ஃபர்ஹானா விமர்சனம் 3.5/5.; சுதந்திர பறவை

ஃபர்ஹானா விமர்சனம் 3.5/5.; சுதந்திர பறவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமையலறையில் கிடந்த பெண்கள் ஒரு காலம்.. படிக்க தொடங்கிய காலம் ஒரு காலம்… வேலைக்கு சென்ற காலம் ஒரு காலம்… இவை எல்லாம் கடந்து தற்போது தனக்கு பிடித்தமான வேலை. தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழும் பெண்கள்..

நவீன காலத்திற்கேற்ப திரைக்கதை அமைத்து இந்த பர்ஹானாவை பறக்கவிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

கதைக்களம்…

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரும் இஸ்லாமிய மனைவி கணவன் தம்பதியர். இவர்களின் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம்.

கணவனுக்கு பெரிதாக படிப்பறிவு இல்லை. தன் தந்தையுடன் செருப்பு கடையில் பணிபுரிகிறார். குடும்ப வறுமையின் காரணமாக படித்த பெண்ணான ஐஸ்வர்யா ஒரு கால் சென்டரில் (பேங்க் கஸ்டமர் கேர்) வேலைக்கு சேருகிறார்.

அதே அலுவலகத்தில் வேறொரு துறையில் பணிபுரியும் தன் தோழிகளைப் போல தனக்கும் நிறைய சம்பளம் வேண்டும் என நினைக்கிறார். முதலில் மறுக்கும் அனுமோள் & ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் சம்மதிக்கின்றனர்.

அங்கு இணைந்த பின் தான் அது செக்ஸ் சாட்டிங் கஸ்டமர் கேர் என தெரிய வருகிறது. முதலில் அந்த பணியை வெறுக்கும் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் ஒரு ஆண் குரலோடு பேச பேச தனக்கு கிடைக்காத பாசம் அன்பு அதில் கிடைப்பதாக உணர்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த ஆண் குரல் ஐஸ்வர்யாவின் குடும்ப விவரங்களை பற்றி தெரிந்து கொள்கிறது. என்னை நீ சந்திக்க வேண்டும்.. என் வீட்டிற்கு வர வேண்டும் இல்லை என்றால் உனது குடும்பத்தில் நீ பேசிய பேச்சுக்களை சொல்லி விடுவேன் என்கிறது.

அதன் பின் பர்ஹானா என்ன செய்தார்.? வேலையை விட்டு விட்டாரா? அல்லது அந்த நபரை சந்தித்தாரா? யார் அந்த ஆண் குரல்? இதனால் குடும்பத்தில் என்ன பிரச்சனை என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

எந்த கதையாக இருந்தாலும் தன் கேரக்டர் என்ன என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அதில் எப்போதும் போல சிக்ஸர் அடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒரு ஆண் மகனால் தன் குடும்பத்திற்கு செய்யாததை ஐஸ்வர்யா செய்யும்போதும்.. வேறொரு ஆணுடன் சிக்கிக் கொள்ளும் போதும்.. பரிதவிக்கும் காட்சிகளில் பர்ஹானா அதிகமாகவே கவர்கிறார்.

படம் முழுவதும் மர்மக்குரலாகவே ஒலிக்கிறது செல்வராகவன் குரல். இவரது கேரக்டரில் வேறொருவர் இருந்திருக்கலாம். ஏனென்றால் கொடுத்த பில்டப் அப்படி.

ஒரு கையாலாகாத கணவனாக ஜித்தன் ரமேஷ். இந்த கேரக்டரில் எந்த ஒரு தமிழ் ஹீரோவும் நடிக்க மறுப்பார்கள் என்பது தான் உண்மை. ஒருநாள் வேலைக்கு செல்ல ஐஸ்வர்யா தயங்கும்போது ஒவ்வொரு கஸ்டமரையும் காலை தொட்டு தான் நான் செருப்பை அணிவிக்கிறேன்.

