பாம்பாட்டம் பட விமர்சனம்

பாம்பாட்டம் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

இந்திய சுதந்திரப் போராட்ட கால கதைக்களத்துடன் அரசி அரசர் இளவரசி இவர்களுடன் நாக தோஷத்தை இணைத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்.

ஜோசியம் மீது நம்பிக்கை இல்லாதவர் அரசி மல்லிகா ஷெராவத். ஆனால் அரண்மனை ஜோசியரோ.. நாகத்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்கிறார்.. பாம்பு இருந்தால்தானே பிரச்சனை பாம்புகள் அனைத்தையும் அழித்துவிட கட்டளையிடுகிறார் அரசி.. ஆனாலும் அசுர பாம்பு சீண்டியதால் அரசி மரணடைகிறார்.

இதன் பின்னர் இளவரசி உயிருக்கும் ஆபத்து என்கின்றனர் ஜோசியர்கள்.. இதனையடுத்து தன் மகளை அழைத்துக் கொண்டு பாம்பு தென்படாத தேசமான நியூசிலாந்து நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார் அரசர். அங்கு தன் மகளுக்காக அரண்மனை கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார். இவரது நண்பர் சுமன்.. இவர்கள் சில வழக்குகளை விசாரிக்கும் போது தான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன… அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஜீவன் (மாணிக்க வேல் )- அப்பா ) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் (ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் இந்த படத்திற்கு ஆணிவேர் என நினைத்து போனால் படம் தொடங்கி 10 நிமிடங்களில் அவரின் கதை முடிவது பெரும் சோகம்.

அப்பா மகன் இரு வேடங்களில் ஜீவன் நடித்திருக்கிறார்.. ஒரு பக்கம் கைதியாகவும் மறுபக்கம் போலீஸ் ஆகவும் கம்பீரம் காட்டி இருக்கிறார்.. ஜெயிலில் இருந்து வந்த பிறகு அவர் போடும் சதித்திட்டங்கள் படத்திற்கு பக்க பலம்.

இளவரசியாக ரித்திகா சென்.. அரசர் குடும்பதிற்க்கு ஏற்ற முகத்தோற்றமும் இருப்பதால் ரசிக்க முடிகிறது.. இவரைப் பெண் கேட்க வரும் அந்த நியூஸ்லாந்து டாக்டரும் அவரது கேரக்டரும் எதிர்பாராத ட்விஸ்ட்..

இவர்களுடன் சாய்பிரியா, யாஷிகா ஆனந்த், பருத்திவீரன் சரவணன், சுமன், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான்
ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – C.E.சண்முகம், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா,மக்கள் தொடர்பு – மணவை புவன்,

இணை தயாரிப்பு – பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு – V.பழனிவேல்.

பெரும்பாலும் பேயை வைத்து ரசிகர்களை இதுவரை பயமுறுத்திய வடிவுடையான் இந்த படத்தில் பாம்பை வைத்து நம்மை பயப்பட வைத்திருக்கிறார்.. ஆனால் அதற்கு கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

முக்கியமாக ஒரு காட்சியில் பாம்புகளை அழிக்க திட்டமிடுகின்றனர்.. அந்தக் காட்சிகளில் பாம்புகளை அடிப்பது போல காட்டி இருக்கலாம்.. ஆனால் வெறும் வார்த்தையாகவே பாம்புகளை ஒழித்து விட்டோம் என படைவீரர்கள் சொல்வதாக காட்சிகள் உள்ளன.

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்..

பின்னணி இசை பல இடங்களில் காது கிழிக்கும் வகையில் இரைச்சலை கொடுத்திருப்பததை தவிர்த்து இருக்கலாம். ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது..

ஜீவன், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், லிவ்விங்டண்ட், சரவணசக்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து வடிவுடையான் இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

ஆனால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. இடைவேளைக்கு முன்பு வரை பாம்பை போல கதை அங்கும் இங்குமே செல்கிறது.. இடைவேளைக்குப் பிறகுதான் கொஞ்சம் கதை புரியும் படியாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.

