டிக் டிக் டிக் விமர்சனம்

டிக் டிக் டிக் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜீனன், ரமேஷ் திலக், ஜெயம் ரவி மகன் ஆரவ் மற்றும் பலர்.
இயக்கம் – சக்தி சௌந்தர் ராஜன்,
ஒளிப்பதிவு – வெங்கடேஷ்
இசை – இமான்
கலை – எஸ் எஸ் மூர்த்தி
தயாரிப்பு – நேமிசந்த்
பிஆர்ஓ. : யுவராஜ்

கதைக்களம்…

படத்தின் தொடக்கமே வின்வெளியில் இருந்து ஆரம்பமாகிறது.

அப்போது வானத்திலிருந்து 8 டன் எரிகல் ஒன்று சென்னையில் விழுகின்றது. இதனால் பூமியில் பெரிய பள்ளமும், பல உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.

இதனையடுத்து ஆராய்ச்சி செய்யும் குழுவினர் அடுத்து 60 கிலோ டன் எரிகல் ஒன்று தமிழகத்தில் விழ போகிறது என்பதை கண்டு பிடிக்கின்றனர். அதுவும் 6 நாடகளில் வரப்போகிறது.

600 கிலோ டன் என்பது கிலோவை குறிப்பிடுவது அல்ல. அது வெடிக்கும் திறனை பற்றியது.

அது விழுந்துவிட்டால் 4 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்பதால் அதை தடுக்க முயல்கின்றனர்.

நிச்சயமாக 4 கோடி மக்களை மாநிலத்திலிருந்து வெளியேற்ற முடியாது என்பதால் ஒரு மிஷைல் (ஏவுகணை) வைத்து அதை உடைக்க முயல்கின்றனர்.

ஆனால், அதை உடைக்க எந்த நாட்டிலும் அப்படியொரு ஏவுகனை இல்லை என்பது தெரிய வருகிறது.

இதனால் வெளியுலகுக்கு தெரியாமல் ஒரு நாடு மட்டும் அதை வைத்திருக்க, அதை திருட ஒரு மெஜிசிஷியன் மற்றும் திருடனான ஜெயம் ரவி மற்றும் அவரது டீமை நாடுகின்றனர்.

அவர்களுக்கு நாளே நாட்களில் பயிற்சியளித்து விண்வெளிக்கு அனுப்புகின்றனர்.
அங்கே, அந்த ஏவுகனை திருடினார்களா.? அந்த எரிகல்லை உடைத்தார்களா? மக்கள் என்ன ஆனார்கள்? மாநிலம் காப்பாற்றப்பட்டதா? என்பதே இந்த டிக். டிக் டிக்.

கேரக்டர்கள்…

வித்தியாசமான கேரக்டர்களை தொடர்ந்து செல்க்ட் செய்வதற்காக ஜெயம் ரவியை பாராட்டலாம். கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால் படத்தை போல முதல் பாதியில் கூட சீரியசாகவே வருகிறார். சிரிப்பதை கூட அளந்தே சிரிக்கிறார்.

கொஞ்சம் கூட சிரிக்காமல் படம் முழுவரும் வருகிறார் நிவேதா பெத்துராஜ். ஒரு காட்சியில் மட்டும் நீச்சல் உடையில் வந்து கிளுகிளுப்பூட்டுகிறார்.

வில்லன் வேடத்திற்கு ஜெயப்பிரகாஷ் பொருந்தவே இல்லை. அட்லீஸ்ட் வின்செட் அசோகனை வில்லனாக சித்தரித்து இருக்கலாம்.

ஜெயம்ரவி மகன் ஆரவ் க்யூட்டாக வருகிறார். அவ்வளவுதான்.

மற்றபடி மற்ற கேரக்டர்களில் சுவராஸ்யம் இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். தீம் மியூசிக்கிலும் கலக்கியிருக்கிறார். இமானின் 100வது படத்தில் சென்சுரி அடித்திருக்கிறார்.

ஆனால் பாடல்கள் கவரவில்லை. குறும்பா குறும்பா பாடல் ஜெயம் ரவி மகனுக்காகவே எழுதப்பட்டதாக தெரிகிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நாமே வின்வெளிக்கு சென்றது போன்ற அனுபவம் வரும்.

