. வேலை… என்ற பாடலை போல படத்தில் ஒலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2) செஞ்சிட்டாளே…..
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் : அனிருத்
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 11 நொடிகள்

இந்த பாடலை வச்சி செய்யாதே இளைஞர்களே இல்லை என்னுமளவுக்கு ஹிட்டடித்துள்ளது.
அனிருத் விக்னேஷ் சிவன் கூட்டணி இப்பாடலை செமயா செஞ்சிருக்காங்க.

3) சிரிக்காதே…..
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் : ஸ்ரீநிதி மற்றும் அர்ஜீன் கனுங்கோ
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 06 நொடிகள்

ஒரு அழகான பெண் சிரித்தால், என்ன மாதிரியான மாற்றங்கள் ஒரு இளைஞனின் மனதில் உருவாகும் என்பதை சொல்லி, இனி அப்படி உன் சிரிப்பால் என்னை கொல்லாதே என்கிறார் இந்த பாடல் ஆசிரியர்.
ஸ்ரீநிதியின் குரலும் இப்பாடலுக்கு இதமான உணர்வை கொடுக்கிறது.

4) மீசை ப்யூட்டி…..
பாடல் ஆசிரியர் : விவேக்
பாடியவர்கள் : ரிச்சர்ட் மற்றும் அனிருத்
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 10 நொடிகள்

ஆண் மகன் ஒருவன் பெண் வேஷமிட்டு வந்து, தன் அழகால் இளைஞர்களை சுண்டி இழுக்கிறான். இந்த மீசை ப்யூட்டியை பார்த்தால் ஆசை வரும். லூட்டி அடிக்க தோனும்.
அனிருத் மற்றும் ரிச்சர்ட்டின் குரல்கள் இப்பாடலை அடிக்கடி கேட்க செய்யும்.

5) தாவுயா…..
பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்
பாடியவர்கள் : சந்தோஷ் நாராயணன்
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 27 நொடிகள்

கானா கிங் தேவா பாடலை கேட்ட போல ஒரு உணர்வு. இது இப்படம் வெளியானால் இது இளைஞர்களின் மற்றொரு சூப் பாடலாக மாறும்.

6) வாடீ என் தமிழ் செல்வி…..
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் : நகாஷ் அஷிஷ்
பாடல் நேரம் : 3 நிமிடங்கள் 50 நொடிகள்

நகாஷ் அஷிஷ் குரல் இப்பாடலுக்கு அழகு சேர்க்கிறது. இனி தமிழ் செல்வி பெயர் வைத்தவர்களுக்கு எல்லாம் இப்பாடலை அடிக்கடி நினைவுக்கு வரும்.

கிடாரி விமர்சனம்

கிடாரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சசிகுமார், நிகிலா விமல், நெப்போலியன், சுஜா வருணி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர்.
இசை : தர்புகா சிவா
ஒளிப்பதிவு : எஸ் ஆர் கதிர்
படத்தொகுப்பு : பிரவீன் ஆண்டனி
இயக்கம் : பிரசாத் முருகேசன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : சசிகுமார்

 கதைக்களம்…

வழக்கமான கிராமத்து வன்முறை களம்தான். இதில் கொஞ்சம் மாறுபட்ட திரைக்கதையுடன் ஆரம்பிக்கிறார் இயக்குனர்.

படத்தின் முதல்காட்சியே ரத்தம் தெறிக்க ஒரு மனிதர் உயிருக்கு போராடுகிறார். அவர்தான் வேல ராமமூர்த்தி. குத்துயிரும் கொலையிருமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஊரில் மிகப்பெரிய பஞ்சாயத்து முதல் அனைத்தையும் செய்து வந்த இவரை கொன்ற எதிரிகள் யாராக இருக்கக்கூடும் என பக்கம் பக்கமாக ப்ளாஷ்பேக் காட்சிகள் விரிகிறது…

kidari stills

கதாபாத்திரங்கள்…

(கி)ராமராஜன் போல், கிராமத்து கேரக்டருக்கும் சசிகுமாருக்கும் அப்படியொரு பொருத்தம். கிராமத்து மண் வாசனை தகுந்த மாதிரி விளாசி தள்ளியிருக்கிறார்.