அது என்னுடைய தொழில்.. எனவே கஷ்டமரின் விருப்பத்திற்கு நடந்து கொள் என அவர் அட்வைஸ் செல்லும் போது ஒரு கணவராக நிச்சயம் பெண்களுக்கு பிடிக்கும்.

பழமைவாதியான இஸ்லாமிய கேரக்டரை நம் கண் முன்னே கொடுத்துள்ளார் கிட்டி. பெண்கள் வீட்டை விட்டு வேலைக்கு செல்லக்கூடாது என்று நினைக்கும் அவர் ஒரு கட்டத்தில் மனம் மாறுவது ரசிக்க வைக்கிறது.

முக்கியமாக குங்கும பொட்டு பெண்ணிடம் அவர் பேசும்போது அவர் மனம் வருவதை தன் முக பாவனைகளில் காட்டி இருக்கிறார்.

இவர்களுடன் மாடர்ன் பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா.. ஆண்களிடம் அவர் சிக்கி சீரழிவது நம் மனதை கலங்கடிக்கும்.

அலுவலக தோழியாக அனுமோள். ஒரு உற்ற தோழியாக தன் கேரக்டரில் உயர வைத்திருக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

‘ஒரு நாள் கூத்து’ மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் முதல் இரண்டு படங்களில் அவர் கொடுத்த டச் இதில் கொஞ்சம் குறைவாக இருப்பதை உணர முடிகிறது.

காரணம் பர்ஹானாவில் முதல் பாதி வரை பெரிதாக ஈர்ப்பு இல்லை. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படத்தை வேகமாக நகர்த்தி அதை ஈடுக்கட்டி உள்ளார் இயக்குனர் நெல்சன்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் சிறப்பு.. இடைவேளைக்குப் பிறகு பின்னணி இசை நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கிறது.

ஃபர்ஹானா என்ன செய்யப் போகிறார்.? என்ற பதட்டத்தை நம்மில் தன் இசை மூலம் உணர வைக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோயின் கேமரா சென்னை ஐஸ் ஹவுஸ் சந்து பொந்து எல்லாம் புகுந்து விளையாடுகிறது.

ஒரு நடுத்தர இஸ்லாமிய குடும்பம் எப்படி இயங்கும் என்பதை தன் கேமரா கண்களில் அழகாக படம் பிடித்துள்ளார்.

இஸ்லாமிய குடும்பத்தில் ஆண்மகன் ஒருவர் வரும்போது அந்த பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள்.? என்பதையும் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

ஃபர்ஹானா வேலைக்குப் போகலையா..?” என்று கிட்டி கேட்பதை காட்சியாக முடித்திருப்பதில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் சென்டிமெண்ட் டச் தெரிகிறது.

ஆக ஃபர்ஹானா.. சுதந்திர பறவை

Farhana movie review and rating in tamil

இராவண கோட்டம் விமர்சனம்.; தலக்கட்டு.. வெளுத்துக்கட்டு

இராவண கோட்டம் விமர்சனம்.; தலக்கட்டு.. வெளுத்துக்கட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி, சஞ்சய், இளவரசு, பிரபு, தீபா உள்ளிட்டோர் நடிக்க இன்று வெளியானது ‘இராவண கோட்டம்’.

1957ல் நடந்த முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை சொல்லி முற்ப்பட்டு இருக்கிறார் விக்ரம் சுகுமாறன்.

கதைக்களம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி என்ற ஊரின் தலக்கட்டு பிரபு. இவரது அறிமுகமே தேசிய தலைவர் படங்களுடன் இவரது தலை இடம்பெறுகிறது.

பிரபுவின் நெருங்கிய நண்பர் இளவரசு. பிரபு – மேலவீதி.. இளவரசு – கீழவீதி. (ஜாதியை சொல்லாமல் இப்படி வைச்சிட்டாங்க)

இந்த ஊர் மொத்தமும் மொத்தமும் பிரபு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எனவே ஒரு அரசியல்வாதி நினைத்தாலே கூட அந்த ஊரில் எது செய்ய நினைத்தாலும் பிரபுவின் அனுமதி வேண்டும்.