இவர்களை விட முக்கியமானவர் ஆர்ட் டைரக்டரும் கிராப்பிக்ஸ் டீமும்தான். வின்வெளி ஆராய்ச்சி நிலையம் முதல் ஏவுகனை வரை அனைத்தையும் அசலாக பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இப்படியொரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தமைக்காக சக்தி சௌர்தரர்ராஜனை பாராட்டலாம்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த டைரக்டர் கேரக்டர் செல்க்சனிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இதுபோன்ற சாகச படங்களை எடுக்கும்போது தனி ஒருவன் படத்தில் அந்த ஐவர் அணி போல உள்ள நடிகர்களை பயன்படுத்தியிருக்கலாம்.

ஜெயம் ரவி உடன் வரும் அர்ஜீனன் மற்றும் ரமேஷ் திலக் இதற்கு பொருந்தவில்லை. ஒருவேளை அவர்களை இந்த சீரியஸ் படத்திற்கு காமெடிக்காக பயன்படுத்தியிருந்தால் காமெடியாவது கொடுத்திருக்கலாம். அதுவும் இல்லை என்பதால் ஏமாற்றம்தான்.

ஒரு மாநிலத்திற்கே பேராபத்து வரும்போது அதை மக்களுக்கு தெரிவிக்காமல் பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும். அப்படியொரு காட்சியே படத்தில் இல்லை. அவர்களே எல்லாம் முடிவையும் எடுக்க முடியுமா?

பெரிய விஞ்ஞானிகள் இருக்கும் போது, ஒரு திருடனையா ஏவுகனையை திருட அனுப்புவார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம்.

விண்வெளி வீரர்களுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் மேஜிக் மேன் ஜெயம் ரவிக்கு தெரிந்திருக்கிறது என்பது கொடுமை.

இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்பதால் லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் ரசிக்கலாம்.

கம்மி பட்ஜெட்டில் காஸ்ட்லியான வின்வெளியை கொடுத்த இந்த டீமை பாராட்டலாம்.

டிக் டிக் டிக்…. வின்வெளியில் விறுவிறுப்பு – 50%

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: எஸ்ஏ சந்திரசேகர், ரோகினி, ஆர்கே சுரேஷ், எஸ்வி சேகர், அம்பிகா, மனோ பாலா, விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான் மற்றும் பலர்
இயக்குனர்: விக்கி
இசையமைப்பாளர்: பாலமுரளி பாலு
தயாரிப்பாளர்: எஸ்ஏ சந்திரசேகர் க்ரீன் சிக்னல்
பிஆர்ஓ. : சக்தி சரவணன்

கதைக்களம்…

இன்றைய நாட்டு நடப்பில் இப்படி ஒரு மனிதர் வாழ முடியுமா? இந்த வயதிலும் போராட முடியுமா? என்பதற்கு விடைதான் இந்த டிராஃபிக் ராமசாமி.

அநீயாயம் செய்பவர்களுக்கு பிடிக்காத ஒரு தனி ஒருவரின் வாழ்க்கை பதிவு.

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் இருந்தால் அதை நம்மில் பலர் எதிர்த்து பேசுவார்கள். ஆனால் அதை கிழித்தெறியும் முதல் மனிதர் இவர்.

அத்தோடு இல்லாமல் எங்கு அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முதல் வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்டு வருபவர்.

பெரும்பாலும் இவரை பற்றி நாம் பேசும்போது விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை இவர் அகற்றுவார் என்பதுதான் நமக்கு தெரியும்.

ஆனால் அதையும் மீறி தமிழக அரசையே எதிர்த்து இவர் செய்த சாகசங்கள் அனைத்தும் கலந்த கலவைதான் இந்த டிராஃபிக்.

கதைக்களம்…

சென்னையில் மீன்பாடி (மூன்று சக்கர) வண்டிகளால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது.

பொதுவாக இந்த வண்டிக்கு 25சிசி ஸ்பீடு மட்டுமே இருக்கும். அதற்கு மட்டும்தான் அனுமதியுள்ளது.

ஆனால் டூவிலரில் உள்ள இன்ஜினை திருடி, அதை மீன்பாடி வண்டியில் பொருத்தி ஓவர் ஸபீடாக சென்று பலரை கொல்கின்றனர்.

இந்த விபத்துக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கில் எம் எல் ஏ, மேயர், மந்திரி என அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர்.

