தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் அசோக் செல்வன். எதிலும் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும்.. சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர். தன் வீட்டு மெத்தையில் படுத்தால் மட்டுமே உறக்கம் வரும். வேறு எங்கேயும் தங்க கூட யோசிப்பவர்.
வீட்டில் வளர்க்கப்படும் நாயை கூட தொட மாட்டார். இப்படியாக வாழும் இவருக்கு திருமணம் செய்ய நினைக்கின்றனர் ப
பெற்றோர். பெண்ணும் பார்த்தாச்சு.
நாளை காலை திருமணம். இன்று இரவு ரிசப்ஷனும் நடக்கிறது. அப்போது வருங்கால மனைவியின் காதல் விவகாரம் தெரிய வருகிறது. இதனால் அசோக்கின் திருமணம் நின்று விடுகிறது.
விரக்தியில் இருக்கும் அசோக் செல்வன் வேறு வழி இல்லாமல் டாக்டரிடம் கவுன்சிலிங் செல்கிறார்.
அசோக் செல்வனின் மனநிலையை மாற்ற டாக்டர் அபிராமி தான் எழுதிய 2 புத்தகத்தை கொடுக்கிறார்.
அதில் இரண்டு காதல் கதைகள் இருக்கிறது.. இரண்டு கதைகளுமே நிறைவு பெறாத நிலையில் இருக்கிறது. இதனால் கடுப்பான அசோக் செல்வன் டாக்டரிடம் சண்டை போட்டு கதையின் முடிவை கேட்கிறார்.
இது கதையல்ல.. இது இருவரின் வாழ்வில் நடந்த சம்பவம்.. அவர்களை நேரில் சந்தித்து நீ அந்தக் கதையின் முடிவை தெரிந்துக் கொள் என சொல்கிறார்.
அதன்படி கொல்கத்தா மற்றும் சண்டிகர் செல்கிறார். அந்த நபர்களை சந்தித்தாரா.? அதன் பிறகு அசோக் செல்வன் வாழ்வில் என்ன மாற்றம் நடந்தது? அவர்கள் யார்? என்பத படத்தின் மீதிக் கதை.
கேரக்டர்கள்…
ஒரு ஹீரோ ஐந்து ஹீரோயின்கள் என ஒரு அழகான காதல் காவியத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.
சாக்லேட் பாய்… துடிப்பான இளைஞன்.. கம்பீரமான போலீஸ்… என அனைத்திலும் வெரைட்டி காட்டி அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன்.
கதைகளை படித்துவிட்டு கதை மாந்தர்களை தேடும் போது ரசிக்க வைக்கிறார்.. அதுபோல ஒரு கதைக்குள் அந்த கேரக்டராகவே அவர் பயணிப்பதும் சிறப்பான கற்பனை.
படத்தில் மூன்று நாயகிகள் முக்கியமானவர்கள். பயண தோழியாக வரும் ரித்து வர்மா ஜாலியான கேரக்டர்.
மென்மையான காதலியாக வந்து நம்மை சிலிர்க்க வைக்கிறார் ஷிவாத்மிகா. குண்டு விழிகளால் பேசி சுண்டி இழுக்கிறார். இனி இவருக்கு வாய்ப்புகள் குவியும்.
தன் துருதுறு நடிப்பால் அபர்ண பாலமுரளி அசத்தல். அப்பா பார்க்கும் பையன் வேண்டாம்.. நான் காதலித்து தான் திருமணம் செய்வேன் என அடம் பிடிக்கும் அபர்ணாவின் கேரக்டர் செம.
சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜீவாவும் சிறப்பு. கொஞ்சமே வந்தாலும் நடிகை அபிராமி, ஷிவதா, ஈஷா ரெப்பா ஆகியோர் அழகு. கேரக்டரை அழகாக செய்துள்ளனர்.
அழகம் பெருமாள், படவா கோபி, காளி வெங்கட், சௌந்தர்யா நஞ்சுண்டன் உட்பட பலரும் சூப்பர்.
டெக்னீஷியன்கள்…
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு கொல்கத்தா சண்டிகருக்கு நாம் ஒருமுறை சென்று வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.. அது போல் பனிமழை பொழியும் காட்சிகளை அவ்வளவு அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் கேமரா மேன் விது ஐயன்னா. இவரின் ஒளிப்பதிவு ஒரு விஷுவல் ட்ரீட் எனலாம்.
கோபி சுந்தர் இசையில் மென்மையான பாடல்கள் மனதை வருடும். தரண் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.
அழகான காதலிகளையும் அழகான காதலையும் காட்டி நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விட்டார் இயக்குனர் ரா கார்த்திக்.
மசாலா படத்திற்கு தேவையான காட்சிகள் என எதையும் வைக்காமல் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளது கூடுதல் சிறப்பு.
இரண்டாம் பாதியில் நீளத்தை கொஞ்சம் வெட்டி இருக்கலாம். ஆனாலும் எதிர்பாராத திருப்புமுனைகளை கொடுத்து நம் மனதை தேற்றி விட்டார் இயக்குனர்.
மற்றபடி.. நித்தம் ஒரு வானம்.. நித்தம் ஒரு வானவில்..
Nitham Oru Vaanam movie review and rating in tamil