நாலு காசு பார்க்கலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு (எம்எல்ஏ அருள்தாஸ் & அமைச்சர் தேனப்பன்) இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

சாதீயை வைத்து ஊரை இரண்டாக பிரிக்கும் வேலையில் அருள்தாஸின் ஒத்தக்கை அல்லக்கை பக்கா ப்ளான் போடுகிறார்.

அதில் பிரபுவின் விசுவாசியான சாந்தனுவும் இளவரசின் மகன் சஞ்சய் சரவணனும் சிக்குகிறார்கள். இதில் நாயகி ஆனந்தியும் அடக்கம்.

அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தண்ணீர் பிரச்சனையால் ஊரே திண்டாடுகிறது. எனவே கருவேல மரங்களை ஒழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதால் அதனை ஒழிக்க கிராம மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால் கார்ப்பரேட்டுக்கு கைக்கூலியாக மாறும் அரசியல்வாதிகள் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்றனர்.

இறுதியில் என்ன ஆனது.? ஊர் பிரிந்ததா.? பங்காளிகள் இணைந்தார்களா.? ஊருக்கு நல்லது நடந்ததா? கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டதா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சாந்தனு ஒரு முரட்டு கிராமத்து இளைஞனாக அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். தன்னுடைய கேரக்டரை கச்சிதமாகவே கொடுத்துள்ளார் எனலாம்.

இவருக்கு போட்டியாக சஞ்சய்.. தன்னால் முடிந்த வரை சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

நாயகி ஆனந்தி கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்துள்ளார். ஊர் பெரியவர் பிரபுவின் கதாபாத்திரம் படத்திற்கு அவரது உடலை போலவே பலம் சேர்த்துள்ளது.

தீபா ஷங்கரின் காட்சிகள் யதார்த்தமாக உள்ளது. அதே சமயம் சுஜாதாவின் காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளது. எப்போதும் மிரட்டும் அருள்தாஸ் இதில் எம்எல்ஏவாக இருந்தும் அடக்கி வாசித்திருக்கிறார். மினிஸ்டர் தேனப்பன் தன் கேரக்டரில் கச்சிதம்.

ஒத்தக்கை ஆசாமி.. வில்லனாக இவர் போடும் சதி திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.

படத்தில் இவரது கேரக்டருக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது ஏனோ?. இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்.

டெக்னீஷியன்கள்…

மேலத்தெரு கீழத்தெரு என்ற இரு பிரிவினரை காட்டினாலும் ஊர் மக்கள் தல கட்டுக்கு கட்டுப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை காட்டுகிறது.

அது போல சாதி வேறாக இருந்தாலும் சாந்தனு – சஞ்சய் நட்பு பாராட்டக்குரியது. ஆனால் ஆனந்தியின் முக்கோண காதல் கதையை கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்.

பெரும்பாலும் எந்த படத்திலும் சொல்லாத சீமகருவேல மரங்கள் அரசியலைப் பற்றி சொல்லியிருப்பது இயக்குனரின் சமூக ஆர்வத்தை காட்டுகிறது.

தண்ணீர் பஞ்சத்தில் கஷ்டப்படும் நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கார்ப்பரேட் கைக்கூலிகளை விரட்டி அடிக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

அது போல கிராமத்திற்குள் அரசியல் வந்தால் ஓட்டுக்கு பணம் வந்துவிடும் என்பதையும் பிரபு கேரக்டர் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

பிரபு – சாந்தனு சார்ந்த மேலத்தெருவில் ஒரு கெட்டவர் கூட இல்லை. ஆனால் இளவரசு – சஞ்சய் சரவணன் சார்ந்த கீழத்தெருவில் ஒரு நல்லவர் கூட இல்லையா.? இப்படியாகவே காட்சிகளை நகர்த்தி இருப்பது ஏதோ ஒரு பிரிவினருக்காக இயக்குனர் நிற்கிறாரோ.? என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கவனம் பெறுகின்றன.. பின்னணி இசை கிராமத்து கதை ஓட்டத்தில் இருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சிறப்பு.

