இல்லத்தரசிகளின் இனிய மொழி… காற்றின் மொழி விமர்சனம்

இல்லத்தரசிகளின் இனிய மொழி… காற்றின் மொழி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, குமரவேல், யோகிபாபு, சிம்பு, மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் – ராதாமோகன்

இசை – காசிப்
ஒளிப்பதிவு – முத்துசாமி
தயாரிப்பு – தனஞ்செயன்

பிஆர்ஓ – ஜான்சன்

கதைக்களம்

கணவன் மற்றும் ஒரு பையன் என்ற சின்ன வளையத்திற்குள் குடும்பத்தலைவியாக விஜயலட்சுமி (ஜோதிகா).

இவருக்கும் நவீன பெண்களை போல் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் +2 பெயில் என்பதால் தயக்கத்துடன் வாழ்கிறார்.

அப்பாவின் மட்டந்தட்டம், இரட்டை சகோதரிகளின் கிண்டலுக்கு பயந்து அந்த ஆசையை மனதிற்குள் அடக்கி வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு ரேடியோ பரிசுப் போட்டியில் வென்று ஹலோ எப்.எம் வானொலியில் ஆர்ஜே வேலை கிடைக்கிறது.

மனதுக்கு பிடித்த வேலையை சந்தோஷமாக செய்கிறார். ஆனால் அது இரவு வேலை என்பதால் குடும்பத்தில் பல சிக்கல்களை சந்திக்க, வேலையை விடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அதை எப்படி சமாளித்தார்? இந்த விஜயலட்சுமி என்பதுதான் மீதிக்கதை

கேரக்டர்கள்

இல்லத்து அரசி அப்பாவி விஜயலட்சுமி, ரேடியோ ஜாக்கி அசத்தல் மது என இரண்டிலும் கலக்கியிருக்கிறார் ஜோதிகா.

தனக்கே உரித்தான துறுதுறுப்பு, காமெடி, செண்டிமெண்ட் கலந்து விஜயலட்சுமி கேரக்டரை அருமையாக செய்துள்ளார்.

உங்கள மாதிரி பெண்கள்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேசன் என லட்சுமி மஞ்சுவிடம் ஜோதிகா சொல்லும் ஒரு வார்த்தையிலேயே மாடர்ன் கேர்ள்ஸ் மீது இல்லத்தரசிகளுக்கு உள்ள கிரேஸ் தெரிகிறது.

ஜோதிகாவின் பாஸ் ஆக நடித்துள்ள லட்சுமி மஞ்சு பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.

ஆபிஸ் டென்சன் கணவராக விதார்த். ஒரு கட்டத்தில் நிம்மதியை இழந்து நிற்கும் காட்சியில் கணவன்மார்களையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.

என்னதான் ஒரு கணவர் சமையலறைக்கே செல்லாமல் இருந்தாலும், கடுகு மற்றும் டீத்துள்க்கு கூடவா வித்தியாசமல் தெரியாமல் இருப்பார்.?? இது எல்லாம் ரொம்ப ஓவரூ…

ராதாமோகன் படங்களில் மட்டும் குமரவேலுக்கு எப்படி தான் இந்த நடிப்பு வருகிறதோ? எந்த கேரக்டர் என்றாலும் கைத்தட்டல்களை வாங்கிவிடுகிறார்.

சில காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி. சூப்பர் சிரிப்பு சாமி.

இவர்களுடன் சிறப்பான நடிப்பில் எம்எஸ். பாஸ்கர் மற்றும் மனோபாலா.

கெஸ்ட் ரோலில் யோகிபாபு. அவர் காட்சிகளில் தியேட்டர்களில் சிரிப்பலை தான். படம் முழுவதும் வரும் அப்பார்ட்மெண்ட் வாசி கேரக்டக்ராக அவருக்கு கொடுத்திருக்கலாம்.

சிம்பு ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பு. ‘லேட்டா வந்ததுக்காக எங்கிட்ட ஸாரி கேட்ட ஒரே ஆள் நீங்கதான்’ என்று ஜோதிகாவிடம் சிம்பு கேட்பது செம. புரிந்தவர்கள் நிச்சயம் கை தட்டி ரசிப்பார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் காசிப் இசையில்… கிளம்பிட்டாளே விஜயலட்சுமி, போ உறவே, டரட்டி பொண்டாட்டி பாடல்கள் மன நிறைவைத் தருக்கின்றன. ஜிமிக்கி கம்மல் பாடல் ஏற்கெனவே ஹிட்டான பாடல். அதை சரியான இடத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

முத்துசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. படத்தை ரசிக்க அவை கை கொடுக்கிறது.

முதல் பாதியில் கொஞ்சம் எடிட்டிங் செய்திருக்கலாம்.

என்ஜின் டிரைவருக்கு ஜோதிகா சொல்லும் ஆலோசனை… அட அட சூப்பர்யா… என்ற அசை போட வைக்கிறது. வசனங்கள் நச். ரகம்.

