குட் நைட் விமர்சனம் – 4.25/5 – குறட்டை விடாமல் ரசிக்கலாம்

குட் நைட் விமர்சனம் – 4.25/5 – குறட்டை விடாமல் ரசிக்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா நடிப்பில் உருவானது ‘குட் நைட்’.

கதைக்களம்…

படத்தின் முதல் காட்சி தொடங்கி கிளைமாக்ஸ் காட்சி வரை குறட்டை சத்தத்துடன் படம் பயணிக்கிறது.

மணிகண்டன் பெயர் மோகன். அவர் ஓவர் குறட்டை விடுவதால் இவருக்கு மோட்டார் மோகன் என பெயர். குறட்டை சத்தத்தால் அக்கப் பக்கத்து வீட்டினர் கூட உறங்க முடியாமல் தவிக்கின்றனர்.

ஒருநாள் ஆபீஸ் பஸ்ஸில் பயணிக்கும் போது இவர் உறங்க இவரை காதலிக்கும் பெண்.. “என்னால் ஒருநாள் கூட பஸ்ஸில் உன்னுடன் பயணிக்க முடியவில்லை.. நான் வாழ்க்கை முழுவதும் எப்படி பயணிக்க முடியும் என பிரிந்து செல்கிறார்.

இந்த கட்டத்தில் நாயகி மீத்தா ரகுநாத் மீது இவருக்கு காதல் வருகிறது. தன் குறட்டையை மறைத்து அவரை திருமணம் செய்கிறார். அதன் பிறகு குறட்டையால் என்ன ஆச்சு? கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்தார்கள்.? பிரிந்தார்களா.? என்பது தான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்….

‘ஜெய் பீம்’ படத்தில் நம்மை அழ வைத்த மணிகண்டன் இந்த படத்தில் நம்மை குறட்டை குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

குறட்டை என்ன பெரும் பிரச்சனையா என்ற சிலர் நினைக்கலாம்.

ஆனால் அடுத்தவருக்கு குறட்டை தொந்தரவாக இருக்கும் என்று நினைக்கும் அந்த குறட்டை நபர் படும் கஷ்டங்களை அழுத்தமாக உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

நான் நண்பர்களுடன் பயணித்து பல வருடங்கள் ஆகிறது.. என் குறட்டை சத்தத்தால் அவர்களால் பயணிக்க முடியவில்லை என சொல்லி அழும்போதும்.. மனைவியுடன் நிம்மதியாக படுக்க முடியவில்லை என ஏங்கும்போதும்.. அதே நேரம் மனைவி நிம்மதியாக உறங்க இவர் தனி அறையில் படுத்து உறங்குவதும்… தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசி ஆபீஸில் அவமானப்படும்போதும்.. ராஜினாமா செய்யும்போது கெத்தாக பேசுவதும் என அலப்பறை செய்துள்ளார் மணிகண்டன்.

மணிகண்டன் வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்ய வந்த ரமேஷ்திலக் அக்கா ரேச்சலை கரெக்ட் செய்து கல்யாண செய்த பிறகு அதை வைத்து மாமனும் மச்சானும் அடிக்கடி வாரிக் கொள்வதும் ரசிக்க வைக்கிறது.

மணிகண்டன் ஆபீஸ் உயிரதிகாரியாக பக்ஸ் பகவதி பெருமாள். சில காட்சிகளே என்றாலும் நம் மனதில் நிற்கிறார்.

‘கடைசி விவசாயி’ படத்தில் நீதிபதியாக கலக்கிய ரேச்சல் ரெபக்கா இந்த படத்தில் அக்கா கேரக்டரில் தனித்துவமாக தெரிகிறார். ‘லவ் டுடே’ படத்தில் ரவீனாவுக்கு எப்படி ஒரு அக்கா கேரக்டர் அமைந்ததோ அதுபோல இந்த படத்தில்.. அக்கா கேரக்டர் என்றாலும் தன்னால் ஜொலிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் ரேச்சல் ரெபேக்கா. (மற்ற நடிகைகள் இதை கவனிக்கலாம்)

இவர்களுடன் கௌசல்யா நடராஜன், பாலாஜி சக்திவேல் என அனைவரும் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு.

