முத்தின கத்திரிக்கா விமர்சனம்

முத்தின கத்திரிக்கா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுந்தர் சி, பூனம் பாஜ்வா, கிரண், சதீஷ், சிங்கம் புலி, விடிவி கணேஷ், ரவிமரியா, யோகி பாபு, சுமித்ரா, வைபவ் மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : பானு முருகன்
படத்தொகுப்பு : என் பி ஸ்ரீகாந்த்
இயக்கம் : வேங்கட் ராகவன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : அவ்னி மூவிஸ் சுந்தர் சி

கதைக்களம்…

40 வயது ஆகியும் மனதுக்கு பிடித்த பெண் அமையும் வரை காத்திருக்கும் பிரம்மசாரி சுந்தர் சி. அரசியலில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மனிதர் இவர்.

இவரின் காதலி பூனம் பாஜ்வா. சுந்தர் சியின் தொண்டர் மற்றும் நண்பராக சதீஷ்.

சுந்தர் சியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் அண்ணன் தம்பிகளான விடிவி கணேஷ் மற்றும் சிங்கம் புலி.

 

Muthina Kathirika 1

 

இதனிடையில் ரவிமரியாவின் மகளான பூனம் பாஜ்வாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கவும் திட்டம் தீட்டுகின்றனர்.

இந்த சதி திட்டங்களை மீறி, அரசியலிலும் காதலிலும் வென்றாரா நம்ம ஹீரோ என்பதே இந்த முத்தின கத்திரிக்கா.

கதாபாத்திரங்கள்..

இயக்குனராக இருந்த போதும் தற்போது நடிகராக இருந்தாலும் காமெடியில் கொடியை நாட்டியிருக்கிறார் சுந்தர் சி.

தன் நண்பருக்கே தெரியாமல் சதி திட்டம் தீட்டுவதில் கில்லாடி இவர். கூடவே அம்மா சென்டிமெண்ட், ஓவர் ஏஜ் லவ்ஸ் என அனைத்திலும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

 

Muthina Kathirika 2

 

பூனம் பாஜ்வா… நாயகன் கத்திரிக்கா என்றால் இவர் கவர்ச்சிக்கா. புடவையிலும் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். பாடல் காட்சியில் நனைந்து நம்மை சூடேற்றி செல்கிறார்.

இவருடன் ஜெமினி புகழ் கிரனும் மாப்பிள்ளை மீது ஜொள்ளு விட்டு ரசிக்க வைக்கிறார்.

கிராமத்து வேடம் என்றாலும் அதிலும் தன்னால் நிரூபிக்க முடியும் என புகுந்து விளையாடியிருக்கிறார் சதீஷ். படத்தை தன் காமெடியால் கலகலப்பாக்கி இருக்கிறார்.

விடிவி கணேஷின் டைமிங் சென்ஸ் செம. இவரது வாய்ஸே இவரது பலம். என்னைய பாத்து அஜித் சொன்ன முதல் ஆளு நீதான் என்று சொல்லும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

Muthina Kathirika 3

 

சிங்கம்புலியும் படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பாக்கியிருக்கிறார். யோகிபாபு இரண்டே காட்சிகளில் வந்தாலும் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.

ரவிமரியா இதில் காமெடிக்கு குறைவைத்து, போலீசாக வருகிறார். வைபவ் கெஸ்ட் ரோலில் வந்து போகிறார்.

இவர்களுடன் சுமித்ரா மற்றும் சுந்தர் சியின் தம்பி, தங்கை, அண்ணி ஆகியோர் சிறப்பான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பானு முருகனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. முக்கியமாக நாயகியின் அசைவுகள்.

படத்தின் ப்ளஸ்…

சதீஷ் + விடிவி கணேஷின் டைமிங் சென்ஸ் காமெடி படத்தின் கேரக்டர்களுக்கு இன்ட்ரோ வாய்ஸ் சூப்பர் கவர்ச்சியான நாயகி கதாபாத்திரங்கள்..

 

Muthuna Kathirika 4

 

சிந்திக்கக்கூடிய எலெக்ஷன் பாட்டு

படத்தின் மைனஸ்…

இரண்டாம் பகுதியில் தேர்தலை காமெடியாக்கி சொன்னவிதம்.

யோகிபாபு காட்சியை அதிகப்படுத்தி இருக்கலாம்.

 

Muthina Kathirika 5

 

இயக்குனர் வேங்கட் ராகவன், தான் சுந்தர் சியின் சிஷ்யர் என்பதை ஆணித்தரமாக காட்சிகளில் சொல்லியிருக்கிறார்.