நதியெங்கே போகிறது… கடலைத் தேடி… என்ற பாடல் சேர்க்கப்பட்ட இடம் அருமை. ஆர்.ஜே. கேரக்டருக்கு மது ஒரு கிக் ஏற்றியுள்ளார்.

ராதாமோகன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் ரசிக்கலாம். அதை மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து கொடுத்திருப்பது மிகச்சிறப்பு.

வேலைக்கு போகும் பெண்கள் எல்லாருக்கும் பல பிரச்சினைகள் இருக்கும். அதை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பதை விட தன் கணவன் மற்றும் வீட்டார்கள் எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொன்ன ராதாமோகனுக்கு ராஜமரியாதை கொடுக்கலாம்.

ஒரு தாய் எந்த சூழ்நிலையிலும் தன் பிள்ளைகளை விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார். அதை புருசன் புரிந்துக் கொண்டு க்ளைமாக்ஸில் கொடுக்கும் வேலைக்கான அனுமதி ரசிக்க வைக்கிறது.

காற்றின் மொழி… இல்லத்தரசிகளின் இனிய மொழி

தளபதி ராஜ்ஜியம்…; சர்கார் திரை விமர்சனம்

தளபதி ராஜ்ஜியம்…; சர்கார் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர்.
இயக்கம் – ஏஆர். முருகதாஸ்
இசை – ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்
எடிட்டர் – ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹ்மது

கதைக்களம்…

வெளிநாட்டில் ஒரு மிகப்பெரிய கம்பெனியில் CEOவாக இருக்கிறார் சுந்தர் ராமசாமி (விஜய்). இவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல். இவர் நினைத்தால் தனக்கு எதிரியான அனைத்து கம்பெனிகளையும் காலி செய்துவிடுவார்.

இவர் இந்தியா வருவதால் இந்தியாவில் உள்ள கம்பெனிகளே பயந்து நடுங்குகின்றன.

பின்னர்தான் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டுமே இவர் வந்துள்ளார் எனத் தெரிகிறது.

ஆனால் விஜய்யின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள். இவர் உலகளவில் பிரபலமான நபர் என்பதால் இது ஒட்டு மொத்த தமிழகத்திற்கே தெரிந்து விடுகிறது.

என் ஓட்டை பதிவு செய்ய நான் 3500 கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளேன்

என் ஒரு ஓட்டை பதிவு செய்யாமல் நான் வெளிநாடு செல்ல மாட்டேன் என கோர்ட்டுக்கு செல்கிறார்.

கோர்ட் உத்தரவுப்படி அவருக்காக ஒரு ஓட்டு போடும் தேர்தல் நடைபெறவுள்ளது.

49P என்ற சட்ட பிரிவின் படி நம் ஓட்டை வேறு யாராவது பதிவு செய்திருந்தால் நாமே பதிவு செய்ய உரிமை உள்ளது. எனவே விஜய் அந்த சட்டம் வழியாக செல்ல, நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு வருகிறது.

இதனால் பலரும் கோர்ட் வரை செல்ல, ஆட்சி அமைப்பதில் பிரச்சினை நீடிக்கிறது. இதனால் மறு தேர்தல் வேண்டும் என விஜய்யைப் போல பலரும் கேட்கின்றனர்.

இதனால் விஜய்க்கும் 2 முறை முதல்வராக இருந்த பழ கருப்பையாவிற்கும் பிரச்சினை எழுகிறது.

அதன்பின்னர் இருவரும் சவால் விட சர்கார் என்ன ஆனது? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சர்கார் முழுவதும் விஜய்யின் ராஜ்ஜியம்தான். வெறுமனே மாஸ் மட்டும் காட்டாமல் க்ளாஸ் ஆகவும் நடித்திருக்கிறார்.

சமூகத்தில் வெற்றிப் பெற்ற ஒருவன் தன் ஒவ்வொரு முடிவையும் நிதானமாகத்தான் எடுப்பார். அதை சரியாக செய்திருக்கிறார் விஜய். ஆக்சன் காட்சிகளில் சரவெடியாய் வெடித்திருக்கிறார்.

பாடல்களுக்கு மட்டுமே வந்து செல்லும் நாயகி போல கீர்த்தி சுரேஷ். இவரது கேரக்டரில் வலுவில்லை. லிவிஸ்டனின் மகளாக வந்து செல்கிறார்.

இரண்டு அரசியல்வாதிகளாக ராதாரவி மற்றும் பழ கருப்பையா. இருவரும் நல்ல அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். ஆன்னால் அரசியல்வாதி எவ்வளவு மோசமானவர் என்பதை இன்னும் ஆணித்தரமாக காட்டி ஹீரோவுக்கு மாஸ் சேர்த்திருக்கலாம்.

சில காட்சிகளிலேயே வந்தாலும் யோகி பாபு அசத்துகிறார். இவரைப் பார்த்தாலே தியேட்டரில் சிரிப்பலை சத்தம் அடங்க வெகு நேரமாகிறது.

