ஒரு நாள் கூத்து விமர்சனம்

ஒரு நாள் கூத்து விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தினேஷ், மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெத்துராஜ், பால சரவணன், சார்லி, கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் பலர்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : கோகுல்
படத்தொகுப்பு : விஜே சாபு ஜோசப்
இயக்கம் : நெல்சன் வெங்கடேசன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : கெனன்யா பிலிம்ஸ் ஜெ செல்வகுமார்

 

கதைக்களம்…

தினேஷ் மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டே காதலிக்கின்றனர். தன் குடும்பம் செட்டில் ஆனவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் தினேஷ். இவரது நண்பர் பால சரவணன்.

மியா ஜார்ஜ்க்கு நல்ல அந்தஸ்து உள்ள மாப்பிள்ளை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவரது வாத்தியார் தந்தை.

28 வயது ஆகியும் ரேடியோ ஜாக்கி என்பதால் ரித்விகாவுக்கு வரன் அமையவில்லை. இந்த தங்கை திருமணத்திற்காக காத்திருக்கிறார் அண்ணன் கருணாகரன். ரித்விகாவுடன் பணிபுரிகிறார் ரமேஷ் திலக்.

இவர்களின் வாழ்க்கையில் நடைபெறவுள்ள அந்த ஒரு நாள் கூத்து கல்யாணம் எப்படி இவர்களை இணைய வைக்கிறது என்பதே இப்படத்தின் கதை.

oru naal koothu movie stills 1

கதாபாத்திரங்கள்…

இதுநாள் வரை தாடி, கைதி, சீவாத தலை முடி என அழுக்காக வந்த, தினேஷ் இதில் படு ப்ரெஷ்ஷாக வந்திருக்கிறார். அதுவே ஒரு பெரிய சேஞ்ச்.

ஆக்ஷன் வரும் அளவுக்கு இவருக்கு காதல் வரவில்லை. படத்தில் உள்ள குடும்ப பாரம் காரணமோ?

மியா ஜார்ஜ்… லட்சுமிகரமான முகம். ஒவ்வொரு மாப்பிள்ளை முன் நிற்பதும் திருமணம் தள்ளிப்போவதும் என ஒரு பெண்ணின் நிஜமான உணர்வை பிரதிபலிக்கிறார்.

oru naal koothu mia

அப்பா என்ன சொன்னாரு? என மாப்பிள்ளை இவரிடம் கேட்கும்போது.. அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு… என்பதும் நான் வேனுமின்னா வந்து கூட்டிட்டு போ உள்ளிட்ட காட்சிகள் இவரது வலியை உணர்த்துவதாய் உள்ளது.

ரித்விகா.. இந்த ஆர்ஜே கேரக்டரிலும் அசத்தல். கோயிலை சுற்றும்போது மத்தவங்க என்ன நினைப்பாங்க? என்பதை விட நாம எப்படி பார்க்கிறோம் என்பது முக்கியம் என்று கூறும்போது கைதட்டலை அள்ளுகிறார்.

28 வயது ஆனதால் ப்ராக்டிக்கலாய் தப்பு செய்யும் காட்சியில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

oru naal koothu nivetha

நிவேதா பெத்துராஜ்…. இவருக்கு காதல் கல்யாணம் என இரண்டிலும் ஸ்பேஸ் கிடைத்திருப்பதால் ஸ்கோர் செய்துள்ளார்.

காதலனை விட்டு கொடுக்காமல் பேசுவதும், அப்பாவிடம் காதலனை விட சொல்லி பேசுவதும் இன்றைய பெண்களின் ஒட்டு மொத்த உருவமாய் தெரிகிறார்.

ரமேஷ் திலக்கின் கேரக்டர் நிஜ ஆர்ஜேவை காட்டுகிறது. இவரது முன் அனுபவமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் போல.

இவர்களுடன் கருணாகரன், பால சரவணன், சார்லி உள்ளிட்டோரின் டைமிங் சென்ஸ் காமெடிக்கு படத்திற்கு நிறையவே கைகொடுக்கிறது.

Oru-Naal-Koothu-Movie-Latest-Stills-18

தொழில்நுட்ப கலைஞர்கள்….

