மார்க் ஆண்டனி விமர்சனம் 3.5/5..; டைம் ட்ராவல் டான்கள்

மார்க் ஆண்டனி விமர்சனம் 3.5/5..; டைம் ட்ராவல் டான்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

1975 – 1995 இந்த 20 வருட இடைவெளியில் நடக்கும் டைம் ட்ராவல் டெலிபோன் கதை இது. இதில் கேங்ஸ்டர் அவரது மகன்கள் என கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர். கேங்ஸ்டர், ஃபேன்டஸி, காமெடி என எல்லா ஜானரில் மார்க் ஆண்டனி்.

கதைக்களம்…

1995.. செல்வராகவன் ஒரு டைம் ட்ராவல் டெலிபோனை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு மட்டும் செல்ல முடியும். கடந்த காலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் தான் போன் அழைக்க முடியும் உள்ளிட்ட 5 நிபந்தனைகள் உள்ளன.

1995 ஆண்டில்… விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் நண்பர்கள். எஸ் ஜே சூர்யா-வின் அப்பா எஸ் ஜே சூர்யா தான். இவர்கள் டான் பேஃமிலி. விஷால் ஒரு கார் மெக்கானிக். வன்முறையை விரும்பாதவர்.

தன் ஒரிஜினல் மகனை விட விஷால் மீது தான் அன்பை பொழிகிறார் சூர்யா.. உன் உயிருக்கு ஆபத்து. உன் தந்தையை கொன்ற சுனில் என்னையும் கொல்வான் உன்னையும் கொல்வான் என பாதுகாத்து வளர்த்து வருகிறார். தந்தை பெயரை கேட்டாலே கடுகடுப்பாகிறார் விஷால்.

இதனால் அவருக்கு காதலில் கூட சிக்கல் வருகிறது. ஒரு கட்டத்தில் குடிபோதையில் தனக்கு கிடைத்த டைம் டிராவல் டெலிபோனை வைத்து போன் செய்கிறார் விஷால். ஒரு கட்டத்தில் இதனை வைத்து தன் தந்தையுடன் பேச முயல்கிறார் விஷால்.

இப்படியாக செல்லும் போது தன் தந்தை நல்லவன் என்பதை அறிகிறார். அப்படி என்றால் தன் தந்தையை உயிருடன் மீட்க போராடுகிறார் விஷால்.

இதனையறிந்த அப்பா எஸ் ஜே சூர்யா தடுக்கிறார். உன் தந்தை வந்தால் எனக்கு பிரச்சனை என்கிறார். அப்படி என்றால் 1975-இல் என்ன நடந்தது? டைம் டிராவல் மூலம் பின்னோக்கி சென்றார்களா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த மார்க் ஆண்டனி படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

தாடி வைத்த டான் விஷால்.. மீசையில்லாத மெக்கானிக் விஷால்.. என இரண்டு கேரக்டர்களுக்கும் குரலை மாற்றி விஷால் நடித்திருப்பது வித்தியாசமான ஒன்று.. மெக்கானிக் விஷால் கொஞ்சம் பயந்த சுபாவம் என்பதால் அவரின் குரலில் கூட பயம் ஒளிந்திருப்பது பாராட்டுக்குரியது.

மார்க் மற்றும் ஆண்டனி இரண்டுமே விஷாலின் கேரக்டர் பெயர்கள். ஆனால் எஸ்ஜே. சூர்யாவின் ஜாக்கி மற்றும் பாண்டியன் என இரண்டு கேரக்டர்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம்.

இப்படத்தின் ஹீரோ விஷால்தான். ஆனால் அவரை ஓவர் டேக் செய்து அதகளம் செய்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. படத்தின் டைட்டில் கார்டில் அவருக்கு நடிப்பு அரக்கன் என்று பெயர் போடப்படுகிறது. அதற்கு கொஞ்சமும் குறை வைக்காமல் சூடேற்றி இருக்கிறார் சூர்யா.

