பட்ஜெட் மேரேஜா.? டேமேஜா.? திருமணம் விமர்சனம் 3.25/5

பட்ஜெட் மேரேஜா.? டேமேஜா.? திருமணம் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சேரன், சுகன்யா, உமாபதி, காவ்யா சுரேஷ், பால சரவணன், எம்எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் – சேரன்
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்
இசை – சித்தார்த் விபின்
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

பட நாயகன் உமாபதி ஒரு ரேடியோ ஸ்டேசனில் ஆர்.ஜே.வாக பணி புரிகிறார். இவரது அக்கா சுகன்யா ஜவுளி (பொட்டிக்) பிசினஸ் செய்து வருகிறார். இவர்களது சித்தப்பா எஸ்எஸ் பாஸ்கர். இவர்களது குடும்பம் வசதியான ஜமீன் பரம்பரை.

வருமான வரித்துறை அதிகாரியாக சேரன். இவருக்கு திருமணமாகவில்லை. இவரது ஒரே தங்கை காவ்யா சுரேஷ்.. இவர்களது அக்கா ஒரு இல்லத்தரசி. இவர்களது மாமா தம்பி ராமையா.

நாயகன் மற்றும் நாயகி காதலிக்கின்றனர். அவர்களுக்கு பெற்றோர் சம்மதமும் கிடைக்கிறது.

அதன்பின்னர் திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. ஆனால் சுகன்யா தரப்பு ஆடம்பரமாக செலவு செய்ய நினைக்க, சேரன் மிக எளிமையாக நடத்த விரும்புகிறார்.

இதனால் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நிற்கிறது. அதன்பின்னர் திருமணம் எப்படி நடந்தது..? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

பாசமான அண்ணன், பொறுப்பான மகன், சிக்கனமான குடும்ப பையன் என வெரைட்டி காட்டியிருக்கிறார் சேரன்.

ஒரு திருமண பத்திரிகையின் செலவு ரூ. 250 மற்றும் 3500 பத்திரிகை அடிக்கும் செலவு + பின்னர் அதை கொடுக்க செல்லும் செலவு மற்றும் இதர செலவுகளை சேர்த்தால் ரூ. 12 லட்சம் ஆகும் என்றால் அது தேவையா? என சேரன் கேட்கும்போதே அட ஆமால்ல என்று நம்மையும் கேட்க வைக்கிறது.

திருமண பத்திரிகையை வாங்குபவர்கள் அதில் தேதி மற்றும் இடத்தை பார்த்துவிட்டு துக்கி போட்டு விடுவார்கள்? அதற்கு ஏன்? இந்த ஆடம்பரம் என்று சேரன் கேட்கும்போது நம்மை அறியாமல் கை தட்டி விடுகிறோம்.

ஆனால் படம் முழுவதும் சேரன் சோகமாகவே வருகிறார். முகத்தில் புன்னகை துளி கூட இல்லையே சார்.

சுகன்யாவை சும்மா சொல்லக்கூடாது. பணத்திமிரு, ஆடம்பரம், அழகு என அனைத்திலும் அம்சம்.

நாயகன் நாயகிக்கு பெரிதாக வேலையில்லை. குடும்பத்திற்கும் கதைக்கும் ஏற்ற கேரக்டர்களாக வருகிறார்கள். நாயகனை விட நாயகிக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது.

இதில் நாயகிக்கு ஒரு பரதநாட்டியம் காட்சி வேற. அவருக்கு ஆடத் தெரியட்டும். ஆனால் அந்தக் காட்சி ஏன்..? தேவையில்லாத ஒன்றாக தெரிகிறது.

டிரைவராக வரும் பாலசரவணின் காமெடி சில நேரம் எடுபடுகிறது. தம்பி ராமையா மற்றும் எம்எஸ். பாஸ்கர் இருவரும் நடிப்பில் செம.

திருமண செலவு என்பது நாம் செய்யும் தர்மம். அதில் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய குடும்பங்கள் பிழைக்கிறது என சேரன் அம்மா சொல்லும் இடம் நச். பாராட்டுக்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் பெரிதாக எழவில்லை என்றாலும், பின்னனி இசை பாராட்டை பெறுகிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.

ஆடம்பர திருமணத்தில் ஏற்படும் அனாவசிய செலவுகளை குறைத்தால் அந்த தொகையை புதுமணத் தம்பதிகளுக்கு கொடுத்து உதவலாம் என அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் சேரன்.