மலையாள படம் ரீமேக் என்பதே தெரியாத அளவிற்கு தமிழ் நாட்டுக்கு ஏற்ப சுவையாக இந்த கத்திரிக்காயை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் முத்தின கத்திரிக்கா… சுவையில் குறையில்லை.

கபாலி இசை பாடல்கள் விமர்சனம்

கபாலி இசை பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இதில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆக மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது.

இப்பாடல் வெளியீட்டுக்கு விழா எதுவும் நடத்தாமல் ஆன்லைனில் வெளியிடுகின்றனர். அந்த பாடல்கள் பின்வருமாறு…

1)   உலகம் ஒருவனுக்கா…..

(தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.)

பாடல் ஆசிரியர் : கபிலன்

பாடியவர்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 02 நொடிகள்

 

ulagam song stills

வா நீ வா தோழா…
உலகம் ஒருவனுக்கா..? உழைப்பவன் யார்..?
விடை தருவான் கபாலி தான்…
கலகம் செய்து, ஆண்டையரின் கதை முடிப்பான்..!

நீ நீயாய் வந்தாய்… தீயின் கருவாய்….
கண்கள் உறங்கினாலும், கனவுகள் உறங்காதே…

பூவின் நிழலாய்… புல்லாங்குழலாய்…
உன்னை வெளியிடு, துளிர் விடு,…
பலியாடாய் எண்ணாய் விதையாக..

வாழும் நமக்கு கதைகள் இருக்கு…
நாளை நமக்கே விடியும்… விழித்து போராடு…
வானம் உனதே.. பாதி வழியில், பறவை பறக்க மறக்காதே…

ஏய் எண்ணத்தில் நூறு திட்டமிட்டு,
கபாலி வாரான் கையத்தட்டு….
பம்பரம் போல சுத்திக்கிட்டு,
பரையிசை அடித்திட்டு பாட்டு கட்டு…

ஏய் இத்தன நாளா கூட்டுக்குள்ள…
இனிமே வாரான் நாட்டுக்குள்ள…

போன்ற வரிகள் கபாலியின் ரீ என்ட்ரீயை காட்டுகிறது. இந்த வரிகளும் இந்த குரல்களும் இனி அடிக்கடி கேட்கலாம். ரஜினி ரசிகர்ளுக்கு செம விருந்தாய் இந்த பாடல் அமைந்துள்ளது.

 

2)      மாய நதி..

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பாடியவர்கள் : அனந்து பிரதீப் குமார், ஸ்வேதா மேனன்

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 35 நொடிகள்

 

mayanadhi song lines

 

நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே…

கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே…

நான் உன்னை கானும் வரையில் தாபத நிலையே

தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே….

 

ஆயிரம் கோடிமுறை நான் தினம் இறந்தேன்…

நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்…

 

மாய நதி இன்று மார்பில் வழியுதே…

தூய நரையிலும் காதல் மலருதே…

 

நீர் வழியிலே மீன்களை போல், என் உறவை நான் இழந்தேன்…

நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன்…

ஒளி பூக்கும் இருளே…. வாழ்வின் பொருளாகி…

வலி தீர்க்கும் வழியாய்… வாஞ்சை தரவா…

 

நாம் நேசித்த ஒருவரை காலம் காலமாக பிரிந்து, மீண்டும் ஒன்று கூடும் நாளாக தெரிகிறது.

இந்த இரு குரல்களும் அந்த ஏக்கத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தியுள்ளன.

அண்ணாமலை படத்தில் ரெக்கை கட்டி பறக்குதே என்ற பாடல் போல நரைத்த பின்னும் காதல் மலரும் எனச் சொல்கிறது இப்பாடல்.

துற வாழ்க்கை அடைந்து மீண்டும் தன் காதலியை கண்டு இருக்கிறார் என்பதை இப்பாடல் வரிகள் வலிகளாய் உணர்த்துகின்றன.

 

3)      வீர துறந்துரா…

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பாடியவர்கள் : கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார்

பாடல் நேரம் : 3 நிமிடங்கள் 17 நொடிகள்

வீரத் துரந்தரா

எமை ஆளும் நிரந்தரா

பூமி அறிந்திரா

புது யுகத்தின் சமர் வீரா

உன்நிலை கண்டு

இன்புற்றார்க்கு

இரையாகாமல்

அன்புற்றார் அழ

அடிமைகள் எழ

 

உரிமை யாழ் மீட்டினான்

உணர்வால் வாள் தீட்டினான்

உலகில் யாரென காட்டினான்

 

தடைகள் அறுந்திட

தலைகள் நிமிர்ந்திட

“கடை”யன் “படை”யன் ஆகினான்…

இப்படியாக தூய தமிழ் வரிகள் இருந்தாலும், இடையே ஆங்கில ராப் வரிகளும் புகுத்தப்பட்டுள்ளது.