வரலட்சுமி தீபாவளி லட்சுமி வெடியாய் பட்டைய கிளப்பியிருக்கிறார். ஆனால் இவரது கேரக்டரை இன்னும் பலப்படுத்தியிருந்தால் படம் மரண மாஸாக இருந்திருக்கும்.

ஏஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஆனால் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பின்னணி இசையில் கை கொடுத்துள்ளார்.

கவனிக்க வைத்த வசனங்கள்…

கொசு கடிச்சு 87 பேர் டெங்குல சாகுற கொடுமை வேறு எங்காவது நடக்குமா?
“எதிர்க்க ஆளே இல்லன்னு நினைக்கிறது தான் ஜனநாயகத்தோட பெரிய எதிரி”
கக்கனையும், காமராஜரையும் நாமதான் கண்டுபிடிக்கனும்… உள்ளிட்ட பல வசனங்கள் செம.

ப்ளஸ்…

நிதானமான நடிப்பில் நின்று அடித்திருக்கிறார் விஜய்
49 ஓ நோட்டா மாதிரி, தேர்தலில் 49 பி என்ற சட்டம்
வசனங்கள் மற்றும் பர்ஸ்ட் ஆஃப் மாஸ் காட்சிகள்

மைனஸ்….

கதை திருட்டு பிரச்சினையால் டைட்டில் கார்டு முருகதாஸின் பெரிய விளக்கக் கடிதம்.
சிம்டாங்காரன் மற்றும் OMG பொண்ணு தேவையில்லாத பாடல்கள்.
பாடல்களுக்காகவே கீர்த்தியை நாயகியாக வைத்திருக்கிறார்கள்
அட்வைஸ்கள் நிறைந்த செகன்ட் ஆஃப் ஸ்லோ

இயக்கம் பற்றிய அலசல்…

விஜய் என்றாலே மாஸ் காட்டிவிட்டு நாலு பைட், நாலு டான்ஸ் வைத்திருக்கலாம். அவை இல்லாமல் அவரை போன்ற ஒரு ஸ்டாரை நன்றாக நடிக்க வைத்து ஒரு சூப்பர் மெசேஜ் கொடுத்துள்ள முருகதாஸை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

கார்ப்பரேட் முதல் பாலிடிக்ஸ் வரை விஜய்யை வைத்து செம ட்ரீட் கொடுத்துள்ளார். இடையில் மீனவர் வாழ்க்கை மற்றும் டயலாக்குகளை வேண்டுமென்ற திணித்தது போல உள்ளது.

ஆனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை 2ஆம் பாதியில் மெய்ண்ட் செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார்.

லாஜிக் பார்க்காமல் சில கமர்சியல் ஐட்டங்களை சேர்த்துவிட்டதால் இரண்டாம் பாதியில் சில விஷயங்கள் நம்பும்படியாக இல்லை.

சர்கார்.. தளபதி ராஜ்ஜியம்

Vijay Sarkar review rating

விறுவிறுப்பில்லாத ஜகா வண்டி; ஜருகண்டி விமர்சனம்

விறுவிறுப்பில்லாத ஜகா வண்டி; ஜருகண்டி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெய், டேனியல், ரெபா மோனிகா, நிதின் சத்யா, ரோபோ சங்கர், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார், ஜெயக்குமார் மற்றும் பலர்.
இயக்கம் – பிச்சுமணி
இசை – போபோ ஷஷி
ஒளிப்பதிவு – ஆர்டி ராஜசேகர்
எடிட்டர் – பிரவீன் கே.எல்.
தயாரிப்பு – நிதின் சத்யா
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

லோன் வாங்கிவிட்டு கட்டாமல் இருந்தால் அந்த கார்களை சீஸ் செய்யும் வேலை செய்பவர் ஜெய்.

இவருக்கு ஒரு டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். எனவே இவரது நண்பன் டேனியல் உதவியுடன் இளவரசுவை சென்று பார்க்கிறார்.

அவர் ஒரு வில்லங்கமான விஷயத்தை சொல்லி இப்படி செய்தால் உடனே லோன் வாங்கி விடலாம் என்கிறார்.

எனவே அதற்கு ஆசைப்பட்டு பொய்யான வீட்டு டாக்குமெண்ட்ரிகளை கொடுத்து லோன் வாங்கிவிடுகிறார்.

இது போலீஸ் போஸ் வெங்கட்க்கு தெரிய வர, இவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

அதன்படி 2 நாட்களில் 10 லட்சம் கேட்கிறார். எனவே பணத் தேவைக்காக நாயகி ரெபா மோகினாவை கடத்துகின்றனர்.

ஆனால் அதுவே அவர்களுக்கு பெரும் சிக்கலாக மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஸ்மார்ட்டான நாயகனாக ஜெய். அதில் ஒன்றும் குறையில்லை. ஆனால் ஒரே முக பாவனை.

படம் முழுவதும் இவருக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும் எந்த வித முகபாவனை மாற்றமும் ஜெய்யிடம் இல்லை. நாம்தான் அடுத்து என்னாகுமோ? அப்படின்னு யோசிக்க வேண்டியதா இருக்கு.