திருமண சாப்பாட்டில் பலருக்கு பிடிக்காத ஐட்டங்கள் இருக்கலாம். ஒரு சிலர் சாப்பிட்டு கூட வரலாம். எதற்காக சாப்பாடு வைத்து வேஸ்ட் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக யாருக்கெல்லாம் சாப்பாடு வேனுமோ?

அவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுத்து சாப்பிட சொல்லலாம் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

முக்கியமாக சில மணி நேரத்திற்காக ரிசப்சன் ஜிப்பாவுக்கு ஆகும் செலவையும் குறைக்க சொல்லியிருக்கிறார். அதற்கும் ஹேட்ஸ் ஆஃப்.

முதல் பாதி செல்வதே தெரிவதில்லை. ஆனால் 2ஆம் பாதியை சீரியல் போல கொண்டு சென்றுவிட்டார் சேரன்.

ஆனால் திருமணம் செய்யப் போகும் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் இந்த படம் நிச்சயம் புடிக்கும்.

பட்ஜெட் பத்மநாபன்.. திருமணம் விமர்சனம்

கெத்தா…? வெத்தா..? தாதா 87 திரை விமர்சனம் 3/5

கெத்தா…? வெத்தா..? தாதா 87 திரை விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, கதிர், விஜய் ஸ்ரீ மற்றும் பலர்.
இயக்கம் – விஜய் ஸ்ரீ
ஒளிப்பதிவு – ராஜபாண்டி
இசை – லீயான்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

சாருஹாசன் நடிப்பில் மிகவும் பரபரப்பாக உருவாக்கப்பட்ட படம் தாதா 87.

அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

ஏரியா கவுன்சிலர் பதவிக்கு கடும் போட்டி வருகிறது. இருவரை காலி செய்துவிட சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் எம் எல் ஏ-வாக வரும் மனோஜ்குமார். எம்எல்ஏ-வுக்கு அட்ஜஸ்ட் செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் காட்டானாக நடித்திருக்கிறார் இப்பட டைரக்டர் விஜய் ஸ்ரீ.

இவர்கள் அனைவரும் பயப்படும் ஆள் ஒருவர் இருக்கிறார் என்றால் அது சாருஹாசன் தான்.

எங்க தப்பு நடந்தாலும் தட்டி கேட்பார். அனுமதியின்றி பெண்களை தொட்டால் உயிரோடு எரிப்பது இவரது வழக்கம்.

இவருக்கு இந்த வயதிலும் சரோஜா மீது காதல் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தன் பழைய நண்பர் சாருஹாசனை சந்திக்கிறார் ஜனகராஜ்.

ஒரு நாள் தனது மகள் ஸ்ரீபல்லவிக்கு காதல் தொல்லை கொடுக்கும் நாயகன் ஆனந்த் பாண்டியை கண்டிக்க சொல்கிறார் ஜனகராஜ்.

தாதா என்ன செய்தார்? காதலனை கண்டித்தாரா? அல்லது காதலை சேர்த்து வைத்தாரா? நாயகன் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

விஜய் டிவியில் கலக்கிய ஆனந்த் பாண்டிக்கு இதுதான் முதல் படம்.

ஏரியாவில் எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவரிடம் ஐ லவ் யூ சொல்வது இவரது வழக்கம். இது போன்ற ஜாலி பையனாக ஜொள்ளு பையனாக வாழ்ந்திருக்கிறார்.

நன்றாக நடனமாடியிருக்கிறார். சில நேரங்களில் ஓவராக பேசி எரிச்சலான நடிப்பை கொடுத்து நம்மை கடுப்பேற்றி விட்டார்.

பெரும்பாலும் படங்களில் சாருஹாசனை சாந்தமாகதான் பாத்திருக்கிறோம். 87 வயதில் இப்படி எல்லாம் நடிப்பதே பெரிய விசயம்தான். தாதா கேரக்டர் அதிலும் கெத்து காட்டியிருக்கிறார். கடைசியில் கொஞ்சம் ரொமான்ஸ் செய்துள்ளார். ஆண்டவருக்கே அண்ணன்டா…

இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா.

