800 பட விமர்சனம்.. முத்தையா முரளிதரனின் சரித்திர கதை

800 பட விமர்சனம்.. முத்தையா முரளிதரனின் சரித்திர கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னோட்டம்…

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை `800′ என்ற பெயரில் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கனிமொழி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

முதலில் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க இருந்தார். அதுபோல நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு வலுத்தது.

ஈழத்தில் நடைபெற்ற போரின்போது, சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தமிழீழப் (விடுதலைப்புலிகள்) போராளிகளை விமர்சித்து பேசியவர் முத்தையா முரளிதரன். எனவே, முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே விலகினார்.

இந்த 800 படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பட நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.

கதைக்களம்..

நடிகர்கள் நாசரும் ஹரிகிருஷ்ணனும் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் முத்தையா முரளிதரன் படைத்த சாதனை சந்திந்த சோதனை ஆகியவை குறித்து உரையாடி கொண்டிருப்பதாக கதை நகர்கிறது.

பெரும்பாலும் ஒரு விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் போட்டிகளும் அவர்களின் வாழ்க்கை முறையும் ஏழ்மை வறுமை ஆகியவை தான் எதிரியாக உருவெடுத்து இருந்திருக்கும்.

ஆனால் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை பொருத்தவரை அவர் வாழ்ந்த இலங்கையும் அதில் அவ்வப்போது நடைபெறும் போர்க்களமும் அவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருந்தன.

மேட்ச் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென எழும் வெடிச்சத்தம் துப்பாக்கிச் சூடு மற்றும் சிங்களர்கள் போராட்டம் விடுதலைப் புலிகளின் போராட்டம் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி.

சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட முத்தையா முரளிதரன் எதிர்கொண்ட சவால்கள் பின்னர் படிப்படியாக முன்னேறி அவர் படைத்த சாதனைகள் என அனைத்தையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

இலங்கையை தாண்டி நடைபெற்ற போட்டிகளுக்காக அவர் இந்தியா வந்தது ஆஸ்திரேலியா சென்றது என அனைத்தையும் நாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி.

அவரின் இல்லற வாழ்க்கை.. சந்தித்த பிரச்சனைகள்.. வளைந்த முழங்கை.. பங்கேற்ற போட்டிகள்.. என அனைத்தையும் சுவாரசியமாக கொடுத்துள்ளனர்.

கேரக்டர்கள்…

கிரிக்கெட் போட்டி வாய்ப்புகள் அமைந்தாலும் அதில் ஏற்படும் தடைகள் பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப தனது உடல் மொழியை மாற்றி கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார் நாயகன் மதுர் மிட்டல்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நரேன் தோன்றியிருக்கிறார். இலங்கைத் தமிழ் கலந்த பாஷையை நரேன் பேசும்போது பிரபாகரன் பேசும் உணர்வை தருகிறது.

தலைவர் பிரபாகரனை மதுர்மிட்டல் சந்திக்கும்போது ‘ஆயுதத்தை எதிர்க்க ஆயுதம் ஏந்துவது சரியா?’ என கேட்கிறார். அந்த துணிச்சல் பாராட்டுக்குரியது.

அந்த நேரத்தில்.. மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும்போது கிரிக்கெட் விளையாடுவது எப்படி சரியாக இருக்கும் ? என பிரபாகரன் கேட்பது சாட்டையடி.

ஒரு தமிழனாக வளர்ந்து இலங்கை நாட்டுக்காக அவர் விளையாடும்போது இரு இனத்திற்காகவும் அவர் பேசும் வசனங்கள் அவரின் நடுநிலையை காட்டுகிறது.