“EVERY MAN GOTTA RIGHT TO DECIDE HIS DESTINY” என்றும் வருகிறது.

இது கொஞ்சம் தாளம் போட வைக்கும் உள்ள பாடலே. ஆனால் இது எல்லாருக்கும் பிடித்த பாடலாய் இருக்குமா? என்பதை படம் வந்தே பிறகே காண முடியும்.

 

4)   வானம் பார்த்தேன்…

பாடல் ஆசிரியர் : கபிலன்

பாடியவர் : பிரதீப் குமார்

பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 52 நொடிகள்

kabali vaanam parthen video song

நதியென நான் ஓடோடி…
கடலினை தினம் தேடினேன்…

தனிமையின் வலி தீராதோ…
மூச்சு காற்று போன பின்பு நான் வாழ்வதோ…
தீராத காயம் மனதில் உன்னாலடி… ஆறாதடி…

வானம் பார்த்தேன்… பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…

இது மிகவும் சோகப்பாடலாக உள்ளது. இது ரஜினி, ராதிகா ஆப்தேவின் இளமைக் கால பாடலாக இருக்கும் என தோன்றுகிறது. அல்லது தங்களது இளமை காலத்தை எண்ணிப் பார்க்கும் பாடலாக இருக்கும் என தோன்றுகிறது.
அதில் காதல் காயங்கள் கலந்துள்ளதாக தெரிகிறது.

 

5)   நெருப்புடா…

நடுவில் இடம் பெறும் வசனங்களை ரஜினிகாந்த் எழுதியிருக்கிறார்.

பாடல் எழுதி பாடியிருப்பவர் : அருண்ராஜா காமராஜ்

kabali fire

நெருப்புடா நெருங்குடா பாப்போம்

நெருங்குனா பொசுக்குற கூட்டம்!

அடிக்கிற அழிக்கிற எண்ணம்

முடியுமா நடக்குமா இன்னும்

அடக்குனா அடங்குற ஆளா நீ

இழுத்ததும் பிரியற நூலா நீ

தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ

விடியல விரும்பற கபாலீ…

என்று உணர்ச்சிமிக்க வரிகளுடன் தொடங்குகிறது.

இந்த பாடல் உருவாகும் முன்பே பட்டைய கிளப்பியது இந்த வார்த்தை. தற்போது இன்னும் எகிற வைத்துள்ளது.

கபாலி நெருங்குகிறவன் சாவை நெருங்குகிறான் என்பது போல அனைத்து வரிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இந்தப் பாடலை திரையரங்குகளில் கேட்க பல நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.  விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.

ஒரு நாள் கூத்து விமர்சனம்

ஒரு நாள் கூத்து விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தினேஷ், மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெத்துராஜ், பால சரவணன், சார்லி, கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் பலர்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : கோகுல்
படத்தொகுப்பு : விஜே சாபு ஜோசப்
இயக்கம் : நெல்சன் வெங்கடேசன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : கெனன்யா பிலிம்ஸ் ஜெ செல்வகுமார்

 

கதைக்களம்…

தினேஷ் மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டே காதலிக்கின்றனர். தன் குடும்பம் செட்டில் ஆனவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் தினேஷ். இவரது நண்பர் பால சரவணன்.

மியா ஜார்ஜ்க்கு நல்ல அந்தஸ்து உள்ள மாப்பிள்ளை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவரது வாத்தியார் தந்தை.

28 வயது ஆகியும் ரேடியோ ஜாக்கி என்பதால் ரித்விகாவுக்கு வரன் அமையவில்லை. இந்த தங்கை திருமணத்திற்காக காத்திருக்கிறார் அண்ணன் கருணாகரன். ரித்விகாவுடன் பணிபுரிகிறார் ரமேஷ் திலக்.

இவர்களின் வாழ்க்கையில் நடைபெறவுள்ள அந்த ஒரு நாள் கூத்து கல்யாணம் எப்படி இவர்களை இணைய வைக்கிறது என்பதே இப்படத்தின் கதை.

oru naal koothu movie stills 1

கதாபாத்திரங்கள்…

இதுநாள் வரை தாடி, கைதி, சீவாத தலை முடி என அழுக்காக வந்த, தினேஷ் இதில் படு ப்ரெஷ்ஷாக வந்திருக்கிறார். அதுவே ஒரு பெரிய சேஞ்ச்.

ஆக்ஷன் வரும் அளவுக்கு இவருக்கு காதல் வரவில்லை. படத்தில் உள்ள குடும்ப பாரம் காரணமோ?