நாயகி ரெபோ மோகினி கொஞ்சம் அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் யாரும் இவரிடம் கதை கேட்காமல் இவரே தன் ப்ளாஷ்பேக் காட்சிகளை ஏன் சொல்கிறார்?, பின்னர் அதே காட்சிகள் இன்னொரு முறை வருவது போரடிக்க வைக்கிறது.

ஜெய்யின் நண்பராக டேனியல். காமெடி செய்ய முயற்சித்துள்ளார்.

ரோபோ சங்கர் இருந்தும் காமெடி இல்லை. ஒரு வரியில் சொன்னால் சிரிப்பை கொடுக்காத ரோபோ மட்டும் உள்ளது. சங்கர் இல்லை.

மிரட்டும் வில்லனாக அமித் குமார் திவாரி. கொடுத்த காட்சிகளில் குறை வைக்காமல் ஹீரோவிடம் அடி வாங்குகிறார்.

இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார், ஜெயக்குமார் ஆகியோர் உண்டு. ஆனால் இவரது கேரக்டரில்களில் வலுவில்லை.

நிதின் சத்யா படத்தில் 2 காட்சிகளில் வருகிறார். ஆனால் எதற்கு என்றே தெரியவில்லை. யாருக்காச்சும் தெரியுமா..?

தொழில்நுட்ப கலைஞர்கள்…

போபோ ஷஷியின் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஜெய்யை வேற ஒரு பாடலுக்கு பாட வைத்து நம் பொறுமையை சோதிக்கிறார். ஜெய் பேசினால் எப்படி இருக்கும்? என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதானே. இதில் அவர் சொந்த குரலில் பாடினால்..?

பின்னணி இசை சில இடங்களில் கை கொடுத்துள்ளது. ஆனால் பல இடங்களில் தேவையை மீறி இரைச்சலை கொடுத்துள்ளது.

மேகராமேன் ஆர்.டி.ராஜசேகர் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.

எடிட்டர் பிரவீன் கே.எல். இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்ட முயற்சித்திருக்கலாம்.

படத்தில் நிறைய ட்விட்ஸ்டுக்களை கொடுத்துள்ளார் டைரக்டர். ஆனால் விறுவிறுப்பான திரைக்கதையை ஆமை வேகத்தில் ஓட்டி நம்மை கடுப்பேற்றி விடுகிறார்.

இவரது குரு நாதர் வெங்கட் பிரபு பாணியில் ஒரு கருவை வைத்து அதை வேகமாக கொடுக்க நினைத்து தோற்றுவிட்டார்.

ஜருகண்டி… விறுவிறுப்பில்லாத ஜகா வண்டி

Jarugandi Movie review rating

விளையாட்டுத்தனம்; ஜீனியஸ் திரை விமர்சனம்

விளையாட்டுத்தனம்; ஜீனியஸ் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ரோஷன், பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சிங்கம் புலி, ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து மற்றும் பலர்.
இயக்கம் – சுசீந்திரன்
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – குருதேவ்
எடிட்டர் – தியாகு
தயாரிப்பு – ரோஷன்
பிஆர்ஓ – ஜான்சன்

கதை

படிப்பு படிப்பு படிப்பு… இப்படி எந்நேரமும் மாணவர்களுக்கு / குழந்தைகளுக்கு படிப்பை மட்டுமே திணித்தால் அவர்களின் மனநிலை என்னாகும்..? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? என்பதே இந்த ஜீனியஸின் மையக்கரு.

சாதாரணமாகவே பர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் மாணவன் பட நாயகன் ரோஷன் (படத்தில் தினேஷ்). தன் மகன் படிப்பில் அக்கறை எடுக்காமல் இருக்கிறார் ஆடுகளம் நரேன்.

பள்ளி ஆண்டு விழாவில் தன் மகனுக்கே அனைத்து முதல் பரிசுகளும் கிடைக்கிறது. இதனால் ஆனந்தமடையும் அப்பா, இன்னும் தீவிரம் காட்டி பர்ஸ்ட் ரேங்கை தவிர எதுவும் எடுக்கக்கூடாது என அனைத்து பொழுது போக்குகளையும் கட் செய்து விடுகிறார்.

கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டுக்கு கூட போகாமல் செய்துவிடுகிறார்.

படிப்பு படிப்பு என எந்நேரமும் இருக்கும் ரோஷன் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்.

அதனையடுத்து நன்றாக படித்து ஐடி கம்பெனியில் சேர்கிறார். அங்கும் இவரின் புத்திசாலித்தனத்தால் எல்லாம் வேலைகளையும் இவரிடமே கொடுக்கிறார் ஓனர்.

ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை கூட ஒரே வாரத்தில் முடிக்க சொல்லி நிர்பந்திக்கிறார். இதனால் இரவு பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்கிறார் நாயகன்.

இதனால் மைண்ட் ப்ளாக் ஏற்படுகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார்கள். டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்கிறார். இதனால் வேலையும் பறி போகிறது.

திருமணம் செய்து வைக்கலாம் என்று பார்த்தால் ரோசனின் லூசு தனத்தால் அதுவும் பாதிக்கப்படுகிறது.

