தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன் லைன்…
‘கத்துக்குட்டி’ படத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை சித்தரித்து இருந்தார் இரா.சரவணன். இந்த உடன்பிறப்பே அவரின் இரண்டாவது படமாக வந்துள்ளது.
பாசமலர்.. தொடங்கி கிழக்குச் சீமையிலே… நம்ம வீட்டு பிள்ளை ’வரை நாம் பார்த்த அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட்தான் இப்படத்தின் உயிர்நாடி.
கதைக்களம்…
அண்ணன் சசிகுமார் & தங்கை ஜோதிகா. தங்கை கணவர் சமுத்திரக்கனி.
நேர்மையான அடிதடி என்றால் சசிகுமார் ரெடி. நேர்மையான அட்வைஸ் என்றால் சமுத்திரக்கனி ரெடி.
தன் மச்சான் அடாவடி பேர்வழி. அதுவே ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தின் பிரிவுக்கும் காரணமாகிறது. எனவே 15 ஆண்டுகளாக பாசப் போராட்டம் நடத்துகிறார் ஜோதிகா.
15 வருடங்கள் அப்படி என்னதான் பிரச்சினை? மீண்டும் இந்த பாசமலர்கள் இணைந்தார்களா? இல்லையா.? என்பதே படத்தின் மீதிக்கதை…
கேரக்டர்கள்…
மாதங்கி கேரக்டரில் ஜோதியாய் ஜொலிக்கிறார் ஜோதிகா.
முதல் பாதியில் வசனங்களில் புயலாய் மிரட்டும் ஜோதிகா, இரண்டாம் பாதியில் மௌனமாகி தென்றலாய் தெரிகிறார்.
தன்னுடைய 50வது படத்தை தனக்கு ஏற்ற மாதிரி அருமையாக தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜோ.
சசிகுமாருக்கே உரித்தான வேஷ்டி சட்டை முறுக்குமீசை என கம்பீரமாக வருகிறார் தோற்றத்திலும் நடிப்பிலும்..
நேர்மையான மனிதராக சமுத்திரக்கனி. தனது அட்வைஸ் கேரக்டரை அட்வைஸ் செய்யாத அளவுக்கு செய்திருக்கிறார்.
ஜோ சசி சமு.. மூவர் பேசும் வசனங்களும் இவர்களின் கேரக்டர்களும் படத்தின் ப்ளஸ்.
இந்த குடும்ப பாச பயணத்தில் காமெடி ட்ராக் போட்டு அசத்தி இருக்கிறார் சூரி. சில இடங்களில் போரடிக்கிறது.
வித்தியாசமான அதே சமயம் கவனம் ஈர்க்கும் கேரக்டரில் கலையரசன்.
ஆடுகளம் நரேன், தீபா, வேல்ராஜ் என அனைவரும் தங்கள் கேரக்டரில் நேர்த்தி.
சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கிறார். அமைதியான அழகான அன்பான மனைவி.. என மிகையில்லாத நடிப்பில் அளவாக நடித்திருக்கிறார் சிஜா.
காவல்துறை ஆய்வாளராக வேல்ராஜ், சசிகுமார் மகனாக சித்தார்த், ஜோதிகாவின் மகள் நிவேதிதா சதீஷ் என அனைவரும் கச்சிதம்.
டெக்னீஷியன்கள்…
இமானின் இசை படத்திற்கு பலம்.. பாடல்கள் அனைத்தையும் கேட்கும் ரகத்தில் கொடுப்பது இமான் வழக்கம்தானே.
வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவில் கதாபாத்திரங்களும் காட்சிகளும் கண்களுக்கும் மனதுக்கும் இதமளிக்கிறது.
ரூபனின் எடிட்டிங்கில் காட்சிகள் செம ஷார்ப்..
உடன்பிறப்புகளின் பாசப் போராட்டம், ஆழ்துளை கிணறு, கடன் தவணை கட்ட முடியாத விவசாயி வாழ்க்கை போராட்டம், மார்வாடிக்கு வட்டி பாடம் ஆகிய சமூக அக்கறைகளை இந்த சென்டிமெண்ட் சுவையில் கலந்துள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.
பாசமான கதையை பக்குவமாக பரிமாறுவதில் இயக்குனர் இரா. சரவணன் வென்றுவிட்டார்.
ஆக இந்த உடன்பிறப்பே… உயிர்மூச்சே
Jyothika 50th movie Udanpirappe review rating