டெக்னீஷியன்கள்….

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு பாடல்கள் ஓகே ரகம் தான். இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு பாடலை ஷான் ரொம்ப கஷ்டப்பட்டு பாடுவது போல் தெரிகிறது. ஏன் இப்படி.? ஆனால் பின்னணி இசை பாராட்டுக்குரியது.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய பரத் விக்ரமன் என்பவர் எடிட்டிங் செய்துள்ளார். இருவரும் தங்கள் பணியை நேர்த்தியாக கொடுத்துள்ளனர்.

நாய்க்குட்டி ஓடி வருவது முதல் அது பட்டு மெத்தையில் உறங்குவது முதல்.. மழை சாரலில் கணவன் மனைவி பேசிக் கொள்வது முதல் என ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்க வகையில் கொடுத்துள்ளனர்.

ஒரு காட்சியில்.. உனக்கு என்னடா மோகன் பெயர் வைத்திருக்கிறேன்.. அந்த பெயருக்கே உன்னை நிறைய பெண்கள் காதலிப்பார்கள் என் அம்மா சொல்லுவார்.

உனக்கு சினிமா மோகன் மீது டாவு.. அதனால அந்த பேர வச்ச.. என நாயகன் பேசும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதுபோல நாயகியுடன் பேசும்போது.. எங்க போறீங்க.? இப்ப ஒயின்ஷாப்புக்கு.. என தவறுதலாக பேசும் போதும்…

அதுபோல ஹோட்டலில் அமர்ந்திருக்கும் போது யுடர்ன் போட்டு குடும்பத்தினரை வீட்டுக்கு போக சொல்வதும்.. கிளைமாக்ஸ் காட்சியில் யுடர்ன் போட்டு ஏர்போட்டில் இருந்து வீட்டிற்கும்.. வீட்டிலிருந்து ஏர்போர்ட்டிற்கும் போகச் சொல்லும்.. என ரசிக்க வைத்துள்ளார். அந்தக் காட்சியில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

ஒரே நாளில் தொப்பையை எப்படி குறைக்க முடியாதோ.. அது போல மணி – அணு இணைய மாட்டார்கள் என பாலாஜி சக்திவேல் சொல்லும்போதும்.. டேய் என்னை தவிர இந்த உலகத்தில் எல்லாருமே சந்தோஷமா தான் இருக்கீங்க என நாயகன் சொல்லும்போதும்… குறட்டைக்கு பயந்து நாய்க்குட்டி தெறித்து ஓடும் போதும்.. இப்படியாக சின்ன சின்ன சுவாரசியங்களை சொல்லி குட் நைட் க்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆக.. குறட்டை விடுபவர்களும் குறட்டையால் தவிப்பவர்களும் இந்த படத்தை குறட்டை விடாமல் பார்த்து ரசிக்கலாம்.

Good Night movie review and rating in tamil

தீர்க்கதரிசி விமர்சனம்.. 2.75/5 – தீரா-பலி

தீர்க்கதரிசி விமர்சனம்.. 2.75/5 – தீரா-பலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்ட்ரோல் ரூமிற்கு ஒரு மர்ம நபர் போன் வருகிறது. நடக்கவிருக்கும் விபத்தை தடுக்கச் சொல்லி எச்சரிக்கிறார்.

ஆனால் காவல்துறையின் அலட்சியத்தால் அந்த விபத்து நடக்கிறது. பிறகு ஒரு கொலை நடப்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறார். அந்த கொலையை தடுப்பதற்குள் அதுவும் நடக்கிறது.

இப்படியாக அந்த நபர் காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்யும்போது மீடியாவுக்கும் செய்கிறார். இதனால் ஒரு குற்றத்தை கூட தடுக்க முடியாத காவல்துறையை மக்கள் திட்டுகின்றனர்.

அந்த மர்ம நபருக்கு தீர்க்கதரிசி எனவும் பெயரிடுகின்றனர். இப்படியாக அடுத்தடுத்து விபத்துகளும் கொலைகளும் நடக்க அதை தடுக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை.