இந்த சூர்யாவின் நடிப்பை ஓவர் டேக் செய்ய கடைசியில் மொட்டை பாஸாக வந்து தூள் கிளப்பிருக்கிறார் விஷால். அதிலும் அந்த அனகோண்டா காட்சி ரசிகர்களுக்கு மாஸ் ஸ்ட்ரீட். ஆனால் அதுபோன்ற ஆக்ஷன் காட்சியில் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற பாடல் தேவையா? அதை விடுத்து 1995இல் வந்த எத்தனையோ சூப்பர் ஹிட் ஆக்சன் பாடல்களை பயன்படுத்தி இருக்கலாம்.

டைம் ட்ராவல் டெலிபோனை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக செல்வராகவன். கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்.

நாயகிகள் அபிநயா & ரித்து வர்மா இருவருக்கும் ஸ்பேஸ் இல்லை ஆனாலும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் சுனில், ஒய் ஜி மகேந்திரன், ரெடின் கிங்சிலி ஆகியோரும் உண்டு. படத்தில் சூர்யா விஷால் ரெடின் உள்ளிட்டோர் வேகமாக கத்தி கொண்டு இருப்பது கொஞ்சம் எரிச்சல்தான்.. கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

டெக்னீசியன்கள்…

ஜிவி பிரகாஷ் இசையில் அதிருதா மற்றும் ஐ லவ் யூ டி என்ற இரண்டு பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. அப்பா மகன் விஷால்.. அப்பா மகன் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட நால்வருக்கும் தனித்தனி பிஜிஎம் போட்டு அசத்து இருக்கிறார்.

ஒரு பக்கம் திறமையான நடிகர்களின் நடிப்பு என்று போற்றப்பட்டாலும் 1975 – 1995 என இரண்டு கால கட்டங்களை கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர். இவர்களின் இருவரின் பங்களிப்பு மிகப்பெரியது.

1995-களில் வந்த ரஜினியின் ‘முத்து’ படத்தில் குதிரை மலையை தாண்டும். அப்போது நாம் கைதட்டி ரசித்திருப்போம். அதுபோலத்தான் இந்த படத்தில் எந்த லாஜிக்கையும் பார்க்காமல் கைத்தட்டி ரசித்தால் கண்டிப்பாக ரசிக்கலாம்.

1975ல்சில்க் ஸ்மிதா வருவது போல காட்சிகள் உள்ளன. ஆனால் அவர் சினிமாவுக்கு வந்தது 1979ஆம் ஆண்டில் தான். அந்த காட்சியில் எஸ்.ஜே சூர்யா போடும் ஆட்டத்திற்கு கண்டிப்பாக ஆண்டுகளை ஆராய்ச்சி செய்யாமல் சில்க் ஸ்மிதாவின் அழகை ஆராய்ச்சி செய்தால் லாஜிக் எல்லாம் மறந்து மேஜிக்காகும்.

அதுபோல 1995 காட்சிகளை காட்டும்போது வடிவேலு மற்றும் கோவை சரளாவின் டயலாக்குகள் இடம்பெறும். இந்த டயலாக் எப்படி வந்தது என்று நீங்கள் நினைத்தால் அந்த காட்சியை ரசிக்க முடியாது.

1990 காட்சிகளை காட்டும் போது அமராவதி அஜித் பெயர்கள் வருகிறது. இவர் பெரிய ஆளாக வருவார் என்ற டயலாக்குகள் தேவையில்லாத ஒன்று. காரணம் இந்த படத்தை பொருத்தவரை கடந்த காலத்திற்கு மட்டும் தான் செல்ல முடியும் என்கிறார்கள் அப்படி இருக்கும் போது எதிர்காலத்தை கணிப்பதாக வந்த டயலாக் தேவையற்றது.

