நித்தம் ஒரு வானம் 4.25/5.; நித்தம் ஒரு வானவில்

நித்தம் ஒரு வானம் 4.25/5.; நித்தம் ஒரு வானவில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் அசோக் செல்வன். எதிலும் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும்.. சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர். தன் வீட்டு மெத்தையில் படுத்தால் மட்டுமே உறக்கம் வரும். வேறு எங்கேயும் தங்க கூட யோசிப்பவர்.

வீட்டில் வளர்க்கப்படும் நாயை கூட தொட மாட்டார். இப்படியாக வாழும் இவருக்கு திருமணம் செய்ய நினைக்கின்றனர் ப
பெற்றோர். பெண்ணும் பார்த்தாச்சு.

நாளை காலை திருமணம். இன்று இரவு ரிசப்ஷனும் நடக்கிறது. அப்போது வருங்கால மனைவியின் காதல் விவகாரம் தெரிய வருகிறது. இதனால் அசோக்கின் திருமணம் நின்று விடுகிறது.

விரக்தியில் இருக்கும் அசோக் செல்வன் வேறு வழி இல்லாமல் டாக்டரிடம் கவுன்சிலிங் செல்கிறார்.

அசோக் செல்வனின் மனநிலையை மாற்ற டாக்டர் அபிராமி தான் எழுதிய 2 புத்தகத்தை கொடுக்கிறார்.

அதில் இரண்டு காதல் கதைகள் இருக்கிறது.. இரண்டு கதைகளுமே நிறைவு பெறாத நிலையில் இருக்கிறது. இதனால் கடுப்பான அசோக் செல்வன் டாக்டரிடம் சண்டை போட்டு கதையின் முடிவை கேட்கிறார்.

இது கதையல்ல.. இது இருவரின் வாழ்வில் நடந்த சம்பவம்.. அவர்களை நேரில் சந்தித்து நீ அந்தக் கதையின் முடிவை தெரிந்துக் கொள் என சொல்கிறார்.

அதன்படி கொல்கத்தா மற்றும் சண்டிகர் செல்கிறார். அந்த நபர்களை சந்தித்தாரா.? அதன் பிறகு அசோக் செல்வன் வாழ்வில் என்ன மாற்றம் நடந்தது? அவர்கள் யார்? என்பத படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

ஒரு ஹீரோ ஐந்து ஹீரோயின்கள் என ஒரு அழகான காதல் காவியத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.

சாக்லேட் பாய்… துடிப்பான இளைஞன்.. கம்பீரமான போலீஸ்… என அனைத்திலும் வெரைட்டி காட்டி அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன்.

கதைகளை படித்துவிட்டு கதை மாந்தர்களை தேடும் போது ரசிக்க வைக்கிறார்.. அதுபோல ஒரு கதைக்குள் அந்த கேரக்டராகவே அவர் பயணிப்பதும் சிறப்பான கற்பனை.

படத்தில் மூன்று நாயகிகள் முக்கியமானவர்கள். பயண தோழியாக வரும் ரித்து வர்மா ஜாலியான கேரக்டர்.

மென்மையான காதலியாக வந்து நம்மை சிலிர்க்க வைக்கிறார் ஷிவாத்மிகா. குண்டு விழிகளால் பேசி சுண்டி இழுக்கிறார். இனி இவருக்கு வாய்ப்புகள் குவியும்.

தன் துருதுறு நடிப்பால் அபர்ண பாலமுரளி அசத்தல். அப்பா பார்க்கும் பையன் வேண்டாம்.. நான் காதலித்து தான் திருமணம் செய்வேன் என அடம் பிடிக்கும் அபர்ணாவின் கேரக்டர் செம.

சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜீவாவும் சிறப்பு. கொஞ்சமே வந்தாலும் நடிகை அபிராமி, ஷிவதா, ஈஷா ரெப்பா ஆகியோர் அழகு. கேரக்டரை அழகாக செய்துள்ளனர்.

அழகம் பெருமாள், படவா கோபி, காளி வெங்கட், சௌந்தர்யா நஞ்சுண்டன் உட்பட பலரும் சூப்பர்.