மேலும் ஷேன் வார்னே, கபில்தேவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

முத்தையா முரளிதரனின் அப்பாவாக வேல ராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், பாட்டியாக வடிவுக்கரசி, குட்டி பையன் முரளியாக சிறுவன் ரித்விக், இளவயது முத்தையா முரளியாக பிரித்வி, கிரிக்கெட் கோச்சாக சரத் லோகிதஸ்வா, விடுதலைப்புலி பிரபாகரனாக நரேன், கிரிக்கெட் வீரர் மலிங்காவாக காஸ்ட்யூமர் சத்யா என அனைத்தும் கச்சிதம். கதையில் மட்டும் கவனம் செலுத்தாமல் கேரக்டர் தேர்விலும் இயக்குனர் அக்கறை காட்டி இருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

டெக்னீசியன்கள்…

ஜிப்ரான் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

1980 – 90களில் அமைந்திருந்த கிரிக்கெட் ஸ்டேடியம்.. அப்போது பயன்படுத்திய கார்கள்.. உடைகள், கிரிக்கெட் யூனிபார்ம் என அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார் கலை இயக்குநர்.

முக்கியமாக முத்தையா முரளிதரன் பங்கேற்ற போட்டிகள் நடைபெறும் இடங்கள் நடைபெற்ற சம்பவங்கள் என அனைத்தையும் திரையில் வார்த்தைகளாக காட்டுவதால் படத்தை எளிதில் புரிந்து கொண்டு அதனுடன் பயணிக்க முடிகிறது.

பின்னணி இசை ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கிறது. ஒளிப்பதிவு காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரனின் பௌலிங் ஆக்‌ஷன் சர்ச்சை, போட்டிக்கு வந்த தடை, பின்னர் மீண்டு வந்தது ஆகிய சம்பவங்களை அழகாக படமாக்கி இருக்கின்றனர்.

பல சர்ச்சைகள் பல தடைகளை தாண்டி சாதனை படைத்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும்போது எவருடைய மனதும் புண்படாமல் சர்ச்சையை உருவாக்காமல் ஸ்ரீபதி இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

ஆக 800 படம்… முத்தையா முரளிதரனின் சரித்திர கதை

800 movie review and rating in tamil

எனக்கு என்டே கிடையாது விமர்சனம்.. 4/5..; பார்ட் 2 எப்போ வரும்

எனக்கு என்டே கிடையாது விமர்சனம்.. 4/5..; பார்ட் 2 எப்போ வரும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

நாயகி ஸ்வயம் சித்தா.. பணக்கார பெண்மணி. ஹைடெக் லைஃப் & நைட் பார்ட்டி இரவு பார்ட்டியை முடித்துவிட்டு வெளியே வந்து கார் புக்கிங் செய்கிறார்.

அவர் வீட்டுக்கு பயணிக்கும் வழியில் கார் டிரைவருடன் நட்பாக பேசுகிறார். இதனையடுத்து வீட்டில் கணவர் இல்லை வா என்னோடு வந்து சரக்கு அடிக்கலாம் என அழைக்கிறார். ஒரு பிகர் அழைக்கும்போது நாயகன் விக்ரம் ரமேஷும் ஓகே சொல்கிறார்.

நைட்டு.. போதை.. தனிமை அதிகமாகவே இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். காலையில் நாயகன் எழுந்து பார்க்கும் போது நாயகி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

வீட்டில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கும் போது தான் அந்த வீட்டிற்கு சாவி இல்லை.. பாஸ்வேர்டு லாக் மட்டும் தான் இருக்கிறது என்பதை அறிகிறார். அப்போது அங்கே வேறு ஒரு திருடனும் இருக்கிறான். அவர்தான் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன்.

இருவரும் ஒரு வழியாக பேசி வெளியே செல்ல நினைக்கும் போது அரசியல்வாதி மஸ்தான் உள்ளே வருகிறார். பின்னர் தான் மூவரும் வீட்டில் சிக்கிக் கொண்டதை அறிந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

நாயகி எப்படி இறந்தார்? வீட்டில் இருந்து தப்பித்தார்களா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்..

படத்தின் நாயகன் இயக்குனர் என இரண்டு பொறுப்புகளையும் எடுத்து படத்திற்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறார் விக்ரம் ரமேஷ்.

நாயகி ஸ்வயம் சித்தா.. கொஞ்ச நேரம் தான் என்றாலும் அவரும் போதை ஏற்றி நம்மையும் போதைக்கு உள்ளாக்குகிறார்.