ஆனால் என்ன, அழகான ஹீரோயின்கள் இருந்தாலும் மனிதர் கெத்து மெயிண்ட் பன்னும் கேரக்டர்களாக செய்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் இறங்கி வாங்க சார்.

கெமிஸ்ட்ரி க்ளாசில ஜாய்ண்ட் பன்னுங்க சீக்கிரம்.

வெற்றிவேலை விட இதில் கூடுதல் அழகையும் நடிப்பையும் கொடுத்திருக்கிறார் நிகிலா விமல்.  வீட்டைவிட்டு சென்ற கிடாரி, திரும்பி வந்த பின், அவரை மடக்கி கொஞ்சும் காட்சியில் தன் குறும்பான நடிப்பால் நிகிலா அங்கே நிற்கிறார். சபாஷ்.

Kidari-Movie-Stills-3

கொம்பையா பாண்டியனாக வரும் வேலராமமூர்த்திதான் படத்தின் ஆணிவேர்.  படம் முழுவதும் ஆட்சி செய்கிறார். இவரது கம்பீர குரலும் படத்திற்குபக்க பலம்.

சட்டையை கழட்டி போட்டு விட்டு வீரத்துடன் நடந்து வரும் காட்சிகளில் அசத்துகிறார்.

பல படங்களில் சின்ன கேரக்டர்களை செய்த சுஜா வருணிக்கு இதில் சிறப்பான வேடம். நிறைவாக செய்திருக்கிறார். இனி வாய்ப்புகள் நிச்சயம் தேடிவரும்.

நாம் பெரிதும் எதிர்பார்த்த நெப்போலியன் கேரக்டர் படத்தின் இறுதியிலே வருகிறது.  மனிதரிடம் அதே அமைதியான நடிப்பு உள்ளது. ஆனால் காட்சிகளில் அழுத்தமில்லை.

ஜோக்கரில் கலக்கிய மு. ராமசாமி இதில் முக்கிய பங்கு வகிக்கிறார். ப்ளாஷ்பேக் காட்சியிலும் கெட்டப் நன்றாக பொருந்தி இருக்கிறது.  இவரது குரலே படம் முழுக்க ஒலிக்கிறது.

இவர்களுடன் வக்கீல், போலீஸ் கேரக்டர்கள் வரை அனைவரும் கச்சிதம்.

kidari stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசைதான். கிடாரிக்கு காட்சிகளில் வெயிட் இருக்கிறதோ இல்லையோ இசையில் வெயிட் கொடுத்திருக்கிறார் தர்புகா சிவா. கிடாரியே உன் போல பாடல் தாளம் போட வைக்கிறது.

எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவில் கிராமத்து மனிதர்கள், வீடுகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

எடிட்டர் பிரவீன் ஆண்டனி நிறைய காட்சிகளை வெட்டியிருக்கலாம். நிறைய ப்ளாஷ்பேக் கொடுத்து, ட்விஸ்ட் என்ற பெயரில் பொறுமையை சோதித்துவிட்டனர்.

பழிவாங்கும் கிராமத்து கதையாக தொடங்கினாலும், க்ளைமாக்ஸில் கதைக்கு கூடுதல் பலம் கொடுத்து நிறைவான முடிவை தந்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகேசன்.