SI எஸ் ஐ செங்குட்டுவன் & இந்திரா.. இதை வைத்து ஒரு செயின் டாலர் காட்சி காட்டப்படுகிறது.்இதனை வைத்து ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து நினைத்துள்ளார் இயக்குனர்.. ஆனால் அதுவும் சப் என்று ஆகிவிடுகிறது.

ஆக இராவண கோட்டம்.. தலக்கட்டு வெளுத்துக்கட்டு.்

Raavana Kottam movie review and rating in tamil

குட் நைட் விமர்சனம் – 4.25/5 – குறட்டை விடாமல் ரசிக்கலாம்

குட் நைட் விமர்சனம் – 4.25/5 – குறட்டை விடாமல் ரசிக்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா நடிப்பில் உருவானது ‘குட் நைட்’.

கதைக்களம்…

படத்தின் முதல் காட்சி தொடங்கி கிளைமாக்ஸ் காட்சி வரை குறட்டை சத்தத்துடன் படம் பயணிக்கிறது.

மணிகண்டன் பெயர் மோகன். அவர் ஓவர் குறட்டை விடுவதால் இவருக்கு மோட்டார் மோகன் என பெயர். குறட்டை சத்தத்தால் அக்கப் பக்கத்து வீட்டினர் கூட உறங்க முடியாமல் தவிக்கின்றனர்.

ஒருநாள் ஆபீஸ் பஸ்ஸில் பயணிக்கும் போது இவர் உறங்க இவரை காதலிக்கும் பெண்.. “என்னால் ஒருநாள் கூட பஸ்ஸில் உன்னுடன் பயணிக்க முடியவில்லை.. நான் வாழ்க்கை முழுவதும் எப்படி பயணிக்க முடியும் என பிரிந்து செல்கிறார்.

இந்த கட்டத்தில் நாயகி மீத்தா ரகுநாத் மீது இவருக்கு காதல் வருகிறது. தன் குறட்டையை மறைத்து அவரை திருமணம் செய்கிறார். அதன் பிறகு குறட்டையால் என்ன ஆச்சு? கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்தார்கள்.? பிரிந்தார்களா.? என்பது தான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்….

‘ஜெய் பீம்’ படத்தில் நம்மை அழ வைத்த மணிகண்டன் இந்த படத்தில் நம்மை குறட்டை குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

குறட்டை என்ன பெரும் பிரச்சனையா என்ற சிலர் நினைக்கலாம்.

ஆனால் அடுத்தவருக்கு குறட்டை தொந்தரவாக இருக்கும் என்று நினைக்கும் அந்த குறட்டை நபர் படும் கஷ்டங்களை அழுத்தமாக உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

நான் நண்பர்களுடன் பயணித்து பல வருடங்கள் ஆகிறது.. என் குறட்டை சத்தத்தால் அவர்களால் பயணிக்க முடியவில்லை என சொல்லி அழும்போதும்.. மனைவியுடன் நிம்மதியாக படுக்க முடியவில்லை என ஏங்கும்போதும்.. அதே நேரம் மனைவி நிம்மதியாக உறங்க இவர் தனி அறையில் படுத்து உறங்குவதும்… தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசி ஆபீஸில் அவமானப்படும்போதும்.. ராஜினாமா செய்யும்போது கெத்தாக பேசுவதும் என அலப்பறை செய்துள்ளார் மணிகண்டன்.

மணிகண்டன் வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்ய வந்த ரமேஷ்திலக் அக்கா ரேச்சலை கரெக்ட் செய்து கல்யாண செய்த பிறகு அதை வைத்து மாமனும் மச்சானும் அடிக்கடி வாரிக் கொள்வதும் ரசிக்க வைக்கிறது.