இதனை பார்க்கும் ஆடுகளம் நரேனின் நண்பர் சிங்கம் புலி அவர்கள் ரோசன் குணமடைய புதிய யுக்தியை கையாள்கிறார். என்ன செய்தார் மாமா? ரோசன் முற்றிலும் நலமடைந்தாரா? என்பதே மீதிக்கதை.

genius still 1


கேரக்டர்கள்…

நாயகன் ரோஷன் மற்றும் நாயகி பிரியா லால் இருவரும் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். (பிரியா மலையாளத்தில் 5 படங்களில் நடித்திருக்கிறார்).

படத்தின் ஆரம்ப காட்சிகளில் ரோஷன் செய்யும் கிறுக்குத்தனத்தை பார்த்தால் நமக்கே எரிச்சலாகும். என்னடா? இவர் ஜீனியஸ்? தானா என்பதில் சந்தேகம் எழும். அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் கொடுத்துள்ளார் சுசீந்திரன்.

படிப்பு மட்டுமே கவனத்தில் கொண்டதால் உடற்பயிற்சி இருக்காது. உடல் அமைப்பு நிச்சயம் பிட்டாக இருக்காது. அதற்கு ஏற்ப ஹீரோ ரோஷன் இருக்கிறார். கிறுக்குத்தனத்தில் கில்லியாக இருக்கிறார் ரோஷன். ஆனால் மற்ற காட்சிகளில் இன்னும் நிறைய பயிற்சி தேவை. மற்றபடி முதல் படம் என்பதால் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளலாம்.

முதல் படத்தில் எவரும் ஏற்க மறுக்கும் கேரக்டரில் பிரியா லால். இடைவேளைக்கு பின்னர் தான் வருகிறார். நடிப்பில் பாஸ் மார்க் பெறுகிறார்.

ஆனால் நாயகிகளுக்கு சுசீந்திரன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக எழுந்துள்ளது. அதை இதிலும் நிரூபித்துள்ளார்.

கண்டிப்பான அப்பாவாக ஆடுகளம் நரேன். நடிப்பிலும் செம ஸ்ட்ரிக்ட். அம்மாவாக மீரா கிருஷ்ணன்.

படிப்பை மட்டுமே கொடுத்து மகனின் வாழ்க்கை இப்படி நாசமாக்கி விட்டாரே என்று கேள்வி கேட்கும் காட்சிகளில் பாசக்கார அம்மாவாக ஜெயித்து விடுகிறார்.

சிங்கம் புலி சில காட்சிகளில் வந்து சிரிப்பு மூட்டுகிறார். ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

genius still 2

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே ரகம் தான். ‘நீங்களும் ஊரும்’, ‘சிலு சிலு’ஆகிய பாடல்களை ரசிக்கலாம்.

விளையாடு மகனே விளையாடு பாட்டு. இன்றைய பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் கேட்டு.

படத்தொகுப்பில் குறைவில்லை. 2 மணி நேரம் கூட படமில்லை என்பது பெரும் ஆறுதல்.

ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சிட்டி காட்சிகளில் ஏதோ ஒரு டல் பீலிங் வருகிறது.

genius still

இயக்கம் பற்றிய அலசல்….

முதல் பாதியில் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது. பிள்ளைகள் விளையாடும் வயதில் அவர்களை விளையாட விட வேண்டும் என்பதை சொன்ன சுசீந்திரனுக்கு ஒரு சபாஷ்.

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. மாலை வேளையில் குழந்தைகள் நன்றாக விளையாடினால் தான் அவர்களுக்கு அசதி வரும். அப்போதுதான் இரவில் நன்றாக உறங்கி காலையில் படிப்பார்கள் என்று ஆணித்தரமாக சொல்லியுள்ள சுசீந்திரனை பாராட்டலாம்.

சமூகத்தில் தன் அந்தஸ்தை உயர்த்தி கொள்ள பிள்ளைகளின் படிப்பை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் சில பெற்றோர்கள். அவர்களுக்கு இந்த ஜீனியஸ் ஒரு படிப்பினையை கொடுப்பார்.

விபச்சார விடுதிக்கு சென்ற பின் ஹீரோ மனநிலை மாறுவது எல்லாம் ரொம்ப ஓவர். எல்லாம் ஜீனியஸ் இப்படி செய்துவிட்டால் என்னாவது..?

முதல் பாதியை பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பார்க்கலாம். ஆனால் 2ஆம் பாதியை மாணவர்களை வைத்து பார்க்க முடியுமா..?

சொல்ல வந்த விஷயத்தை கமர்ஷியல் கலந்து வேறு ரூட்டில் சொல்ல பயணித்துவிட்டதால் ஜீனியஸ் சற்று தடுமாறி விட்டார்.