இவர்கள் டிராபிக் ராமசாமியை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தாண்டி இந்த வழக்கில் டிராபிக் ராமசாமி வெற்றி கண்டாரா? என்பதே இப்பட கதை.

கேரக்டர்கள்…

டிராபிக் ராமசாமியாக எஸ் ஏ சந்திரசேகரன். நிஜ டிராஃபிக் ராமசாமிக்கு இவரை விட பொருத்தமான ஒரு ஆள் கிடைப்பாரா தெரியல.

கதைக்கும் கேரக்டருக்கும் மிக கச்சிதம்.

போலீசை எதிர்த்து அவர் பேசும் வசனங்கள் முதல் அரசியல்வாதிகள் தில்லாக பேசும் காட்சிகள் அனைத்தும் அசத்தல்.

அதிலும் கோர்ட் காட்சிகளில் இவரே வாதாடி வழக்கறிஞர்களையே வென்று விடுகிறார்.

போலீஸ் ஸ்டேசனில் இவர் அடி வாங்குவதை பார்த்தால் நமக்கே பாவமாக தோன்றும்.

பேத்தியுடன் பாசம், மனைவியுடன் நேசம், குடும்பத்தில் அன்பு என சகலத்திலும் ஜொலிக்கிறார்.

வில்லனாக இருப்பார் என்று பார்த்தால் தன் கேரக்டரில் ஹீரோவாக உயர்ந்து விடுகிறார் ஆர்கே சுரேஷ்,
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் கணவனை விட்டுக் கொடுக்காத ரோகினி மனதில் நிறைகிறார்.

இவர்களுடன் நிறைய நட்சத்திரங்கள்…

லிவிஸ்டன், எஸ்வி சேகர், அம்பிகா, மனோ பாலா, விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான், இமான் அண்ணாச்சி, பிரகாஷ்ராஜ் என பலரும் வந்து செல்கிறார்கள்.

இதில் இமான் அண்ணாச்சி செய்யும் இம்சைகள் சில கவுன்சிலர்களை நினைவுப்படுத்தும்.

இதில் விஜய் ஆண்டனி வரும் காட்சி படு செயற்கையாக இருக்கிறது.

எஸ்வி சேகரை நீதிபதியாக பார்க்கும்போது ஆடியன்ஸ் கிளாப்ஸ் அள்ளும். அதற்கு காரணம்தான் உங்களுக்கு தெரியுமே.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலமுரளி பாலுவின் பின்னணி இசை பேசப்படும். குடும்ப பாடல் மற்றும் போராட்ட பாடல் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் அவர்கள் பணியில் கச்சிதம்.

ஒரு தனி மனிதரின் வாழ்க்கை பதிவை அப்படியே கொடுக்காமல் கமர்சியல் கலந்து கொடுத்துள்ளார் விக்கி.

அறிமுக இயக்குனர் என்று அவர்தான் சொல்கிறாரே தவிர படத்தில் அப்படி தெரியவில்லை.

சீனியர் நடிகர்களை நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார்.

கமர்சியலாக கொடுக்க நினைத்து சில நேரங்களில் காட்சி அமைப்புகளில் அதுவே மைனசாக மாறிவிட்டது.

கொஞ்சம் விறுவிறுப்பாக காட்சிகள் செல்லும் போது அம்பிகாவின் அரட்டை கொஞ்சம் ஓவராக தெரிகிறது.

பல கோர்ட் காட்சிகள் நாடகத்தன்மை உள்ளது. யதார்த்தம் கலந்து கொடுத்திருக்கலாம்.

டிராஃபிக் ராமசாமி… ஒன் மேன் ஆர்மி

ஆந்திரா மெஸ் விமர்சனம்

ஆந்திரா மெஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ராஜ்பரத், தேஜஸ்வனி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர், சையத் மற்றும் பலர்.
இயக்கம் – ஜெய், ஒளிப்பதிவு – முகேஷ்.ஜி,
இசை – பிரசாத் பிள்ளை,
படத்தொகுப்பு – பிரபாகர்,
கலை – செந்தில் ராகவன்,
ஆடை வடிவமைப்பு – தாட்ஷா பிள்ளை,
பாடல்கள் – குட்டி ரேவதி, மோகன்ராஜன்,
சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன்
தயாரிப்பு – ஷோபோட் ஸ்டுடியோஸ் நிர்மல் கே.பாலா
பிஆர்ஓ. : குமரேசன்

கதைக்களம்…

ஜெய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம்தான் இது. மேலும் பிரபல ஓவியர் ஏபி. ஸ்ரீதரும் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

ஒரு ஜமீன்தார் அவருடைய இளம் மனைவி. அவர்களிடம் தஞ்சம்டையும் நான்கு திருடர்கள். திருடன் ஒருவனிடம் ஜமீன்தார் மனைவி காதல்.

