தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
தன் மனைவியை இழந்த விஜய் ஆண்டனி ஒரே மகளை பாசமாக வளர்த்து வருகிறார். இவரது தொழில் குதிரை வளர்ப்பது.
வட இந்தியாவில் வாழும் விஜய் ஆண்டனியை சந்திக்க வரும் நிழல்கள் ரவி அப்போது தன் மகன் கொல்லப்பட்டதை சொல்கிறார். நீ மீண்டும் சென்னைக்கு வந்து இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் செய்ய வேண்டும் என அழைக்கிறார்.
அதன்படி விஜய்ஆண்டனி வானம் என்ற பத்திரிகையில் மீண்டும் இணைகிறார். அங்கு கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறார் நந்திதா.
தன் நண்பன் செழியனை கொன்றவர் ஒரு நடிகரின் ரசிகர் என்றாலும் அந்த கொலையில் சந்தேகம் இருப்பதை அறிந்து மீண்டும் அது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி.
செழியன் கொலை போலவே அடுத்தடுத்து கொலைகள் நடக்கவே இவை எல்லாம் ஒரே நெட்வொர்க்கில் நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார் விஜய்.
அப்படி என்றால் அந்த நெட்வொர்க்கின் தலைவன் யார்? அவனின் நோக்கம் என்ன?. பத்திரிகையால் என்ன செய்ய முடிந்தது? மீடியா பவரை காட்டினாரா விஜய் ஆண்டனி? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
இடைவேளை வரை நீண்ட தாடி இறுக்கமான முகம் என தன் வழக்கமான பாணியில் அமைதியாக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் கொலை வழக்கு வேகம் எடுக்கவே அதற்கு ஏற்ப ஷேவ் செய்து முறுக்கிய மீசையுடன் வெரைப்பாக காணப்படுகிறார்.
விசாரணையில் வீரம் முக்கியம் இல்லை. விவேகமே முக்கியம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு பிரேமிலும் தன் பாடி லாங்குவேஜில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நந்திதா & ரம்யா நம்பீசன் என இரண்டு அழகிய ஹீரோயின்கள் இருந்தாலும் அதிகமாக ஸ்கோர் செய்வது மகிமா நம்பியார். எவருமே எதிர்பாராத கேரக்டரில் மலைக்க வைக்கிறார் மஹிமா.
வாடகைக்கு வீடு பார்க்க வரும் விஜய் ஆண்டனியிடம் மகிமா.. அவர் யார் என்று தெரிந்து பேசும் காட்சிகள் வேற லெவல். அதிலும் சிரித்துக் கொண்டே மிரட்டும் தோணியில் பேசும் நடிப்பு மகா நடிப்பு.
அழகுமிக்க ரம்யா ரசிக்க வைக்கிறார். அவரின் மாமா ஓ ஏ கே சுந்தர் பிளாஷ்பேக் காட்சியை சொல்லும்போது கண்கலங்க வைக்கிறார் ரம்யா.
ஸ்டைலிஷ் ஆன உடைகளுடன் அழகிய கண்ணாடி போட்டு நம்மை அசர வைக்கிறார் நந்திதா. இப்படி ஒரு பியூட்டி நம் அருகே இருந்தால் தாராளமாக ஓவர் டூட்டி பார்க்கலாம் என ரிப்போர்ட்டர்களை நினைக்க வைப்பார்.
ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல் என அனைவரும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்துள்ளனர்.
வானம் என்ற பத்திரிகை நடத்தும் நபராக நிழல்கள் ரவி. அவரது குரலே தனித்துவமானது. அதற்கு ஏற்ப ஒரு பத்திரிக்கை அதிபராக நடிப்பில் கெத்து.
இன்றைய இளைஞர்கள் பத்திரிக்கை துறையில் சிறப்பாக செயல்பட நினைத்தாலும் எங்களைப் போன்ற நபர்களால் அவர்களால் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதை இன்றைய மீடியாக்களின் நிலையை சொல்லி இருக்கிறார்.
டெக்னீசியன்கள்…
ஒளிப்பதிவாளர் : கோபி அமர்நாத், இசையமைப்பாளர் : கண்ணன் நாராயணன்
படத்தொகுப்பாளர் : டி.எஸ்.சுரேஷ்
கலை இயக்குநர் : செந்தில் ராகவன் ஆகியோரது பணி நிறைவான ஒன்று.
ஒளிப்பதிவாளர் தன் பணியில் கச்சிதம். ஆனால் எடிட்டர் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு ஏற்ப காட்சிகளை வெட்டி இருக்கலாம்.
இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் பின்னணி இசை விறுவிறுப்பை அதிகரித்து க்ரைம் த்ரில்லர் படத்தை உணரவைக்கிறது.
பத்திரிக்கை நடத்தும் நபராக நிழல்கள் ரவி. அவருடைய வீட்டு பொருட்களில் வண்ணமும் பத்திரிக்கை ஆபீசின் வண்ணமும் ஒரே கலராக இருப்பதை கலை இயக்குனர் செந்தில் ராகவன் ரசனையில் காண முடிகிறது.
படத்திற்கு ரத்தம் என டைட்டில் வைக்கப்பட்டாலும் ரத்தத்திற்கு பெரிதாக வேலையில்லை.. அதுபோல யுத்தத்திற்கும் சத்தத்திற்கும் வேலை கொடுக்கவில்லை. ஆனாலும் டீசன்டாக ஒரு கிரைம் திரில்லரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சி எஸ் அமுதன்.
தமிழ் படம் 1&2 ஆகிய படங்களை இயக்கியவர் இவர்? என சந்தேகிக்கும் அளவிற்கு வித்தியாசமான திரைக்கதையை அமைத்திருக்கிறார். ஒரு போலீசுக்கு அந்த வட்டத்திற்குள் மட்டும்தான் விசாரணை. ஆனால் ஒரு ரிப்போர்ட்டருக்கு மாநிலம் நாடு முழுவதும் விசாரணை இருக்க வேண்டும் என்பதை தன் வசனங்கள் மூலம் நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அமுதன்.
ஜீவா நடித்த ‘கோ’ & விஜய்சேதுபதி நடித்த ‘கவண்’ ஆகிய படங்கள் பத்திரிகை துறையை பற்றி இருந்தாலும் ‘ரத்தம்’ படம் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசத்தை ஆழமாக சொல்லி இருக்கிறது.
முக்கியமாக இன்று சோசியல் மீடியாக்களில் அதிக அளவில் காணப்படும் மதவெறுப்பு அரசியல்… ஜாதி வெறுப்பு அரசியல்.. நடிகர்கள் ரசிகர்கள் மோதல் அரசியல்.. இதனால் தூண்டப்படும் விஷமிகள்.. இதற்கான நெட்வொர்க்.. அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என அனைத்தையும் அலசி இருக்கிறார் இயக்குனர் அமுதன்.
ஆக ரத்தம்.. சத்தமில்லாத யுத்தம்
Raththam movie review and rating in tamil