மணிகண்டன் ஆபீஸ் உயிரதிகாரியாக பக்ஸ் பகவதி பெருமாள். சில காட்சிகளே என்றாலும் நம் மனதில் நிற்கிறார்.

‘கடைசி விவசாயி’ படத்தில் நீதிபதியாக கலக்கிய ரேச்சல் ரெபக்கா இந்த படத்தில் அக்கா கேரக்டரில் தனித்துவமாக தெரிகிறார். ‘லவ் டுடே’ படத்தில் ரவீனாவுக்கு எப்படி ஒரு அக்கா கேரக்டர் அமைந்ததோ அதுபோல இந்த படத்தில்.. அக்கா கேரக்டர் என்றாலும் தன்னால் ஜொலிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் ரேச்சல் ரெபேக்கா. (மற்ற நடிகைகள் இதை கவனிக்கலாம்)

இவர்களுடன் கௌசல்யா நடராஜன், பாலாஜி சக்திவேல் என அனைவரும் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு.

டெக்னீஷியன்கள்….

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு பாடல்கள் ஓகே ரகம் தான். இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு பாடலை ஷான் ரொம்ப கஷ்டப்பட்டு பாடுவது போல் தெரிகிறது. ஏன் இப்படி.? ஆனால் பின்னணி இசை பாராட்டுக்குரியது.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய பரத் விக்ரமன் என்பவர் எடிட்டிங் செய்துள்ளார். இருவரும் தங்கள் பணியை நேர்த்தியாக கொடுத்துள்ளனர்.

நாய்க்குட்டி ஓடி வருவது முதல் அது பட்டு மெத்தையில் உறங்குவது முதல்.. மழை சாரலில் கணவன் மனைவி பேசிக் கொள்வது முதல் என ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்க வகையில் கொடுத்துள்ளனர்.

ஒரு காட்சியில்.. உனக்கு என்னடா மோகன் பெயர் வைத்திருக்கிறேன்.. அந்த பெயருக்கே உன்னை நிறைய பெண்கள் காதலிப்பார்கள் என் அம்மா சொல்லுவார்.

உனக்கு சினிமா மோகன் மீது டாவு.. அதனால அந்த பேர வச்ச.. என நாயகன் பேசும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதுபோல நாயகியுடன் பேசும்போது.. எங்க போறீங்க.? இப்ப ஒயின்ஷாப்புக்கு.. என தவறுதலாக பேசும் போதும்…

அதுபோல ஹோட்டலில் அமர்ந்திருக்கும் போது யுடர்ன் போட்டு குடும்பத்தினரை வீட்டுக்கு போக சொல்வதும்.. கிளைமாக்ஸ் காட்சியில் யுடர்ன் போட்டு ஏர்போட்டில் இருந்து வீட்டிற்கும்.. வீட்டிலிருந்து ஏர்போர்ட்டிற்கும் போகச் சொல்லும்.. என ரசிக்க வைத்துள்ளார். அந்தக் காட்சியில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

ஒரே நாளில் தொப்பையை எப்படி குறைக்க முடியாதோ.. அது போல மணி – அணு இணைய மாட்டார்கள் என பாலாஜி சக்திவேல் சொல்லும்போதும்.. டேய் என்னை தவிர இந்த உலகத்தில் எல்லாருமே சந்தோஷமா தான் இருக்கீங்க என நாயகன் சொல்லும்போதும்… குறட்டைக்கு பயந்து நாய்க்குட்டி தெறித்து ஓடும் போதும்.. இப்படியாக சின்ன சின்ன சுவாரசியங்களை சொல்லி குட் நைட் க்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆக.. குறட்டை விடுபவர்களும் குறட்டையால் தவிப்பவர்களும் இந்த படத்தை குறட்டை விடாமல் பார்த்து ரசிக்கலாம்.