மொத்தத்தில் கிடாரி… கிராமத்து டான்

குற்றமே தண்டனை விமர்சனம்

குற்றமே தண்டனை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, நாசர், ரகுமான், குரு சோமசுந்தரம் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : மணிகண்டன்
படத்தொகுப்பு : அனுசரண்
இயக்கம் : மணிகண்டன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : கேஆர் பிலிம்ஸ்

கதைக்களம்…

நாயகன் விதார்த் கண் பார்வை குறைப்பாட்டினில் கஷ்டப்படுகிறார். ஆப்ரேஷன் செய்தால் சரியாகும் என்பதால் அதற்கான பணத் தேடல் முயற்சியில் இறங்குகிறார்.

இதனிடையில் அவர் வீட்டின் அருகே ஒரு கொலை நடக்கிறது. கொலைக்காரன் யார்? எதற்காக இந்த கொலை? என திரைக்கதை நீள்கிறது.

இந்த விசாரணையில் சிக்கும் விதார்த்தின் எதிர்காலம் என்ன ஆகிறது? என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

Kuttrame Thandanai stills 1

கதாபாத்திரங்கள்…

கண் பார்வை முழுவதுமாக தெரியாமல் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நம் கவனம் ஈர்க்கிறார் விதார்த்.

மைனாவுக்கு பிறகு ஒரு அழுத்தமான உணர்ச்சிமிக்க நடிப்பை கொடுத்திருக்கிறார் இவர்.

குற்ற உணர்வில் நொருங்கி போவது,  சிகிச்சை மற்றும் பணத்துக்காக அலைவது என ஒரு யதார்த்த மனிதரின் பிரதிபலிப்பாக வருகிறார்.

கண் பார்வை குறைபாட்டினால் பைக் ஓட்டும்போது தடுமாறுவது ரசிக்க வைக்கிறது. ஆனால் இவ்ளோ குறை பாடு உள்ளவரால், இந்த டிராப்பிக்கில் நிச்சயம் செல்ல முடியாது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பூஜா தேவார்யா என இரு நாயகிகள். இருவரும் தங்கள் கேரக்டர்களை பேசும்படியாக செய்திருக்கிறார்கள்.

ஒருவேளை இவர்கள் இருவரின் கேரக்டர்களை மாற்றி கொடுத்திருந்தால் இன்னும் ஸ்வாரஸ்யம் கூடி இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இவர்களுடன் மாரிமுத்து, ‘பசி’ சத்யா, ரகுமான் உள்ளிட்டோரும் பொருத்தமான தேர்வு.

ஜோக்கர் படத்தில் நம்மை சிந்திக்க வைத்த, குரு சோமசுந்தரம் இதிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.

நாசரின் அவரின் அனுபவ நடிப்பால், தனித்து நிற்கிறார். ஆனால் ஒரே இடத்தில் அவரை பார்ப்பது போரடிக்கிறது.

Kuttrame Thandanai stills 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் பாடல்கள் இல்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன் என இசைஞானி தன் இசை சாம்ராஜ்யத்தை பின்னணி இசையில் நடத்தியிருக்கிறார்.

இவரது இசையே இந்த த்ரில்லர் கதைக்கு உயிரூட்டம் கொடுக்கிறது. இயக்குனர் மணிகண்டனே ஒளிப்பதிவாளர் என்பதால், ஒவ்வொரு ப்ரேமையும் செதுக்கி இருக்கிறார்.

மிகத் துல்லியமாக ஒரு க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட்டை கமர்ஷியல் இல்லாமல் கொடுத்திருக்கிறார்.

வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளுகிறது. ‘நம்ம ரேட்டை நாம்தான் முடிவு பண்ணணும்’, சரி தப்புன்னு எதுவும் இல்லை. நீ எடுத்த முடிவை நான் சொல்லணும்னு நினைக்கிற’, ‘எது தேவையோ அதுவே தர்மம், ஜி சொல்றவங்கள சுத்தமாக புடிக்கல…. உள்ளிட்ட வசனங்கள் நமக்கு நம் வாழ்வை நினைவுப்படுத்தும்.

இதற்கு ஆனந்த் அண்ணாமலை அவர்கள் மணிகண்டனுக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார்.