மியா ஜார்ஜ்… லட்சுமிகரமான முகம். ஒவ்வொரு மாப்பிள்ளை முன் நிற்பதும் திருமணம் தள்ளிப்போவதும் என ஒரு பெண்ணின் நிஜமான உணர்வை பிரதிபலிக்கிறார்.

oru naal koothu mia

அப்பா என்ன சொன்னாரு? என மாப்பிள்ளை இவரிடம் கேட்கும்போது.. அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு… என்பதும் நான் வேனுமின்னா வந்து கூட்டிட்டு போ உள்ளிட்ட காட்சிகள் இவரது வலியை உணர்த்துவதாய் உள்ளது.

ரித்விகா.. இந்த ஆர்ஜே கேரக்டரிலும் அசத்தல். கோயிலை சுற்றும்போது மத்தவங்க என்ன நினைப்பாங்க? என்பதை விட நாம எப்படி பார்க்கிறோம் என்பது முக்கியம் என்று கூறும்போது கைதட்டலை அள்ளுகிறார்.

28 வயது ஆனதால் ப்ராக்டிக்கலாய் தப்பு செய்யும் காட்சியில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

oru naal koothu nivetha

நிவேதா பெத்துராஜ்…. இவருக்கு காதல் கல்யாணம் என இரண்டிலும் ஸ்பேஸ் கிடைத்திருப்பதால் ஸ்கோர் செய்துள்ளார்.

காதலனை விட்டு கொடுக்காமல் பேசுவதும், அப்பாவிடம் காதலனை விட சொல்லி பேசுவதும் இன்றைய பெண்களின் ஒட்டு மொத்த உருவமாய் தெரிகிறார்.

ரமேஷ் திலக்கின் கேரக்டர் நிஜ ஆர்ஜேவை காட்டுகிறது. இவரது முன் அனுபவமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் போல.

இவர்களுடன் கருணாகரன், பால சரவணன், சார்லி உள்ளிட்டோரின் டைமிங் சென்ஸ் காமெடிக்கு படத்திற்கு நிறையவே கைகொடுக்கிறது.

Oru-Naal-Koothu-Movie-Latest-Stills-18

தொழில்நுட்ப கலைஞர்கள்….

அழகே அடியே… பாடல் அருமை என்றால், எப்போ வருவாரோ… என்ற பாடல் அசத்தல். இரண்டும் மனதில் நிற்கிறது.

கோகுலின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. விஜே சாபு ஜோசப் இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்….

  • பாடல்கள் மிகப்பெரிய பலம். இதுபோன்ற மெலோடி பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு. மேள தாள பின்னணி இசையும் சில இடங்களில் ஓகே.
  • கண்களுக்கு விருந்தாகும் கலர்புல்லான ஒளிப்பதிவு.
  • மூன்று அழகான நாயகிகளின் அமைதியான நடிப்பு.

oru naal koothu dinesh bala saravanan

படத்தின் மைனஸ்…

  • ஒவ்வொரு கேரக்டரையும் அடிக்கடி காட்ட வேண்டுமென்பதால், டக் டக் என்று காட்சிகளை மாற்றும்போது கேரக்டர்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது.
  • சொல்லவேண்டிய விஷயத்தை கொஞ்சம் எளிதாக சொல்லியிருக்கலாம்.
  • ரித்விகாவின் கேரக்டர் மூலம் என்ன சொல்ல வருகிறார்? இயக்குனர் என்பது அவருக்கே வெளிச்சம். மாப்பிள்ளையிடம் கெஞ்சுவதும் பின்பு மறுப்பதும் ஏனோ?

Oru-Naal-Koothu-Movie-Stills-3

எந்த ஒரு கேரக்டரையும் மையப்படுத்தாமல், திருமண பந்தத்தையும் இன்றைய காதலையும் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன்.

எவரிடமும் இவர் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

லவ் மேரேஜ் என்றாலும் அரேஞ்ச் மேரேஜ் என்றாலும் எத்தனை விதமான பிரச்சினைகள் என்பதையும் அதை சொன்ன விதத்திலும் தேர்ச்சி பெறுகிறார் இயக்குனர்.

இன்றைய திருமண வரன் தேடலை யதார்த்தமாக காட்டியதற்கு பூங்கொத்து கொடுக்கலாம்.

திருமணம் என்ற இந்த ஒரு நாள் கூத்து… சிலருக்கு ஹாப்பி… சிலருக்கு ஆப்பு..!

தொடரி இசை பாடல்கள் விமர்சனம்

தொடரி இசை பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தொடரி.