அந்த நபர் யார்.? அவர் முன்கூட்டியே எப்படி சொல்கிறார்.? ஒருவேளை சொல்லிவிட்டு அவர்தான் கொலைகளை செய்கிறாரா? அவருக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக அஜ்மல். போலீஸ்க்கு உரித்தான கம்பீரத்தோடு கெத்து காட்டி இருக்கிறார். இவருடன் வரும் துஷ்யந்த் ஜெய்வந்த் ஆகியோரும் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதம்

கண்ட்ரோல் ரூம் அதிகாரியாக ஸ்ரீமன். கொஞ்சம் காமெடி கலந்து தன் கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்.

இவர்களுடன் தேவதர்ஷினி, மோகன் ராம், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் வருகின்றனர்

கௌரவத் தோற்றத்தில் சத்யராஜ். வெறும் குரலிலேயே தன் கேரக்டரை 80% செய்துவிட்டு 20% நக்கல் நையாண்டி கலந்து தலை காட்டி நடித்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் மெயின் கேரக்டர் சத்யராஜ் தான். ஆனால் அவரது காட்சிகள் வெறும் 10% கூட படத்தில் இல்லை. அவரது காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.

முக்கியமாக அங்கே விபத்து.. இங்கே கொலை.. என படம் முழுவதும் சென்று கொண்டே இருப்பதால் போதும் முடியல என்கிற எண்ணமே நமக்கு வருகிறது.. எடிட்டர் கொஞ்சம் ஓவர் டைம் பார்த்திருக்கலாம்.(படத்தொகுப்பாளர் ரஞ்ஜீத் சி.கே.)

சென்னை அழகை தன் கேமரா கண்களில் இன்னும் அழகுற செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தன் ஜெ.லெக்ஷ்மன்.

படத்தில் நாயகி இல்லை.. டூயட்டும் இல்லை ஐட்டம் சாங்கும் இல்லை.. எனவே காவல்துறைக்கு பெருமை சேர்க்க ஒரு பாட்டு வேண்டும் என இயக்குனர் நினைத்தாரோ என்னவோ.. வேண்டா வெறுப்பாக ஒரு பாடல் வைத்துள்ளார். அதற்கு ஆட்டமும் சரியில்லை.. பாட்டும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை படத்திற்கு நன்றாகவே பலம் சேர்த்துள்ளது.

பி.சதீஷ்குமாரின் திரைக்கதையில் அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும் இணைந்து இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

கிளைமாக்ஸ் சொல்லப்படும் சத்யராஜின் கதைகளை கொஞ்சம் அதிகப்படுத்தி விபத்து & கொலை காட்சிகளை கொஞ்சம் ட்ரிம் செய்து இருந்தால் இந்த தீர்க்கதரிசி இன்னும் ஒரு தீர்க்கமான வெற்றியை அடைந்து இருப்பார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காக செய்யும் தவறுகள் மற்றொரு குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை காட்சிப் படுத்தியதற்கு கை கொடுத்து பாராட்டலாம்.

ஆக தீர்க்கதரிசி.. தீரா-பலி

Theerkadarishi movie review and rating in tamil

உருச்சிதை விமர்சனம்..; மௌன மலர்கள்

உருச்சிதை விமர்சனம்..; மௌன மலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

நாயகன் கார்த்திகேயன். இவர் வாய்பேச முடியாதவர். ஆனாலும் பட்டதாரி. இவர் தன் இரண்டு தங்கைகள் மற்றும் அப்பா அம்மாவுடன் ஓர் அழகான கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.

விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர் கார்த்திகேயன். திடீரென ஒரு நாள் ஒரு விபத்தில் தன் தந்தை மற்றும் தாயை இழக்கிறார். இதனால் குடும்பம் நிலை குலைந்து போகிறது.

எனவே குடும்பத்தை காக்க சென்னைக்கு சென்று கட்டிட வேலைக்கு செல்கிறார். அங்கு ஒரு கட்டத்தில் நாயகி சுகுணாவை ஒருதலையாக காதலிக்கிறார்.

அண்ணனை புரிந்துக் கொண்ட பாசமலர் தங்கைகள் வாய் பேச முடியாத அண்ணனுக்காக பெண் கேட்க செல்கின்றனர்.

அப்போது இரண்டு தங்கைகளும் யாரோ சிலரால் கொல்லப்படுகின்றனர்.