படத்தின் பிளஸ்.. எஸ் ஜே சூர்யாவும் அவரது மகனும் பேசிக் கொள்ளும் டெலிபோன் காட்சிகளில் ரசிகர்களின் அலப்பறை.. முதல் நாளில் சில்க் ஸ்மிதா வந்து சூர்யாவின் திட்டங்களை முறியடிப்பது.. 2ம் நாள் நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் – மஞ்சுளா வந்து திட்டத்தை கெடுப்பது என காட்சிக்கு காட்சி செம ரகளையாக இருக்கிறது.

கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன், ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே, ஒப்பனையாளர் சக்தி ஆகியோரின் பங்களிப்பால் நம்மால் 1970 காலகட்டத்திற்கு செல்ல முடிகிறது.. சில நேரங்களில் ஓவர் மேக்கப்பும் தெரிகிறது.

அபிநந்தன் ராமனுஜத்தின் ஒளிப்பதிவு அருமை 1970 1990களின் காட்சியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். முக்கியமாக 1975ல் சென்னையில் ஓடிக்கொண்டிருந்த டபுள் டக்கர் பஸ் காட்டப்படும் போது இன்று உள்ள 2k கிட்ஸ்களுக்கு ஆச்சரியமான ஒன்றாகும். அதில் வைத்துள்ள சில்க் ஸ்மிதா காட்சியும் ஆக்ஷன் காட்சியும் ரசிகர்களுக்கு மரணமாஸ் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

வேலுகுட்டியின் படத்தொகுப்பு விறுவிறுப்பை கூட்டியுள்ளது. ஆனால் தேவையற்ற காட்சிகளை வெட்டி இருக்கலாம்.. கருப்பண்ணசாமி வந்து விஷால் சாமி ஆடுவது.. ஒய் ஜி மகேந்திரனின் ஓரினச்சேர்க்கை டயலாக்குகள் தேவையில்லாதது.

ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட ‘ரெட்ரோ’ பாடல்கள் செம. ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. சண்டைப் பயிற்சியாளர்கள் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்புராயன், மாபியா சசி ஆகியோரின் உழைப்பு வேறலெவல்.

இதுவரை A படங்களின் இயக்குனர் என அறியப்பட்ட ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கிறார். படத்தைப் பார்க்கும் ஒரு ரசிகர்கள் சிரிக்க வேண்டும் ரசிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவில் கொண்டு லாஜிக்கை மறந்து மேஜிக் செய்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஆக மார்க் ஆண்டனி… டைம் ட்ராவல் டான்கள்

Mark Antony movie review and rating in tamil

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு விமர்சனம்..; அதிகார ‘பந்தா’ட்டம்

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு விமர்சனம்..; அதிகார ‘பந்தா’ட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செ. ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’.

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா படங்களை இயக்கியவர் இவர்..

நாயகனாக ஷரத் மற்றும் நாயகியாக ஐரா நடிக்கின்றனர். அருவி புகழ் மதன், விஜய் முத்து, இளையா, ஆதேஷ்பாலா, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி அழகப்பன் & பலர்.

செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பு : பிரீத்தி சங்கர்

கதைக்களம்..

காலில் ஊனம்.. திக்குவாய் ஆனாலும் திறமையை நம்பும் ஃபுட்பால் கோச் ‘அருவி’ மதன்.

ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையான வீரர்களை ஊக்குவித்து மாநில அளவிலான போட்டிகளில் இடம்பெற முயற்சிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வில்லன் ரத்தினம் கும்பலுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் தொழில் முறையில் மோதல் உருவாகிறது.

எனவே இந்த விளையாட்டு வீரர்களின் முயற்சிகளை முறியடிக்க திட்டம் போடுகிறார் வில்லன்.

இந்த ஆட்டத்தில் ஜெயித்தது யார்.?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகனாக ஷரத்.. முகத்தில் தாடி மூக்கு கண்ணாடி என பாதி முகத்தை மறைத்து விடுகிறார். ஆனால் அதையும் மீறி கோபத்தை காட்டும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். ஹீரோயின் ஐரா சொல்வதைப் போல கொஞ்சமாவது படத்தில் சிரித்து இருக்கலாம்.