டெக்னீஷியன்கள்…

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு கொல்கத்தா சண்டிகருக்கு நாம் ஒருமுறை சென்று வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.. அது போல் பனிமழை பொழியும் காட்சிகளை அவ்வளவு அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் கேமரா மேன் விது ஐயன்னா. இவரின் ஒளிப்பதிவு ஒரு விஷுவல் ட்ரீட் எனலாம்.

கோபி சுந்தர் இசையில் மென்மையான பாடல்கள் மனதை வருடும். தரண் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

அழகான காதலிகளையும் அழகான காதலையும் காட்டி நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விட்டார் இயக்குனர் ரா கார்த்திக்.

மசாலா படத்திற்கு தேவையான காட்சிகள் என எதையும் வைக்காமல் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளது கூடுதல் சிறப்பு.

இரண்டாம் பாதியில் நீளத்தை கொஞ்சம் வெட்டி இருக்கலாம். ஆனாலும் எதிர்பாராத திருப்புமுனைகளை கொடுத்து நம் மனதை தேற்றி விட்டார் இயக்குனர்.

மற்றபடி.. நித்தம் ஒரு வானம்.. நித்தம் ஒரு வானவில்..

Nitham Oru Vaanam movie review and rating in tamil

அசோக் நடித்த 4554 விமர்சனம்.; டிரைவரின் சவாரியும் சவால்களும்..

அசோக் நடித்த 4554 விமர்சனம்.; டிரைவரின் சவாரியும் சவால்களும்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

டாக்ஸி டிரைவரின் வாழ்வியலையும் அவர்களின் போராட்டத்தையும் சொல்லும் 4554.

அறிமுக இயக்குனர் கர்ணன் மாரியப்பன் இயக்கத்தில் அசோக், ஷீலா, ஜாக்குவார் தங்கம், பெஞ்சமின், கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

முருகா படத்தில் நடித்த அசோக் இதில் நாயகன்.

இவர் ஜாக்குவார் தங்கம் வைத்திருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார். இவரது சொந்த வண்டியை அந்த நிறுவனத்திற்கு ஓட்டுகிறார்.

அசோக்கும் நாயகி ஷீலா நாயரும் காதலிக்கின்றனர். பெற்றோர் சம்மதத்துடன் நாளை மறுநாள் திருமணம்.. நாளை திருமண நிச்சயதார்த்தம் என்று இருக்கும் நிலையில் இவருக்கு திடீரென பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டி சவாரி வருகிறது..

முதலில் மறுக்கும் அசோக் வேறு வழியில்லாமல் சவாரிக்கு செல்கிறார்.

அந்த பயணத்தில் நான்கு பயணிகள் பயணிக்கின்றனர். (அவர்கள் துபாய் செல்ல சென்னை ஏர்போர்ட் செல்கின்றனர்) அதில் கோதண்டம் டிரைவர் அசோக்கை வெறுப்பேற்றிக் கொண்டே வருகிறார். பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு அவர்களை இறக்கிவிட்டு தன் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வேகமாக திரும்பி வருகிறார் அசோக்.

அப்போதுதான் கோதண்டம் தவறவிட்ட பாஸ்போர்ட் இவரது காரில் கிடப்பதை பார்க்கிறார். இந்த தகவலை கோதண்டத்திற்கு அசோக் தெரியப்படுத்த.. “தம்பி என்னுடைய வாழ்க்கையே அதில் தான் இருக்கிறது. நான் வெளிநாடு செல்ல வேண்டும்.. தயவு செய்து வந்து கொடுத்து விடு” என சொல்கிறார் கோதண்டம்.

தன்னை வெறுப்பேற்றிய கோதண்டத்தின் வாழ்வை பார்ப்பதா.? தன் காதல் திருமணத்தை பார்ப்பதா? என தவிக்கிறார்.

என்ன செய்தார் அசோக்.? என்பதே கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

நாயகன் அசோக் – நாயகி ஷீலா நாயர். இருவரும் கொடுத்த வேலையை செய்ய தங்களால் முடிந்த வரை முயற்சித்துள்ளனர்.

