தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
தன்னுடைய சிறு வயதில் தன் பள்ளித் தோழி நந்தினி (நாயகி ப்ரியாவை) தொலைத்து விடுகிறார் நாயகன் எஸ் ஜே சூர்யா. (ராஜகுமாரன்).
அவள் கடத்தப்பட்டு விடுகிறார் என்பதை அறியும் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதற்காக ஒரு மாத்திரையை அவர் தினமும் எடுத்துக் கொள்கிறார்.
வளர்ந்து பெரியவன் ஆன பிறகு ஜவுளிக்கடையில் மாடலுக்கு வைக்கப்படும் பொம்மைகள் செய்யும் ஃபேக்டரியில் ஓவியராக பணிபுரிகிறார் எஸ் ஜே சூர்யா.
சில தினங்களில் மாத்திரை சாப்பிடாத அவருக்கு திடீரென கண்முன்னே ஒரு பொம்மையாக வந்து செல்கிறார் தொலைந்து போன நந்தினியான பிரியா.
ஒரு நாள் மாத்திரை சாப்பிட்டால் அவள் தன் கனவில் பொம்மையாக வருவதை நிறுத்தி விடுகிறார். மாத்திரை சாப்பிடாத அன்று மட்டும் பொம்மை உருவில் நாயகி வந்து செல்கிறார்.
இந்த சூழ்நிலையில் பிரியா அனுமதியுடன் தன் சொந்த ஊருக்கு செல்கிறார் எஸ் ஜே சூர்யா. திரும்பி வரும் போது அவருடைய சூப்பர்வைசர் அந்த பொம்மையை ஒரு கடைக்கு விற்று விடுகிறார் ய.
எந்த கடைக்கு விற்றீர்கள் என சூரியா கேட்கும்போது பொம்மையை கேவலமாக பேசி விடுகிறார் சூப்பர்வைசர.
எனவே ஆத்திரத்தில் அவரை கொன்று விடுகிறார் சூர்யா. அதன் பின்னர் சென்னையில் தெரு தெருவாக கடை கடையாக அலைந்து பொம்மை என்ற ப்ரியாவை கண்டுபிடித்து வருகிறார்.
அந்த ஜவுளி கடையில் வேலைக்கும் சேர்ந்து விடுகிறார். என்னால் இங்கு இருக்க முடியாது என்னை உன் வீட்டிற்கு கொண்டு போ என்கிறார் பிரியா.
அந்த ஜவுளிக்கடை பொம்மையை விலைக்கு கேட்கிறார் எஸ் ஜே சூர்யா. அந்த கடைக்காரர் தர மறுக்கிறார்.
அதன் பிறகு என்ன ஆனது? போலீஸ் விசாரணையில் எஸ் ஜே சூர்யா கண்டுபிடிக்கப்பட்டாரா? பொம்மையை வீட்டுக்கு கொண்டு சென்றாரா? கனவில் வந்த தோழியின் காதல் கைகூடியதா? என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்கள்…
எஸ் ஜே சூர்யாவ தன் ராஜகுமாரனை நன்றாகவே பிரதிபலிக்கிறார்.
பொம்மைக்காக ஏங்குவதும் ஆத்திரத்தில் கொலை செய்வதும் மற்றொரு நாயகி சாந்திணியுடன் பேசுவதும் என கலகலப்பு செய்கிறார்.
பொம்மை எது? பிரியா பவானி சங்கர் எது? என்பது தெரியாது போல அச்சு அசலாக பொம்மையாகவே வருகிறார் பிரியா.
பொம்மைக்கு ப்ரியாவுக்கும் பொருந்துமாறு காஸ்டியூம் டிசைன் செய்த வரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அப்படி ஒரு பொருத்தம். பிரியாவும் அழகு பொம்மையாக அழகு சிலையாக நம் மனதில் நிறைகிறார்.
சூர்யாவின் நண்பராக வரும் டவுட் செந்தில் கொஞ்சம் கலகலப்புக்கும் உதவியுள்ளார்.
சூப்பர்வைசர் கேரக்டர் மற்றும் போலீஸ் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் பலிச்சிடுகின்றனர்.
டெக்னீஷியன்கள்…
மதன் கார்க்கியின் வரிகளில் முத்தம் முதல் முத்தம் என்ற பாடல் ரசிக்கு வைக்கிறது.. 43 வகையான முத்தத்தை அதில் குறிப்பிடுகிறார்.. ஆனால் பாடல் காட்சியில் ஒரு முத்தம் கூட இடம்பெறவில்லை என்பது பெரும் சோகம்.
யுவனின் பாடலும் பின்னணி செய்யும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. என்னதான் விதவிதமான புதிய புதிய டியூன்கள் போட்டாலும் இளையராஜா இசையில் உருவான கமலின் ‘உல்லாச பறவைகள்’ படத்தில் இடம்பெற்ற ‘தெய்வீக ராகம்…’ என்ற பாடல் மட்டும் தான் நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் முணுமுணுக்க வைக்கிறது.
மொழி பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தை வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் பிரியா – சூர்யா உதட்டு முத்தக்காட்சி சரியாக பொருந்தவில்லையே.
இதில் முத்த காட்சி தான் மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
படத்தின் ஒளிப்பதிவு படத்தொகுப்பம் நேர்த்தியாக உள்ளது.
வித்தியாசமான கற்பனை கதை தான் என்றாலும் மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் ஒரு கற்பனை கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.
ஆக.. பொம்மை.. கற்பனை காதல்
bommai movie review and rating in tamil