அழகே அடியே… பாடல் அருமை என்றால், எப்போ வருவாரோ… என்ற பாடல் அசத்தல். இரண்டும் மனதில் நிற்கிறது.

கோகுலின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. விஜே சாபு ஜோசப் இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்….

  • பாடல்கள் மிகப்பெரிய பலம். இதுபோன்ற மெலோடி பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு. மேள தாள பின்னணி இசையும் சில இடங்களில் ஓகே.
  • கண்களுக்கு விருந்தாகும் கலர்புல்லான ஒளிப்பதிவு.
  • மூன்று அழகான நாயகிகளின் அமைதியான நடிப்பு.

oru naal koothu dinesh bala saravanan

படத்தின் மைனஸ்…

  • ஒவ்வொரு கேரக்டரையும் அடிக்கடி காட்ட வேண்டுமென்பதால், டக் டக் என்று காட்சிகளை மாற்றும்போது கேரக்டர்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது.
  • சொல்லவேண்டிய விஷயத்தை கொஞ்சம் எளிதாக சொல்லியிருக்கலாம்.
  • ரித்விகாவின் கேரக்டர் மூலம் என்ன சொல்ல வருகிறார்? இயக்குனர் என்பது அவருக்கே வெளிச்சம். மாப்பிள்ளையிடம் கெஞ்சுவதும் பின்பு மறுப்பதும் ஏனோ?

Oru-Naal-Koothu-Movie-Stills-3

எந்த ஒரு கேரக்டரையும் மையப்படுத்தாமல், திருமண பந்தத்தையும் இன்றைய காதலையும் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன்.

எவரிடமும் இவர் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

லவ் மேரேஜ் என்றாலும் அரேஞ்ச் மேரேஜ் என்றாலும் எத்தனை விதமான பிரச்சினைகள் என்பதையும் அதை சொன்ன விதத்திலும் தேர்ச்சி பெறுகிறார் இயக்குனர்.

இன்றைய திருமண வரன் தேடலை யதார்த்தமாக காட்டியதற்கு பூங்கொத்து கொடுக்கலாம்.

திருமணம் என்ற இந்த ஒரு நாள் கூத்து… சிலருக்கு ஹாப்பி… சிலருக்கு ஆப்பு..!

தொடரி இசை பாடல்கள் விமர்சனம்

தொடரி இசை பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தொடரி.

பிரபு சாலமன் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது.  இவரின் ஆஸ்தான பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் 2 பாடல்களை பாடியுள்ளார்.

அனைத்து பாடல்களையும் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.

பாடல்கள் பற்றிய விவரம்…

 

1) ஊரெல்லாம் கேட்குதே…

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் மரியா ரோ

ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டுதான்…

குயில் எல்லாம் போகுதே தலையாட்டிதான்…

தென்றல் இசை ஆகுதே… பூக்கள் ஜதி சொல்லுதே..

என இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் நாயகியின்  பாடலுக்கு ஆடுவதாக கவிஞர் யுகபாரதி வர்ணித்துள்ளார்.

இந்த வரிகள் இப்பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது.

இதில் வரும் ஸ்ரேயா கோஷலின் குரல் இன்னும் இனிமையை கூட்டுகிறது.

இப்படி மெலோடியாக செல்லும் பாடல் இறுதியில் ஆட்டம் போடும் வகையில் வளர்கிறது. இடையில் மற்ற மொழி வரிகள் மற்றும் ஹிந்தி வரிகளும் வந்து நம்மை ஆட்டுவிக்கின்றன.

இப்பாடலை கேரள செண்ட மேளம் இசை கூடுதலாய் கவனிக்க வைக்கிறது.

 

2) அடடா இது என்ன?….

பாடியவர்கள் : ஹரிசரன், வந்தனா சீனிவாசன்

அடடா இது என்ன? இது என்ன எனக்கொன்னும் புரியலையே… புரியலையே

அடியே எனக்கென்ன எனக்கென்ன… நடந்துச்சு தெரியலையே தெரியலையே…

நிழலாக கிடந்தேன் நான்.. நிசமாக நிமிந்தேன் நான்…

உன்ன பாத்து, தொடுவானாய் உசந்தேன் நான்….