பாம்பாட்டம்

Pambattam movie review and rating in tamil

வித்தைக்காரன் விமர்சனம் 3.5/5… கெட்டிக்காரன்

வித்தைக்காரன் விமர்சனம் 3.5/5… கெட்டிக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

2003 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது.. தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு (சதீஷ்) மேஜிக் கற்றுத் தருகிறார் தந்தை.. இதில் ஒரு மகன் மற்றவர்களை ஏமாற்றுவது தப்பில்லையா? என கேட்கிறார்.. மற்றொரு மகனோ ஏமாற்றுவது தப்பில்லை ஏமாறுவது தான் தப்பு என்கிறார்..

இதன்படி கதை 2023 ஆம் ஆண்டுக்கு நகர்கிறது.. பெரிய மேஜிக் மேனாக வளர்ந்து நிற்கும் சதீஷ்க்கு ஒரு கட்டத்தில் பெரிய தொகை ஒன்று தேவைப்படுகிறது. இதனால் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.

வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்படும் வைர நகைகளை லாக்கர் ரோமில் வைத்திருப்பார்கள். அந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் சதீஷ். ஆனால் இவர் நேரடியாக ஈடுபடாமல் மூன்று தாதாக்களையும் கொண்டுவர திட்டமிடுகிறார்.

மூன்று கேங் லீடர்ஸ் மதுசூதன் ஆனந்தராஜ் சுப்ரமணிய சிவா.. இவர்கள் மூவரும் சதீஷின் சதித்திட்டம் தெரியாமல் கொள்ளையடிக்க வருகின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா? சதீஷின் உள்நோக்கம் என்ன? இவர்கள் மூவரையும் ஒரே நேர்கோட்டில் அங்கே சந்திக்க விடுவது நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை.

(இதில் சுப்ரமணிய சிவாவின் அடியாளாக வருபவர் தான் இந்த படத்தின் இயக்குனர் வெங்கி.)

கேரக்டர்ஸ்…

Sathish
Simran Gupta
Anandraj
Madhusudhan
Subramaniam Siva
John Vijay
Pavel Navageethan
Japan Kumar

வடிவேலு, யோகிபாபு, சந்தானம், சூரி உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் இப்போது கதையின் நாயகர்களாக மாறிவிட்டனர்.. அந்த வரிசையில் சதீஷும் கதையின் நாயகனாக படங்களை கொடுத்து வருகிறார்.

ஹீரோ ஆகிவிட்டாலும் அதற்கான முயற்சிகளையும் சரியாகவே எடுத்திருக்கிறார் சதீஷ்.. ஒரு குத்துப் பாடலுக்கு அழகாக நடனமும் போட்டிருக்கிறார்.

தான் ஒருதலையாக காதலித்தாலும் தன் காதலிக்கு பிரச்சனை ஏற்பட்ட போது அதற்காக உதவும் சதீஷின் கேரக்டர் பாராட்டுக்குரியது. தான் காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் அவள் மேல் ஆசிட் அடிக்கும் ஆசாமிகளுக்கு இது ஒரு பாடம்.

தனக்கு என்ன வருமோ தனக்கு எந்த கதை பொருந்துமோ அதை சரியாக தேர்ந்தெடுத்த சதீஷுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.

டைட்டில் கார்டில் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற பெயர்களை போட்ட பிறகு இறுதியாகவே சதீஷ் பெயர் வருகிறது. அதற்கும் ஒரு பெரிய மனசு வேண்டும்.

நாயகி சிம்ரன் குப்தா.. இவரின் அழகும் இன்வெஸ்டிகேஷன் செய்யும் முறையும் ரசிக்க வைக்கிறது.

ஆனந்தராஜ், மதுசூதன் மற்றும் சுப்ரமணிய சிவா இவர்களுடன் வேலை செய்யும் அடியாள்கள் அனைவரும் சிரிப்புக்கு நாங்க கேரண்டி என உதவி இருக்கின்றனர்.