நாயகியாக அயிரா. படத்தில் அனைவருமே அழுக்காக வரும் போது இவர் மட்டுமே அழகாக வருகிறார். ‘தாக்கு தாக்கு தாக்குறா..’ பாடலுக்கு ஐரா போடும் ஆட்டத்தில் இளமை ததும்புகிறது. ஆனால் பாடல் வரிகளுக்கு பொருந்தாத ஓரிரு ஸ்டெப்புகள் உள்ளதை யாரும் கவனிக்கவில்லையா? படத்தில் இவருக்கு மொத்தமே 4 காஸ்டியூம்கள் தான் போல.

வில்லன் ரத்தினத்தின் அடியாளாக வருகிறார் ஆதேஷ் பாலா. பழைய கால வில்லன் ஸ்டைலில் சிரித்து சேசிங் செய்வது அசத்தல்.

வில்லனின் தம்பியாக நடிகர் இளையா. இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக இருப்பவர் இவரே. இவருக்கு நாயகியுடன் ஒரு கனவு டூயட் பாடலாவது வைத்திருக்கலாம். ‘பவுடர்’ படம் போல இதிலும் இளையாவுக்கு மேட்டர் சீன்தானா.??.

கால்பந்து பயிற்சியாளராக அருவி மதன். பெரும்பாலும் இவருக்கு பல படங்களில் போலீஸ் கேரக்டர் தான். இதில் திறமையான இளைஞர்களுக்காக இவரின் போராட்டம் கண்கலங்க வைக்கிறது. இவரது முடிவு எதிர்பாராத ஒன்று.

அதிகார ஆசாமியாக ரத்தினம் கேரக்டரில் நரேன். நாக்கை மடித்து கண்களை உருட்டி மீசையை முறுக்கி மிரட்டி இருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கஞ்சா கருப்பு. உணர்வுபூர்வமான நடிப்பில் கவர்கிறார்.

நடிகை சோனா ஒரே ஒரு காட்சியில் வந்து ரசிகர்களை சூடேற்றி செல்கிறார். அதிலும் காமநெடி வசனங்கள் கைதட்டல் அள்ளும்.

போலீஸ் அதிகாரியாக வில்லன் கைக்கூலியாக முத்துவின் நடிப்பு சிறப்பு. இவர்களுடன் கஜராஜ் & ராசி அழகப்பன் ஆகியோரும் உண்டு.

‘எனக்கும் புள்ள குட்டி இருக்காங்க..’ என்று வீரர்களுக்கு ஆதரவாக பேசுவதும்.. எனக்கும் புள்ள குட்டி இருக்காங்க..’ என்று வீரர்களுக்கு எதிராக ராசி அழகப்பன் பேசுவதும் ஒரே வார்த்தையில் இரண்டு பக்கமும் சாய்வது யதார்த்தத்தை காட்டுகிறது.

டெக்னீசியன்கள்…

வினோத்ராஜா ஒளிப்பதிவு செய்ய அலிமிர்ஸாக் இசையமைத்துள்ளார். இசையும் ஒளிப்பதிவும் நேர்த்தி. இடைவேளைக்கு முன்பு காட்டப்படும் பரமக்குடி பகுதி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அந்த கிராமத்து வெளிச்சத்தில் ஒளிப்பதிவு செய்தவர் பாராட்டுக்குரியவர் தான்.

அதே நேரம் இடைவேளை வரை இந்த சேசிங் காட்சிகள் மட்டுமே வருவது நம் பொறுமையை சோதிக்கிறது.

கால்பந்தாட்டம் என தலைப்பு வைத்திருந்தாலும் அவர்கள் ஆடும் களமே வேறு என்பதை காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.