Kuttrame Thandanai stills 2

குற்றம் செஞ்சிட்டு தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம். ஆனால் மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியாது.

அந்த குற்ற உணர்ச்சியே பெரும் தண்டனை என்பதை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார் இந்த காக்கா முட்டை இயக்குனர்.

பணம் பறிக்க முயலும் ஆஸ்பத்திரிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் காட்டியிருப்பது சபாஷ்.

ஆனால் படம் ஒரு டாக்குமெண்ட்ரி டைப் ஆக இருப்பதால் எல்லாம் ரசிகர்களையும் கவருமா? என்பது சந்தேகமே.

மொத்தத்தில் குற்றமே தண்டனை… மனசாட்சியின் தண்டனை

 

வென்று வருவான் விமர்சனம்

வென்று வருவான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : வீரபாரதி, சமீரா, எலிசபத், காதல் சுகுமார் மற்றும் பலர்.
இசை : முரளி கிருஷ்ணன்
ஒளிப்பதிவு : ஜெயச்சந்திரன்
படத்தொகுப்பு : ஆர் எஸ் சதீஷ்குமார்
இயக்கம் : கே. விஜேந்திரன்
பிஆர்ஓ : சக்தி சரவணன்
தயாரிப்பாளர் : சந்திரகாசன், வெங்கடேஷ், விஜேந்திரன்

கதைக்களம்…

தமிழகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சி என்ற கிராமத்தில் வாழும் ஒரு பார்வையற்ற தாய் மற்றும் மகன் பற்றிய கதை.

படத்தின் முதல் காட்சியே விறுவிறுப்பாக செல்கிறது. எட்டு கொலைகளை செய்த வீரபாரதிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என அந்த கிராமமே சொல்கிறது.

ஆனால், அவன் செய்திருக்க மாட்டான் என அவனின் தாயும் காதலியும் நம்புகின்றனர்.

இதனிடையில் இந்த கொலைகளின் பின்னணி என்ன? நிஜமான கொலைக்காரன் யார்? என்ற உண்மைகளை ஒரு பத்திரிகையாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே மீதிக்கதை.

vv 1

கதாபாத்திரங்கள்….

நாயகன் வீரபாரதி. தாடியும் சோகமும் உள்ளவராக படம் முழுக்க வருகிறார். இவர்தான் கொலை செய்திருப்பார் என்பது போலவே இவரது தோற்றம் அமைந்துள்ளது ப்ளஸ் பாயிண்ட்.

நாயகி சமீரா கிராமத்து பெண்ணாகவும் குளிர்ச்சியாகவும் வருகிறார். காதலனையும் வருங்கால மாமியாரையும் பார்த்துக் கொள்ளும் பரிவு ரசிக்க வைக்கிறது.

கண் தெரியாத விதவைத் தாயாக எலிசபத். அவர் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். மகனுக்காக உருகும் காட்சிகளிலும் பாட்டு பாடும் காட்சிகளிலும் கவர்கிறார்.

காமெடி நடிகர்கள் வையாபுரி, கிரேன் மனோகர், நெல்லை ஆகியோர் இருந்தும் காமெடி கடுப்பை ஏற்றுகிறது.

vv 2

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களும் கிராமத்து காட்சிகளும் படத்தின் போக்கை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

தாய் மகன் உறவு, காதல், தூக்குத் தண்டனை சட்ட விதிமுறைகள், தாலாட்டு இசை அனைத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

க்ளைமாக்ஸிஸ் இருந்தும் உயிர் கொடுப்பாள். இறந்தாலும் உயிர் கொடுப்பாள் தாய் என்பதோடு நிறைவு செய்து மனங்களை ஈரமாக்குகிறர்.

மொத்தத்தில் வென்று வருவான்… அனைத்தையும் தாய் வென்று விடுவாள்

More Articles
Follows