என ஹரிசரணின் ஹை பீச்சில் இப்பாடல் தொடங்குகிறது.

நாயகனும் நாயகியும் காதல் வயப்படும்போது உருவாகும் வரிகளால் இப்பாடலை பின்னியுள்ளார் யுகபாரதி. காதலர்களுக்கு பிடிக்கும்.

 

3) மனுஷனும்.. மனுஷனும்…

பாடியவர் : கானா பாலா

மனுஷனும் மனுஷனும் பேசின காலம் போயே போச்சு.. ஐ…ஐ…ஐ….

அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு…ஐ.ஐ…ஐ.ஐ…

ஊராங்கூட எப்போ பாரு சாட்டிங்கு…

பெத்து பேரு வச்சா ஆத்தா கூட பைட்டிங்கு….

போனு ஸ்மார்ட்டா ஆச்சு….

உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு…

என்ற வரிகளோடு ஆரம்பம் ஆகிறது. நவீன ஸ்மார்ட் போன்களால் நம் வாழ்க்கை வீணா போச்சு என கருத்துள்ள பாடலாய் இது அமைந்துள்ளது.

இது கானா பாலாவின் குரல் என்றாலும், இதுவரை கேட்காத ஒரு பாணியில் இப்பாடலை பாடியுள்ளார்.  ஆனால் பழைய சுவாரஸ்யம் இல்லை.

 

4) போன உசுரு வந்துருச்சி…

பாடியவர்கள் : ஹரிசரன், ஸ்ரேயா கோஷல்

போன உசுரு வந்துருச்சி… உன்ன தேடி திருப்பி தந்திருச்சி… என்று ஸ்ரேயா குரலில் ஆரம்பிக்கிறது இந்த மெலோடி பாடல்.

காதலனை மிஸ் செய்யும் பெண்களுக்கு ஏற்ற பாடலாய் இது அமைந்துள்ளது. அவனை இனிமே மிஸ் செய்யக்கூடாது என்பதால்.. இனிமேல்  ஒரு நாளும் இதுபோல் அமைய கூடாது என்று தன் வலியை பெண் பாடுவதாக உள்ளது.

இதில் ஹரிசரண் வாய்ஸ் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. இந்த மெலோடியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வதாய் உள்ளது.

 

5) லவ் இன் வீல்ஸ்….

பாடியவர் : சின்னப் பொண்ணு

 

மைனா, கும்கி, கயல் பட பாடல்களின் ஹிட் உயரத்தை இது தொடுமா? என்பதை படம் வரும்வரை பொறுத்துத்தான் பார்க்கனும்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா, ஆடுகளம் நரேன், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ரேஷ்மா பசுபுலேட்டி (புஷ்பா) மற்றும் பலர்.
இசை : சத்யா
ஒளிப்பதிவு : ஷக்தி
படத்தொகுப்பு : ஆனந்த லிங்ககுமார்
இயக்கம் : எழில்
பிஆர்ஓ : ரியாஸ்
தயாரிப்பாளர் : விஷ்ணு விஷால்.

கதைக்களம்…

ஊர் மக்களுக்காக எம்எல்ஏ ரோபா சங்கரிடம் சிபாரிசு செய்து வேலையை முடித்துக் கொடுப்பவர் ஹீரோ முருகன் (விஷ்ணு விஷால்).

ஒரு சூழ்நிலையில் இவரது நண்பர் சூரி எம்எல்ஏ நடத்தி வைத்த ஒரு இலவச திருமண சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.

அதுபோல் ஹீரோயின் நிக்கியின் போலீஸ் வேலைக்காகவும் எம்எல்ஏவிடம் சிபாரிசுக்கு செல்கிறார்.

 

Velanu

 

இதனிடையில் ஒரு விபத்தில் எம்எல்ஏ கோமா நிலைக்கு சென்றுவிட தன் நண்பனுக்கும், காதலிக்கும் எப்படி ஹீரோ உதவினார் என்பதை அதிரி புதிரி காமெடியுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எழில்.