இவர்களது ரொமான்ஸ் பெரிதாக இல்லை.. காதலில் நெருக்கம் கூடியிருந்தால் நமக்கும் க்ளைமாக்ஸில் அடுத்தது என்ன நடக்குமோ? என்று எதிர்பார்ப்பு இருந்திருக்கும். ஆனால் அது மிஸ்ஸிங்.

காரில் பயணிக்கும் சக பயணிகளாக காமெடி நடிகர்கள் பெஞ்சமின் கோதண்டம் உள்ளனர். காமெடி ரசிக்கும் படி இல்லை.

இயக்குனர் தன் குடும்பத்தில் உள்ளவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளை வைத்துள்ளார். அது தவறில்லை.

ஆனால் அவர்களிடம் அதற்கு ஏற்ப வேலையை வாங்கி இருக்கலாம். அவர்களும் ஏனோ தானோ என வசனம் பேசி செல்வதாகவே உள்ளது.

பாடல்கள் கவனம் பெறவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. படத்தின் டைட்டிலை அடிக்கடி காட்ட வேண்டும் என்பதற்காகவே.. கார் நம்பர் பிளட்டை காட்டிக் கொண்டே இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதுவும் அடிக்கடி ஒரே ஆங்கிளில் காட்டிக் கொண்டிருப்பது ஏனோ.? தெரியல.

கர்ணன் மாரியப்பன் என்போர் இயக்கியிருக்கிறார்.. இதுவரை காட்டப்படாத டாக்ஸி டிரைவரின் வாழ்க்கையையும் போராட்ட களத்தையும் காட்டி இருப்பது சிறப்பு.

முக்கியமாக உடன் பயணிப்பவர்கள் டிரைவரை வெறுப்பேற்றுவதாலும் அவர்கள் மனநிலையை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும் எத்தகைய விளைவுகளை சந்திப்போம் என்பதை காட்டி இருக்கின்றார்.

க்ளைமாக்ஸில் பேசப்படும் வசனங்களும் காட்டப்படும் காட்சிகளும் செயற்கை தனமாக உள்ளது. அதை இன்னும் உணர்வுப்பூர்வமாக காட்டிருந்தால் இந்த கார் பயணம் சிறப்பாக அமைந்திருக்கும்.

ஆக இந்த 4554…. ஒரு டிரைவரின் சவாரிகளையும் சவால்களையும் சொல்ல முயற்சிக்கிறது…

பனாரஸ் விமர்சனம் 3.5/5.; சேலையில் சிக்கிய சேவகன்

பனாரஸ் விமர்சனம் 3.5/5.; சேலையில் சிக்கிய சேவகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Zaid Khan, Sonal Monteiro, Sujay Shastry, Devaraj, Achyuth Kumar
Directed By : Jayatheertha
Music By : B. Ajaneesh Loknath
Produced By : Tilakraj Ballal, Muzammil Ahmed Khan

ஒன்லைன்…

எங்கும் காதல்.. என்றென்றும் காதல்… எப்போதும் காதல்…

கதைக்களம்…

அறிமுகங்கள்.. நாயகன் – ஜையீத் கான்..
நாயகி – சோனல் மோண்டோரியோ

நண்பர்களுக்குள் ஒரு சேலஞ்ச் (போட்டி) நடக்கிறது. அதன்படி நாயகியை ஒரு வாரத்திற்குள் தன் காதல் வலையில் விழ வைப்பேன் என சவால் விடுகிறார் நாயகன்.

அதன்படியே… டைம் ட்ராவல் கதைகளை சொல்லி மூன்றே நாட்களில் நாயகியின் படுக்கையறை வரை செல்கிறார். அப்போது விளையாட்டாக எடுக்கும் ஒரு செஃல்பியை நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அதை மற்றொரு நண்பர் சமூக வலைத்தளத்தில் பகிர நாயகிக்கு பிரச்சனை வருகிறது..

இதனால் எவரிடமும் சொல்லாமல் பனாரஸ் செல்கிறார். நாயகியை தேடி அங்கு செல்லும் நாயகன் காதலியை சந்தித்தாரா.? காதல் கைகூடியதா? என்பதே கதை.

இதனிடையில் நாயகன் டைம் லூப்பில் சிக்கி கொள்கிறார். அவர் அதிலிருந்து எப்படி மீண்டார்? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்….