முதல் பாதி முழுவதும் சாருஹாசனுக்கு என்றால். 2ஆம் பாதி முழுவதும் நாயகிக்கு தான். ஸ்ரீ பல்லவி அருமையாக நடித்துள்ளார்.

ஒரு பெண் நாயகி முதன்முறையாக திருநங்கையாக நடித்துள்ளது பாராட்டத்தக்கது.

காதல் என்றால் திருமணம் என்றால் செக்ஸ் மட்டும் தானா? அது ஒரு 5 நிமிட சம்பவம் தான். ஆனால் அதை மீறி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை தன் நடிப்பிலும் கண்களிலும் வசனத்திலும் வெளிப்படுத்தியுள்ளார்.

கலகலப்பில்லாத கேரக்டரில் ஜனகராஜ். ஆனாலும் தன் மகளுக்காக இவர் எல்லாரிடமும் சண்டை போடும்போது இவர் ஜனங்க ராஜ் ஆகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…
லீயான்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி என 3 பேர் இசையமைத்துள்ளனர். ’ஆண்டவருக்கே அண்ணன்டா… ஒரு நிமிஷம் தல’ பாடல் ஆட்டம் போட வைக்கும்.

படத்தின் பின்னனி இசையில் தெறிக்க விட்டுள்ளார்.

ராஜபாண்டியின் ஒளிப்பதிவு பெரும்பாலான காட்சிகள் இருட்டாக இருந்தாலும். ஆனாலும் ரசிக்கும் படி வடசென்னையை வடிவமைத்துள்ளார்.

தனது முதல் படம் என்றாலும் தாதா கதையில் ஆரம்பித்து அதை காதலில் முடித்திருப்பது செம. டைரக்டர் விஜய் ஸ்ரீயை பாராட்டலாம்.

ஆனால் தாதா கதை மற்றும் காதல் கதை என இரண்டையும் நன்றாக பிரித்து 2 படமாக கொடுத்திருக்கலாம்.

இரண்டையும் ஒன்றாக கொடுக்க நினைத்து 2ஆம் பாதியில் தடுமாறி இருக்கிறார்.

தாதா வாக கெத்து காட்டிய சார்ருஹாசன் திடீரென சரோஜாவை தேடுவது எல்லாம் ஓவர். இருவரும் இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது எல்லாம் நம்பும்படியாக இல்லை.

தாதா 87.. கெத்தில் சத்து குறைவு

DhaDha87 movie review rating

First on Net தரமான தங்க தடம்…; தடம் விமர்சனம் 4/5

First on Net தரமான தங்க தடம்…; தடம் விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அருண்விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால், யோகிபாபு, பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர்.
இயக்கம் – மகிழ்திருமேனி
ஒளிப்பதிவு – கோபிநாத்
எடிட்டிங் – ஸ்ரீநாத்
இசை – அருண் ராஜ்
தயாரிப்பு – ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார்
பிஆர்ஓ – நிகில் முருகன்

கதைக்களம்…

எழில் மற்றும் கவின் என அருண்விஜய் இரட்டை வேடமேற்று நடித்துள்ளார்.

ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை நடத்தி வருகிறார் எழில். காதல், வேலை, காதலி என நார்மலான லைப்பில் இருக்கிறார் இவர்.

மற்றொரு கேரக்டர் கவின். தன் நண்பர் யோகிபாபுவுடன் இணைந்து கொள்ளையடித்து வாழ்க்கையை என்ஜாய் செய்யும் நபர் இவர். மேலும் வழக்கறிஞர்களுக்கு இணையாக சட்ட நுணுக்கங்களை அறிந்தவர் இவர்.

ஒரு நாள் ஒரு பிரச்சினைக்காக லட்சணக்கணக்கில் பணம் வாங்கிவிடுகிறார். திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் வட்டி கொடுத்தவரிடம் சிக்குகிறார் கவின்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நள்ளிரவு ஆகாஷ் என்ற வாலிபர் கொல்லப்படுகிறான். அப்போது அங்குள்ள பணம் காணாமல் போகிறது.

அந்த இளைஞனை கொன்றது அருண் விஜய்தான் என போலீஸ் கன்பார்ம் செய்கிறது. ஆனால் எந்த அருண்விஜய்? என்ற கன்ப்யூஸ் தொடர்கிறது.