இதன் பிறகு என்ன ஆனது? நாயகியிடம் தன் காதலை சொன்னாரா கார்த்திகேயன்.? தங்கைகளை கொன்றது யார்? இடையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் கார்த்திகேயன். நல்ல உயரம் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. ஆனால் ஊமை நடிப்பு செயற்கை தனமாக உள்ளது.. ஊமை என்பதால் எப்போது வாயை திறக்கவே மறுக்கிறார் போல.. வாயை மூடியப்படியே வைத்துள்ளது ஏன் என்று தெரியல.?!

இரண்டு தங்கை கேரக்டர் நடித்துள்ளவர்கள் அழகாக இருக்கிறார்கள்.. ஆனால் இன்னும் சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கலாம்.

நாயகியாக சுகுணா.. பக்கத்து வீட்டு பெண் போல் இயல்பான நடிப்பு.

சேகர் என்ற கேரக்டரில் பாடலாசிரியர் ஜெயம்கொண்டான் நடித்துள்ளார். இவரால் தான் படத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

நெல்லை சிவா – தீப்பெட்டி கணேசன் ஆகிய இருவரும் கொஞ்சம் சிரிக்கவும் வைத்து கொஞ்சம் அழவும் வைத்துள்ளனர். சிலர் காட்சிகளில் இவர்களுடைய ஓவர் ஆக்டிங் தென்படுவதை குறைத்து இருக்கலாம். தற்போது இருவரும் உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேஸ்திரி வேடத்தில் நடித்திருக்கிறார் இயக்குநர் எம்.சி.வி.தேவராஜ். இவரை காலி செய்ய நெல்லை சிவா & தீப்பெட்டி கணேசன் போடும் திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.. அதுபோல எதிர்பாரா விதமாக வில்லத்தனம் செய்யும் தேவராஜ் ரசிக்க வைக்கிறார்.

ஒரு அழகான கதையை உருவாக்கியவர் திறமையான கலைஞர்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருந்தால் இந்த உருச்சிதை இன்னும் சிறப்பாகவே வந்திருக்கும்.

படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை கலைக்குமார் எழுதியுள்ளார். ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லக்ஷ்மண் கவனித்துள்ளார். சண்டைக் காட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.

Uruchithai movie review and rating in tamil

குலசாமி விமர்சனம்.; வலுவில்லாத கொல-சாமி

குலசாமி விமர்சனம்.; வலுவில்லாத கொல-சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன் கிராமத்து ஊர் மக்களின் உதவியுடன் தன் பாசமிகு தங்கையை மருத்துவம் படிக்க வைக்கிறார் ஆட்டோ டிரைவர் விமல்.

இவர் மர்மமான முறையில் மரணிக்கவே அந்த மருத்துவ கல்லூரிக்கு தன் தங்கையின் உடலை தானமாக வழங்குகிறார் விமல்.

தினமும் தன் தங்கை உடலை பார்த்து கொண்டிருக்கும் விமல் அங்கு படிக்கும் ஏழை மாணவிகளின் கல்விக்கும் உதவி வருகிறார்.

இது ஒரு பிறமிருக்க.. மார்க் குறைவான பெண்களையும் ஏழை மாணவிகளையும் பணக்காரர்களின் காம பசிக்கு இறையாக்குகிறார் அந்த கல்லூரியின் ஆசிரியை.

ஒரு கட்டத்தில் இதற்கான ஆதாரங்கள் நாயகி தன்யாவிடம் சிக்கிக் கொள்ள அதன் பிறகு என்ன நடந்தது? விமல் என்ன செய்தார்? தங்கையின் மரணத்திற்கு காரணம் என்ன? அதுவே படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

அதிகம் பேசாத.. அதிகம் சிரிக்காத… கேரக்டரில் விமல். தன் வீட்டு பெண்களை பெண்களை யாரை நம்பி விட்டுச் செல்வது என விமல் சொல்லும் போது கண் கலங்க வைக்கிறார். விமல் தன் கேரக்டர் நிறைவாக செய்திருந்தாலும் படத்தின் திரைக்கதை தடுமாற்றத்தை தருகிறது.