மதுசூதனின் உதவியாளர் சாம்ஸ்.. சுப்பிரமணிய சிவாவின் அடியாளாக வரும் இந்த படத்தின் இயக்குனர் வெங்கி ஆகியோரும் ஸ்கோர் செய்கின்றனர்.

இதில் இயக்குனர் வெங்கி DEFENCE ஆபீஸர்களிடம் சிக்கிக் கொள்ளும் காட்சி சிறப்பு.

ஆனந்தராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.. பாத்ரூமில் நிற்க கூட இடமில்லாமல் தவிக்கும் ஒரு அதிகாரிக்கு உங்க நம்பர கொடுத்துட்டு போங்க நாங்க போன் பண்ணி சொல்றோம் என்று ஆனந்தராஜ் செய்யும் அலப்பறை செம..

பாவல் நவநீதன், ஜான்விஜய் & ஜப்பான் குமார் ஆகியோரும் நம்மை கவனிக்க வைக்கின்றனர். இரண்டாவது நாயகியாக வருபவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் அழகால் நம்மை கவர்ந்து விடுகிறார்..

டெக்னீசியன்ஸ்…

Banner : White Carpet Films
Produced by : K.Vijay Pandi
Written & Directed by : Venki
Music : VBR
DOP : Yuva Karthick
Editor : Arul Elango Siddharth
Art : G.Durairaj
Stunts : Stunner Sam
Costume Designer : Kiruthika Sekhar
Production Controller: S.N.Asraf
Production Executive: Hakkim Sulaiman
Stills : S.P.Suresh
PRO : Sathish (AIM)
Motion Poster: Aathi
Publicity Designer : Thandora
Co-Producer : R. Murali Krishnan
Associate Directors: A.Abilash, Aneesh Rathenam, Maris
Assistant Directors: G.Hariharan, Rajeshwaran.J, V.Prabakaran, V.K Senthil Rajan, Sriram GV, Vaseekaran Dhanavel, Zubedh Syed

வி பி ஆர் என்பவர் இசையமைத்துள்ளார்..
இதுபோல திருட்டு கதைகளுக்கு பின்னணி இசை முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப பின்னி இருக்கிறார்..

சதீஷ்க்காக இவர் இசையமைத்தாரா.? இசைக்காக சதீஷ் ஆடினாரா? தெரியவில்லை.. ஆனால் பாடலும் ஆட்டமும் ரசிக்க வைக்கிறது.

யுவ கார்த்திக் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. ஏர்போர்ட்டில் திருடும் அந்த காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமைந்துவிட்டது..

அருள் இளங்கோ சித்தார்த் எடிட்டிங் செய்திருக்கிறார்.. நாயகன் சதீஷ் நடந்து வரும்போது திடீரென பின்னணி இசை கட்டிங் செய்து விட்டு நடக்க விடுவது அதன் பின்னர் இசையை சேர்ப்பதும் என பின்னி எடுத்து விட்டார்..

இதுபோன்ற கதைளுக்கு விறுவிறுப்பான எடிட்டிங் தேவை.. அதை உணர்ந்து தன் பணியை நேர்த்தியாக செய்து இருக்கிறார் சித்தார்த்.

லோகேஷ் இடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒரு சிம்பிளான கதையை கொஞ்சம் சீரியஸ் ஆகவும் அதே சமயம் சிரிக்கவும் வைத்திருப்பது சிறப்பு.. ஆனால் ஏர்போர்ட்டில் இப்படி எல்லாம் நடக்குமா என்றால் கொஞ்சம் லாஜிக் மீறல்கள் உள்ளது.

பெரும்பாலும் ஹீரோவுடன் நான்கைந்து நண்பர்கள் இருப்பார்கள் அல்லது அட்லீஸ்ட் ஒரு நண்பராக இருப்பார். தமிழ் சினிமாவின் இந்த இலக்கணத்தை உடைத்து ஒன் மேன் ஆர்மி போல இந்த வித்தைக்காரனை வைத்து வித்தை காட்டி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.