யார் கொலை செய்தார்கள்? ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆக்சன், ரொமான்ஸ், த்ரில்லர் என அனைத்திலும் வெரைட்டி காட்டி மிரட்டியிருக்கிறார் அருண்விஜய். ரெண்டு வேடம் அதே சமயம் ட்வின்ஸ் என்பதால் தேவையான அளவு நடிப்பை கொடுத்து வித்தியாசப் படுத்தியிருக்கிறார்.

தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என 2 நாயகிகளும் நம்மை கவர்கின்றனர். இவர்களை விட போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் வித்யா பிரதிபா அழகிலும் கம்பீரத்திலும் நம்மை ஈர்த்து விடுகிறார்.

யோகி பாபு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். சோனியா அகர்வால், பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பிலும் குறையில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அருண்ராஜ் இசையில் விதி நதியே பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். புதுமுக மியூசிக் டைரக்டர் என்றாலும் தன் இசையால் உயர்ந்து இருக்கிறார்.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதம். அதில் குறையில்லை.

போலீஸ் ஸ்டேசனில் ரெண்டு அருண்விஜய்யும் மோதும் பைட் காட்சி அனல் பறக்கிறது. பைட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்.

இந்த இரட்டையர்களில் உண்மையான கொலையாளி யார்? என்று நீதிபதியே தினறும் அளவுக்கு க்ளைமாக்ஸ் காட்சியை தெறிக்க விட்டுள்ளார் மகிழ் திருமேனி.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதுதான் இந்திய சட்டம். எனவே போதுமான ஆதாரம் இல்லாமல் யாரை? குற்றவாளி என அறிவிக்க முடியாமல் அனைவருமே தினறும் காட்சிகள் செம.

இந்த உலகத்தில் இதுபோன்ற நடந்த குற்ற சம்பவங்களை திரையில் இயக்குனர் காட்டியிருப்பது அவரது புத்திசாலித்தனம்.

சில வருடங்களுக்கு முன் மலேசியா, ஜெர்மனியில் நடந்த இரட்டையர்கள் செய்த கொலையை ஆதாரத்துடன் காண்பித்த இயக்குனருக்கு ஹாட்ஸ் ஆஃப்.

ஒரு கப் காபி குடிக்க டைரக்டர் நடத்தியுள்ள நாடகம் செம.

எனக்கு கிப்ட் இல்லையா? என ஹீரோ ஹீரோயினிடம் கேட்க நான் தான் உன் கிப்ட் என கூறி அதற்கு ஒரு ரிப்பன் முடிச்சை நாயகி காட்டும் அந்த சீன் இனி நிறைய காதலர்கள் செய்ய தூண்டும்.

செமயான ட்விஸ்ட்கள் முடிந்தபின் க்ளைமாக்ஸ் பாடல் தேவையா?

தடம்.. தரமான தங்க தடம்

Lollu Kavalai Galatta… LKG எல்கேஜி விமர்சனம் 3.5/5

Lollu Kavalai Galatta… LKG எல்கேஜி விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்திஷ், ராம்குமார், நாஞ்சில் சம்பத் மற்றும் பலர்.
இயக்கம் – கேஆர். பிரபு
ஒளிப்பதிவு – வித்யு அய்யணா
எடிட்டிங் – ஆண்டனி
இசை – லியோன் ஜேம்ஸ்
தயாரிப்பு – ஐசரி கணேசன்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

தன் அப்பா (நாஞ்சில் சம்பத்) 30 வருடங்களாக அரசியலில் இருந்தாலும் அடிமட்டத் தொண்டாகவே இருப்பதை கண்டு வருத்தப்படுகிறார் லால்குடி கருப்பையா காந்தி (இங்கிலீஷ்ல அதான் எல்கேஜி) ஆர்.ஜே. பாலாஜி.

எனவே எப்படியாவது அரசியலில் சாதித்து காட்ட வேண்டும் என்பதால் ஊர் மக்களுக்கு பல வகைகளில் உதவுகிறார். 29 வயதிலேயே கவுன்சிலரும் ஆகிவிடுகிறார்.

பின்னர் படிப்படியாக முன்னேறி எம்எல்ஏ எலெக்சனிலும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் இவரை விட படு பிரபலமான ராம்ராஜ் பாண்டியன் (ஜேகே. ரித்திஸ்) போட்டியிட முன் வருகிறார்.

எனவே அவரை வீழ்த்த ஐடி கம்பெனியில் பணிபுரியும் பிரியா ஆனந்தின் உதவியை நாடுகிறார் ஆர்.ஜே. பாலாஜி.