கதாபாத்திரங்கள்…

படத்தில் காமெடி தான் எல்லாம். ஹீரோ விஷ்ணுவின் இது 10வது படம். ஒரு தயாரிப்பாளராக முதல்படம். இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

கலர்புல்லாக வந்து, நிறைவான பணியை செய்திருக்கிறார்.

இனி புரோட்டா சூரி இல்லை. புஷ்பா புருசனாக புரமோசன் வாங்கிவிட்டார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறு வலிக்க வைத்துவிட்டார்.

 

Vandhutta-Vellaikaaran-Movie

 

நிக்கி கல்ராணிக்கு சீரியஸ் கேரக்டர். காக்கி உடையிலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை. ஆக்ஷனிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஜாக்கெட் ஜானகிராமனாக வரும் எம்எல்ஏ ரோபா சங்கர் அசத்தல். 10வயசு பையனாக மாறியபின் செய்யும் அட்டகாசங்கள் குழந்தைகளை கவரும்.

வில்லன் ரவி மரியா என்றாலும், காமெடியிலும் பின்னி எடுத்திருக்கிறார். 500 கோடிக்காக அலைந்து ஜாக்கெட்டை கடத்தும் காட்சிகளில் சிரிப்பை கன்ட்ரோல் செய்ய முடியாது. இது சத்தியம்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ஆடுகளம் நரேன் என இவர்களும் நம் வயிறை பதம் பார்க்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சத்யாவின் இசையில் க்ளைமாக்ஸ் குத்து பாடல் மற்றும் ரீமிக்ஸ் சீயர்ஸ் கேர்ள்ஸ் பாடலும் செம. இந்த பாட்டு வரும்போது உங்கள் கால்களை சீட்டில் கட்டிப் போட்டு விடவும். சபாஷ் சத்யா சார்.

 

Velainnu-02

 

சத்யாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. ஆனந்த் லிங்க்குமார் எடிட்டிங் செய்யாமலே விட்டு இருக்கலாம். இன்னும் கொஞ்சம் சிரித்து இருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • நான் ஸ்டாப் காமெடி வசனங்கள்
  • க்ளைமாக்ஸ் குத்துபாடல்
  • கதாபாத்திரங்கள் தேர்வு
  • கலர்புல்லான கதைக்களம்

காமெடி வசனங்கள் சாம்பிள்…

  • புஷ்பா புருசனா நீங்க…?
  • அட பாவிங்களா? காஜா பையன் முதல் டிஜிபி வரை புஷ்பாவை தெரிஞ்சி வச்சிருங்காங்களே…
  • ரோபா சங்கரின் திரும்ப திரும்ப கதை சொல்லும் காமெடி
  • புஷ்பா மேட்டர்தானே முடிச்சிடும்வோம். அவ மேட்டர்தானே அப்புறம் என்ன?
  • ஜாக்கெட் எங்கே? ஜாக்கெட்டே காட்டு என வரும் ஜானகிராமன் காட்சிகள்.
  • இவ பொண்டாட்டிக்கு ஜாக்கெட் நல்லா தைச்சி கொடுக்கிறான்னு மினிஸ்டர் ஆக்க பாக்குறாறே மாமா…?
  • இப்போ பத்து வயசு. இவன் பால் குடிக்கிற வயசுக்கு போயிட்டா அவரு பொண்டாட்டி நிலைமைய நினைச்சி பாருய்யா?

 

velanu 3

காமெடி வசனம், கேரக்டர்கள் தேர்வு, இயக்கம் என இப்படி எழிலை பாராட்டிக் கொண்டே போகலாம். புஷ்பா புருசன், ஜாக்கெட் ஜானகிராமன் என கேரக்டர்களின் பெயர்களை கூட அழகாக தேர்வு செய்துள்ளார்.

ரசிகர்கள் நான் ஸ்டாப்பாக சிரித்து செல்லவேண்டும் என டார்கெட் வைத்து சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்… காமெடி பட்டாசுக்காரன்..!

இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, ராதாரவி, கருணாகரன், காளி வெங்கட் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : சிவக்குமார் விஜயன்
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்.