நான்கு திருடர்களிடம் ஒரு ப்ராஜ்க்டை ஒப்படைக்கிறார் ஒரு தாதா. அந்த திருடர்கள் பணத்துடன் எஸ்கேப் ஆக, அவர்களை தேடி வரும் தாதா. இவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஆறடி உயரத்தில் அசத்தலாக நாயகன் ராஜ்பரத். இவர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது உயரத்திற்கு ஆக்சன் கொடுத்திருக்கலாம். அது பெரும் குறையாக உள்ளது.

தேஜஸ்வினியும் அவரது தேகமும் ரசிகர்களை ஈர்க்கும். அவரது உயரம் இந்த பட நாயகனுக்கு பொருத்தமாக இருந்தாலும் மற்ற நாயகர்களுக்கு செட்டாகுமா தெரியல. அண்ணாந்து பார்க்க வைக்கிறார்.

தன் உணர்ச்சிகளை கண்களாலே பேசிவிடுகிறார். ரொமான்சிலும் இந்த தேஜஸ்வினி கெத்துதான்.

பூஜா தேவரியா? அவருக்கு இந்த கேரக்டர் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது. ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார்.

ஏபி ஸ்ரீதர், வினோத் கேரக்டர்கள் கச்சிதம். தேவைக்கு ஏற்ற நடிப்பு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முகேஷ்.ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம்.

காதல் சேர்ந்த அந்த காம காட்சி ரசிகர்களை சூடேற்றும்.

பழைய ஜமீன் வீடு, அந்த சுற்றுபுற பகுதி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கலை இயக்குனருக்கு கைகொடுக்கலாம்.

பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். எடிட்டர் பிரபாகர் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

பாளக் ஹூயூமர் பாணியில் படத்தை எடுத்துள்ளார் ஜெய். ஆனால் பட இடங்களில் ஹீயூமர் வரவில்லை.
நிறைய காட்சிகளில் பொறுமை தேவை. வில்லனையும் காமெடியனாக்கி விட்டார்கள்.

ஆந்திரா மெஸ்… சுவை குறைவு

கோலி சோடா 2 விமர்சனம்

கோலி சோடா 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, சுபிக்ஷா, செம்பன் வினோத், பரத் சீனி, இசக்கி பரத், வினோத், க்ருஷா, கௌதம் மேனன், ரோகினி, ரேகா மற்றும் பலர்
இயக்குனர்: விஜய் மில்டன்
இசையமைப்பாளர்: அச்சு ராஜமணி
ஒளிப்பதிவாளர்: ஸ்ரீதர்
எடிட்டர் : தீபக்
சண்டைப் பயிற்சி: சுப்ரீம் சுந்தர்
தயாரிப்பாளர்: பரத் சீனி
பிஆர்ஓ. : சுரேஷ் சந்திரா ரேகா

கதைக்களம்…

படத்தில் 3 ஹீரோஸ், 3 ஹீரோயின்ஸ், 3 வில்லன்ஸ். எனவே கொஞ்சம் விரிவாகவே சொல்லிவிட்டு கதையை ஆரம்பிக்கிறோம்.

மாறன் (பரத் சீனி) (இவர்தான் படத்தயாரிப்பாளர், இயக்குனர் விஜய் மில்டனின் தம்பி).

இவர் ஒரு ரவுடி கும்பலிடம் வேலை செய்கிறார். ரோகினியின் மகள் சுபிக்ஷாவை (படத்தில் இன்பா) காதலிக்கிறார். காதலியின் கட்டாயத்தால் ரவுடி கும்பலிடம் இருந்து விலகி நல்ல வேலைக்கு செல்ல நினைக்கிறார்.

ஹோட்டலில் பரோட்டா போடும் மாஸ்டர். ஆனாலும் பேஸ்கட் பால் விளையாடி சாதிக்க நினைக்கிறார்.