இவர்கள் இருவருக்கும் நடக்கும் தேர்தல் யுத்த களமே இந்த எல்கேஜி.

பட நாயகன் இறுதிவரை வெறும் எல்கேஜி மாணவனாக இருந்தாரா? அல்லது புரொபசர் ரேஞ்சுக்கு சாதித்து காட்டினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் ஆகியவற்றிலும் ஆர்.ஜே.பாலாஜி ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்.

பொதுவாகவே இவர் சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிகம் ஈடுபடுவதால் மக்களின் பல்ஸ் அறிந்து அதை டச் செய்யும் வகையில் கொடி பிடித்துள்ளார்.

நாயகன் கோபம் படும்போது நமக்கு சிரிப்புதான் வருகிறது. வாய்க்கு கொடுத்த வேலையை கொஞ்சம் முகத்திலும் முக பாவனைகளில் கொடுங்க மிஸ்டர் ஆர்.ஜே. பாலாஜி.

படத்தில் ஹீரோயின் என்றாலும் நாயகனுடன் டூயட் பாடாமல் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளார் நாயகி பிரியா ஆனந்த்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் ஒரு பொய்யை கூட உண்மையாக்கி டிரெண்ட்டிங் செய்துவிடுவார்கள் என்பதை மக்கள் புரியும் வகையில் கொடுத்த டைரக்டர் பிரபுவை நிறையவே பாராட்டலாம்.

நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமார் மிரட்டலான அரசியல்வாதியாக அசத்தியிருக்கிறார். இவருடைய பேச்சும் நடிப்பும் சிவாஜி பிரபுவை நினைவுப்படுத்துகிறது. இவர் நடிப்பை தொடர வாழ்த்தலாம்.

நாஞ்சில் சம்பத் கேரக்டரை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ஒரு அடிமட்ட தொண்டனை தனி ஒருவன் படத்தில் சிறப்பாக காட்டியிருப்பார்கள். ஆனால் இதில் அறிமுகமான முதல் படத்திலேயே நாஞ்சில் சம்பத்தை நகைச்சுவை சம்பத்தாக அதாவது காமெடி பீஸாக்கிவிட்டார்கள்.

எதிர்பாராத கேரக்டரில் ஜேகே. ரித்திஸ் எகிறி அடித்திருக்கிறார். அதுவும் காளையை அடக்க அவர் பாட்டு பாடுவது என செமயாய் கலாய்த்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படம் முடிந்து வந்தாலும் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடல் நம்மை ஒலித்துக் கொண்டே இருக்கும். பழைய பாடலை ரீமிக்ஸ் செய்து கொடுத்த லியோன் ஜேம்ஸை பாராட்டலாம்.

பா. விஜய் மற்றும் விக்னேஷ்சிவன் பாடல் வரிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. திமிர காட்டாதடி பாடலும் ரசிக்கும் ரகமே.

விது அய்யனா ஒளிப்பதிவில் படம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. கார்ப்பரேட் ஆகட்டும் அரசியல் மேடைகளாகட்டும் எதுவாக இருந்தாலும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார்.

இயக்கம் பற்றிய அலசல்…

மீம்ஸ் என்ஜினியர்கள் என்ற போர்வையில் சிலர் செய்யும் காரியங்கள் நல்லதாக முடிந்தால் அது அனைவருக்குமே நல்லது தான். ஆனால் அதை தவறாக செய்தால் நாடு என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கும் என்பதை அருமையாக காட்டியுள்ளனர்.

லஞ்சம் கொடுப்பது வாங்குவது என இரண்டும் இருக்கும் வரை நம் நாட்டிற்கு நல்லது அமையாது என்பதை தன் க்ளைமாக்ஸ் வசனங்கள் மூலம் பாடம் நடத்தியிருக்கிறார்.

ஓட்டுக்கு அரசியல்வாதிகள் பணம் கொடுத்தாலும் பணம் வாங்குவதே மக்கள்தானே. நாம் நம்மை ஓட்டை விற்றுவிட்டால், பின்பு எப்படி அவர்களை கேள்வி கேட்க முடியும்? என்பதை நெத்தியடியாக சொல்லியிருக்கிறார்.