நாயகன் ஜையீத் கான் அறிமுகம் என்றாலும் அசத்தல்.. செம ஸ்மார்ட்டாக வருகிறார்.. ரொமான்ஸில் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் ஓகே.

(ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. ஒரு சண்டைக் காட்சியில் தெறிக்கும் கடற்கரை மணலும்.. வில்லன் வாயில் இருந்து வரும் ரத்தமும்… கலந்த காட்சியை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர்.)

நாயகி சோனல் மோண்டோரியோ.. பான் இந்தியா படம் என்றாலும் சுடிதார் மட்டுமே வந்து ரசிகர்களை தன் அழகால் கவர்கிறார். “என்னய்யா படம் முழுவதும் இப்படியா? என நினைக்கும் போது ஒரு டூயட் காட்சியில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி சூடேற்றிவிட்டார்.

நாயகியின் சித்தப்பாவாக அச்யுத் குமார் மெச்சூரிட்டி ஆக்டிங். ( அண்மையில் வெளியான காந்தாரா படத்தில் வில்லனாகவும் மிரட்டி இருந்தார்)

நாயகியின் சித்தியாக நடித்தவரும் சிறப்பு. இவர்கள் (நாயகி & சித்தி) இருவருக்கும் ஒரே முக ஜாடை என்பதால் குடும்பம் பொருத்தம் செம.. என்னை ஏன் இப்படி அழகா படைச்ச ஆண்டவா? என இவர் சொல்லும் போதும் ரசிக்க வைக்கிறார்.

ரஜினி ரசிகராக வரும் சாம்பு என்ற சுஜய் சாஸ்திரி கவனிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் காமெடியாக பேசி தான் இறந்தவர்களை மட்டுமே போட்டோ எடுப்பதற்கான காரணத்தை சொல்லும் போது கலங்க வைக்கிறார்.

டெக்னீஷியன்கள்….

காதல் படங்கள் என்றாலே கண்களுக்கு குளிர்ச்சியான விஷயங்கள் வேண்டும்.. அதுவும் பனாரஸ் போன்ற இடத்தை இதுவரை யாரும் காட்டிடாத கோணத்தில் காட்டி இருக்கிற ஒளிப்பதிவாளர்.

பொதுவாகவே காசி வாரணாசி பனாரஸ் ஆகிய இடங்களை காட்டினால் கங்கை நதி.. அகோரிகள்.. மக்கள் கூட்டம்.. ஆகியவையே நம் கண்களில் தென்படும்.

ஆனால் இதில் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முறைகளையும் காட்டி இருப்பது கூடுதல் சிறப்பு. இவற்றுக்கு காரணமானவர் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி.

அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை கூடுதல் சிறப்பு.. “இலக்கண கவிதை எழுதிய அழகே…” என்ற பாடல் அழகு.

கே.எம்.பிரகாஷின் படத்தொகுப்பு சிறு தொய்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் காதல்.. மோதல்.. என படம் விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் டைம் லூப் என படத்தின் வேகத்தை குறைத்து விட்டது.

இதில் என்னதான் சொல்லப்போகிறார்கள்? என்ற குழப்பமான மனநிலையில் ரசிகர்கள்.

தமிழுக்கு ஏற்றபடி நிறைய லிப்சிங் காட்சிகள் உள்ளது பாராட்டுக்குரியது. வசனங்களும் காதலர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

ஒரு வார்த்தை பேசி விட்டால் அது புரிந்துவிடும்.. ஆனால் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்.. போன்ற வசனங்கள் சிறப்பு.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயதீர்த்தா. காதல் கதையை வித்தியாசமான இடத்தில் சொல்ல முயற்சித்துள்ளார்.

படம் ஆரம்பிக்கும் போது டைம் டிராவல் கதையாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.. ஆனால் அதன் பிறகு சாதாரண காதல் கதையாக உருவெடுத்து அதை குடும்ப செண்டிமெண்டில் முடித்திருப்பது நல்ல கற்பனை.