இவர் இசக்கி பரத் (ஒலி) இவரின் காதலி க்ருஷா (படத்தில் மதி)

ரேகாவின் மகன் ஆட்டோ சிவா. சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸிக்கு ஓட்ட ஆசைப்படுகிறார். இவர் ஒரு பெரியவருக்கு உதவ அவரின் பேத்தி இவருக்கு காதலியாகிறார்.

இவர்கள் மூவருக்கும் மற்றொருவரை தெரியாது. ஆனால் இந்த 3 பேரை தெரிந்த ஒரே நபர் சமுத்திரக்கனி.

ஏதோ ஒரு சூழ்நிலையில் இவர்களை சந்திக்கும் முன்னாள் போலீஸ்காரர் சமுத்திரக்கனி இந்த இளைஞர்களுக்கு உதவுகிறார்.

மூவரும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்கையில் மூவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வில்லன்கள் குறுக்கிடுகின்றனர்.

இதனால் அந்த இளைஞர்களின் வாழ்க்கையே நாசமாகிறது.

ஒரு சூழ்நிலையில் இந்த 3 வில்லன்களுக்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வருகிறது.

அதன் பின்னர் ஒரு புள்ளியில் இணையும் இவர்கள் மூவரும் எப்படி அந்த வில்லன்களை பழிவாங்குகிறார்கள்? என்பதே இந்த கோலி சோடா 2.

கேரக்டர்கள்…

3 ஹீரோக்களுக்கும் சரி சமமான கேரக்டர்களை கொடுத்துள்ளார் விஜய் மில்டன். போட்டி அதிகமாக இருப்பதால் அவர்களே போட்டி போட்டு நடித்துள்ளனர்.

அதுபோல் 3 வில்லன்களும் செம. அதிலும் தில்லை கேரக்டரில் வரும் செம்பன் மிரட்டல் வில்லன்.

காலாவில் குடிகாரராக வரும் சமுத்திரக்கனிக்கு இதிலும் அதே கேரக்டர்தான். ஆனால் பக்குவப்பட்ட நடிப்பில் பளிச்சிடுகிறார்.

முதலில் இவரது கேரக்டர் ஓவர் அட்வைஸ் செய்வது போல தோன்றினாலும் பின்னர் அதுவே அந்த இளைஞர்களுக்கு வழிகாட்டுவது நச்.

அம்மாக்களாக வரும் ரோகினி மற்றும் ரேகா கேரக்டர்களில் கச்சிதம். ரோகினி தனது பிளாஷ்பேக்கை ஓவியங்கள் மூலம் தன் மருமகனிடம் சொல்வது ரசிக்கும் ரகம்.

நாயகிகளில் சுபிக்ஷாவின் அழகு சுகம். கிருஷாவும் நம்மை கவனிக்க வைக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் சில காட்சிகளில் வந்தாலும் பார்வையாலே மிரட்டுகிறார்.

பார்வையிழந்த அந்த சிறுமியும் பாராட்டுக்குரியவர்தான்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கௌம்பு பாடல் நிச்சயம் பட்டைய கிளப்பும். பொண்டாட்டி பாடலும் காட்சி அமைப்புகளும் அருமை.

அச்சு ராஜமணி பின்னணி இசை பேசப்படும். தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளார்.

சண்டைக் காட்சிகளை கமர்சியலாக கொடுக்காமல் படு யதார்த்தமாக கொடுத்துள்ளார். ஆனால் அந்த காட்சிகளின் நடுவே 3 இளைஞர்களும் வசனம் பேசுவதால் எதை கவனிப்பது என்றே தெரியவில்லை. அதிலும் சண்டைப் போட்டுக் கொண்டே பேசுவது புரியவில்லை.

ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு பலம்.

ஒருவரின் காட்சியை முடித்துவிட்டு மற்றொருவரின் காட்சியை காட்டாமல் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் காட்டி காட்டி காட்சிகளை நகர்த்தியுள்ளார். இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டலாம்.

இது ரசிகர்களுக்கு முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் எல்லாவற்றையும் இணைத்துவிடுகிறார் டைரக்டர்.

முதல் பாகத்தில் சிறுவர்களாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த 2ஆம் பாகத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்.

கோலி சோடா 2… இந்த ஜிஎஸ்டி-யை மக்கள் ஏற்பார்கள்

First on Net காலா விமர்சனம்

First on Net காலா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா மற்றும் பலர்.