ஜீனியஸ்… விளையாட்டுத்தனம்

திகட்டாத திருவிழா..; சண்டக்கோழி 2 விமர்சனம்

திகட்டாத திருவிழா..; சண்டக்கோழி 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், முனீஷ்காந்த், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி மற்றும் பலர்.
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – சக்திவேல்
எடிட்டர் – பிரவீன்
இயக்கம் – லிங்குசாமி
தயாரிப்பு – விஷால்
பிஆர்ஓ. – ஜான்சன்

கதைக்களம்….

சாப்பாட்டில் ஆட்டுக்கறி இல்லாத பிரச்சினையால் வரலட்சுமியின் கணவன் ஒருவனை வெட்ட, பின்னர் அவர்கள் வரலட்மியின் கணவரை வெட்டுகிறார்கள்.

இந்த கலவரத்தால் ஊர் திருவிழா தடைப்படுகிறது. இனி திருவிழா நடந்தால் தன் கணவரை வெட்டியவனின் குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என சவால் விடுகிறார் வரலட்சுமி.

ஒரு சிலரை அப்போதே வெட்டிவிட்டு ஹரி என்ற ஒருவனை வெட்ட அடுத்த திருவிழாவுக்காக காத்திருக்கிறார்.

கலவர காரணத்தால் திருவிழாவை நடத்த அனுமதி மறுக்கிறார் கலெக்டர்.

இந்நிலையில் 7 வருடங்களாக நின்றுப் போன ஊர் திருவிழாவை நடத்த 7 கிராம மக்களையும் கூட்டி சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார் ராஜ்கிரண்.

பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தில் இனி உயிரிழப்பு இருக்காது. அவர்களுக்கு நான் பாதுகாப்பு என பொறுப்பேற்று கொள்கிறார் ராஜ்கிரண். இவருக்கு துணையாக களத்தில் நிற்கிறார் விஷால்.

திருவிழா அமைதியாக நடந்ததா.? அந்த குடும்பத்தை காக்க வீச்சருவாளை எடுத்தாரா விஷால்? ராஜ்கிரண் சொன்ன வாக்கை காப்பாற்றினாரா? வரலட்சுமி ஹரியை வெட்டினாரா? என்பதே மீதிக்கதை.

sandakozhi 2 stills

கேரக்டர்கள்…

13 வருடங்களுக்கு முன் சண்டக்கோழி படத்தில் பார்த்த போது விஷால் எப்படியிருந்தாரோ? அதே போலத்தான் இதிலும் இருக்கிறார். அதற்காகவே பாராட்டலாம்.

அப்போது அப்பாவித்தனம் இருந்தது. இதில் படம் முழுக்க சீரியஸ் ஆகவே இருக்கிறார். ரொமான்ஸ் அதிகம் இல்லை என்றாலும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கவிட்டுள்ளார்.

மீரா ஜாஸ்மின் ரேங்சுக்கு நாம் கீர்த்தியை எதிர்பார்க்க முடியாது. ஆனால் தன் பாணியில் அசத்தியிருக்கிறார். கோயில் திருவிழாவில் கீர்த்தி போடும் குத்தாட்டம் செம அப்ளாஸை அள்ளும்.

கிராமத்து பெண்களுக்கு உரித்தான துடுக்குத்தனத்தால் மனதில் நிறைகிறார் கீர்த்தி. வாயாடி பெண்ணாக துறுதுறுவென ரசிக்க வைக்கிறார். (கிராமத்து பாஷை சில காட்சிகளில் செயற்கையாக உள்ளது)

ஆரம்பம் முதலே மிரட்டலான பார்வையில் வருகிறார் வரலட்சுமி. இடையில் அமைதியாக இருக்கும் இவர் க்ளைமாக்ஸ் பைட்டில் மிரள வைத்துள்ளார்.

அழகான வில்லிகள் இங்கே இல்லை என்பதால் வரலட்சுமி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

ராஜ்கிரணை பார்த்தால் நமக்கே ஒரு கம்பீரம் வரும். அதே மிடுக்கு. அதே பேச்சு. துரை ஐயாவாக வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் இதுபோல ஒரு பெரியவர் இருந்தால் ஊரே நன்றாக இருந்துவிடும்.

கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி என ஒவ்வொரு காட்சியிலும் ஊரே திரண்ட உணர்வு. நிச்சயமாக இத்தனை பேரையும் ஒரே நேரத்தில் வேலை வாங்கிய லிங்குசாமியை பாராட்டியே ஆக வேண்டும்.

sandakozhi 2 stills keerthy

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இதுபோன்ற ஆக்சன் படங்ளுக்கு மிகப்பெரிய பலமே பின்னணி இசைதான். அதை உணர்ந்து பின்னி எடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஒவ்வொரு சீனுக்கும் அதிர வைத்துள்ளார்.

கம்பத்து பொன்னு, மீசைக்கார, பாடல்கள் ரசிக்க வைக்கும். ஆளாள பாட்டு இதமான ராகம்.

சக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. கீர்த்தி மற்றும் வரலட்சுமியை ரசித்து ரசித்து க்ளோஸ்அப் ஷாட்டுக்கள் நிறைய வைத்துள்ளார். க்ளைமாக்ஸ் பைட் சீன் முதல் பார்ட்டில் பார்த்த அதே லொக்கேசன் உணர்வு.