பிரபு சாலமன் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது.  இவரின் ஆஸ்தான பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் 2 பாடல்களை பாடியுள்ளார்.

அனைத்து பாடல்களையும் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.

பாடல்கள் பற்றிய விவரம்…

 

1) ஊரெல்லாம் கேட்குதே…

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் மரியா ரோ

ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டுதான்…

குயில் எல்லாம் போகுதே தலையாட்டிதான்…

தென்றல் இசை ஆகுதே… பூக்கள் ஜதி சொல்லுதே..

என இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் நாயகியின்  பாடலுக்கு ஆடுவதாக கவிஞர் யுகபாரதி வர்ணித்துள்ளார்.

இந்த வரிகள் இப்பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது.

இதில் வரும் ஸ்ரேயா கோஷலின் குரல் இன்னும் இனிமையை கூட்டுகிறது.

இப்படி மெலோடியாக செல்லும் பாடல் இறுதியில் ஆட்டம் போடும் வகையில் வளர்கிறது. இடையில் மற்ற மொழி வரிகள் மற்றும் ஹிந்தி வரிகளும் வந்து நம்மை ஆட்டுவிக்கின்றன.

இப்பாடலை கேரள செண்ட மேளம் இசை கூடுதலாய் கவனிக்க வைக்கிறது.

 

2) அடடா இது என்ன?….

பாடியவர்கள் : ஹரிசரன், வந்தனா சீனிவாசன்

அடடா இது என்ன? இது என்ன எனக்கொன்னும் புரியலையே… புரியலையே

அடியே எனக்கென்ன எனக்கென்ன… நடந்துச்சு தெரியலையே தெரியலையே…

நிழலாக கிடந்தேன் நான்.. நிசமாக நிமிந்தேன் நான்…

உன்ன பாத்து, தொடுவானாய் உசந்தேன் நான்….

என ஹரிசரணின் ஹை பீச்சில் இப்பாடல் தொடங்குகிறது.

நாயகனும் நாயகியும் காதல் வயப்படும்போது உருவாகும் வரிகளால் இப்பாடலை பின்னியுள்ளார் யுகபாரதி. காதலர்களுக்கு பிடிக்கும்.

 

3) மனுஷனும்.. மனுஷனும்…

பாடியவர் : கானா பாலா

மனுஷனும் மனுஷனும் பேசின காலம் போயே போச்சு.. ஐ…ஐ…ஐ….

அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு…ஐ.ஐ…ஐ.ஐ…

ஊராங்கூட எப்போ பாரு சாட்டிங்கு…

பெத்து பேரு வச்சா ஆத்தா கூட பைட்டிங்கு….

போனு ஸ்மார்ட்டா ஆச்சு….

உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு…

என்ற வரிகளோடு ஆரம்பம் ஆகிறது. நவீன ஸ்மார்ட் போன்களால் நம் வாழ்க்கை வீணா போச்சு என கருத்துள்ள பாடலாய் இது அமைந்துள்ளது.

இது கானா பாலாவின் குரல் என்றாலும், இதுவரை கேட்காத ஒரு பாணியில் இப்பாடலை பாடியுள்ளார்.  ஆனால் பழைய சுவாரஸ்யம் இல்லை.

 

4) போன உசுரு வந்துருச்சி…

பாடியவர்கள் : ஹரிசரன், ஸ்ரேயா கோஷல்

போன உசுரு வந்துருச்சி… உன்ன தேடி திருப்பி தந்திருச்சி… என்று ஸ்ரேயா குரலில் ஆரம்பிக்கிறது இந்த மெலோடி பாடல்.

காதலனை மிஸ் செய்யும் பெண்களுக்கு ஏற்ற பாடலாய் இது அமைந்துள்ளது. அவனை இனிமே மிஸ் செய்யக்கூடாது என்பதால்.. இனிமேல்  ஒரு நாளும் இதுபோல் அமைய கூடாது என்று தன் வலியை பெண் பாடுவதாக உள்ளது.

இதில் ஹரிசரண் வாய்ஸ் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. இந்த மெலோடியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வதாய் உள்ளது.

 

5) லவ் இன் வீல்ஸ்….

பாடியவர் : சின்னப் பொண்ணு

 

மைனா, கும்கி, கயல் பட பாடல்களின் ஹிட் உயரத்தை இது தொடுமா? என்பதை படம் வரும்வரை பொறுத்துத்தான் பார்க்கனும்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா, ஆடுகளம் நரேன், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ரேஷ்மா பசுபுலேட்டி (புஷ்பா) மற்றும் பலர்.
இசை : சத்யா
ஒளிப்பதிவு : ஷக்தி
படத்தொகுப்பு : ஆனந்த லிங்ககுமார்
இயக்கம் : எழில்
பிஆர்ஓ : ரியாஸ்
தயாரிப்பாளர் : விஷ்ணு விஷால்.