ஆக பனாரஸ்.. சேலையில் சிக்கிய சேவகன்

’ஒன் வே’ ONE WAY விமர்சனம்.; உயிரோடு விளையாடும் மிருதன்கள்

’ஒன் வே’ ONE WAY விமர்சனம்.; உயிரோடு விளையாடும் மிருதன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக நாயகன் பிரபஞ்சன், கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஒன் வே’.

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜாத்தி பாண்டியன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கி உள்ளார்.

கதைக்களம்…

நாயகன் பிரபஞ்சன் நல்லதொரு வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். இவரின் அம்மா கோவை சரளா, தங்கை ஆரா.

இவர்கள் வட்டிக்கு பணம் வாங்கியதால் பணம் கொடுத்த வினோத் சார்லஸ் திருப்பி கேட்கிறார்.

அதே சமயம் கடனை திருப்பி கொடுக்காத குடும்ப பெண்களை தனது ஆசைக்காக வற்புறுத்துகிறார்.

அதுபோல ஆரா-வையும் அனுப்பி வைக்க சொல்கிறார். வினோத்தின் கடனை அடைக்க பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக நினைக்கிறார்.

பணத்தை ரெடி செய்து வெளிநாட்டுக்கு போகும்போது மும்பையில் சிக்கிக்கொள்கிறார். இதனால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்.

அப்போது நாயகன் பிரபஞ்சனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

ஏழை அப்பாவிகளின் உயிரை வைத்து பணக்காரர்கள்்விளையாடும் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு.

அந்தப் போட்டியில் வென்றால் கோடீஸ்வரன்.. தோற்றால் மரணம்..

இறுதியில் நாயகன் அதில் வெற்றி பெற்றாரா? அல்லது உயிரை விட்டாரா?, அந்த விளையாட்டு என்ன? என்பதே இந்த ‘ஒன்வே’.

கேரக்டர்கள்…

நாயகனாக பிரபஞ்சன். கிராமத்து யதார்த்த இளைஞனாக பொருந்துகிறார். குடும்ப சென்டிமெண்டிலும் பாஸ் மார்க் பெறுகிறார். தந்தை இறந்தபின் குடும்ப பாரத்தை சுமக்கும் போது பாவமாக தெரிகிறார்.

உயிரை எடுக்கும் பயங்கர விளையாட்டில் இவரின் தயக்கம் பயம் சிறப்பு. ஆனால் முக பாவனைகளில் மெச்சூரிட்டி போதவில்லை.

நாயகனின் தங்கையாக ஆரா. இயல்பாக இருக்கிறார். அப்பாவை இழந்த பின் இவர் காட்டும் சோகம்.. கிளைமாக்ஸ் காட்சிகளில் காட்டும் வேகம்.. என இரண்டிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.்

நாயகனின் அம்மாவாக கோவை சரளா. காமெடியில் கலக்கிய சரளா இதில் குணச்சித்திர நடிகையாக தன்னை நிரூபித்துள்ளார். இனி இவருக்கு ஏராளமான அம்மா வேடங்கள் வரும்.

சார்லஸ் வினோத்தின் நடிப்பு படம் பார்ப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும்.

டெக்னீஷியன்கள்…

இந்த ‘ONE WAY’ படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் பக்க பலமாய் அமைந்துள்ளது.

முக்கியமாக முத்துக்குமரனின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம்.

குறிப்பாக உயிரை குறி வைத்து விளையாடப்படும் போட்டியை நம்மை அறியாமல் நம்மை பதற வைக்கும்.

படத்தின் ஆரம்ப காட்சிகளில் கிராமத்தை அழகை காட்டும் போது கேமராவை ஓவராகவே ஆட்டி (Shaking) உள்ளது ஏன் என்று தெரியவில்லை.??

இசையமைப்பாளர் அஷ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் ஓகே.கிளைமாக்ஸ் காட்சியில் ஒலிக்கும் ‘சின்னஞ்சிறு கிளியே…’ பாடல் இதமான தாலாட்டு.

படத்தொகுப்பாளர் சரண் சண்முகம் காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார்.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.சக்திவேல்.

விவசாயிகள் அவர்களது குடும்பம் படும் துயரங்களை முதல் பாதியில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

அதே சமயம் ஏழைகளின் உயிரோடு விளையாடும் தொழில் அதிபர்களின் கோர முகத்தையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

இந்த உலகில் இப்படி எல்லாம் நடக்கிறதா? என்ற ஆச்சரியத்தோடு காட்சிகளை வைத்திருப்பது சிறப்பு.

ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் அந்த விளையாட்டையே காட்சிகளாக வைத்திருப்பது போர் அடிக்கிறது.

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் வித்தியாசமான விளையாட்டை சொன்ன இயக்குநர் சக்திவேலுக்கு பாராட்டுக்கள்…

ஆக இந்த ‘ஒன் வே’… உயிரோடு விளையாடும் மிருதன்கள்

One Way movie review in tamil

நிவின்பாலி அதிதி நடித்த ‘படவேட்டு’ விமர்சனம்

நிவின்பாலி அதிதி நடித்த ‘படவேட்டு’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நிவின் பாலி, அதிதி பாலன், விஜயராகவன், மனோஜ் ஓமன், ஷம்மி திலகன், ஷைம் டாம் சக்கோ

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு : தீபக் டி மேனன்

இயக்கம்: லிஜ்ஜு கிருஷ்ணா

தயாரிப்பு: யோட்லி பிலிம்ஸ், சன்னி வயோன்

கதைக்களம்…

வேலை வெட்டிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறார் நிவின் பாலி. இதனால் இவரது அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்குகிறார். ஒரு கட்டத்தில் இவர்களது ஏழ்மை நிலையை கண்டு அரசியல்வாதி ஒருவர் தன் சார்பாக அந்த வீட்டை புதுப்பித்து தருகிறார்.

மேலும் இந்த வீட்டிற்கு தாங்கள் தான் ஸ்பான்சர் என ஒரு கல்வெட்டு வைத்து செல்கிறார். இதனால் மக்களின் அவமான சொற்களை பெறுகிறார் நிவின்பாலி.

ஒரு கட்டத்தில் அந்த கல்வெட்டை இடித்து தள்ளுகிறார் நிவின். அந்த கல்வெட்டை இடித்தது கூட எதிர்க்கட்சி தான் என அரசியல் ஆதாயம் தேடுகிறார் அந்த அரசியல்வாதி.

மேலும் விவசாய நிலங்களை அபகரிக்க முயல்கிறார். இதனால் அந்த அரசியல்வாதியின் சூழ்ச்சி வலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முற்படுகிறார் நிவின்பாலி.

இறுதியில் வென்றது யார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நிச்சயமாக நிவின் பாலியை இந்த கேரக்டரில் அவரது ரசிகர்கள் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். மிகவும் குண்டாக மந்தமாக ஒரு துணை நடிகர் போலவே வருகிறார்.

இடைவேளைக்குப் பிறகுதான் தன் ஹீரோயிசத்தை காட்டுகிறார். கிளைமாக்ஸ் காட்சிகளும் அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகிறது.

படத்தில் பெயரளவில் தான் நாயகி ‘அருவி’ அதிதி பாலன் வருகிறார். பெரிதாக காட்சிகள் இல்லை.

மற்றபடி படத்தில் வில்லனாக நடித்தவரின் நடிப்பு பேசப்படும். ஏதாவது ஒரு விஷயத்தை செய்து விட்டு அதில் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளை அவரது கேரக்டர் தோலுரித்து காட்டுகிறது.

டெக்னீஷியன்கள்…

’96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்தில் இசையமைத்துள்ளார். பின்னணி இசை பாராட்டும்படியாக உள்ளது.

பல காட்சிகளை தன் இசையால் மிரட்டி இருக்கிறார். ஆனால் இசைக்கு ஏற்ப காட்சிகள் தான் இல்லை.

ஒளிப்பதிவாளர் தீபக் டி மேனன் தன் பணியில் சிறப்பு.

ஒற்றுமையின்மையால் மக்கள் படும் அவஸ்தைகளையும்… நிலத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளையும் வாழ்வியலோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் லிஜ்ஜு கிருஷ்ணா.