Good Night movie review and rating in tamil

தீர்க்கதரிசி விமர்சனம்.. 2.75/5 – தீரா-பலி

தீர்க்கதரிசி விமர்சனம்.. 2.75/5 – தீரா-பலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்ட்ரோல் ரூமிற்கு ஒரு மர்ம நபர் போன் வருகிறது. நடக்கவிருக்கும் விபத்தை தடுக்கச் சொல்லி எச்சரிக்கிறார்.

ஆனால் காவல்துறையின் அலட்சியத்தால் அந்த விபத்து நடக்கிறது. பிறகு ஒரு கொலை நடப்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறார். அந்த கொலையை தடுப்பதற்குள் அதுவும் நடக்கிறது.

இப்படியாக அந்த நபர் காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்யும்போது மீடியாவுக்கும் செய்கிறார். இதனால் ஒரு குற்றத்தை கூட தடுக்க முடியாத காவல்துறையை மக்கள் திட்டுகின்றனர்.

அந்த மர்ம நபருக்கு தீர்க்கதரிசி எனவும் பெயரிடுகின்றனர். இப்படியாக அடுத்தடுத்து விபத்துகளும் கொலைகளும் நடக்க அதை தடுக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை.

அந்த நபர் யார்.? அவர் முன்கூட்டியே எப்படி சொல்கிறார்.? ஒருவேளை சொல்லிவிட்டு அவர்தான் கொலைகளை செய்கிறாரா? அவருக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக அஜ்மல். போலீஸ்க்கு உரித்தான கம்பீரத்தோடு கெத்து காட்டி இருக்கிறார். இவருடன் வரும் துஷ்யந்த் ஜெய்வந்த் ஆகியோரும் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதம்

கண்ட்ரோல் ரூம் அதிகாரியாக ஸ்ரீமன். கொஞ்சம் காமெடி கலந்து தன் கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்.

இவர்களுடன் தேவதர்ஷினி, மோகன் ராம், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் வருகின்றனர்

கௌரவத் தோற்றத்தில் சத்யராஜ். வெறும் குரலிலேயே தன் கேரக்டரை 80% செய்துவிட்டு 20% நக்கல் நையாண்டி கலந்து தலை காட்டி நடித்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் மெயின் கேரக்டர் சத்யராஜ் தான். ஆனால் அவரது காட்சிகள் வெறும் 10% கூட படத்தில் இல்லை. அவரது காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.

முக்கியமாக அங்கே விபத்து.. இங்கே கொலை.. என படம் முழுவதும் சென்று கொண்டே இருப்பதால் போதும் முடியல என்கிற எண்ணமே நமக்கு வருகிறது.. எடிட்டர் கொஞ்சம் ஓவர் டைம் பார்த்திருக்கலாம்.(படத்தொகுப்பாளர் ரஞ்ஜீத் சி.கே.)

சென்னை அழகை தன் கேமரா கண்களில் இன்னும் அழகுற செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தன் ஜெ.லெக்ஷ்மன்.

படத்தில் நாயகி இல்லை.. டூயட்டும் இல்லை ஐட்டம் சாங்கும் இல்லை.. எனவே காவல்துறைக்கு பெருமை சேர்க்க ஒரு பாட்டு வேண்டும் என இயக்குனர் நினைத்தாரோ என்னவோ.. வேண்டா வெறுப்பாக ஒரு பாடல் வைத்துள்ளார். அதற்கு ஆட்டமும் சரியில்லை.. பாட்டும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை படத்திற்கு நன்றாகவே பலம் சேர்த்துள்ளது.

பி.சதீஷ்குமாரின் திரைக்கதையில் அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும் இணைந்து இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

கிளைமாக்ஸ் சொல்லப்படும் சத்யராஜின் கதைகளை கொஞ்சம் அதிகப்படுத்தி விபத்து & கொலை காட்சிகளை கொஞ்சம் ட்ரிம் செய்து இருந்தால் இந்த தீர்க்கதரிசி இன்னும் ஒரு தீர்க்கமான வெற்றியை அடைந்து இருப்பார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காக செய்யும் தவறுகள் மற்றொரு குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை காட்சிப் படுத்தியதற்கு கை கொடுத்து பாராட்டலாம்.