வித்தைக்காரன்

Vithaikkaaran movie review and rating in tamil

நினைவெல்லாம் நீயடா விமர்சனம்..; காலம் மாறலாம் காதல் மாறாது..

நினைவெல்லாம் நீயடா விமர்சனம்..; காலம் மாறலாம் காதல் மாறாது..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி ..

ரோஹித் & யுவஸ்ரீ இருவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கையில் காதலிக்கின்றனர் . இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பிரஜன் & சீனாமிகா. (இதில் சினாமிகா கேரக்டரில் மட்டும் ட்விஸ்ட்..)

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே யுவஸ்ரீ திடீரென அமெரிக்கா செல்கிறார். இதன் பிறகு காதலர்களிடையே தொடர்பு இல்லை. ஆனாலும் காதலியை நினைத்து உருகி கொண்டு இருக்கிறார் பிரஜன்.

ஒரு கட்டத்தில் முறைப்பெண் மனிஷாவை கட்டிக்க பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர்.. முதலில் மறுக்கிறார் பிரஜன்.. ஒருவேளை தன் காதலி திரும்பி வந்தால் என்ன செய்வது? என கேட்க அவள் இந்நேரம் திருமணம் செய்து குழந்தை பெற்று இருப்பாள் என்கின்றனர் நண்பர்கள்.

ஒருவேளை அவள் திருமணம் செய்யாமல் திரும்பி வந்தால் நான் செத்துடுவேன் என்கிறார் பிரஜன். மனீஷாவின் தற்கொலை முயற்சியால் வேறு வழியின்றி மனீஷாவை மணக்கிறார். இவர்கள் திருமண வாழ்வில் சந்தோஷம் இல்லை.

இந்த நிலையில் தான் நீங்கள் எதிர்பார்ப்பது போல திருமணம் செய்து கொள்ளாமல் சினாமிகா தன் காதலனை தேடி இந்தியா வருகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது காதலன் என்ன செய்தான்? மனைவி மனிஷாவின் நிலை என்ன? சினாமிகா என்ன செய்தார்? நண்பர்கள் என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்ஸ்…

Starring – PRAJAN, MANISHA YADAV, SINAMIKAA, YUVALAKSHMI, ROHIT, REDDIN KINGSLEY, MANOBALA, MADHUMITHA, RV UDHAYAKUMAR, PL THENAPPAN MUTHURAMAN, YASAR ABI NATCHATHIRA

காதலியின் கரம் பிடிக்க முடியாமல் மனைவியுடன் மனம் ஒத்துப் போகாமல் இரண்டு உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் பிரஜன். கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைத்து நம்மையும் கொஞ்சம் அழ வைக்கிறார்.

நாயகியாக சினாமிகா.. காதலனை தேடி இந்தியாவிற்கு வந்து பின்னர் வேதனைப்படும் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சித்து இருக்கிறார். ஆனாலும் நாயகனின் அக்காவை போலவே தோற்றத்தில் தென்படுகிறார்.

பள்ளியில் பார்த்து ரசித்த யுவஸ்ரீ? இது என ரசிகர்களையும் குழப்பி விடுகிறார் இயக்குனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் வித்தியாசமான ட்விஸ்ட் வைத்து நம்மை தேற்றி விட்டார்.

பள்ளிக் காதலர்களாக ரோஹித் மற்றும் யுவஸ்ரீ.. இருவரின் லவ் கெமிஸ்ட்ரி செம. இவர்களுக்காக இளையராஜா போட்ட காதல் மெலோடியும் சூப்பர்.

எதிர்பாராத கேரக்டரில் ஸ்ரீ பிரியங்கா.. அந்த கேரக்டரை சொன்னால் சுவாரசியம் இருக்காது.. ஆனாலும் இவரின் காட்சிகள் இன்னும் இருக்காதா? என ஏங்க வைத்து விட்டார்.