தொழில் நுட்பக்குழு:

இயக்குனர் – பா. ரஞ்சித்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – முரளி . ஜி
கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைன்ஸ் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

kaala rajini muslim

கதைக்களம்…

முதலில் அனிமேசனில் ஒன் லைன் கதை சொல்லப்படுகிறது. அதில் நிலத்தின் பெருமைகள் சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் இன்றைய காலகட்டத்திற்கு கதையை கொண்டு வருகிறார் இயக்குனர்.

திருநெல்வேலியில் இருந்து மும்பை தாராவி பகுதிக்கு சென்று வாழ்கிறார் காலா என்ற கரிகாலன்.

அது சார்ந்த பகுதிகளின் முன்னேற்றத்திற்கு இவர்களே கடுமையாக உழைக்கிறார்கள்.

ஒரு பக்கம் மனைவி மற்றும் மகன்கள் பேரக்குழந்தைகள் சந்தோஷமாக வாழ்கிறார் காலா.

ஒரு சூழ்நிலையில் தன்னை நம்பி வாழும் மக்களையும் அவர்கள் வாழும் நிலத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியா புரோக்கர்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்க போராடுகிறார்.

அதாவது இந்த பகுதி மக்களை காலி செய்துவிட்டு சேரி தாராவியை டிஜிட்டல் தாராவியை ஆக்க முயற்சிக்கிறார்கள்.

அதிகார வர்க்கத்தை மக்கள் சக்தியுடன் எப்படி முறியடிக்கிறார்? என்பதே இந்த காலாவின் முழு ரவுடித்தனம்.
rajini kaala gang

கேரக்டர்கள்…

ரஜினியின் அறிமுகம் கேஷ்வலாக இருந்தாலும் நிச்சயம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ரஜினிக்கு மாஸ், ஆக்சன், ஸ்டைல், ரொமான்ஸ் எல்லாம் சொல்லித்தரனுமா? புகுந்து விளையாடி இருக்கிறார்.

இதில் குடும்ப சென்டிமெண்ட்டிலும், சேரி மக்களின் போராட்டக் களத்திலும் காலாவாக ஜொலிக்கிறார்.

சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன் என ஒரு ஸ்டார் பட்டாளமே ரஜினியுடன் நடித்தாலும் இந்த சூப்பர் ஸ்டார்தான் அதிகம் ஜொலிக்கிறார்.

ரஜினிக்கும் செரினாவுக்கும் (ஹீமா குரேஷிக்கும்) கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இளமை அதே சமயத்தில் ஒரு அன்பான முதிர்ச்சியான லவ் ட்ராக்கை காணலாம்.

காலா-ஷரினா ஆகியோரின் லவ் போர்ஷன் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்தான்.

ரஜினியின் மனைவியாக நடித்துள்ளவர் செல்வி (ஈஸ்வரி ராவ்). இவரின் திருநெல்வேலி பாஷை கச்சிதம். தேவைக்கேற்ற நடிப்பு

ரஜினியின் மகன்களில் ஒருவரின் காதலியாக வருகிறார் அஞ்சலி பாட்டீல். அந்த கேரக்டர்களை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் கொடுத்துள்ளார்.

மும்பையை ஸ்தம்பிக்க வைக்க ரஜினிகாந்த் செய்யும் அந்த யுக்தி மாஸ். நம் உடம்புதான் நம் ஆயுதம் போராடுவோம் என்கிறார்.

மும்பை நகரம் இயங்க காரணமான துப்புரவு தொழிலாளர்கள், முனிசிபாலிடி மற்றும் டாக்சி ஓட்டுனர்களை வைத்து ஸ்ட்ரைக் செய்கிறார்.

இதனால் ஹரி தாதாவாக நடித்துள்ள நானா படேகருக்கும் ரஜினிக்கும் வரும் மோதல் சூடு பிடிக்கிறது.

நம் இதிகாசத்தில் ராமனை நல்லவனாகவும் ராவணனை கெட்டவனாகவும் காட்டியிருப்பார்கள். ஆனால் காலாவில் ராமனை கெட்டவனாகவும் ராவணனை நல்லவனாக காட்டி மிரட்டியிருக்கிறார் ரஞ்சித்.