கதைக்களம்…

ஊர் மக்களுக்காக எம்எல்ஏ ரோபா சங்கரிடம் சிபாரிசு செய்து வேலையை முடித்துக் கொடுப்பவர் ஹீரோ முருகன் (விஷ்ணு விஷால்).

ஒரு சூழ்நிலையில் இவரது நண்பர் சூரி எம்எல்ஏ நடத்தி வைத்த ஒரு இலவச திருமண சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.

அதுபோல் ஹீரோயின் நிக்கியின் போலீஸ் வேலைக்காகவும் எம்எல்ஏவிடம் சிபாரிசுக்கு செல்கிறார்.

 

Velanu

 

இதனிடையில் ஒரு விபத்தில் எம்எல்ஏ கோமா நிலைக்கு சென்றுவிட தன் நண்பனுக்கும், காதலிக்கும் எப்படி ஹீரோ உதவினார் என்பதை அதிரி புதிரி காமெடியுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எழில்.

கதாபாத்திரங்கள்…

படத்தில் காமெடி தான் எல்லாம். ஹீரோ விஷ்ணுவின் இது 10வது படம். ஒரு தயாரிப்பாளராக முதல்படம். இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

கலர்புல்லாக வந்து, நிறைவான பணியை செய்திருக்கிறார்.

இனி புரோட்டா சூரி இல்லை. புஷ்பா புருசனாக புரமோசன் வாங்கிவிட்டார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறு வலிக்க வைத்துவிட்டார்.

 

Vandhutta-Vellaikaaran-Movie

 

நிக்கி கல்ராணிக்கு சீரியஸ் கேரக்டர். காக்கி உடையிலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை. ஆக்ஷனிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஜாக்கெட் ஜானகிராமனாக வரும் எம்எல்ஏ ரோபா சங்கர் அசத்தல். 10வயசு பையனாக மாறியபின் செய்யும் அட்டகாசங்கள் குழந்தைகளை கவரும்.

வில்லன் ரவி மரியா என்றாலும், காமெடியிலும் பின்னி எடுத்திருக்கிறார். 500 கோடிக்காக அலைந்து ஜாக்கெட்டை கடத்தும் காட்சிகளில் சிரிப்பை கன்ட்ரோல் செய்ய முடியாது. இது சத்தியம்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ஆடுகளம் நரேன் என இவர்களும் நம் வயிறை பதம் பார்க்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சத்யாவின் இசையில் க்ளைமாக்ஸ் குத்து பாடல் மற்றும் ரீமிக்ஸ் சீயர்ஸ் கேர்ள்ஸ் பாடலும் செம. இந்த பாட்டு வரும்போது உங்கள் கால்களை சீட்டில் கட்டிப் போட்டு விடவும். சபாஷ் சத்யா சார்.

 

Velainnu-02

 

சத்யாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. ஆனந்த் லிங்க்குமார் எடிட்டிங் செய்யாமலே விட்டு இருக்கலாம். இன்னும் கொஞ்சம் சிரித்து இருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • நான் ஸ்டாப் காமெடி வசனங்கள்
  • க்ளைமாக்ஸ் குத்துபாடல்
  • கதாபாத்திரங்கள் தேர்வு
  • கலர்புல்லான கதைக்களம்

காமெடி வசனங்கள் சாம்பிள்…

  • புஷ்பா புருசனா நீங்க…?
  • அட பாவிங்களா? காஜா பையன் முதல் டிஜிபி வரை புஷ்பாவை தெரிஞ்சி வச்சிருங்காங்களே…
  • ரோபா சங்கரின் திரும்ப திரும்ப கதை சொல்லும் காமெடி
  • புஷ்பா மேட்டர்தானே முடிச்சிடும்வோம். அவ மேட்டர்தானே அப்புறம் என்ன?
  • ஜாக்கெட் எங்கே? ஜாக்கெட்டே காட்டு என வரும் ஜானகிராமன் காட்சிகள்.
  • இவ பொண்டாட்டிக்கு ஜாக்கெட் நல்லா தைச்சி கொடுக்கிறான்னு மினிஸ்டர் ஆக்க பாக்குறாறே மாமா…?
  • இப்போ பத்து வயசு. இவன் பால் குடிக்கிற வயசுக்கு போயிட்டா அவரு பொண்டாட்டி நிலைமைய நினைச்சி பாருய்யா?