எடிட்டர் பிரவீனின் சில காட்சிகளை கட் செய்திருக்கலாம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவு.

பிருந்தா சாரதி, எஸ்.ரா இருவரும் எழுதியுள்ள வசனங்கள் சில இடங்களில் கைத்தட்டல்கள் பெறுகிறது.

sandakozhi 2 stills vishal varu keerthi

இயக்கம் பற்றிய அலசல்…

சண்டக்கோழி முதல் பார்ட் வந்தபோது நடிகராக மட்டுமே இருந்தார் விஷால். தற்போது 13 வருடத்தில் அவர் நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட்டதால் அவருக்கு ஏற்ப காட்சிகளில் ஃபயர் ஏற்றியுள்ளார் லிங்குசாமி.

சண்டக்கோழி2 என தலைப்பிட்டதாலோ என்னவோ படத்தில் பாதி சண்டைக்காட்சிகளே உள்ளது. ஆக்சன் ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும்.

லிங்குசாமி படங்கள் என்றால் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். அதை இதிலும் காப்பாற்றியிருக்கிறார்.

விஷால் அட்வைஸ் செய்தவுடன் வரலட்சுமி கண்ணீர் விடுவதும் மழை பெய்வதும் எல்லாம் ரொம்ப ஓவர்.

திருவிழா கடைசி நாளில் ராஜ்கிரண் திடீரென வருவது நம்புறமாதிரி இல்லையே.

முனீஷ்காந்த் ராஜ்கிரணாக வேஷம் போடுவதும் ஊர் மக்கள் முன்னிலையில் காரில் அமர்ந்திருப்பதும் நம்பும்படியாக இல்லை. கார் சைடு மிரரில் முகம் தெரியாது ஓகே. முன் கண்ணாடியிலுமா? தெரியாது. லிங்கு சாரே என்ன சார்?

சண்டக்கோழி 2… திகட்டாத திருவிழா

Sandakozhi 2 review rating

வசீகரிக்கும் சென்னை…; வடசென்னை விமர்சனம்

வசீகரிக்கும் சென்னை…; வடசென்னை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், பவன், ராதாரவி, டேனியல் பாலாஜி மற்றும் பலர்.
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
எடிட்டர் – வெங்கடேஷ் மற்றும் ராமர்
இயக்கம் – வெற்றிமாறன்
தயாரிப்பு – தனுஷ்
பிஆர்ஓ. – ரியாஸ்

கதைக்களம்….

வன்முறையும் வட சென்னை மக்களின் வரலாறும் இப்படத்தின் தான் ஒன்லைன்.

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனியும் அவரது கூட்டாளிகள் கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் அந்த கொலையை செய்கின்றனர்.

அதன்பின்னர் சின்ன குற்றத்திற்காக தனுஷ் ஜெயிலுக்கு செல்கிறார். பின்னர் வாய்ஸ் ஓவரில் ஜெயிலுக்குள் நடக்கும் கோடிக்கணக்கான கஞ்சா தொழில் முதல் பணப் பரிமாற்றம் வரை அத்தனையும் சொல்கிறார்கள்.

பின்னர் ஒவ்வொருவரின் கேரக்டர் பற்றிய சுவராஸ்யத்தை உடைக்கிறார் டைரக்டர். அதற்காக 1980 முதல் ஆரம்பித்து 2003 வரை கதைக்களம் அமைத்து இருக்கிறார்.

அவை எல்லாம் சொல்லிவிட்டால் சில சுவாரஸ்யங்கள் இருக்காது. நாம் பல சினிமாக்களில் பார்த்து பார்த்து பழகின போன கதை தான்.

வடசென்னையின் ஒரு பகுதியை கைப்பற்ற முயற்சி செய்யும் இரண்டு கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் போர் தான் கதை.

இதனிடையில் கேரம்போர்டு வீரராக நுழையும் அன்பு என்ற தனுஷ் எப்படி அந்த வடசென்னையை மாற்றி அமைக்கும் கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் கதை.

புத்தகத்தில் வரும் பாகங்கள் போல, திரைக்கதையை தனி தனி பாகங்களாக பிரித்துள்ளார். கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவற்றை மாறி மாறி காட்டியுள்ளார்.

இடையில் கதையின் முக்கிய முடிச்சுகளை அவிழ்த்து விட்டு திரைக்கதையை ரசிகன் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.

முதல் பார்ட்டில் தனுஷின் ஆரம்ப கால காதல், ஜெயில் கதைகளே வருகிறது. இரண்டாம் பார்ட்டில்தான் அத்தனையும் காட்டப் போகிறார் வெற்றிமாறன்.

vadachennai stills

கேரக்டர்கள்…

ஏற்கெனவே தனுஷ் மீது ரசிகர்களுக்கு அன்பு அதிகம். அவர்கள் இந்த அன்பு கேரக்டரை பார்த்தால் இனி அன்பை விடவே மாட்டார்கள். கேங்ஸ்டர் கதை என்றாலும் இதில் தன் அருவாளை அவ்வளவாக பயன்படுத்தவில்லை.