வித்தியாசமான வேடத்தில் வினோதினி வைத்தியநாதன்.. சிறப்பாக கையாண்டுள்ளார்.

இயக்குநர் சரவண சக்தியின் மகன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். வில்லன் கும்பலை பார்த்தால் சில காட்சிகளில் கோபம் வந்துவிடுகிறது.

தன்யா ஹோப், போஸ் வெங்கட், சரவண சக்தி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் இருந்தும் அவர்களின் காட்சிகளில் பெரிதாக ஈர்ப்பு இல்லை.. ஆனால் சப் இன்ஸ்பெக்டராக வருபவர் அதிகமாகவே கவனம் பெறுகிறார்.

விமல் – தங்கையின் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் மற்றொரு மாணவி அழகாகவும் வருகிறார் சிறப்பாகவும் நடித்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

குலசாமி படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார், ஆனால் வசனங்களில் எந்தவிதமான வலிமையும் இல்லை.

வைட் ஆங்கிள் ரவியின் காட்சிகள் சிறப்பு. மகாலிங்கத்தின் இசையில் பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை என்றாலும் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.

ஆனால் விக்ரம் வேதா படத்தில் கேட்ட பின்னணி இசையே நினைவுக்கு வருகிறது.

படத்தில் நிறைய கொலைகள் காட்டிக்கொண்டே இருப்பதால் இது குலசாமியா அல்லது கொலசாமியா என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் எழும்.

இள பெண்களை குறி வைத்து அவர்களை காதல் வலையில் விழ வைத்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடும் கும்பலை பற்றி சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் சில விஷமிகளை காவல்துறை நினைத்தாலும் களை எடுக்க முடியாது இதற்கு ஒரு குலசாமி வேண்டும் என்பதை கருத்தாக முன் பதிவு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒருவனின் பார்வையில் இந்த சமூகம் எப்படி இருக்கும்? இதனால் வரும் பின் விளைவுகள் என்ன? என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.

ஆனால் அதை சொன்ன விதத்திலும் எடிட்டிங்கிலும் பெரும் குறை.

குலசாமி… வலுவில்லாத கொலசாமீ

Kulasamy movie review and rating in tamil

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம் 4/5.; ராஜ தந்திரம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம் 4/5.; ராஜ தந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.

முதல் பாகம் வரும் 2022 செப்டம்பர் 30-ம்தேதி வெளியானது. இரண்டாம் பாகம் 2023 இன்று ஏப்ரல் 28ல் வெளியானது.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: ரவிவர்மன்.

எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.

————————————
கேரக்டர்கள் அறிமுகம்…

ஆதித்ய கரிகாலன் – விக்ரம்

வந்தியத் தேவன் – கார்த்தி

அருள்மொழி வர்மண் / ராஜ ராஜ சோழன் – ஜெயம் ரவி

நந்தினி – ஐஸ்வர்யா ராய்

குந்தவை – த்ரிஷா

பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்

சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்

ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்

ரவிதாசன் – கிஷோர்

பூங்குழலி – ஐஷ்வர்ய லெட்சுமி

பார்த்திபேந்திரன் பல்லவன் – விக்ரம் பிரபு

பெரிய வேளார் – பிரபு

மலையமான் – லால்

சுந்தர சோழர் – பிரகாஷ் ராஜ்

மதுராந்தகன் – ரகுமான்

செம்பியன் மாதேவி – ஜெயசித்ரா

வானதி – சோபியா துலிபலா

கதைக்களம்…

கமல்ஹாசன் குரலில் படம் தொடங்குகிறது.

முதல் பாகத்தில் கடலில் அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் விழுந்து மறித்துப் போனதாக வரும்.

இந்த தகவல் தஞ்சைக்கு கிடைக்கிறது.

சுந்தரச் சோழர், குந்தவை என அனைவரும் மனம் உடைந்து போகின்றனர்.

இதன் பின்னர் ஆதித்த கரிகாலனுக்கும் (விக்ரம்) செய்தி தெரிந்ததும் தன் தம்பியின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என அவளை கொல்ல படையோடு கிளம்புகிறார்.

ஆனால் கடலில் விழுந்த இருவரையுமே மந்தாகினி எனும் ஊமை ராணி காப்பாற்றுகிறாள். இவர் வயதான பெண்மணி யார்.?