இளவயது பிரஜனாக ஆக ரோகித் நடித்திருக்கிறார். இவரும் செம ஸ்மார்ட்.. யுவஸ்ரீ தோழியாக அபி நட்சத்திரா.. பள்ளி மாணவியாக பக்காவ பொருந்திருக்கிறார்

மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா ஆகியோர் ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

நினைவெல்லாம் நீயடா

டெக்னீசியன்ஸ் ..

Written & Directed by: AADHIRAAJAN

Music : ILAIYARAAJA

Producer : ROYAL BABU

Banner : LEKHA THEATRES

Cinematographer : RAJA BHATTACHARJEE

Editor : ASHISH

Art director: Munikrishna

STUNT MASTER: PRADEEP DINESH

LYRICS: ILAIYARAAJA, PAZHANI BHARATHI, SNEKAN

SINGERS: Yuvan, KARTHIK ANANYA BHAT
SIREESHA BHAGAVATHULLA
HARIPRIYA

CHOREOGRAPHY: DINESH , DHEENA

இளையராஜாவின் இசையில் பள்ளி காதலர்களுக்கான பாடல்கள் மட்டும் ரசிக்க வைக்கிறது.. இசைஞானியின் பின்னணி இசை வழக்கம் போல ரசிக்க வைக்கிறது.

ராஜா பட்டாச்சாரியார் ஒளிப்பதிவு செய்ய ஆஷிஷ் என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்… ஒளிப்பதிவை வண்ணமயமாய் கொடுத்திருக்கிறார். பள்ளி பருவ காட்சிகள் படத்திற்கு பலம் என்பதை உணர்ந்து அழகுற செய்து இருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் எடிட்டர் வெட்டியிருக்கலாம்.

‘சிலந்தி & அருவா சண்டை’ படங்களை இயக்கிய ஆதிராஜன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. வாழ்க்கையில் ஆயிரம் பெண்களைக் கடந்தாலும் நாம் காதலித்த முதல் பெண் நினைவு மனதில் நிற்கும் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார்

கம்யூனிகேஷன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காதல் என்றென்றும் நிற்கும் என்பதை கொஞ்சம் வலியுடன் சொல்ல முற்பட்டு இருக்கிறார்.

90களில் வந்த படங்களில் பார்க்காமல் காதல்… டெலிபோன் காதல்.. கடிதம் காதல்.. நாக்கை அறுத்துக் கொண்ட காதல் என பல காதல் பாடல்களை பார்த்து இருப்போம்.. அதுபோல இந்த படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு காதல் சுவாரசியத்தை வைத்திருக்கிறார். அது இன்றைய 90ஸ் கிட்ஸ் மட்டும் 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கு பிடிக்குமா? உண்மையாக காதலிப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் எனலாம்.

நினைவெல்லாம் நீயடா என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் காதலியை நினைத்துக் கொண்டிருக்கும் காதலனுக்காக நினைவெல்லாம் நீயடி என வைத்திருக்கலாம் இயக்குனர் ஆதிராஜன்.

ஆக நினைவெல்லாம் நீயடா.. காலம் மாறலாம் காதல் மாறாது..

நினைவெல்லாம் நீயடா

NINAIVELLAM NEEYADA movie review and rating in tamil

BIRTH MARK பர்த் மார்க் பட விமர்சனம்..

BIRTH MARK பர்த் மார்க் பட விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

ஷபீர் ஒரு ராணுவ வீரர். இவரது மனைவி மிர்ணா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

தனது மனைவிக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்க்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக கேரளா அருகே உள்ள வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துக்கொண்டு செல்கிறார்.

அங்குள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பிரசவம் பார்க்க சொல்கிறார்.. அந்தப் பகுதியில் அடிப்படையான மருத்துவ வசதி ஆம்புலன்ஸ் வசதி என எதுவுமே இல்லாததை காணும் மிர்ணா பிரசவத்தை நினைத்து பயப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் இந்த குழந்தை என்னுடையது அல்ல இது உன்னுடைய குழந்தை என மனைவி மீது சந்தேகம் கொள்கிறார் ஷபீர்.