கதைக்களம்…

மூன்று பெண்களின் அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. ஒரு ஆண் மகனை சுற்றியுள்ள அம்மா, சகோதரி, காதலி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் வலி பற்றிய உலகம்தான் இந்த இறைவி.

இயக்கிய படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் குடிகார இயக்குனர் எஸ் ஜே சூர்யா. இவருக்கு மனைவியாக கமாலினி முகர்ஜி. ஒரு பெண் குழந்தை.

நேசித்து உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்ய முடியாத விஜய்சேதுபதி பின்னர் அஞ்சலியை மணக்கிறார்.

பெண்களை போற்றும் பாபி சிம்ஹா. பணத்திற்காக எதையும் துணிச்சலுடன் செய்பவர்.

காதலித்த கணவன் இறந்துவிட்டதால், ஆசைக்கு மேட்டர் வைத்துக் கொள்ளும் பூஜா தேவரியா.

இவர்கள் 6 பேரும் இணைந்த இக்கதையில் நடைபெறும் சின்ன சின்ன உணர்வுகளை காவியமாக படைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

iraivi team

கதாபாத்திரங்கள்…

இருக்கு ஆனா இல்லை… இதை எஸ் ஜே சூர்யா சொல்ல கேட்டு இருப்போம். அதிகப்படியான நடிப்பு திறமை இருக்கு. ஆனால் இதுவரை இல்லாதுபோல் நம்மிடம் நடித்து இருக்கிறார் மனிதர்.

அப்படியொரு ஒட்டுமொத்த நடிப்பை இதில் கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. க்ளைமாக்ஸ் காட்சியில் தண்ணி அடிக்காமல் இவர் குடிகாரனாய் பேசும் வசனக் காட்சி ஒன்றே போதும் இவரின் பெயரை சொல்லும்.

பாசமுள்ள அண்ணன், சிறந்த படைப்பாளி, அன்பான அப்பா, குடிகார கணவன் என எதிலும் குறை வைக்காமல் சிறப்பு சேர்த்துள்ளார். இனிமே நீங்க நடிச்சா மட்டும் போதும் சார்… வீ ஆர் வெயிட்டிங்…

iraivi kid

தன்னுடைய டைரக்டர் என்பதால் எக்ஸ்ட்ரா நடிப்பை கொடுத்திருப்பாரோ விஜய் சேதுபதி. இவரும் சூர்யாவுக்கு போட்டியாக வந்திருக்கிறார். ஆனால் அவரது கேரக்டர் அளவுக்கு இல்லை என்றாலும் தனக்கு கிடைத்த கேப்பில் தன் பங்கை செய்திருக்கிறார்.

அதிலும் இவர் நடனம் ஆடும்போதும் மட்டும், ரசிகர்கள் கைதட்டி ரசிப்பது இவருக்கே வெளிச்சம்.

பூஜாவிடம் காதலை சொல்லும்போதும், அவளை தேடி போகும்போதும், நண்பனுக்காக சிறை செல்லும்போது என தேடி தேடி வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார்.

Anjali

அஞ்சலியிடம் நடத்தையை சந்தேகப்பட்டு கேட்கும்போது தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

முக்கால்வாசி படமே முடிந்துவிட்ட போதிலும், பைனல் டச் நான்தான் கொடுப்பேன் என்பது போல பாபி தன் கடமையை செய்திருக்கிறார்.

பெண்களுக்காக ஏங்குவதும், பெண்களை வெறுப்பதும் என இரண்டிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

எத்தனை ஹீரோயின் இருந்தாலும் அஞ்சாத ஏஞ்சல் நானிருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.

iravi pooja

தலதளபதி போன்று கணவனை எதிர்பார்க்கும் இவருக்கு தன் கணவன் அப்படி அமையவில்லையே என்ற தவிப்பை கண்களில் காட்டியிருக்கிறார்.

முதல் இரவில் ஏமாற்றம் வந்தபோது, அதை பெண்களிடம் விவாதிப்பது அருமை. தன் வாழ்க்கையில் கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் இவர் பெண்களுக்கு ரோல்மாடல்தான்.