ஆக தீர்க்கதரிசி.. தீரா-பலி

Theerkadarishi movie review and rating in tamil

உருச்சிதை விமர்சனம்..; மௌன மலர்கள்

உருச்சிதை விமர்சனம்..; மௌன மலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

நாயகன் கார்த்திகேயன். இவர் வாய்பேச முடியாதவர். ஆனாலும் பட்டதாரி. இவர் தன் இரண்டு தங்கைகள் மற்றும் அப்பா அம்மாவுடன் ஓர் அழகான கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.

விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர் கார்த்திகேயன். திடீரென ஒரு நாள் ஒரு விபத்தில் தன் தந்தை மற்றும் தாயை இழக்கிறார். இதனால் குடும்பம் நிலை குலைந்து போகிறது.

எனவே குடும்பத்தை காக்க சென்னைக்கு சென்று கட்டிட வேலைக்கு செல்கிறார். அங்கு ஒரு கட்டத்தில் நாயகி சுகுணாவை ஒருதலையாக காதலிக்கிறார்.

அண்ணனை புரிந்துக் கொண்ட பாசமலர் தங்கைகள் வாய் பேச முடியாத அண்ணனுக்காக பெண் கேட்க செல்கின்றனர்.

அப்போது இரண்டு தங்கைகளும் யாரோ சிலரால் கொல்லப்படுகின்றனர்.

இதன் பிறகு என்ன ஆனது? நாயகியிடம் தன் காதலை சொன்னாரா கார்த்திகேயன்.? தங்கைகளை கொன்றது யார்? இடையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் கார்த்திகேயன். நல்ல உயரம் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. ஆனால் ஊமை நடிப்பு செயற்கை தனமாக உள்ளது.. ஊமை என்பதால் எப்போது வாயை திறக்கவே மறுக்கிறார் போல.. வாயை மூடியப்படியே வைத்துள்ளது ஏன் என்று தெரியல.?!

இரண்டு தங்கை கேரக்டர் நடித்துள்ளவர்கள் அழகாக இருக்கிறார்கள்.. ஆனால் இன்னும் சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கலாம்.

நாயகியாக சுகுணா.. பக்கத்து வீட்டு பெண் போல் இயல்பான நடிப்பு.

சேகர் என்ற கேரக்டரில் பாடலாசிரியர் ஜெயம்கொண்டான் நடித்துள்ளார். இவரால் தான் படத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

நெல்லை சிவா – தீப்பெட்டி கணேசன் ஆகிய இருவரும் கொஞ்சம் சிரிக்கவும் வைத்து கொஞ்சம் அழவும் வைத்துள்ளனர். சிலர் காட்சிகளில் இவர்களுடைய ஓவர் ஆக்டிங் தென்படுவதை குறைத்து இருக்கலாம். தற்போது இருவரும் உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேஸ்திரி வேடத்தில் நடித்திருக்கிறார் இயக்குநர் எம்.சி.வி.தேவராஜ். இவரை காலி செய்ய நெல்லை சிவா & தீப்பெட்டி கணேசன் போடும் திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.. அதுபோல எதிர்பாரா விதமாக வில்லத்தனம் செய்யும் தேவராஜ் ரசிக்க வைக்கிறார்.

ஒரு அழகான கதையை உருவாக்கியவர் திறமையான கலைஞர்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருந்தால் இந்த உருச்சிதை இன்னும் சிறப்பாகவே வந்திருக்கும்.

படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை கலைக்குமார் எழுதியுள்ளார். ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லக்ஷ்மண் கவனித்துள்ளார். சண்டைக் காட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.