மாறாக ரொமான்ஸில் ஐஸ்வர்யாவை கட்டம் கட்டிவிட்டார். விட்டால் கிஸ் அடிப்பதில் கமலுக்கு போட்டியாக தனுஷ் வந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

அப்பாவியாக இருந்து படிப்படியாக கேங்ஸ்ட்ராக உயர்வது என தன் தோற்றத்துக்கு ஏற்ப தனுஷ் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

சாமி ஸ்கொயரில் மாமி கேரக்டரில் தன் பெயரை கெடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் தன் பெயரை ஒரு படி மேலே எடுத்துச் சென்றுள்ளார். பத்மா கேரக்டரில் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

ராஜன் கேரக்டரில் அமீர். குணா கேரக்டரில் சமுத்திரக்கனி. செந்தில் கேரக்டரில் கிஷோர். சந்திரா கேரக்டரில் ஆண்ட்ரியா. என ஒவ்வொருவரும குறையே சொல்ல முடியாத படி வெளுத்து கட்டியிருக்கிறார்கள்.

தாதாவின் மனைவிகள் எப்படி இருப்பார்கள்.? சைலண்ட்டாக இருந்து காயை நகர்த்துவதில் ஆண்ட்ரியா அசத்தல். அமீரின் மனைவியாக இருப்பவர் எப்படி சமுத்திரக்கனியை வளைத்தார் என்பது எல்லாம் செம ட்விஸ்ட்.

வழக்கமான பெரியவர் கேரக்டரில் ராதாரவி. அதட்டல். அசத்தல்.

நாம் வழக்கமாக பார்க்கும் டேனியல் பாலாஜி இதில் வித்தியாசம் காட்டியுள்ளார். ப்ளாஷ்பேக்கில் வேறுமாதிரியாகவும் நிகழ்காலத்தில் சாமியார் போன்றும் வேறுபட்ட நடிப்பை காட்டியுள்ளார். பவன் கேரக்டரும் பளிச்.

vadachennai dhanush kiss

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இருவரும் வடசென்னைக்கு புது வண்ணம் கொடுத்திருக்கிறார்கள். பாடல்களை படத்துடன் ஒன்ற வைக்கிறது. மேலும் பின்னணி இசையில் செம மிரட்டல். சந்தோஷமய்யா சந்தோஷ்.

ஒவ்வொரு ஆங்கிளையும் ரசிக்கும் படி கொடுத்துள்ளார் வேல்ராஜ்.

கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். அந்த காலத்து லைட், போஸ்டர், கிரைண்டர், போன் முதல் வரை ஆண்கள் ஆடை, ஆண்கள் முடி அலங்காரம் வரை பார்த்து பார்த்து வைத்துள்ளனர்.

இயக்கம் பற்றிய அலசல்…

வடசென்னை மக்களின் வாழ்க்கை, அவர்களின் பேச்சு வழக்கம், பொழுதுபோக்கு, தொழில், மனைவி, மக்கள், அரசியல்வாதிகளின் சதி வேலை என ஒவ்வொன்றையும் இன்ச் பை இன்ச் ஆக சொல்லிவிட்டார்.

சதுரங்க ஆட்டத்தில் உள்ள காய் போல ஒவ்வொரு கேரக்டரையும் நகர்த்தி அதற்கான திரைக்கதை அமைத்து நம்மையும் அந்த ஆட்டத்தில் சேர்த்து வெற்றி காண்கிறார் டைரக்டர்.

இனி எவரும் வட சென்னை மக்களின் வாழ்க்கை என்று எதையும் புதிதாக சொல்லிவிட முடியுமா? தெரியல. ஒருவேளை புதிய டைரக்டர் எடுக்க வந்தால் வடசென்னையில் வெற்றிமாறன் காட்டிட்டாரே என்று ரசிகனே சொல்லிவிடுவார்கள்.

இதன் க்ளைமாக்ஸ் “வட சென்னை 2 – அன்புவின் எழுச்சி” குறித்து ஒரு எதிர்பார்ப்பையும் எற்படுத்துகிறது.

ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ப்ளாஷ்பேக் இருப்பதால் வன்முறை விரும்பாத சிலர் பொறுமை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இது 18க்கு வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படமே. வடசென்னை மக்களின் வாயில் இருந்து இவ்வளவு கெட்ட வார்த்தைகளா? வரும் என்பது வியக்க வைக்கிறது. அதிலும் பெண்கள் பேசும் அந்த பச்சை பச்சை வார்த்தைகள் மகா கொடுமை.

இந்த படத்தை பார்த்தால் பாளையங்கோட்டை, புழல் ஜெயிலிக்குள் சென்று ஜெயில் வாழ்க்கை வாழ்ந்த உணர்வு ஏற்படும்.

தயவுசெய்து பள்ளி மாணவர்கள், மாணவிகள் இந்த படத்தை பார்க்க வேண்டாம்.

வடசென்னை… வசீகரிக்கும் சென்னை

VadaChennai review rating

More Articles
Follows