தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, நாசர், ரகுமான், குரு சோமசுந்தரம் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : மணிகண்டன்
படத்தொகுப்பு : அனுசரண்
இயக்கம் : மணிகண்டன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : கேஆர் பிலிம்ஸ்
கதைக்களம்…
நாயகன் விதார்த் கண் பார்வை குறைப்பாட்டினில் கஷ்டப்படுகிறார். ஆப்ரேஷன் செய்தால் சரியாகும் என்பதால் அதற்கான பணத் தேடல் முயற்சியில் இறங்குகிறார்.
இதனிடையில் அவர் வீட்டின் அருகே ஒரு கொலை நடக்கிறது. கொலைக்காரன் யார்? எதற்காக இந்த கொலை? என திரைக்கதை நீள்கிறது.
இந்த விசாரணையில் சிக்கும் விதார்த்தின் எதிர்காலம் என்ன ஆகிறது? என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
கதாபாத்திரங்கள்…
கண் பார்வை முழுவதுமாக தெரியாமல் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நம் கவனம் ஈர்க்கிறார் விதார்த்.
மைனாவுக்கு பிறகு ஒரு அழுத்தமான உணர்ச்சிமிக்க நடிப்பை கொடுத்திருக்கிறார் இவர்.
குற்ற உணர்வில் நொருங்கி போவது, சிகிச்சை மற்றும் பணத்துக்காக அலைவது என ஒரு யதார்த்த மனிதரின் பிரதிபலிப்பாக வருகிறார்.
கண் பார்வை குறைபாட்டினால் பைக் ஓட்டும்போது தடுமாறுவது ரசிக்க வைக்கிறது. ஆனால் இவ்ளோ குறை பாடு உள்ளவரால், இந்த டிராப்பிக்கில் நிச்சயம் செல்ல முடியாது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பூஜா தேவார்யா என இரு நாயகிகள். இருவரும் தங்கள் கேரக்டர்களை பேசும்படியாக செய்திருக்கிறார்கள்.
ஒருவேளை இவர்கள் இருவரின் கேரக்டர்களை மாற்றி கொடுத்திருந்தால் இன்னும் ஸ்வாரஸ்யம் கூடி இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
இவர்களுடன் மாரிமுத்து, ‘பசி’ சத்யா, ரகுமான் உள்ளிட்டோரும் பொருத்தமான தேர்வு.
ஜோக்கர் படத்தில் நம்மை சிந்திக்க வைத்த, குரு சோமசுந்தரம் இதிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.
நாசரின் அவரின் அனுபவ நடிப்பால், தனித்து நிற்கிறார். ஆனால் ஒரே இடத்தில் அவரை பார்ப்பது போரடிக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்தில் பாடல்கள் இல்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன் என இசைஞானி தன் இசை சாம்ராஜ்யத்தை பின்னணி இசையில் நடத்தியிருக்கிறார்.
இவரது இசையே இந்த த்ரில்லர் கதைக்கு உயிரூட்டம் கொடுக்கிறது. இயக்குனர் மணிகண்டனே ஒளிப்பதிவாளர் என்பதால், ஒவ்வொரு ப்ரேமையும் செதுக்கி இருக்கிறார்.
மிகத் துல்லியமாக ஒரு க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட்டை கமர்ஷியல் இல்லாமல் கொடுத்திருக்கிறார்.
வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளுகிறது. ‘நம்ம ரேட்டை நாம்தான் முடிவு பண்ணணும்’, சரி தப்புன்னு எதுவும் இல்லை. நீ எடுத்த முடிவை நான் சொல்லணும்னு நினைக்கிற’, ‘எது தேவையோ அதுவே தர்மம், ஜி சொல்றவங்கள சுத்தமாக புடிக்கல…. உள்ளிட்ட வசனங்கள் நமக்கு நம் வாழ்வை நினைவுப்படுத்தும்.
இதற்கு ஆனந்த் அண்ணாமலை அவர்கள் மணிகண்டனுக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார்.
குற்றம் செஞ்சிட்டு தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம். ஆனால் மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியாது.
அந்த குற்ற உணர்ச்சியே பெரும் தண்டனை என்பதை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார் இந்த காக்கா முட்டை இயக்குனர்.
பணம் பறிக்க முயலும் ஆஸ்பத்திரிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் காட்டியிருப்பது சபாஷ்.
ஆனால் படம் ஒரு டாக்குமெண்ட்ரி டைப் ஆக இருப்பதால் எல்லாம் ரசிகர்களையும் கவருமா? என்பது சந்தேகமே.
மொத்தத்தில் குற்றமே தண்டனை… மனசாட்சியின் தண்டனை