நம்மில் எத்தனை பேர் சட்டத்தை மதிக்கிறோம். போக்குவரத்து போலீசிடம் மாட்டிக் கொண்டால் உடனே லஞ்சம் தானே கொடுக்கிறோம். உங்களிடம் இருந்து வந்த அரசியல்வாதிகளும் அப்படிதான் இருப்பார்கள் என்ற வசனங்களில் இந்த எல்கேஜி மாணவன் முதலிடம் பெறுகிறான்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது முதல் தற்போதைய தமிழ் நாட்டில் நடக்கும் அனைத்தையும் கலாய்த்திருக்கிறார்.

ரவா உப்புமா ஹாஸ்பிட்டல் பில் ரூ. 1 கோடி, மீம்ஸ் கிரியேட்டர்ஸ், ராமராஜன் டிரெஸ் கோடு, தெர்மாகோல் மினிஸ்டர், ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள், வெட்டி விவாதம் நடத்தும் சேனல்கள், மக்கள் போராட்டம் என எதையும் விட்டு வைக்கவில்லை இந்த எல்கேஜி.

ஆனால் எல்லாத்தையும் கலாய்க்கிறோம் என்ற பெயரில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் கலாய்ப்பது என்ன நியாயம்..? கேசரி சாப்பிட்டால் மீடியாக்கள் காவியா? என கேட்பது எல்லாம் ஓவர்.

ஹீரோவாகி விட்டோம் என்பதால் ஆர்.ஜே. பாலாஜி எல்லை மீறிவிட்டாரோ-.? என்ற எண்ணமே நமக்கு வருகிறது.

அரசியலில் நிறைய இருந்தாலும் இன்றைய அரசியலை மட்டுமே கலாய்த்திருப்பது ஏனோ? அதுவும் ஒரு குறிப்பிட்ட கட்சி மற்றும் ஆட்சியை மட்டும் அதிகமாக கலாய்த்திருப்பது ஏனோ.?

படத்தில் நிறைய லொள்ளு கலாட்டா இருந்தாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தையே கலாய்த்திருப்பது கவலையாக உள்ளது.

எனவே இந்த எல்கேஜி… Lollu Kavalai Galatta…

தாய்மார்களின் தாலாட்டு… கண்ணே கலைமானே விமர்சனம் (3.5/5)

தாய்மார்களின் தாலாட்டு… கண்ணே கலைமானே விமர்சனம் (3.5/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, பூ ராமு, வசுந்தரா, சரவணன் சக்தி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் மற்றும் பலர்.
இயக்கம் – சீனு ராமசாமி
ஒளிப்பதிவு – ஜலந்தர் வாசன்
எடிட்டிங் – மு. காசி விஸ்வநாதன்
இசை – யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு – உதயநிதி ஸ்டாலின்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

விவசாயம் படித்த பட்டதாரி உதயநிதி. தன் தந்தை சொன்னால் மறுவார்த்தையே கிடையாது என வாழ்பவர்.

மேலும் தாய் இல்லாத தனக்கு அப்பத்தா (வடிவுக்கரசி) தான் என எல்லாம் என்பதால் இவர்களின் கட்டுப்பாட்டில் வளர்கிறார்.

தனது சொந்த நிலத்திலேயே இயற்கை உரங்களை தயாரித்து அதை இலவசமாகவும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

வங்கியில் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் கடன் வாங்கி கொடுப்பதும் அவர்கள் கட்டவில்லை என்றால் அவர்களுக்காக இவர் கட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

வங்கியில் நேர்மையாக பணிபுரியும் பேங்க் மேனஜர் தமன்னாவை சந்திக்கிறார். அவர் மீது காதல் கொள்ள, இரு வீட்டார் சம்மத்துடன் பல பிரச்சினைகளுக்கு பிறகு திருமணமும் நடக்கிறது.

அதன்பின்னர் ஒரு கட்டத்தில் பார்வையை இழக்கிறார் தமன்னா. அதன்பின்னர் என்ன ஆனது? அதில் இருந்து அவரை எப்படி மீட்டு எடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஊர் சுத்தும் பையன், பெற்றோர் பேச்சை கேட்காதவர் என படங்களில் நடித்து வந்து உதயநிதி இதில் தன் வழக்கத்தை மாற்றியிருக்கிறார். அதில் பாஸ் மார்க்கும் பெற்று விடுகிறார்.