எனக்கு கல்யாணமாச்சு. குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்னை காதலிக்கல சொல்லும்போது கணவனின் காதலும் கிடைக்கவில்லை என்பதை அருமையாக உணர்த்தியிருக்கிறார்.

Iraivi-anjali

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கேட்கும்போது நான் அவன் கூட படுத்திருப்பேனா இல்லையா? நான் சொல்ல போறது இல்ல? நம்பிக்கை இருந்தா வாழு. நீ யோக்கியமா? என்று கேட்கும்போது நச்.

ஆமா நானும் காதலிச்சேன். அவன் கூட படுத்தா வெட்டிடுவியா? என ஒவ்வொன்றையும் சொல்லி கேள்வி கேட்கும்போது அப்ளாஸ் கொடுக்கலாம்.

ஹைடெக் வாழ்க்கை ஆசைப்பட்டு குடிகார கணவனிடம் குமுறும் பெண்ணாக கமாலினி முகர்ஜி. வேலைக்கு செல்லும் இடத்தில் வலிகளை மறைத்து வாழும் இன்னொரு வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

iraivi sj suriya

மற்றொரு திருமணத்திற்கு தயாராவதும் முடியாமல் தவிப்பதும், பெற்றோருக்காக சம்மதம் தெரிவிப்பதும் ஆண்களை சார்ந்து வாழும் பெண்களுக்கே உரிய இயல்பான நடிப்பு.

பூஜா தேவரியா… உயிருக்கு உயிராய் நேசித்த கணவனை இழந்தாலும் காசுக்காக எதையும் செய்யாமல் வாழும் ப்ராடிக்கல் லேடி.

செக்ஸ் மேட்டர் வேண்டும் என்பதை அழகாய் சொல்லி, கல்யாணம் செய்துக் கொள்ள வருபவனை உதறிவிட்டு அந்த கேரக்டராய் நிற்கிறார்.

இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், ராதாரவி, வடிவுக்கரசி, வைபவ் என ஒவ்வொருவரும் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர்.

Iraivi-Movie-Stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களை விட பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். உணர்வுகளுக்கு இவரும் உயிரூட்டியிருக்கிறார்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ரயில், மழை காட்சிகள், கோயில் காட்சிகள், பாடல் என பேச வைத்திருக்கிறார்.

?????????????????????????????????????????????????????

படத்தின் ப்ளஸ்…

  • எஸ் ஜே சூர்யாவின் ஆணித்தரமான நடிப்பு
  • யாரும் கேரக்டர்களாக தெரியாத அளவுக்கு நேர்த்தியான இயக்கம்
  • உறங்கும் உணர்வுகளை தட்டி பார்க்கும் வசனங்கள்

உதாரணத்திற்கு…

  • சகிச்சிகிட்டு போயிருக்கலாம். மன்னிச்சிருக்கலாம். ஆனா, நான் பொம்பளை இல்லையே. ஆண்.. நெடில். பெண் குறில்…
  • எனக்கு கல்யாணமாச்சு. குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்னை காதலிக்கல…
  • உன் மக உன்னை அங்கிள் கூப்பிட்டா எனக்கு மருமக தானே….

நிறைய சொன்னால் கதை தெரிந்துவிடும் என்பதால் இதுபோதும்.

படத்தின் மைனஸ்…

  • தேவையில்லாத பீச் பாடல்
  • பெண்களை போற்றுங்கள். ஆண்களில் நல்லவர்களே இல்லையா சார்?
  • நீளமான சில காட்சிகள்

பெண்களின் வலியை நிறைய படங்களில் சொன்னவர் பாலசந்தர். அதை இன்றைய காலத்திற்கேற்ப சரியாக சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஒவ்வொரு காட்சியும் நகரும்போது பெண்களின் இதயத்தினுள் நுழைந்து கதை எழுதியிருப்பாரோ? என எண்ணத் தோன்றுகிறது.

iraivi director

அதே சமயம், ஆணாதிக்கம் என்ற ஆயுதத்தையும் எடுத்து, அதை அவர்களுக்கே பாடம் சொல்லும் கத்தியாக தீட்டியிருக்கிறார் இயக்குனர்.