அவருடைய மன மாற்றத்திற்கு என்ன காரணம்? இதற்குப் பின்னணியில் ஏதேனும் காரணங்கள் உள்ளதா? மருத்துவர்கள் சொன்ன முறையை பின்பற்றினாரா மிர்ணா? பிரசவம் நல்ல முறையில் நடைபெற்றதா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

பர்த் மார்க்

கேரக்டர்ஸ்…

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் & நாயகி கண்ணை கட்டிக்கொண்டு காட்டில் செல்கின்றனர்.. ஒருவரை ஒருவர் பார்க்காமல் முத்தமிட்டு திருமணமும் செய்து கொள்கின்றனர். அதன் பின்னர் தான் கதை ஓட்டம் ஆரம்பிக்கிறது.

சார்பட்டா பரம்பரையில் நம் கவனம் ஈர்த்த ஷபீர் நாயகனாகவும் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்ணா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஷபீர் கல்லரக்கலும் மிர்னாவும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்..

ஒரு நிறைமாத கர்ப்பிணியை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் மிருணா.. பிரசவ வலிகளையும் கணவன் தன் மீது சந்தேகம் கொள்ளும் எரிச்சலை தாங்கிக் கொள்ளும் பெண்ணாக நடித்திருக்கிறார்.

நீண்ட தாடி என முரட்டுத்தனமாக தோன்றும் ஷபீர் திடீரென கிளீன் ஷேவ் செய்து ஸ்மார்ட் ஆக மாறிவிடுகிறார்.

ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கும் ஷபீர் அந்த மருத்துவ மையத்தில் வேலை பார்க்கும் ஒருவனிடம் சண்டை போடுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. காட்டுப்பகுதியில் சிகரெட் பிடிக்கக் கூடாது என வேலைக்காரன் சொல்கிறார். இது ஒரு ராணுவ வீரனுக்கு தெரியாதா? அவர் அதை மதிக்க வேண்டாமா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

இவர்களுடன் வேலைக்காரனாக நடித்த இந்திரஜித் நடிப்பில் நம்மை ஈர்த்து விடுகிறார். வாய் பேச முடியாதவராக இருக்கும் இவர் காட்டும் முகபாவனைகள் சிறப்பு..

இவர்களுடன் பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மருத்துவ மையத்தில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களும் தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். மொத்தமே 8 கேரக்டர்களை மட்டுமே வைத்து படத்தை முடித்து விட்டார் இயக்குனர்.

பர்த் மார்க்

டெக்னீசியன்ஸ்…

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசை ரசிக்கும்படியாக இருப்பது பாராட்டுக்குரியது.

உதய் தங்கவேலு அவர்களின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. மருத்துவ மையத்தில் பிரசவ அரங்கம் அமைக்கப்பட்டிருக்கும்.. அந்த அரங்கத்தின் ஓவியம் மற்றும் லைட் செட்டிங் ரசிக்க வைக்கிறது.

விக்ரம் ஸ்ரீதரன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார்.. சிசேரியன் செய்து கொள்ளாமல் பிரசவம் பார்க்க வேண்டும் இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என வித்தியாசமான திரை கதையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஆனால் இந்த ஒற்றைக் கருவை மட்டும் வைத்து இரண்டு மணி நேரம் கதை சொல்லி இருப்பது தான் படத்திற்கு சோர்வை தருகிறது.

மேலும் ஓர் இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் நேசிக்கும் ஒரு ராணுவ வீரர் மனைவி மீதும் வேலைக்காரர்கள் மீதும் வெறுப்பு காட்டுவது ஏனோ.? அதற்குப் பின்னணியில் தன் பெற்றோர் மனநிலையை காட்சிப்படுத்தி இருந்தாலும் பெரிதாக ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.