வில்லனுக்கும் வீரர்களுக்குமான மோதல் சாதி மோதலை அடையாளப்படுத்தாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

அதிகார வர்க்கத்திற்கு எதிராக கால்பந்தை ஹரி உத்ரா உதைத்திருப்பது பாராட்டுக்குரியது.

no6 vaathiyaar kaalpandhatta kuzhu Movie review

பரிவர்த்தனை விமர்சனம்..; கணவனின் காதலியை கண்ட மனைவி

பரிவர்த்தனை விமர்சனம்..; கணவனின் காதலியை கண்ட மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி, மோஹித், சினேகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பரிவர்த்தனை’.

M S V புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார்.

வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி இந்த படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இதோ விமர்சனம்…

சுவாதி & ராஜேஸ்வரி இருவரும் சில வருடங்களுக்கு முன் கல்லூரித் தோழிகள்…

தற்போது இதில் ராஜேஸ்வரியின் கணவர் டாக்டர். ஆனால் கணவருக்கு தன்மீது துளியும் அன்பு இல்லை என்பதை உணர்கிறாள். தன் கணவன் பொக்கிஷமாக N என்ற எழுத்துள்ள ஒரு பரிசை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஒருநாள் மன உளைச்சலில் தவிக்கும் ராஜேஸ்வரி தன் கல்லூரி தோழி சுவாதியை பார்க்க கிராமத்திற்கு செல்கிறாள். அங்கு சில நாட்கள் தங்கியிருக்கிறார்.

தன் தோழியோ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தன் கணவர் வைத்திருக்கும் அதே பரிசு பொருளை போல தன் தோழி வீட்டிலும் காண்கிறார்.

அதன் பின்னர் தான் தன் தோழியும் தன் கணவரும் ஏற்கனவே காதலர்கள் என்பதை அறிகிறாள். அதன் பின்னர் இவள் என்ன செய்தாள்? என்பதுதான் ‘பரிவர்த்தனை’.

Artists :

Surjith – Naveen
Swathi – Pavithra
Rajeshwari – Nandhini
Mohith – Naveen (school stage)
Smega – Nandhini (school stage)
Bharathimohan – Pannaiyar
Divyasridhar – Pannaiyar wife
Rail Karthi – Murugesan (Naveen father)

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

நாயகன் சுர்ஜித்.. நாயகி சுவாதி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிடிக்காத வாழ்க்கையை வாழும் கடுப்பான கணவனாக சுர்ஜித் நடித்திருக்கிறார்.

சுவாதி – ராஜேஸ்வரி இருவரும் கொள்ளை அழகு. இருவரின் நடிப்பும் அவர்களின் அழகை தாண்டி ரசிக்க வைக்கிறது.

இதில் நடித்த பாரதிமோகன் மற்றும் இளம் வயது நாயகர்களாக நடித்த விக்ரம் ஆனந்த் மாஸ்டர் விதுன் இளவயது நாயகிகளாக சுமேகா, ஹாசினி & இவர்களுடன் ரயில் கார்த்தி ஆகியோரும் ஙநடித்துள்ளனர்.

கோகுலின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும் சிட்டியும் சிறப்பாக உள்ளன.

ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார். பாடல்களும் வரிகளும் சிறப்பு சேர்க்கின்றன. இவர் தான் மோகன் நடித்து வரும் ‘ஹரா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் பாடல் வரிகளை பாராட்டியே ஆக வேண்டும். காதலுக்காக.. காதல் முறிவுக்காக.. மீண்டும் மலரும் காதலுக்காகவும் என ரசித்து எழுதியிருக்கிறார்.

பாக்யராஜ் – அம்பிகா நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில்.. “என்ட காதலி நின்ட மனைவியாகலாம்.. பக்ஸே நின்ட மனைவி என்ட காதலியாக முடியாது என்ற வசனம் இருக்கும்.

அந்த வரிகளை தற்போது நவீன காதலுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குனர் மணிபாரதி.

உன் காதலன் என் கணவனாகி விட்டான். ஆனால் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்பதால் மனைவி எடுக்க முடிவு வித்தியாசமான ஒன்றுதான்..