Uruchithai movie review and rating in tamil

குலசாமி விமர்சனம்.; வலுவில்லாத கொல-சாமி

குலசாமி விமர்சனம்.; வலுவில்லாத கொல-சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன் கிராமத்து ஊர் மக்களின் உதவியுடன் தன் பாசமிகு தங்கையை மருத்துவம் படிக்க வைக்கிறார் ஆட்டோ டிரைவர் விமல்.

இவர் மர்மமான முறையில் மரணிக்கவே அந்த மருத்துவ கல்லூரிக்கு தன் தங்கையின் உடலை தானமாக வழங்குகிறார் விமல்.

தினமும் தன் தங்கை உடலை பார்த்து கொண்டிருக்கும் விமல் அங்கு படிக்கும் ஏழை மாணவிகளின் கல்விக்கும் உதவி வருகிறார்.

இது ஒரு பிறமிருக்க.. மார்க் குறைவான பெண்களையும் ஏழை மாணவிகளையும் பணக்காரர்களின் காம பசிக்கு இறையாக்குகிறார் அந்த கல்லூரியின் ஆசிரியை.

ஒரு கட்டத்தில் இதற்கான ஆதாரங்கள் நாயகி தன்யாவிடம் சிக்கிக் கொள்ள அதன் பிறகு என்ன நடந்தது? விமல் என்ன செய்தார்? தங்கையின் மரணத்திற்கு காரணம் என்ன? அதுவே படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

அதிகம் பேசாத.. அதிகம் சிரிக்காத… கேரக்டரில் விமல். தன் வீட்டு பெண்களை பெண்களை யாரை நம்பி விட்டுச் செல்வது என விமல் சொல்லும் போது கண் கலங்க வைக்கிறார். விமல் தன் கேரக்டர் நிறைவாக செய்திருந்தாலும் படத்தின் திரைக்கதை தடுமாற்றத்தை தருகிறது.

வித்தியாசமான வேடத்தில் வினோதினி வைத்தியநாதன்.. சிறப்பாக கையாண்டுள்ளார்.

இயக்குநர் சரவண சக்தியின் மகன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். வில்லன் கும்பலை பார்த்தால் சில காட்சிகளில் கோபம் வந்துவிடுகிறது.

தன்யா ஹோப், போஸ் வெங்கட், சரவண சக்தி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் இருந்தும் அவர்களின் காட்சிகளில் பெரிதாக ஈர்ப்பு இல்லை.. ஆனால் சப் இன்ஸ்பெக்டராக வருபவர் அதிகமாகவே கவனம் பெறுகிறார்.

விமல் – தங்கையின் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் மற்றொரு மாணவி அழகாகவும் வருகிறார் சிறப்பாகவும் நடித்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

குலசாமி படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார், ஆனால் வசனங்களில் எந்தவிதமான வலிமையும் இல்லை.

வைட் ஆங்கிள் ரவியின் காட்சிகள் சிறப்பு. மகாலிங்கத்தின் இசையில் பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை என்றாலும் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.

ஆனால் விக்ரம் வேதா படத்தில் கேட்ட பின்னணி இசையே நினைவுக்கு வருகிறது.

படத்தில் நிறைய கொலைகள் காட்டிக்கொண்டே இருப்பதால் இது குலசாமியா அல்லது கொலசாமியா என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் எழும்.

இள பெண்களை குறி வைத்து அவர்களை காதல் வலையில் விழ வைத்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடும் கும்பலை பற்றி சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் சில விஷமிகளை காவல்துறை நினைத்தாலும் களை எடுக்க முடியாது இதற்கு ஒரு குலசாமி வேண்டும் என்பதை கருத்தாக முன் பதிவு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒருவனின் பார்வையில் இந்த சமூகம் எப்படி இருக்கும்? இதனால் வரும் பின் விளைவுகள் என்ன? என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.

ஆனால் அதை சொன்ன விதத்திலும் எடிட்டிங்கிலும் பெரும் குறை.

குலசாமி… வலுவில்லாத கொலசாமீ

Kulasamy movie review and rating in tamil

More Articles
Follows