தமன்னாவை படம் முழுவதும் தாங்கி அன்பான கணவனாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் சென்டிமெண்டிலும் தேறியிருக்கிறார் உதயநிதி.

ஆனால் ஒரு வாரம் சாப்பிடாம இருக்கும் காட்சியில் சோர்வு பத்தவில்லை. ஜீஸ் குடிப்பதற்கு முன்பே படு ப்ரெஷ்ஷாகிவிடுகிறார். அது எப்படியோ? பல இடங்களில் ஒரே முக பாவனையை மட்டுமே காட்டுகிறார்.

தர்மதுரை படத்திலேயே தமன்னாவை வேறு கோணத்தில் காட்டியிருப்பார். இதில் நேர்மை, பொறுமை, கண் மை என எக்ஸ்ட்ரா மைகளை சேர்த்துள்ளார். தமன்னாவின் கண்களுக்காகவே க்ளோஸ் அப் சாட்டுகளை அதிகம் காண முடிகிறது.

ஒரு துளி கூட கவர்ச்சியில்லாத தமன்னாவை காட்டியிருப்பது சிறப்பு.

உதயநிதியின் அப்பாவாக நடித்திருக்கும் ‘பூ’ ராம், அப்பத்தா வடிவுக்கரசி, தோழி வசுந்தரா என அனைவரிடத்திலும் மிகையில்லாத நடிப்பை வாங்கியிருக்கிறார் சீனுராமசாமி.

நாயகன் நண்பர்களாக வரும் அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவனின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. எந்தன் கண்களை காணோம் பாடல் படத்திற்கு ஹைலைட்.

பாடல்களை விட வைரமுத்துவின் பாடல் வரிகள் நம்மை அதிகமாகவே ஈர்க்கின்றன.

ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். கிராமத்து அழகை அழகாக ரசித்துக் கொண்டே இருக்கும்படி தந்துள்ளார். இது அவரின் முதல் படமா? என்பதை நம்ப முடியவில்லை.

முதல் பாதியில் படம் சீரியல் போல உள்ளதை தவிர்த்து இருக்கலாம். கிராமத்தில் எவ்வளவோ ரசிக்கத் தகுந்த காட்சிகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் காண்பித்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

ஆனால் 2ஆம் பாதியில் படத்தை தாங்கி நிறுத்தியிருக்கிறார்.

பெண்களை உயர்வாக காண்பிப்பதில் சீனுராமசாமி செமசீனு ராமசாமி தான்.

மருமக வேலைக்கு போறதுதான் புடிக்கல. அவளை புடிக்கலைன்னு சொல்லலையே என மாமியார் சொல்லும்போது தாய்மார்களை கவர வைத்துவிடுவார்.

முதல்பாதியில் விவசாயம் கடன் முதல் நீட் தேர்வு வரை அனைத்தையும் சொல்லியிருப்பது தமிழர்களை உற்சாகப்படுத்தும்.

கண்ணே கலைமானே… தாய்மார்களின் தாலாட்டு

Kanne Kalaimaane review rating

ஆரோக்யத்துக்கு ஆன்லைனில் ஆப்பு… பெட்டிக்கடை விமர்சனம் (3/5)

ஆரோக்யத்துக்கு ஆன்லைனில் ஆப்பு… பெட்டிக்கடை விமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, மொசக்குட்டி வீரா, சாந்தினி, வர்ஷா பொல்லம்மா, சுந்தர், அஸ்மிதா, மொட்ட ராஜேந்திரன், ஆர்வி. உதயகுமார், ஆர் சுந்தர்ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் – இசக்கி கார்வண்ணன்
ஒளிப்பதிவு – அருள் சீனிவாஸ்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
இசை – மரியா மனோகர்
தயாரிப்பு – இசக்கி கார்வண்ணன்
பிஆர்ஓ – மௌனம் ரவி

கதைக்களம்..

இன்று நாம் எந்த பொருளை வாங்க நினைத்தாலும் வெளியே செல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடுகிறோம். நம் தேவைகளை இப்படியாக உடனடியாக கிடைத்தாலும் நம்மை நம்பி பக்கத்தில் கடை வைத்திருக்கும் பெட்டிக்கடைகள் அழிந்து வருகிறது.