பிடிக்காத வாழ்க்கையை பலர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சிலர் மட்டுமே விவகாரத்து கேட்டு கோர்ட்டில் வரிசையாக நிற்கின்றனர். இந்த மனமாற்றத்தை தைரியமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

தன் முன்னாள் காதலன் ஊரை விட்டு சென்று விட்டதால் காதலியால் தேட முடியவில்லை. ஆனால் காதலி இருக்கும் இடம் தெரிந்தவர் அவரை தேடி கிராமத்திற்கு வந்திருக்கலாமே என்று கேள்வி எழுகிறது. அதற்கான சரியான விளக்கம் படத்தில் கொடுக்கப்படவில்லை. வசனங்களாக அமைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் இல்லை என்பது வருத்தம்.

“வாழ்க்கை ஒருமுறை அதை பிடித்தவர்களுடன் வாழ்வது மட்டுமே வாழ்க்கை” என்பதை ஆணித்தரமாக அடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

Parivarthanai movie review

Technicians :

Production, Story, Dialogue – Pori. SenthiVel
Screen play, Direction : S. ManiBharathi.
DOP : K. Gokul.
Music : Rishaanth Arwin.
Editing : Rolex.
Co Director : Elamaaran.
Lyrics : Vjp Ragupathi.
Choreography : Dhina.
Pro : Manavai Bhuvan.

கெழப்பய விமர்சனம்.; உண்மைக்கு உடல் தடையில்லை

கெழப்பய விமர்சனம்.; உண்மைக்கு உடல் தடையில்லை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்கம்: யாழ் குணசேகரன்

நடிகர்: கதிரேச குமார்,

இசை: கெபி

ஒளிப்பதிவு: அஜித்குமார்

எடிட்டர்: ராஜேஷ்

கதைக்களம்..

கிராமத்தில் ஒரு பெரியவர் ஒத்தை அடி பாதை ஒன்றில் சைக்கிள் ஓட்டி செல்கிறார். அவரைப் பின் தொடர்ந்து ஒரு கார் வந்து கொண்டே இருக்கிறது. வெகுநேரமாக காரில் உள்ளவர்கள் ஹாரன் அடித்தும் வழிவிட மறுக்கிறார் பெரியவர்.

அவர்கள் காரை விட்டு இறங்கி வந்து பெரியவரை வழிவிடச் சொல்லியும் அவர் வீம்புக்காகவே சைக்கிளை வைத்து வழி மறுக்கிறார். எனவே காரில் உள்ள சிலர் வந்து பெரியவரை அடிக்கின்றனர். ஆனாலும் அவர் வழிவிடவே முடியாது என்ற மனநிலையில் இருக்கிறார்

சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமத்தினர் அங்கு ஒன்று கூடுகின்றனர். காவல்துறையும் இந்த பிரச்சனைக்காக அங்கே வருகிறது. பெரியவர் வழிவிட மறுக்க என்ன காரணம்? காரில் உள்ளவர்களுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என்பதுதான் படத்தில் மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்..

கதையின் நாயகனாக நடித்துள்ள கதிரேசகுமார் மிக இயல்பாக நடித்துள்ளார். பலமான அடிகளை வாங்கியம்போதும் வழி விடாமல் அவர் வீம்பு பிடிப்பதை பார்க்கும் போது அவரின் மன உறுதி கண்களில் தெரிகிறது.

இவருடன் கிருஷ்ணகுமார், விஜயராணா தீரன், KN ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்த்ராஜ் ஆகியோர் உண்டு.

வழியில் இத்தனை பிரச்சனை நடந்தும் பெரியவர் வழிவிட மறுக்கவே அடிதடி மோதல் ஏற்படுகிறது. அப்போதே நம்மால் காருக்குள் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அதை இயக்குனர் வெளிப்படுத்தினாலும் விளக்கமாக சொல்லவில்லை. அதற்கான காட்சிகளும் பெரிதாக இல்லை.