 

velanu 3

காமெடி வசனம், கேரக்டர்கள் தேர்வு, இயக்கம் என இப்படி எழிலை பாராட்டிக் கொண்டே போகலாம். புஷ்பா புருசன், ஜாக்கெட் ஜானகிராமன் என கேரக்டர்களின் பெயர்களை கூட அழகாக தேர்வு செய்துள்ளார்.

ரசிகர்கள் நான் ஸ்டாப்பாக சிரித்து செல்லவேண்டும் என டார்கெட் வைத்து சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்… காமெடி பட்டாசுக்காரன்..!

இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, ராதாரவி, கருணாகரன், காளி வெங்கட் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : சிவக்குமார் விஜயன்
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்.

கதைக்களம்…

மூன்று பெண்களின் அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. ஒரு ஆண் மகனை சுற்றியுள்ள அம்மா, சகோதரி, காதலி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் வலி பற்றிய உலகம்தான் இந்த இறைவி.

இயக்கிய படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் குடிகார இயக்குனர் எஸ் ஜே சூர்யா. இவருக்கு மனைவியாக கமாலினி முகர்ஜி. ஒரு பெண் குழந்தை.

நேசித்து உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்ய முடியாத விஜய்சேதுபதி பின்னர் அஞ்சலியை மணக்கிறார்.

பெண்களை போற்றும் பாபி சிம்ஹா. பணத்திற்காக எதையும் துணிச்சலுடன் செய்பவர்.

காதலித்த கணவன் இறந்துவிட்டதால், ஆசைக்கு மேட்டர் வைத்துக் கொள்ளும் பூஜா தேவரியா.

இவர்கள் 6 பேரும் இணைந்த இக்கதையில் நடைபெறும் சின்ன சின்ன உணர்வுகளை காவியமாக படைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

iraivi team

கதாபாத்திரங்கள்…

இருக்கு ஆனா இல்லை… இதை எஸ் ஜே சூர்யா சொல்ல கேட்டு இருப்போம். அதிகப்படியான நடிப்பு திறமை இருக்கு. ஆனால் இதுவரை இல்லாதுபோல் நம்மிடம் நடித்து இருக்கிறார் மனிதர்.

அப்படியொரு ஒட்டுமொத்த நடிப்பை இதில் கொடுத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. க்ளைமாக்ஸ் காட்சியில் தண்ணி அடிக்காமல் இவர் குடிகாரனாய் பேசும் வசனக் காட்சி ஒன்றே போதும் இவரின் பெயரை சொல்லும்.

பாசமுள்ள அண்ணன், சிறந்த படைப்பாளி, அன்பான அப்பா, குடிகார கணவன் என எதிலும் குறை வைக்காமல் சிறப்பு சேர்த்துள்ளார். இனிமே நீங்க நடிச்சா மட்டும் போதும் சார்… வீ ஆர் வெயிட்டிங்…

iraivi kid

தன்னுடைய டைரக்டர் என்பதால் எக்ஸ்ட்ரா நடிப்பை கொடுத்திருப்பாரோ விஜய் சேதுபதி. இவரும் சூர்யாவுக்கு போட்டியாக வந்திருக்கிறார். ஆனால் அவரது கேரக்டர் அளவுக்கு இல்லை என்றாலும் தனக்கு கிடைத்த கேப்பில் தன் பங்கை செய்திருக்கிறார்.

அதிலும் இவர் நடனம் ஆடும்போதும் மட்டும், ரசிகர்கள் கைதட்டி ரசிப்பது இவருக்கே வெளிச்சம்.

பூஜாவிடம் காதலை சொல்லும்போதும், அவளை தேடி போகும்போதும், நண்பனுக்காக சிறை செல்லும்போது என தேடி தேடி வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார்.

Anjali

அஞ்சலியிடம் நடத்தையை சந்தேகப்பட்டு கேட்கும்போது தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.

முக்கால்வாசி படமே முடிந்துவிட்ட போதிலும், பைனல் டச் நான்தான் கொடுப்பேன் என்பது போல பாபி தன் கடமையை செய்திருக்கிறார்.

பெண்களுக்காக ஏங்குவதும், பெண்களை வெறுப்பதும் என இரண்டிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

எத்தனை ஹீரோயின் இருந்தாலும் அஞ்சாத ஏஞ்சல் நானிருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.

iravi pooja

தலதளபதி போன்று கணவனை எதிர்பார்க்கும் இவருக்கு தன் கணவன் அப்படி அமையவில்லையே என்ற தவிப்பை கண்களில் காட்டியிருக்கிறார்.

