தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1986 ஆண்டில் கதை பயணிக்கிறது. இதனையடுத்து ஸ்கூல், காலேஜ் என ஜெயம் ரவியும் கூடவே செல்கிறார்.
1999ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் பள்ளி தோழியிடன் காதலை சொல்ல நினைக்கிறார். தன் அப்பா கொடுத்த ஒரு அபூர்வ சிலையை அவளிடம் கொடுக்க நினைக்கிறார்.
ஆனால் அன்றைய தினம் ஒரு விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜ்க்கு செல்கிறார் ரவி. அந்த சிலையை வில்லன் கே.எஸ். ரவிக்குமார் எடுத்து சென்றுவிடுகிறார்.
இதன்பின்னர் 16 ஆண்டுகள் கழித்து 2016ல் நினைவு திரும்புகிறார் ரவி. அதன் பின்னர் என்ன ஆனது? காதலி கிடைத்தாளா? சிலை கிடைத்து விட்டதா? என்பதே க்ளைமாக்ஸ்.
நடிகர்கள்…
தன் உடல் எடையை 20 கிலோ குறைத்து பள்ளி மாணவனாக மாறிய ஜெயம் ரவியை பாராட்டியே ஆக வேண்டும். அத்தனை பொருத்தம். அதுபோல் க்ளைமாக்ஸில் இவர் சொல்லும் மெசேஜ் சூப்பர்.
ஜெயம் ரவிக்கும் சம்யுக்தாவுக்கும் உள்ள காதல் காட்சிகள் 90S கிட்ஸ் மிகவும் பிடிக்கும். செம ஜாலியாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அதற்கு தகுந்த போல யோகிபாபுவும் செம கலாய். இவரும் பள்ளி மாணவனாய் போல் தலை முடியை மாற்றியிருப்பதும் ரசிக்க வைக்கிறது.
படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் இருப்பதே தெரியவில்லை.
டாக்டராக வரும் சாரா சபாஷ் போட வைக்கிறார். இவரின் மனைவிதான் ஜெயம் ரவியின் காதலி என்ற காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி.
பொன்னம்பலம் காட்சிகள் வேண்டாத ஒன்று. ஜெயம் ரவியின் தங்கையாக நடித்தவரும் சூப்பர். அவர் பேசும் வசனங்கள் நச்.
கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் வினோதினி காட்சிகள் அருமை. வினோதினி நிச்சயம் கண் கலங்க வைப்பார். கே.எஸ்.ரவிக்குமாரும் வில்லன் வேடத்தில் ரசிக்க வைத்துள்ளார்.
டெக்னீஷியன்கள்…
30 வருட காட்சிகள் அனைத்திலும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பைசா நோட்டு, ஒளியும் ஒலியும் பாடல்கள் நன்றாக இருந்தாலும் இவர் பாடாமல் இருப்பது நல்லது.
இவரின் குரல் இருப்பதால் கேட்ட பாடலையே கேட்பது போல் உள்ளது. க்ளைமாக்ஸில் பின்னணி இசை பேசப்படும்.
பிரதீப் என்பவர் இயக்கியுள்ளார். செம ஜாலியாக படத்தை கொண்டு சென்று சோஷியல் மேசேஜ் சொன்ன விதம் அருமை.
ஆனால் வீட்டு லோன், அபூர்வ சிலை, சென்னை வெள்ளம் என நிறையவே க்ளைமாக்ஸில் தடுமாறியிருக்கிறார். ஒரு எம்எல்ஏ வீட்டில் ஜெயம் ரவி சென்று அங்கு ஏமாற்றுவது நம்பும்படியாக இல்லை.
நிலாவை காட்டி சோறு ஊட்டினோம். இன்று மொபைல் போனை காட்டி சோறு ஊட்டுகிறோம். ஆனால் பாசம் அன்றிலிருந்து இன்றுவரை ஒன்றுதான் என்கிறார். இதுபோன்ற வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளுகிறது.
வாட்ஸ் அப், இண்டர்நெட் வந்த பின்புதான் பாசம் எல்லாம் போச்சு என்கிறார் ஜெயம் ரவி. ஆனால் இவர் சம்பாதிக்க மட்டும் கோமாளி யூட்டிப் சேனல் நடத்துவது ஏன்..? இது ஓவரா இல்லையா..?
இதுபோன்ற லாஜிக்கை மறந்தால் படத்தை ரசிக்கலாம்.
கோமாளி… ரசிக்கலாம்..