தெனாலிராமன் கதையை பெரியவர் சொல்லும் போது அதற்கான விளக்கம் புரிகிறது. பலவீனமாக இருக்கும் ஒருவன் உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் விவேக யுக்த்தியை கையாள வேண்டும் என்பதை நாசூக்காக சொல்லி இருக்கிறார் இயக்குனர் யாழ் குணசேகரன்.

இடைவேளை வரை ஒத்தையடி பாதை காட்சிகளே திரும்பத் திரும்ப காட்டப்பட்டாலும் ஏன்? என்ன நடக்கிறது? என்பதை அறிய நம்மை இருக்கையில் அமர வைத்துள்ளார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சியில் அதற்கான விளக்கத்தை அவர் இன்னும் சிறப்பாக அழுத்தமாக சொல்லி இருந்தால் இந்த கெழப்பய இன்னும் அதிகமாகவே பேசப்பட்டு இருப்பார்.

படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சின்ன பட்ஜெட் படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறது. ஆனாலும் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் அதிகமாகவே ரசித்திருக்கலாம்.

ஆக.. உண்மையை சொல்ல நேர்மையாக வாழ வயது தடை இல்லை உடல் தடையில்லை என்பதை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Kezhappaya movie review

அங்காரகன் விமர்சனம் 2/5.. காட்டு பங்களாவில் காவல் பந்தா

அங்காரகன் விமர்சனம் 2/5.. காட்டு பங்களாவில் காவல் பந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஸ்ரீபதி, சத்யரஜ், நியா, அங்காடி தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத்
இசை : கு.கார்த்திக்
ஒளிப்பதிவு : மோகன் டச்சு
இயக்கம் : மோகன் டச்சு
தயாரிப்பு : ஸ்ரீபதி

கதைக்களம்…

காட்டுப் பகுதியில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் சில விருந்தினர்கள் தங்கியுள்ளனர். அங்கு இருக்கும் ராணி பங்களாவில் ஏதோ மர்மம் இருப்பதாக ஊர் மக்கள் நம்புகின்றனர்.

இந்த வேளையில் புதிதாக வேலைக்கு வரும் மேனேஜர் அந்த ராணி பங்களாவில் விருந்து வைக்கிறார். ஒரு கட்டத்தில் திடீரென இரண்டு பெண்கள் மாயமாகின்றனர்.

இதனை விசாரிக்க கட்டப்பா கெட்டபில் வருகிறார் போலீஸ் சத்யராஜ்.. இரண்டு பெண்கள் காணாமல் போனதன் மர்மம் என்ன? ரிசார்ட்டில் ராணி பங்களாவின் மர்மம் என்ன.? இந்த படத்தின் தலைப்பு அங்காகரன் யாரை குறிப்பிடுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

நாயகன் ஸ்ரீபதி புதுமுகம் என்றாலும் தன்னால் முடிந்த வரை கதைக்கு உதவ முயன்றிருக்கிறார். சில நேரம் கொஞ்சம் எரிச்சலும் ஊட்டும் கதாபாத்திரமாகவே தெரிகிறது.

கட்டப்பா கெட்டப்பில் சத்யராஜ்.. ஒரு சிறந்த நடிகருக்கு நல்ல கேரக்டர் கொடுத்து கதையை நிலை நிறுத்தி இருக்கலாம். ஆனால் ஏனோ தானோ என்று அவரது கேரக்டர் வந்து போகிறது..

என்னப்பா சத்யராஜை காணவில்லையே என்று ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்திருக்கும் போது திடீரென கிளைமாக்ஸ்சில் வந்து திருப்புமுனை ஏற்படுத்துகிறார்.

கிளை கதைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டாலும் அதனை சொல்லும் விதத்தில் சுவாரஸ்யம் இல்லை. முக்கியமாக போலீஸ் விசாரணையில் கேரக்டர்களை விசாரிக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. ஆனால் அதில் எங்கேயுமே சுவாரசியம் இல்லை என்பது தான் மிகப்பெரிய குறை.

விசாரணை போதும்ப்பா என்கிற மனநிலையே நமக்கு வருகிறது.