முதல் இரவில் ஏமாற்றம் வந்தபோது, அதை பெண்களிடம் விவாதிப்பது அருமை. தன் வாழ்க்கையில் கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் இவர் பெண்களுக்கு ரோல்மாடல்தான்.

எனக்கு கல்யாணமாச்சு. குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்னை காதலிக்கல சொல்லும்போது கணவனின் காதலும் கிடைக்கவில்லை என்பதை அருமையாக உணர்த்தியிருக்கிறார்.

Iraivi-anjali

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் கேட்கும்போது நான் அவன் கூட படுத்திருப்பேனா இல்லையா? நான் சொல்ல போறது இல்ல? நம்பிக்கை இருந்தா வாழு. நீ யோக்கியமா? என்று கேட்கும்போது நச்.

ஆமா நானும் காதலிச்சேன். அவன் கூட படுத்தா வெட்டிடுவியா? என ஒவ்வொன்றையும் சொல்லி கேள்வி கேட்கும்போது அப்ளாஸ் கொடுக்கலாம்.

ஹைடெக் வாழ்க்கை ஆசைப்பட்டு குடிகார கணவனிடம் குமுறும் பெண்ணாக கமாலினி முகர்ஜி. வேலைக்கு செல்லும் இடத்தில் வலிகளை மறைத்து வாழும் இன்னொரு வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

iraivi sj suriya

மற்றொரு திருமணத்திற்கு தயாராவதும் முடியாமல் தவிப்பதும், பெற்றோருக்காக சம்மதம் தெரிவிப்பதும் ஆண்களை சார்ந்து வாழும் பெண்களுக்கே உரிய இயல்பான நடிப்பு.

பூஜா தேவரியா… உயிருக்கு உயிராய் நேசித்த கணவனை இழந்தாலும் காசுக்காக எதையும் செய்யாமல் வாழும் ப்ராடிக்கல் லேடி.

செக்ஸ் மேட்டர் வேண்டும் என்பதை அழகாய் சொல்லி, கல்யாணம் செய்துக் கொள்ள வருபவனை உதறிவிட்டு அந்த கேரக்டராய் நிற்கிறார்.

இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், ராதாரவி, வடிவுக்கரசி, வைபவ் என ஒவ்வொருவரும் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர்.

Iraivi-Movie-Stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களை விட பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். உணர்வுகளுக்கு இவரும் உயிரூட்டியிருக்கிறார்.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ரயில், மழை காட்சிகள், கோயில் காட்சிகள், பாடல் என பேச வைத்திருக்கிறார்.

?????????????????????????????????????????????????????

படத்தின் ப்ளஸ்…

  • எஸ் ஜே சூர்யாவின் ஆணித்தரமான நடிப்பு
  • யாரும் கேரக்டர்களாக தெரியாத அளவுக்கு நேர்த்தியான இயக்கம்
  • உறங்கும் உணர்வுகளை தட்டி பார்க்கும் வசனங்கள்

உதாரணத்திற்கு…

  • சகிச்சிகிட்டு போயிருக்கலாம். மன்னிச்சிருக்கலாம். ஆனா, நான் பொம்பளை இல்லையே. ஆண்.. நெடில். பெண் குறில்…
  • எனக்கு கல்யாணமாச்சு. குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்னை காதலிக்கல…
  • உன் மக உன்னை அங்கிள் கூப்பிட்டா எனக்கு மருமக தானே….

நிறைய சொன்னால் கதை தெரிந்துவிடும் என்பதால் இதுபோதும்.

படத்தின் மைனஸ்…

  • தேவையில்லாத பீச் பாடல்
  • பெண்களை போற்றுங்கள். ஆண்களில் நல்லவர்களே இல்லையா சார்?
  • நீளமான சில காட்சிகள்

பெண்களின் வலியை நிறைய படங்களில் சொன்னவர் பாலசந்தர். அதை இன்றைய காலத்திற்கேற்ப சரியாக சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஒவ்வொரு காட்சியும் நகரும்போது பெண்களின் இதயத்தினுள் நுழைந்து கதை எழுதியிருப்பாரோ? என எண்ணத் தோன்றுகிறது.

iraivi director

அதே சமயம், ஆணாதிக்கம் என்ற ஆயுதத்தையும் எடுத்து, அதை அவர்களுக்கே பாடம் சொல்லும் கத்தியாக தீட்டியிருக்கிறார் இயக்குனர்.

மழையில் நனையலாமா? என ஆரம்பத்தில் கேட்டு, க்ளைமாக்ஸில் சுதந்திரமாய் நனையவிட்டு முடித்திருப்பது சூப்பர்.

மொத்தத்தில் இறைவி… மனிதி சொல்லும் நீதி.!

 

More Articles
Follows