ரஜினி சொன்னது போல் வில்லன் நானா படேகர் காட்சிகள் படத்தின் ஹைலைட்.

வில்லன் நானா படேகருக்கு வெயிட் ஏற்றி காலா ரஜினிக்கு செம வெயிட்டு கொடுத்திருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

தொழில்நுட்ப கேரக்டர்கள்…

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளி படத்தின் மிகப்பெரிய பலம். அந்த சேரி பகுதிகளை போராட்டக்களத்தையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.

நிக்கல் அந்துப்போச்சி, என் தங்க சிலை பாடல்கள் ரிப்பீட் மோட்.

பின்னணி இசையும் ரஜினியின் மாஸ் சீன்சும் ரசிகர்களுக்கு வெயிட்டுத்தான்.

ரஜினியின் ஒவ்வொரு மேனரிசத்தையும் கதைக்கு தேவைக்கேற்றப்படி ரசித்து வைத்திருக்கிறார் ரஞ்சித்.

இண்டர்வெல் காட்சியும் அந்த சண்டை காட்சிக்கும் நிச்சயம் அப்ளாஸ் கொடுக்கலாம். இதில் நாம் பவர்புல் பாட்ஷா ரஜினியை திரையில் பார்க்கலாம்.

ரஜினிக்கான வசனங்களை பட்டைத் தீட்டி கொடுத்திருக்கிறார் ரஞ்சித்.

எதிர்பாராத க்ளைமாக்ஸில் சமூக கருத்தை ரஜினியை வைத்து சொல்லிவிட்டார் ரஞ்சித்.

காலா.. கரிகாலனின் முழு ரவுடித்தனம்

Kaala Review in Video

எக்ஸ் வீடியோஸ் விமர்சனம் X Videos

எக்ஸ் வீடியோஸ் விமர்சனம் X Videos

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – அஜ்யராஜ், அக்ரித்தி சிங், ரியாமிக்கா, விஷ்வா, ஷான், பிரபுஜித், பிரசன்னா ஷெட்டி, நிஜய், அர்ஜூன், அபிஷேக், மகேஷ் மது மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – சஜோ சுந்தர்
தயாரிப்பு – கலர் ஷெடோஷ்ஸ் என்டர்டெயின்மென்ட் அஜிதா சஜோ
இசை – ஜோஹன்
ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ்
படத்தொகுப்பு – ஆனந்தலிங்க குமார்
கலை இயக்குனர் – கே.கதிர்
பி.ஆர்.ஓ. : அ. ஜான்

கதைக்களம்….

ஹீரோ மனோஜ் (அஜ்யராஜ்) ஒரு ஜர்னலிஸ்ட். ஆபாச இணையதளங்களால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார்.

ஆராய்ச்சிக்காக ஓர் இணையதளத்தை பார்க்கும்போது தனது நண்பன் அங்கித்தின் (பிரசன்னா ஷெட்டி) மனைவி திருப்தியின் (அக்ரித்தி) நிர்வாண வீடியோ ஒரு இணையதளத்தில் இருப்பதை பார்த்து விடுகிறார்.

எனவே தனது மற்றொரு நண்பனான டேனியுடன் சேர்ந்து (நிஜய்) அங்கித்திடம் விஷயத்தை கூறுகிறார்.
அப்போதுதான் அவர் ஓர் உண்மையை கூறுகிறார்.

மனைவி எவ்வளவு மறுத்தும், அவளை எப்போதும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக நான் தான் அந்த வீடியோவை எடுத்ததாகக் கூறி கதறி அழுகிறார் அங்கித்.

அப்படி என்றால் அந்த வீடியோ இணையத்தளத்திற்கு எப்படி சென்றது? என குழம்புகிறார்.

மன விரக்தியால் அங்கித் தற்கொலை செய்துகொள்கிறார்.

First On Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

நண்பனின் மரணத்தால் பாதிக்கப்படும் மனோஜும், டேனியும் போலீஸ் அதிகாரி இம்ரானுடன் (ஷான்) இணைந்து, அந்த வீடியோ எப்படி ஆபாச தளத்தில் பதிவிடப்பட்டது என ஆராய்கிறார்கள்.

அப்போது பல தகவல்கள் கிடைக்கிறது.

