தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
தெய்வ பக்தி நிறைந்தவர் ஊர்வசி. இவரது கணவர் குரு சோமசுந்தரம். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இவர்களின் மகன் நாயகன் பாலு வர்கீஸ். மாலை கண் நோய் உடையவர்.
தன் குடும்ப கோயிலில் கைவிடப்பட்ட புராதான விநாயகர் சிலையை வைத்து ஒரு கோயில் கட்ட நினைக்கிறார் ஊர்வசி.
ஒரு கட்டத்தில் அந்த புராதான சிலையை தன்னுடைய வீட்டில் இருந்து திருடி அதை வைத்து புதிய தொழில் தொடங்க நினைக்கிறார் பாலு.
எனவே அந்த சிலையை விற்க திருடன் கலையரசனின் உதவியை நாடுகிறார்.
அதன் பின்னர் என்ன நடந்தது.? விநாயகர் சிலையை எப்படி விற்றார்கள்.? புராதான விநாயகர் சிலை என்ன ஆனது? சார்லஸ் என்ற கலையரசன் விற்றுக் கொடுத்தாரா? ஊர்வசி என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்கள்…
பக்குவப்பட்ட நடிப்பில் பளிச்சிடுகிறார் ஊர்வசி. மாலைக்கண் உடைய மகனுக்காக கண்கலங்குவதும் விநாயகர் சிலைக்காக ஏங்குவதும் என தன் அனுபவ நடிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.
குரு சோமசுந்தரம் ஏதோ ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்.
கலையரசன் திருடனாக காட்டப்பட்டாலும் அவருடைய காட்சிகள் படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. மெதுவாக நகரும் திரைக்கதையில் கலையரசனின் நடிப்பு களை கட்டி உள்ளது.
ஸ்பெஷல் கண்ணாடி அணிந்து தான் நினைத்ததை சாதிக்கிறார் நாயகன் பாலு வர்கீஸ்.. இவரது காட்சிகளில் கொஞ்சம் வேகம் கூட்டி இருந்தால் திரைக்கதையில் வேகம் எடுத்து இருக்கும்
சிலைக்கு விலைபேசும் அபிஜா சிவகலா, அவர் உதவியாளர் மணிகண்டன் ஆச்சாரி, கலையரசன் ஜோடியான மிருதுளா ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.
டெக்னீஷியன்கள்…
ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு கேரள பகுதியை சென்னையாக காட்ட முயற்சித்திருக்கிறது. இதுதான் படத்தை ரசிகர்களிடம் ஒன்ற விமுயற்சித்துள்ளது.
முழுக்க முழுக்க இது கேரளாவை காட்டி இருக்கலாம் அல்லது கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி உள்ளிட்டவைகளை காட்டி இருக்கலாம். சென்னை கேரளா என எங்கோ செல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது நெருடலாக உள்ளது.
இசையமைப்பாளர் சுப்ரமணியன் கே.வி-இன் இசை படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்துள்ளது
அச்சு விஜயணின் படத்தொகுப்பு தொகுப்புதான் இந்த திரைக்கதைக்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் படத்தை பார்ப்பதற்கு போதுமானதாக அமைந்திருக்கும்
விநாயகர் சிலையை மையமாக வைத்து சமூக நீதி கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம்.
என் பெயரில் கடை வைக்கலாம், ஆனால் நான் தான் இங்கு கடை வைக்க முடியாது. காரணம் நான் திருடன்.. என கலையரசன் பேசும் வசனங்கள் கவனிக்க வைக்கிறது.
அடுத்தவர் வீட்டில் திருடுவது என்றால் கடினம். தன் வீட்டில் எளிதாக திருடி இருக்கலாம்.. காருக்குள் சிலையை வைப்பது.. சிசிடிவி இருப்பதால் பின்னர அதை எடுக்க முடியாமல் தவிப்பது என காட்சிகளை நீட்ட்ட்ட்ட்டி இருப்பதால் போர் அடிக்கிறது மேலும் அதில் பெரிதாக சுவாரசியமும் இல்லை என்பது தான் வருத்தம்.
ஆக இந்த சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்.. கண்ணாமூச்சி விநாயகர்
Charles Enterprises movie review and rating in tamil