தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி, சஞ்சய், இளவரசு, பிரபு, தீபா உள்ளிட்டோர் நடிக்க இன்று வெளியானது ‘இராவண கோட்டம்’.
1957ல் நடந்த முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை சொல்லி முற்ப்பட்டு இருக்கிறார் விக்ரம் சுகுமாறன்.
கதைக்களம்…
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி என்ற ஊரின் தலக்கட்டு பிரபு. இவரது அறிமுகமே தேசிய தலைவர் படங்களுடன் இவரது தலை இடம்பெறுகிறது.
பிரபுவின் நெருங்கிய நண்பர் இளவரசு. பிரபு – மேலவீதி.. இளவரசு – கீழவீதி. (ஜாதியை சொல்லாமல் இப்படி வைச்சிட்டாங்க)
இந்த ஊர் மொத்தமும் மொத்தமும் பிரபு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எனவே ஒரு அரசியல்வாதி நினைத்தாலே கூட அந்த ஊரில் எது செய்ய நினைத்தாலும் பிரபுவின் அனுமதி வேண்டும்.
நாலு காசு பார்க்கலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு (எம்எல்ஏ அருள்தாஸ் & அமைச்சர் தேனப்பன்) இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
சாதீயை வைத்து ஊரை இரண்டாக பிரிக்கும் வேலையில் அருள்தாஸின் ஒத்தக்கை அல்லக்கை பக்கா ப்ளான் போடுகிறார்.
அதில் பிரபுவின் விசுவாசியான சாந்தனுவும் இளவரசின் மகன் சஞ்சய் சரவணனும் சிக்குகிறார்கள். இதில் நாயகி ஆனந்தியும் அடக்கம்.
அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தண்ணீர் பிரச்சனையால் ஊரே திண்டாடுகிறது. எனவே கருவேல மரங்களை ஒழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதால் அதனை ஒழிக்க கிராம மக்கள் நினைக்கின்றனர்.
ஆனால் கார்ப்பரேட்டுக்கு கைக்கூலியாக மாறும் அரசியல்வாதிகள் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்றனர்.
இறுதியில் என்ன ஆனது.? ஊர் பிரிந்ததா.? பங்காளிகள் இணைந்தார்களா.? ஊருக்கு நல்லது நடந்ததா? கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டதா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சாந்தனு ஒரு முரட்டு கிராமத்து இளைஞனாக அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். தன்னுடைய கேரக்டரை கச்சிதமாகவே கொடுத்துள்ளார் எனலாம்.
இவருக்கு போட்டியாக சஞ்சய்.. தன்னால் முடிந்த வரை சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
நாயகி ஆனந்தி கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்துள்ளார். ஊர் பெரியவர் பிரபுவின் கதாபாத்திரம் படத்திற்கு அவரது உடலை போலவே பலம் சேர்த்துள்ளது.
தீபா ஷங்கரின் காட்சிகள் யதார்த்தமாக உள்ளது. அதே சமயம் சுஜாதாவின் காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளது. எப்போதும் மிரட்டும் அருள்தாஸ் இதில் எம்எல்ஏவாக இருந்தும் அடக்கி வாசித்திருக்கிறார். மினிஸ்டர் தேனப்பன் தன் கேரக்டரில் கச்சிதம்.
ஒத்தக்கை ஆசாமி.. வில்லனாக இவர் போடும் சதி திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.
படத்தில் இவரது கேரக்டருக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது ஏனோ?. இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்.
டெக்னீஷியன்கள்…
மேலத்தெரு கீழத்தெரு என்ற இரு பிரிவினரை காட்டினாலும் ஊர் மக்கள் தல கட்டுக்கு கட்டுப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை காட்டுகிறது.
அது போல சாதி வேறாக இருந்தாலும் சாந்தனு – சஞ்சய் நட்பு பாராட்டக்குரியது. ஆனால் ஆனந்தியின் முக்கோண காதல் கதையை கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்.
பெரும்பாலும் எந்த படத்திலும் சொல்லாத சீமகருவேல மரங்கள் அரசியலைப் பற்றி சொல்லியிருப்பது இயக்குனரின் சமூக ஆர்வத்தை காட்டுகிறது.
தண்ணீர் பஞ்சத்தில் கஷ்டப்படும் நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கார்ப்பரேட் கைக்கூலிகளை விரட்டி அடிக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.
அது போல கிராமத்திற்குள் அரசியல் வந்தால் ஓட்டுக்கு பணம் வந்துவிடும் என்பதையும் பிரபு கேரக்டர் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
பிரபு – சாந்தனு சார்ந்த மேலத்தெருவில் ஒரு கெட்டவர் கூட இல்லை. ஆனால் இளவரசு – சஞ்சய் சரவணன் சார்ந்த கீழத்தெருவில் ஒரு நல்லவர் கூட இல்லையா.? இப்படியாகவே காட்சிகளை நகர்த்தி இருப்பது ஏதோ ஒரு பிரிவினருக்காக இயக்குனர் நிற்கிறாரோ.? என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கவனம் பெறுகின்றன.. பின்னணி இசை கிராமத்து கதை ஓட்டத்தில் இருப்பது சிறப்பு.
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சிறப்பு.
SI எஸ் ஐ செங்குட்டுவன் & இந்திரா.. இதை வைத்து ஒரு செயின் டாலர் காட்சி காட்டப்படுகிறது.்இதனை வைத்து ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து நினைத்துள்ளார் இயக்குனர்.. ஆனால் அதுவும் சப் என்று ஆகிவிடுகிறது.
ஆக இராவண கோட்டம்.. தலக்கட்டு வெளுத்துக்கட்டு.்
Raavana Kottam movie review and rating in tamil