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் சில சேர்ந்து கொள்ளை லாபத்திற்காக இது போன்ற ஆபாச படங்ளை மொபைல் போன் ரிப்பேர் செய்பவர்களிடம் இருந்து வாங்கி அதை இதுபோன்ற வெப்சைட்டுக்கு விற்று விடுகிறார்கள் எனத் தெரிய வருகிறது.

அந்த கும்பலை பிடிக்க நெருங்கிறார்.

ஆனால் வெப்சைட் நடத்துவதால் மட்டும் அவர்களை கைது செய்ய முடியாது என்பதால் ஒரு திட்டம் போடுகிறார் மனோஜ்.

என்ன திட்டம் அது? அவர்களை எப்படி மடக்கி பிடித்தார்? ஆபாச தளம் முடக்கப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகளின் விடையே இந்த எக்ஸ் வீடியோஸ்.

கேரக்டர்கள்…

மொபைல் போன் காலத்திற்கு முன்பு, அடுத்தவர் வீட்டு பெட்ரூம்பை ஜன்னல் வழியாக எட்டி பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் இப்போது அந்த வேலையை கேமரா செய்துவிடுகிறது.

எனவே தங்கள் வீட்டில் இருந்தபடியே ரசிக்கிறார்கள்.

சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

ஒரு சிலர் தன் கேர்ள் பிரண்ட்./ மனைவி உடை மாற்றும்போது, குளிக்கும் போது வீடியோ எடுத்து வைத்துக் கொள்கின்றனர். நேரம் கிடைக்கும் போது அதை பார்த்து ரசிக்கின்றனர்.

சில நேரங்களில் அந்த மொபைல் ரிப்பேர் அல்லது காணாமல் போனால் அந்த போன் சில விஷமிகள் கையில் கிடைத்து விடுகிறது. அதன்பின்னர் பல பிரச்சினைகள் வரும். அந்த விழிப்புணர்வு பற்றிய படமே இது.

ஒரு சில இயக்குனர்களைப் போல் ஆபாச படத்தை எடுத்து வெற்றி பெற நினைக்காமல், ஒரு சமூக பிரச்சினையை கையில் எடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார் சஜோ சுந்தர்.

கபாலி படத்தில் ரஜினிக்கு பாண்டிச்சேரி முகவரியை தேடி கண்டு பிடிப்பாரோ அந்த விஷ்வாவை தவிர மற்றவர்கள் நமக்கு தெரியாத முகங்கள்தான்.

இது ஒரிஜினல் தமிழ் படம் இல்லை என்பதால் நிறைய வசன காட்சிகள் இங்கு ஒத்துப் போகவில்லை.

மற்றபடி நடிகர்கள் படத்திற்கு தேவையான கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக வரும் பிரபுஜித் ஹைடெக் மிரட்டல்.

நாயகிகள் அக்ரித்தி மற்றும் ரியாமிக்காவின் நடிப்பும் கச்சிதம். இவர்களுக்கான காட்சிகள் குறைவு என்றாலும் இவர்களைச் சுற்றிதான் படத்தின் கதையே நகர்கிறது.

படத்தில் காமெடி இல்லை பாடல்கள் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான்.

பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜோஹன் தன் பேச வைக்கிறார்.

இது ஒரு நீல விழிப்புணர்பு படம் என்றாலும் படத்தின் நீளத்தை குறைத்து நம்மை ஈர்க்கிறார்கள்.

ஏதோ ஒரு சின்ன சின்ன ஆசைக்காக ஆபாச வீடியோக்கள் எடுப்பது நல்லதல்ல.

இதனால் நம் குடும்பத்தை நாமே இழக்க நேரிடும என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கணவரோ, பாய் ப்ரண்டோ யாராக இருந்தாலும் நம் அந்தரங்கத்தை படம் எடுக்கக்கூடாது என பெண்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளனர்.

அதற்காக சில காட்சிகளை கொஞ்சம் ஓவராகவே காட்டிவிட்டார்கள்.

அதுபோல் மொபைல் ரிப்பேர் செய்யும் கடை நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டில் ப்ளம்பர், எலக்ட்ரீசியன்கள் வந்தால் அவர்கள் கேமரா வைக்க வாய்ப்புண்டு. அதையும் நாம் கவனிக்க வேண்டும் என சில எச்சரிக்கையும் கொடுத்துள்ளார்.

எக்ஸ் வீடியோஸ்…. நம் வீட்டு பெண்களுக்கு எச்சரிக்கை

More Articles
Follows