இதனிடையில் சித்தப்பா மதுராந்தகன் (நடிகர் ரகுமான்) மணிமகுடம் தனக்கு வர வேண்டும் என முனைப்பில் சூழ்ச்சிகளை செய்கிறார்.

இதுஒரு புறமிருக்க.. சோழ சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற குந்தவை முயற்சிகள் எடுக்கிறார்.. சிற்றரசர்கள் செய்யும் சதியை முறியடிக்க அவர்களின் கடம்பூருக்கே செல்கிறார் ஆதித்த கரிகாலன்.

இறுதியில் என்ன ஆனது.? வந்தியத்தேவன் குந்தவையின் காதல் கை கூடியதா.? அருள் மொழிவர்மனை திருமணம் செய்து கொண்டாரா இளவரசி வானதி?

ஆதித்த கரிகாலனை கொன்றாரா நந்தினி? அவர்களின் பழைய காதல் கைகூடியதா.?

கடைசியில் மணிமகுடம் யாருக்கு சென்றது? என்பதை என்ன சின்ன ட்விஸ்ட்டுகளுடன் கொடுத்திருக்கிறார் டைரக்டர் மணிரத்னம்.

கேரக்டர்கள்…

இந்தப் பாகத்தில் ஐஸ்வர்யாராயும் விக்ரமும் தங்களது பங்களிப்பை கூடுதலாகவே கொடுத்துள்ளனர்.. போட்டி போட்டுக் கொண்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

முக்கியமாக நந்தினி – கரிகாலன் சந்திக்கும் அந்த கடம்பூர் மாளிகைக் காட்சி ஒரு விதமான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அதுபோல விக்ரமின் முடிவு நாவலை போலவே படத்திலும் புதிராகவே முடிக்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் எந்த ஆணிடம் பேசினாலும் அவர்களை வசியம் செய்து விடுவார் என்ற ஒரு வசனம் படத்தில் இருக்கும். அது 100% பொருந்துகிறது. அதற்கு சாட்சியாக இந்த படத்தில் ஓரிரு காட்சிகள் உள்ளன. நந்தினி என்ற இந்த கேரக்டருக்கு உலக அழகி ஐஸ்வர்யாராய் மட்டும்தான் பொருந்துவார் என்பதை பிரதிபலித்துள்ளார்.

14 வருடங்கள் கழித்தே அருண்மொழி வர்மன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக முடிசூடிக் கொண்டார் என்பதை காட்சிப்படுத்தாமல் வார்த்தைகளாக சொல்லி இருக்கின்றனர்.. தனது சித்தப்பாவிற்கு அரசர் பதவியை கொடுத்து காத்திருக்கும் ஜெயம் ரவியின் குணம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கார்த்தியின் காட்சிகள் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் சரத்குமார் பிரபு ஜெயராம் பார்த்திபன் கிஷோர் ஆகியோரின் கதாபாத்திரங்களும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பேரு உதவி புரிந்துள்ளன.

த்ரிஷா & பூங்குழலி இருவரும் அழகில் அசத்தல்.. இந்த பாகத்தில் பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் இருவரும் ரசிக்க வைக்கின்றனர்.

விக்ரம் அவரின் தங்கை திரிஷா.. த்ரிஷாவின் தம்பி ஜெயம் ரவி ஆகிய மூவரும் சந்திக்கும் காட்சிகள் ரசிகர்களின் கூடுதல் கவனத்தை பெறுகிறது.

கார்த்தியின் கண்ணை கட்டிக்கொண்டு த்ரிஷா வாள் வைத்துக் கொண்டு பேசும்போது மெல்ல அருகே வந்து த்ரிஷாவின் கையை பற்றி கொண்டு கார்த்தி பேசும் ஒவ்வொரு வசனங்களும் த்ரிஷாவின் முகபாவனைகளும் சிறந்த நடிப்புக்கு ஒரு சான்று.

இவர்கள் இருவரும் முத்தமிட்டு கொள்ள மாட்டார்களா என்று எண்ணம் ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக எழும்..

விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் சந்திக்கும் காட்சியில்.. விக்ரம் கண்களில் காதல்.. ஐஸ்வர்யாவின் கண்களில் வஞ்சம் கலந்த பரிதவிப்பு என இரண்டையும் கலந்து ரசிகர்களுக்கு கொடுத்திருக்கின்றனர்.

ஊமை ராணியாக வரும் ஐஸ்வர்யா ராய் படத்திற்கு பெரிய ட்விஸ்ட் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கும் நிலையில் “வாம்மா மின்னல்..” என்பது போல மறைந்து விடுகிறார்.

ஜெயராம் வந்து செல்லும் காட்சிகள் கலகலப்புக்கு கொஞ்சம் உதவி புரிந்துள்ளன.. விக்ரம் பிரபு நண்பன் கேரக்டரில் தன்னை பிரதானமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஐஸ்வர்யாவின் தெளிவும் நிதானமும் ஒரு அரசிக்கு உரிய கம்பீரத்தை காட்டுகிறது.

டெக்னீஷியன்கள்…

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வந்த போது அதில் போர்க்களம் வீரம் வஞ்சம் ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து இருந்தன.

ஆனால் இரண்டாம் பாகத்தை பொருத்தவரை முழுவதும் வசனங்களே படத்தை ஆக்கிரமித்துள்ளன.

ஒவ்வொரு வசனங்களையும் மிகவும் ஜெயமோகன் எழுதி இருக்கிறார் என்பது சிறப்பு அம்சம்.

இரண்டாம் பாதியில் ஆதித்த கரிகாலன் எதிர்பாராத முடிவிற்கு பிறகு படத்தில் பெரிய தொய்வு ஏற்படுகிறது. படம் எப்பொழுது முடியும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல காட்சிகள் அமைந்துள்ளன.

இறுதியாக காட்டப்படும் கிளைமாக்ஸ் காட்சியும் பெரிதாக எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அகநக மற்றும் சின்னஞ்சிறு பூவே ஆகிய பாடல்கள் மனதை வருடும் தென்றலாய் பயணிக்கிறது.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு.. ரஹ்மானின் பாடல்கள்..பின்னணி இசை.. தோட்டா தரணியின் பிரமாண்ட செட் என அனைத்தும் படத்திற்கு யானை பலத்தை கொடுத்துள்ளது.

அதுபோல ஐஸ்வர்யா -த்ரிஷாவின் சிகை & உடை அலங்காரமும்.. நடிகர் ரகுமானுடன் வரும் சிவாஓம் கூட்டமும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் எவ்ளோ பெரிய அரசராக இருந்தாலுமே மகாராணி & இளவரசி குரல்தான் எங்குமே ஒலிக்கிறது என்பதை அப்பட்டமாகவே காட்டி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

அது அரண்மணையாகவே இருந்தாலும் பெண்கள் விதிவிலக்கல்ல என்று என்பதை காட்சியின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து கலைஞர்களும் சிறப்பு.

தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் ‘பொன்னியின் செல்வன்: படத்தை தமிழர்கள் பெருமை படும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

சரித்திரக்கதை என்பதால் தொய்வான காட்சிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இன்றைய தலைமுறையும் குழந்தைகளும் ரசிக்கும்படி சொல்லியிருப்பது மணிரத்னம் டச்.

Ponniyin Selvan 2 movie review and rating in tamil

மாவீரன் பிள்ளை விமர்சனம்.; வீர – லட்சுமி விஜயம்.?!

மாவீரன் பிள்ளை விமர்சனம்.; வீர – லட்சுமி விஜயம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : KNR Raja, Radharavi, Vijayalakshmi Veerappan

Directed By : KNR Raja

Music By : Song : Ravivarma – Prem

Produced By : KNR Movies – KNR Raja

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி என்பவர் மாவீரன் பிள்ளை படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.. இந்த படத்தை ராஜா என்பவர் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார்.

கதைக்களம்…

மதுவற்ற தமிழகம்.. இயற்கை விவசாயம்.. ஊழலற்ற ஆட்சி.. இந்த மூன்றையும் மையப்படுத்தி கதாபாத்திரங்களை உருவாக்கி படத்தை கொடுத்துள்ளார்.