ஆக.. படவேட்டு… நில அரசியல்

காலங்களில் அவள் வசந்தம் 3.5/5.; காதலின் புது வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம் 3.5/5.; காதலின் புது வசந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோஷினி…

இயக்கம் – ராகவ் மிர்தத்

இசை – ஹரி எஸ்ஆர்

தயாரிப்பு – அறம் என்டர்டெயின்மென்ட், ஸ்ரீ ஸ்டுடியோஸ்

ஒன்லைன்…

கல்யாணத்திற்கு பின் வரும் காதலைப் பற்றி சொல்கிறது இந்த படம். கணவன் – மனைவி இடையே ஈகோவையும் சொல்கிறது இந்த காதல் கதை.

கதைக்களம்…

நாயகன் கௌசிக் ராம். ஒரு பெண்ணை எப்படியெல்லாம் சினிமா பாணியில் காதலிக்க வேண்டும் என எழுதி வைத்து காதலிக்கிறார்.

அதன்படி சில பெண்களையும் காதலிக்கிறார். ஒரு நாள் ஹெரோஷினியிடம் கொட்டும் மழையில் நனைந்தப்படியே காதலை வெளிப்படுத்துகிறார்.

இதனிடையில்தான் கௌசிக்கை திருமணம் செய்ய விரும்புகிறார் அஞ்சலி நாயர். இருவருக்கும் திருமணமும் நடக்கிறது.

சில தினங்களில் அவரின் சினிமாத்தனமான காதலை பற்றி தெரிந்துக் கொள்கிறார் அஞ்சலி. உனக்கு சினிமாதான் காதல்.. என் இடத்தில் வேறு ஒரு பெண் இருந்தாலும் நீ இப்படிதான் காதலிப்பாய் எனக் கூறி இவர்களுக்குள் ஈகோ சண்டை வருகிறது. இதனால் பிரிகின்றனர்.

அந்த சமயத்தில் முன்னாள் காதலி ஹிரோஷிணியை சந்திக்கிறார் கௌஷிக்.
அதன் பின்னர் என்ன நடந்தது? என்பதுதான் இந்த படத்தின் கதை.

கேரக்டர்கள்…

செம ஸ்மார்ட்டாக.. துறுதுறு இளைஞனாக சாக்லேட் பாய்யாக வருகிறார் கௌஷிக்.

ஆக்ஷனில் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் ரொமான்ஸில் பாஸ் மார்க் பெறுகிறார்.

எல்லாரையும் விட கூடுதலாக ஸ்கோர் செய்கிறார் அஞ்சலி நாயர். கணவனை உருகி உருகி காதலிப்பதாகட்டும்… அதன் பின்னர் பிரிவதாகும்… தனது நடிப்பில் மெச்சூரிட்டியை காட்டி இருக்கிறார்.

அனுராதாவாக வரும் ஹெரோஷினி ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ரசிகர்களை கவர்கிறார்.

நாயகனின் அப்பா மேத்யூ, அம்மா ஜெயா சுவாமிநாதன் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

டெக்னீஷியன்கள்…

மழைக்காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் எனும் ஒவ்வொரு காலத்தையும் தன் கேமரா கண்களில் படம் எடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன்.

படத்தின் ஆரம்பம்.. இடைவேளை.. கிளைமாக்ஸ் என ஒவ்வொரு காட்சிகளிலும் தன் ஃப்ரேமை நேர்த்தியாக படமாக்கியுள்ளார்.

ஹரி எஸ்.ஆரின் இசை படத்திற்கு கூடுதல் பலம். காதலர்களை கவர இசைதான் முக்கியம் என்பதை உணர்ந்து படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார்.

எஸ்.கே. கலை இயக்கம் வேற லெவல். நாயகனின் வீட்டில் இருக்கும் புத்தக அலமாரி கூட ரசிக்க வைக்கிறது.

ராகவ் மிர்தத் படத்த இயக்கி இருக்கிறார். மொத்தமே படத்தில் ஒரு பத்து கதாபாத்திரங்களை வைத்து காதல்.. மோதல்.. குடும்பம்.. பெற்றோர் சிந்தனை.. காதலர்களின் மன மாற்றம்.. என அனைத்தையும் கலந்து கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.

ஆக காலங்களில் அவள் வசந்தம்.. காதலின் புது வசந்தம்

Kaalangalil Aval Vasantham movie review and rating in tamil

More Articles
Follows