மழையில் நனையலாமா? என ஆரம்பத்தில் கேட்டு, க்ளைமாக்ஸில் சுதந்திரமாய் நனையவிட்டு முடித்திருப்பது சூப்பர்.

மொத்தத்தில் இறைவி… மனிதி சொல்லும் நீதி.!

 

Marudhu Movie Review

Marudhu Movie Review

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

It was ‘Sandakozhi’, a rural action entertainer, that elevated Vishal’s career. Then came ‘Thamirabharani’, another film from the same genre, and it cemented the actor’s position. A few years ago, he was part of a village flick once again, Bala-directed ‘Avan Ivan’, and it brought the actor in him out.

Now with ‘Marudhu’, Vishal has apparently aimed a ‘Murattu Kaalai’ type of victory in the company of director Muthaiah, a specialist in village centric action flicks (remember ‘Kutti Puli’ and ‘Komban’).

Like its predecessors, ‘Marudhu’ too faithfully follows the template of less logic and more commercial elements. The role is tailor-made for Vishal and Sri Divya shines as village belle. And you have to really praise the strong technical team. But still, something is missing in the movie. May be the presence of predictability?

Marudhu (Vishal) is brought up by his grandmother Mariamma (Leela) with all good virtues. The upright man would not accept if women are disrespected. In the company of his good friend Kokkarakko (Soori), he leads a happy life.

Meanwhile, Marudhu comes across Rolex Pandian (R K Suresh), a thug-politician who is powerful in the area. Marudhu’s love interest Bhagyalakshmi (Sri Divya) has to settle scores with Pandian, as he is responsible for her mother’s death.

While Bhagyalakshmi files a case against Pandian through her advocate father Sankarapandian (Marimuthu), there is a backstory that connects Marudhu with Pandian. So, what happens next?

Vishal has transformed himself as a rural youth and comes up with his best in action scenes. Sri Divya has tried her hands at a different role and adds value to the movie with her looks and performance.

Soori, besides ticking the funny bone, makes us emotional too. Suresh is sure going places and can become one of the sought after villain actors of Tamil cinema.

There are three things, or persons, who deserve a special mention. In a rarity in films of the genre, Imman’s music, Velraj’s cinematography and Praveen K L’s editing are of top notch and are the real strengths of ‘Marudhu’.

With these many plus points, Muthaiah could have presented a much more better movie, by avoiding cliches and violence. If you are a lover of rural commercial entertainers, theatres screening ‘Marudhu’ may be your destination this weekend.

Verdict: Racy but regular

Pencil Movie Review and Rating

Pencil Movie Review and Rating

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

When G V Prakash Kumar, the music composer, decided to become an actor, ‘Pencil’ was the first project he signed. However, due to some reasons, the film got delayed, and his other heroic ventures ‘Darling‘ and ‘Trisha Illana Nayanthara‘ hit the screens and went on to become hits too.

The delay appears to be a blessing in disguise for both ‘Pencil’ and GVP, as such novel attempts were not the order of the day in these parts till a few years ago. Now that Kollywood audience are familiar with new age movies, they might appreciate this flick.

Shiva (G V Prakash) studies class 12 in a posh school in the city and he is a topper. He is not in good terms with spoilt brat Nithin (Shariq Haasan), son of leading film star.

One day, to the shock of everyone, Nithin is found dead under mysterious circumstances and the blame, yes you are right, falls on Shiva. Now the onus is on the young boy to prove that he is innocent. And he is helped by his love interest Maya (Sri Divya).

Debutant director Mani Raj has tried his hands at a high school thriller, a successful genre in Hollywood, and it is evident that he has been heavily inspired by Korean movie ‘Fourth Period Mystery’.

He has packed the first half in a brilliant manner, by establishing characters in an engaging way. But the second half is a let-down, as it is lengthy and preachy.

Considering this is the debut acting venture of GVP, he can be given first class. Sri Divya is cute as school girl and she is seen in stylish outfits. And the actress performs well too. Others in the cast too are good and topping the list is Shariq Hussain.

G V Prakash has come out with interesting songs and Gopi Amarnath’s visuals add value to them. Though ‘Pencil’ is watchable and racy, some trimming could do a world of good to it.

More Articles
Follows