தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரத்னம் விமர்சனம்… மாஸ் ஆக்ஷன்
நடிகர் விஷால் & இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’.
இந்தப் படத்தில் விஷால் உடன் பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய டி எஸ் ஜெய் எடிட்டிங் செய்ய பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.
தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சண்டை பணிகளை கனல் கண்ணன் மேற்கொண்டுள்ளார்.
கார்த்திகேயன் சந்தானம் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.
ஸ்டோரி…
1994 ஆம் ஆண்டில் கதை தொடங்கி… திருப்பதி செல்லும் பக்தர்களை வழி மறித்து அவர்களிடம் தங்கச் செயின்களை பறிக்கிறது கொள்ளையர் கூட்டம்.. இப்படியாக தமிழக – ஆந்திர எல்லையில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த கும்பல்
மற்றொருபுறம் வேலூரில் சமுத்திரகனியை கொல்ல வரும் ஒரு கும்பலிடம் இருந்து சிறுவயது விஷால் காப்பாற்றுகிறார்.
இந்த இரண்டு கதைகளும் 30 ஆண்டுகளுக்குப் பின் நகருகிறது.. 2024 ஆம் ஆண்டு கதை தொடங்குகிறது..
வேலூரில் சட்டமன்ற உறுப்பினராக எம்எல்ஏவாக வளர்ந்து நிற்கும் சமுத்திரகனிக்கு தளபதியாக வளர்ந்து நிற்கிறார் விஷால்.
ஒரு கட்டத்தில்.. மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் மெடிக்கல் சீட் கிடைக்காமல் 4வது முறையாக நீட் எழுத வேலூர் வருகிறார் பிரியா பவானி சங்கர்.. இவரை பார்த்த உடனே இவருக்காக ஓடி ஓடி நிற்கிறார் விஷால்.
பிரியாவைக் கொல்ல ஒரு கும்பலிடம் இருந்து தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுகிறார்.. இது காதலாக இருக்குமோ என்ற நம்பிக்கையில் காதலை பிரியா சொல்ல நான் உன்னை காதலிக்கவில்லை என்கிறார் விஷால்.
அப்படி என்றால் பிரியாவுக்காக விஷால் ஓடி நிற்க காரணம் என்ன? இருவருக்கும் உள்ள பந்தம் என்ன?
பிரியாவைக் கொல்ல வரும் கும்பலின் நோக்கம் என்ன அவர்களின் பின்னணி என்ன? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை
கேரக்டர்ஸ்…
நாயகன் விஷால் நாயகி ப்ரியா பவானி சங்கர் என்றாலும் இருவருக்கும் ஜோடியாக பாடல் இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பது இயக்குனர் ஹரியின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.. அதில் ஒரு அம்மா சென்டிமென்ட் இணைத்து இருப்பது வித்தியாசமான கற்பனை.
விஷாலின் ஆக்ஷனுக்கு டன் கணக்கில் தீனி போட்டு இருக்கிறார் பைட் மாஸ்டர் கனல் கண்ணன்… திரை எங்கும் ரத்த தெறிக்கும் அளவில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது..
விஷாலுக்கு அடியாள் போல அதகளம் செய்து இருக்கிறார் யோகி பாபு.
கலகலப்புக்கு இரண்டு ஆள் வேண்டும் என்ற பெயரில் யோகி பாபு & மொட்ட ராஜேந்திரனும்.. இவர்களின் காமெடி படத்தை டிஸ்டர்ப் செய்கிறது..
நாயகி பிரியா பவானி சங்கர்.. நீட் மெடிக்கல் தேர்வை பற்றி பேசும் காட்சி மாணவர்களின் வலியை உணர்த்துகிறது.. இரண்டு தோற்றங்களில் வந்து இரு விதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நல்லவன் பாதி கெட்டவன் பாதி என்ற என்ற கொள்கை கேரக்டரில் அசத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.. விஷால் போடும் ஒவ்வொரு ஸ்கெட்சுக்கும் இவர் உதவும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..
தங்க செயின்களை பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்கள் பெரிய தாதாக்களாக வளர்ந்து ஆந்திராவை மிரட்டும் வில்லன்களாக முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோர் மாஸ் வில்லன்கள்.. அதிலும் மெயின் வில்லன் முரளி சர்மாவின் இன்ட்ரோ சீன் செம பில்டப்..
என்னதான் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும் ஹரி படத்தில் நடிக்கும் போது படபடவென பேசித்தானே ஆக வேண்டும்.. கௌதம் மேனன் ஒரே ஒரு காட்சியில் வந்து வேகமாக பேசி செல்கிறார்.
ஆந்திர அமைச்சராக கஜராஜ் கச்சிதம்..
இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஒய் ஜி மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் உள்ளனர்.
டெக்னீசியன்ஸ்…
படம் தொடங்கிய சில நிமிடங்களில் வரும் தாய் மகன் பாச பாடல் ரசிகர்களை கவரும்.. இதனை அடுத்து சில நிமிடங்களில் வரும் டோன்ட் ஒரி என்ற பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
எதுக்காக வந்து நிக்கிற? என் மேல் என்ன அக்கறை? என்ற பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
பாடல்களை விட பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.. அதுவும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி அதிர வைக்கிறது..
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கைவண்ணத்தில் காட்சிகளில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது..
ஹரி படங்கள் என்றாலே வேகத்திற்கு பஞ்சம் இருக்காது.. வேகம் என்றாலும் குடும்ப செண்டிமெண்ட் என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் அந்த டெம்ப்ளேட் ஃபார்முலாவை மீறி தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லையில் கதையை நகர்த்தி இருக்கிறார்.
நீட் தேர்வு… தமிழகம் & ஆந்திர அரசியல்… பிராமணர்களின் வாழ்க்கை முறை.. அவர்களின் பழிவாங்கும் எண்ணம்… வழிப்பறி கொள்ளையர்கள் இப்படி பல கதைகளை இணைத்து இரண்டு படங்களாக சொல்ல வந்த கதையை ஒரே படத்தில் எடிட்டிங் செய்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் ஹரி.
ஹரியின் அதிரடி வேகம் விஷாலின் ஆக்சன் வேகம் என இரண்டும் கலந்து விறுவிறுப்பாக செல்கிறது.. அரை மணி நேரத்திற்கு ஒரு ஃபைட் என தெறிக்க விட்டிருக்கிறார் பைட் மாஸ்டர் கனல் கண்ணன்.. இவை நிச்சயம் தெலுங்கில் தெறிக்கவிடும்..
Vishals Rathnam movie review