நாயகியாக நியாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் மட்டுமே.. அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோர் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

கருந்தேள் ராஜேஷின் கதைக்கு நாயகன் ஸ்ரீபதி திரைக்கதை எழுத, மோகன் டச்சு ஒளிப்பதிவு செய்து அவரே இயக்கியிருக்கிறார்.

ராணி பங்களா & அங்காரகனின் பின்னணியையும் இன்னும் கூட அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

போலீஸ் அதிகாரி சத்யராஜின் பின்னணி என்ன என்பதை சொல்லும் விதத்தில் மட்டுமே இயக்குனர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

ஆக அங்காரகன்.. காட்டு பங்களாவில் காவல் பந்தா

Angaragan movie review and rating in tamil

ஸ்ட்ரைக்கர் விமர்சனம் 1.5/5… ஸ்லீப்பர்

ஸ்ட்ரைக்கர் விமர்சனம் 1.5/5… ஸ்லீப்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயா சதீஷ் குமார்..

கார் மெக்கானிக் வேலை பார்க்கிறார் நாயகன் ஜஸ்டின் விஜய். ஒரு நாள் இவர் கார் வேலை பார்க்கும் போது பிரேக்பை மட்டும் சரி செய்யாமல் விட்டு விடுகிறார்.

அந்த சூழ்நிலையில் கஸ்டமர் காரை டெலிவரி எடுத்து செல்கிறார். அந்த காரை பின் தொடர்ந்து நாயகன் செல்லும்போது அந்த கார் விபத்தில் சிதறுகிறது. இப்படியாக கதை தொடர்கிறது..

கதைக்களம்…

நாயகன் ஜஸ்டின் ஒரு கட்டத்தில் அமானுஷ்ய விஷயங்களை அறிந்து கொள்ள நினைக்கிறார். அதன்படி இது தொடர்பான சந்தேகங்களை அமானுஷ்ய ஆசிரியர் கஸ்தூரியிடம் கேட்டு பயிற்சி பெறுகிறார்.

அப்போது வித்யா பிரதீப் உடன் ஜஸ்டினுக்கு நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இவருக்கு பேயை விரட்ட வரும்படி ஒரு புதிய ஆர்டர் வருகிறது. அந்த பங்களாவிற்கு சென்ற பின் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் ஜஸ்டின் விஜய்..

அங்கு என்ன நடந்தது ? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்.. & டெக்னீசியன்கள்…

கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.்இவருக்கும் வித்யா பிரதீப்புக்கும் கெமிஸ்ட்ரி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இவர்களுக்குள் உள்ள பாடலும் ரசிக்க வைக்கிறது.

நாயகன் ஜஸ்டின் விஜய் புதிய முகம் என்பதால் கொஞ்சம் மெனக்கெட்டு நடிப்பை கொடுத்திருக்கலாம்.. இவரும் வித்யா பிரதீப்பும் தோன்றும் காட்சிகள் நீண்டு கொண்டே இருப்பதால் நமக்கு போர் அடிக்கிறது.

ஒரே பங்களாவுக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் அவர்கள் குழம்பி நம்மையும் குழப்பி உள்ளனர்.

இயக்கம்: எஸ் ஏ பிரபு
ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி
இசை: விஜய் சித்தார்த்

ஓஜா போர்டு வைத்து இவர்கள் ஆவியுடன் பேசும் காட்சிகளில் எந்த புதுமையும் இல்லை.. எனவே சுவாரசியமும் இல்லை.

எத்தனையோ பேய் படங்களை நாமும் பார்க்கிறோம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களும் பார்க்கிறார்கள்.. கொஞ்சமாவது ரசிகர்களுக்கு கலகலப்பு ஊட்டி புதுமையை கொடுத்திருந்தால் ரசித்திருக்கலாம்.

ஆக இந்த ஸ்ட்ரைக்கர்… ஸ்லீப்பர்..

Striker movie review and rating in tamil

More Articles
Follows