நமக்கு பிடித்த பொருட்களை ப்ரெஷ்ஷாக அண்ணாச்சி கடையில் வாங்குவோம். ஆனால் ஆன்லைன் பெயரில் பல மாதங்களாக வைத்திருந்த உணவு பொருட்களை நாம் வாங்கி உட்கொட்கிறோம்.

வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்காலத்தில் நம்மை ஆளத் தொடங்கிவிடும் என்பதை அடித்துக் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டராக வருகிறார் சாந்தினி. ஒரு அவசர தேவைக்கு கூட ஒரு பொருளை வாங்க முடியாத நிலையில் அந்த கிராமம் உள்ளது. ஏனென்றால் பெட்டிக்கடையே அங்கு இல்லை.

கே லைன்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்தால் உடனே டெலிவரி செய்கின்றனர். இதற்கு பின்னணியில் அரசு அதிகாரிகளும் அரசும் உள்ளது அவருக்கு தெரிய வருகிறது.

எனவே ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் அந்த ஆன்லைன் வர்க்கத்தை எதிர்த்து போராடுகிறார் சாந்தினி.

இறுதியில் ஆன்லைன் நிறுவனத்தை ஒழித்தாரா? என்ன செய்தார்? சமுத்திரக்கனி யார்? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மொசக்குட்டி வீரா தான் படத்தின் நாயகன். வர்ஷாவை காதலிப்பதை முதல் பாதியில் செய்கிறார். 2ஆம் பாதியில் ஊருக்காக போராடி சாதித்து காட்டுகிறார்.

வழக்கம்போல சமூக கருத்துக்களை சொல்லி ஓவர் அட்வைஸ் செய்கிறார் சமுத்திரக்கனி. அதுவும் கிட்டி பில் பயிற்சி சொல்லித்தர இவர் ஊருக்கு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

இதை இவரிடம் ஊர் மக்கள் சொல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என்பதே தெரியவில்லை.

அப்பாவியான முகத்தாலும் அழகான கண்களாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் வர்ஷா பொல்லம்மா.

முதலில் சாதாரண பெண்ணாக வந்தாலும் இறுதியில் சாதித்து காட்டுகிறார் சாந்தினி. இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

அழகும் திறமையும் உள்ள நடிகையாக அஸ்மிதா. ஆன்லைனை அழிக்க இவர் எடுக்கும் முடிவு வித்தியாசமான முடிவுதான்.

மொட்ட ராஜேந்திரன், ஆர்வி. உதயகுமார், ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இருந்தாலும் இவர்களின் கேரக்டர்களில் சுத்தமாக வலுவில்லை. அதுவும் மொட்ட ராஜேந்திரன் காமெடிகள் மொக்க.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மரியா மனோகரின் இசையும், அருள், சீனிவாஸ் ஆகியோரின் ஒளிப்பதிவும் நமக்கு ஆறுதல் தருகிறது.

எடிட்டர் சுரேஷ் அர்ஸ் அவர்களும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

அனைத்திலும் ஆன்லைன் வரலாம். ஆனால் அது நமக்கே ஆபத்தாய் முடியும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடுத்துள்ளார் டைரக்டர் இசக்கி கார்வண்ணன்.

அவருக்கு இது முதல் படம். படத்தின் நாயகனுக்கும் இசக்கி பெயரை வைத்துவிட்டார். அது ஏனோ-.?

சமுத்திரக்கனி வந்தபின்தான் படம் டாப் கியரில் செல்கிறது. அதுவரை கிராமத்து காதல் என சில காட்சிகளால் போரடிக்க வைத்துவிட்டார்.

முன்பெல்லாம் எல்லா நோய்க்கும் ஒரே டாக்டர் இருப்பார். அப்ப நோயே இருக்காது. ஆனால் இப்போ ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு டாக்டர் இருக்கிறார். ஆனால் எந்த நோயும் தீரவில்லை என்ற வசனங்கள் மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார் டைரக்டர் இசக்கி.

ஆன்லைன் வியாபாரத்தில் தவிர்த்து பெட்டிக்கடைகளுக்கு வாழ்வு கொடுத்து ஆரோக்யமாக வாழ்வோம் என்ற சொல்லப்பட்டுள்ள மெசஜுக்காக இந்த ‘பெட்டிக்கடை’ க்குள் சென்று வரலாம்.

பெட்டிக்கடை… ஆரோக்யத்துக்கு ஆன்லைன் ஆப்பு

Pettikadai Movie review rating

More Articles
Follows