கூத்துக் கலைஞர் ராதா ரவி வருமானம் இன்றி தவிக்கிறார். ஒரு பக்கம் விவசாயம் செய்து கொண்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தால் மாடுகளை இழக்கிறார்.. மேலும் தண்ணீர் இல்லாமல் தன் பயிர்கள் மடிந்து போவதால் தற்கொலை செய்து கொள்கிறார்.

மற்றொரு பக்கம் இவரது மூத்த மகன் நன்றாக படித்து வழக்கறிஞராக இருந்தாலும் அரசின் டாஸ்மாக்கால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைகிறார்.

எத்தனை முறை தேர்தலில் நின்றாலும் மக்களின் ஆதரவை பெற முடியாததால் விஜயலட்சுமைய தேர்தலில் நிற்க ஒரு அரசியல் கட்சி கேட்கிறது. இவர் மறுக்கிறார். ஆனாலும் அந்தக் கட்சி தேர்தலில் நிற்கிறது.. அதன் பிறகு எந்த காட்சியும் காட்டப்படவில்லை

மேலும் அரசாங்கத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எந்த காரியமும் நடக்கும்.. ஓட்டுகளை மக்கள் விற்பதால் எந்த மாதிரியான ஆட்சி அமையும் என்பதையும் வலியுறுத்தி இதன் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ராஜா.

கேரக்டர்கள்…

விஜயலட்சுமி அறிமுகமாகும் காட்சியே அசத்தலாக உள்ளது. அவர் சில மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி சொல்லி கொடுக்கிறார்.

அப்போது ஒரு நபர் கேள்வி கேட்க.. “ஆண்கள் பெண்களைக் காப்பாற்ற வேண்டும்.. ஆனால் தற்போது ஆண்களிடம் இருந்து பெண்களை தற்காத்துக் கொள்வது பெரும்பாடு.. என அதிரடியான வசனத்துடன் அறிமுகம் ஆகிறார்.

அதன் பின் பெரிதாக எந்த காட்சியிலும் ஒட்டாமல் இறுதியாக மதுவுக்கு எதிராக போராட வருகிறார்.. போராட்டம் போராட்டம்.. போராடினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் சமுதாயம் அமையும் என்பதை வலியுறுத்தி படத்தை நிறைவு செய்கிறார் விஜயலட்சுமி.

ராதாரவி தன்னுடைய நவரச நடிப்பால் ரசிகர்களை நிச்சயம் கவருவார்.. அவர் பேசும் வசனங்கள் சாட்டையடி.. அரசியல்வாதிகளை அரசு ஊழியர்களையும் வசனத்தால் சாடியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் காதல் என சுற்றித் திரியும் ராஜா தன்னுடைய தந்தை மற்றும் அண்ணனின் மரணத்தால் மனம் மாறுகிறார்.. பின்னர் காதலை வெறுக்கும் அவர் இந்த சமுதாயம் முன்னேற பாடுபடுகிறார்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் மஞ்சுநாத் தன்னுடைய பணியை சில நேரம் நேர்த்தியாக செய்து இருக்கிறார். ஆனால் பல காட்சிகளில் வைத்த கேமராவை அப்படியே விட்டு விட்டார் போல.. சிலர் பேசும் வசனங்களில் அவரது முக பாவனைங்கள் தெரிவதே இல்லை.

ரவி வர்மாவின் இசையில், ஆலயமணியின் வரிகளில் பாடல்கள் கவனம் பெறுகின்றன. பிரேமின் பின்னணி இசை ஓகே தான்.

படத்தை இயக்கி தயாரித்திருக்கும் கே.என்.ஆர்.ராஜா.. மதுவற்ற தமிழகம்.. இயற்கை விவசாயம்.. ஊழலற்ற ஆட்சி.. இந்த மூன்றையும் மையப்படுத்தி மாவீரனில் பிள்ளை படத்தை கொடுத்திருக்கிறார்.

இதை மையப்படுத்தி இருந்தாலும் அதற்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருக்கலாம்.. ஆனால் சமூக கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே காட்சிகளை அமைத்து இருக்கிறார். திணித்துள்ளது தெரிகிறது.

ஆக மாவீரன் பிள்ளை.. வீரம் குறைவுதான்.

Maaveeran Pillai movie review and rating in tamil

More Articles
Follows