தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டோரி…
படத்தின் ஆரம்பத்தில் டாஸ்மாக் திறக்க கூடாது என மூத்த குடிமக்கள் போராடுகின்றனர்.. அவர்கள் போராட என்ன காரணம் என்பது பிளாஷ்பேக்காக விவரிக்கிறது.
1970-களில் ஒரு குடிபோதை பிரச்சனையால் மூத்தகுடி என்ற என்ற கிராமம் கலவரம் ஆகிறது. இதனால் ஊர் மக்கள் அடித்துக் கொள்ள பல உயிர்களை இழக்க நேரிடுகிறது.
.
எனவே ஊர் பெரிய மனுசி KR விஜயா இந்த கிராமத்தில் இனி எவரும் குடிக்கக்கூடாது என கட்டளையிடுகிறார். அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிராமத்தினர் நடக்கின்றனர்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு அங்கு ஒரு சாராய பாக்டரியை திறக்க வேண்டும் என பிரச்சனை செய்கிறார் வில்லன் ராஜ்கபூர்.
ஆனால் இதற்கு எவரும் ஒத்து வராத நிலையில் சில சதித்திட்டங்களை செய்கிறார் ராஜ்கபூர். இதனை எடுத்து மீண்டும் பிரச்சனை எழுகிறது.
இந்த பிரச்சனைகளை அந்த கிராம மக்கள் எப்படி சந்தித்தார்கள்..? நாயகன் நாயகிக்கு என்ன வேலை? அவர்கள் கதையில் எப்படி சம்பந்தப்பட்டார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
தருண்கோபி ( வீரய்யன் )
பிரகாஷ் சந்திரா ( அய்யாதுரை )
அன்விஷா ( ஜோதி )
K.R. விஜயா ( மூக்கம்மா )
R.சுந்தர்ராஜன் ( நச்சாளி )
ராஜ்கபூர் ( செந்தூரப்பாண்டியன் )
யார் கண்ணன் ( பழையசோறு )
சிங்கம் புலி ( பஞ்சுபெட்டி )
நாயகன் பிரகாஷ் சந்திரா பிரகாசம் குறைவுதான். அப்பாவியாகவே முகத்தைக் காட்ட சொன்னார்களோ என்னவோ?
வீரையனாக தருன் கோபி. கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சித்து சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் செய்து இருக்கிறார். தான் ஆசைப்பட்ட காதலி கிடைக்காத ஏக்கத்தில் ஓவர் பாடி லாங்குவேஜ் காட்டி இருக்கிறார்.
நாயகி அன்விஷா.. இவர் தான் இந்த மூத்த குடி கிராமத்திற்கு பௌர்ணமியாக வந்து ஜொலிக்கிறார். அழகிலும் நடிப்பிலும் கவர்ந்திருக்கிறார்.
ஆர் சுந்தரராஜனிடம் 5000 ரூபாய் வாங்கிவிட்டு சிங்கப்புலி ஏமாற்றுவது கதைக்கு ஒட்டாத காமெடி.
கே ஆர் விஜயா அலட்டிக் கொள்ளாத நடிப்பு. பழைய வில்லத்தனத்தை மீண்டும் காட்ட முயற்சித்துள்ளார் ராஜ்கபூர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு – கந்தா ரவிச்சந்திரன்
இசை – J.R. முருகானந்தம்
பாடல்கள் – நந்தலாலா
எட்டிடிங் – வளர்பாண்டி
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
நடனம் – ரம்யா தேவி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – பிரகாஷ் சந்திரா
கதை, வசனம் – M.சரக்குட்டி
திரைக்கதை, இயக்கம் – ரவி பார்கவன்.
ரவி பார்க்கவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். குடியால் ஒரு குடும்பம் மட்டுமல்ல ஒரு ஊரே காலியாகும்.. எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
டாஸ்மாக்கை அனுமதித்தால் லைப் காலியாகி விடும் என்பதையும் கருத்தாக சொல்லி மக்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார்.
ஒரு பிரச்சனையை மக்கள் கையில் எடுத்து போராடினால் மட்டுமே மாற்றம் உண்டாகும். மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்பதை மூத்தகுடி மூலம் உணர்த்திருக்கிறார் இயக்குனர் ரவி பார்க்கவன்.
Moothakudi movie review and rating in tamil