சைக்கலாஜிக்கல் திரில்லர் பாணியில் இயக்கியிருக்கிறார்.. இது ஏ கிளாஸ் ஆடியன்ஸ்க்கு பொருந்தினாலும் B&C சென்டர் ஆடியன்ஸ்க்கு எடுபடுமா என்பது சந்தேகமே.!

தமிழில் படமாக்கப்பட்ட இந்த படத்திற்கு பர்த் மார்க் என்ற ஒரு ஆங்கில பெயரை வைத்து இந்த படம் அந்நியப்பட்டு நிற்கிறது.

பர்த் மார்க்

BIRTH MARK movie review and rating in tamil

கொட்டாச்சி இயக்கி நடித்த ‘கழுமரம்’ பட விமர்சனம்

கொட்டாச்சி இயக்கி நடித்த ‘கழுமரம்’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

கிராமத்தில் தியேட்டரில் போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்து வரும் கொட்டாச்சி பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு வருகிறார்.. தன் அம்மா ஆசைப்பட்டபடி சினிமாவில் ஒரு பெரிய இயக்குனராக வரவேண்டும் என அதற்காக உழைத்து வருகிறார். பல தடைகள் அவமானங்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்..

எப்படியாவது இயக்குனராகி வாழ்க்கையில் முன்னேற துடிக்கையில் இவரது கதை களவாடப்படுகிறது. இதனால் விரக்தீயில் இருக்கும் நாயகன் என்ன செய்தார்? அவரால் சாதிக்க முடிந்ததா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

Cast – Kottachi Annamagan, Pandi Selvam, Tamil Barathi, Thirupachi Benjamin , karnan janaki, Sathyendran,

நாயகன் கொட்டாச்சியே படத்தின் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.. தனக்கு ஏற்ற கதையை எடுத்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஒரு சினிமாவிலயே ஒரு உதவி இயக்குனர் படும் கஷ்டங்களை உணர்வுப்பூர்வமாக எடுத்திருக்கிறார்.. ஆனால் திரையில் அது சார்ந்த திரைக்கதையை ஓடிக் கொண்டிருக்கும்போது சில நேரம் சலிப்பு தட்டுகிறது.

இவருடன் நடித்த மற்ற நடிகர்கள் கதை ஓட்டத்திற்கு உதவி புரிந்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

Writer – Kottachi Annamagan
Cinematographer – Gri Dharan, Raja Durai
Editor – Dharani Dharan, Krishna
Music – Roshan Mathews
Producer – K. Krishna Raju

ஒளிப்பதிவும் இசையும் ரசிக்க வைக்கிறது. நடிகர் கொட்டாச்சி அண்ணமகன் இயக்கியிருக்கிறார். திரையுலகில் இயக்குனராக ஆவது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்த்திருக்கிறார்.. அதே சமயம் ஒரு இயக்குனராவது எளிதல்ல.. அதற்காக பல அவமானங்கள் கஷ்டங்களை சோதனைகளை சந்திக்க வேண்டும்.

உன்னை தூற்றும் இந்த சமூகம் நீ வெற்றி பெற்றால் மட்டுமே கொண்டாடும்.. அதற்காக நீ உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு படம் வெற்றி கொடுத்து விட்டால் மட்டும் போதாது அந்த வெற்றியை நோக்கி அதை தாண்டி ஓட வேண்டும் என கொட்டாச்சி உணர வைத்து நடித்திருக்கிறார்.

Kottachi starrer Kazhu Maram movie review

‘எட்டும் வரை எட்டு’ பட விமர்சனம்

‘எட்டும் வரை எட்டு’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

அப்பா : ஆடுகளம் நரேன்
மகள் : கதாநாயகி பிரத்யங்கிரா ரோஸ்

தாய் இல்லாமல் வளர்க்கப்பட்டவள் தந்தை கண்டிப்பில் வளர்கிறார் பூமணி..

ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைக்க வேண்டும்.. வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் மகள்.. பழைய பஞ்சாங்கத்தை கட்டிக் கொண்டு… பெண்கள் சமையலறையில் தான் இருக்க வேண்டும் என தத்துவம் பேசும் தந்தை. இவர்களின் மோதல் தான் இந்த படத்தின் கதைக்கரு.

இந்த சூழ்நிலையில் நாயகி மீது கொலை பழி.. இதன் பின்னணியில் நடந்தது என்ன?

தந்தையின் எதிர்ப்பை மீறி சாதித்தாரா மகள்.? மகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டாரா தந்தை? என்பதுதான் படத்தின் மீதி கதை.

எட்டும் வரை எட்டு

கேரக்டர்ஸ்…

நந்தகுமார், பிரத்யங்கிரா ரோஸ், செளந்தர்யா வரதா, ஆடுகளம் நரேன், சீனி பாட்டி, ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ் சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தனபாலன்

கதாநாயகி பிரத்யங்கிரா ரோஸ்.. தன் இலட்சிய தடைகளை உடைத்தெறியும் சிங்க பெண்ணாக நடித்திருக்கிறார். எதையும் துணிந்து எதிர்க்கும் பக்குவப்பட்ட பெண்ணாகவும் அதே சமயம் கொலை வழி தன் மீது விழுந்த பின்னர் உடைந்து நொறுங்கும் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார்..

நாயகனாக நந்தகுமார். நாயகிக்கும் கதை ஓட்டத்திற்கும் உதவியாக இருந்து நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக ‘ஆடுகளம்’ நரேன். பழைய பஞ்சாங்க அடக்குமுறை தந்தையாக நரேன் ரசிக்க வைக்கிறார். தந்தை கேரக்டருக்கு வலுவான பலம் சேர்த்திருக்கிறார்.

எட்டும் வரை எட்டு

இவர்களுடன் ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தன்பாலன் உள்ளிட்டோரும் உண்டு.. ஆங்காங்கே கொஞ்சம் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

இசை : ராஜயோகி
ஒளிப்பதிவு : வேல் முருகன்
இயக்கம் : வேல்விஸ்வா
தயாரிப்பு : எஸ்.பாஸ்கர்
இணை தயாரிப்பு : ஹேமா மூவிஸ் இண்டர்நேஷ்னல் என்.என். மணிபாலன்

ராஜயோகி இசையில் பாடல்கள் தாளம் போடவும் வைக்கின்றன.. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

வேல் முருகனின் ஒளிப்பதிவில் வறட்சி கிராமம் எதார்த்தமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட லொகேஷன்கள் இல்லாமல் வாழ்வியலோடு கலந்த லொக்கேஷனில் படம் பிடித்திருப்பது சிறப்பு.

எட்டும் வரை எட்டு

என்னதான் 2024 ஆண்டுகளை நாம் எட்டி விட்டாலும் இன்னும் சில பெண்கள் அடக்குமுறைக்கு பயந்து வீட்டில் வாழ்கிறார்கள்.. பெரும்பாலும் பெண்கள் புகுந்த வீட்டில்தான் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆனால் பிறந்த வீட்டிலேயே ஒரு பெண் அடிமைப்பட்டு கிடக்கிறாள் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். அதை எல்லாம் மீறி அவளால் எப்படி சாதிக்க முடிந்தது என்பதையும் இயக்குன சொல்லி இருப்பது பல பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

திருமணத்திற்கு முன்பு தந்தைக்கும் திருமணத்திற்கு பின்பும் கணவனுக்கும் கட்டுப்பட்டு வாழும் பெண்கள் மத்தியில் தன்னை நம்பினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.. இந்த உலகத்தில் வாழ முடியும் என சொல்லி இருக்கிறார் இயக்குனர் வேல் விஷ்வா.

எனவே இந்த ‘எட்டும் வரை எட்டு’.. எட்டு திசைக்கும் எட்டட்டும்.. வாழ்த்துக்கள்

Ettum Varai Ettu movie review and rating in tamil

More Articles
Follows