விக்ரம் ரமேஷ், கார்த்திக் வெங்கட்ராமன் & சிவக்குமார் ஆகிய மூவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். விக்ரம் ரமேஷ் ஸ்மார்ட்டாக இருக்கிறார். இனி இவருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் சின்ன கேரக்டர் என்றாலும் கவனிக்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார். துருதுரு இளைஞராக தன்னை வெளிக்காட்டி இருக்கிறார்.

அரசியல்வாதி சிவக்குமார் நானும் சளைத்தவன் அல்ல என போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

டெக்னீசியன்ஸ்…

பொதுவாகவே ஒரு படம் ஹிட்டு கொடுத்தால் அடுத்த படத்தை எடுக்கும்போது ஃப்ரம் தி டைரக்டர் ஆப் என்று போஸ்டரில் பெயரிடுவார்கள். ஆனால் முதல் படத்திலேயே ஃப்ரம் தி டைரக்டர் ஆப் என்று இந்த படத்தின் பெயரை போடுகிறார்கள். இதிலிருந்து அவர்களின் நம்பிக்கை தெரிகிறது.

அது மட்டும் இல்லாமல் டைட்டில் கார்டிலும் வித்தியாசம் காட்டப்படுகிறது. இடையிடையே வந்து செல்லும் டைட்டில் கார்டுகளும் ரசிக்க வைக்கிறது.

தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்ய கலாச்சரண் இசையமைத்துள்ளார். ஒரே அறையில் படமாக்கினாலும் பல கேமரா ஆங்கிள்கள் கொடுத்து காட்சியை ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். அதுபோல இறைச்சல் இசையை கொடுக்காமல் இதமாக கொடுத்து நம்மை உற்சாகமூட்டுகிறார் இசையமைப்பாளர்.

பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் இந்த படத்தை பார்த்து ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் என்பவர் வெளியிடுகிறார்.

ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார்.

ஆக… எனக்கு என்டே கிடையாது.. இந்தப் படத்திற்கு எண்டு இருந்தாலும் பார்ட் 2 எப்போது வரும்? என இறுதியாக கேட்க வைக்கிறார் இயக்குனர் விக்ரம் ரமேஷ்.

Enaku Endey Kidaiyaathu movie review and rating in tamil

தி ரோடு விமர்சனம் 3.5/5… நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தி ரோடு விமர்சனம் 3.5/5… நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் வசீகரன் இயக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் ‘தி ரோடு’. இதில் திரிஷா, மியா ஜார்ஜ், டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, செம்மலர் அன்னம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

கிராமத்து ஆசாமி வேல ராமமூர்த்தி. இவரது மகன் ‘டான்சிங் ரோஸ் புகழ்’ சபீர் இவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அங்கே பயிலும் ஒரு மாணவி இவரை காதலிக்கிறார்.

ஆனால் நான் ஒரு ஆசிரியர்.. உன்னை காதலிக்க முடியாது என சபீர் சொல்ல அவரை பழிவாங்க பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளிக்கிறார் மாணவி.

இதனையடுத்து சபீர் வேலை போகிறது. பிறகு வேறு வேலை தேடி செல்கிறார் சபீர். அரசு வேலைக்கு பணம் கொடுத்து அரசியல்வாதியிடம் ஏமாந்து விடுகிறார்.

இப்படியாக விரக்தியில் இருக்கிறார் ஷபீர். அடுத்ததாக என்ன செய்தார்.?

இந்தக் கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கத்தில்.. நாயகி த்ரிஷா அவரது கணவர் சந்தோஷ பிரதாப் இவர்களின் மகன் கவின். த்ரிஷா கர்ப்பமாக இருப்பதால் அவரை விட்டுவிட்டு தன் மகனின் பிறந்தநாளை கன்னியாகுமரியில் கொண்டாட ரோடு வழி பயணமாக செல்கின்றனர் சந்தோஷ் பிரதாப் மற்றும் கவின்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் நேசந்தி என்ற பகுதியருகே ஏற்படும் விபத்தில் மரணம் அடைகின்றனர்.

கணவன் மற்றும் மகனை இழந்த திரிஷா விபத்து நடந்து இடத்தை பார்வையிடும்போது அங்குள்ள மக்களை சந்திக்கிறார். அவர்கள் இந்த பகுதியில் இதுவரை பல விபத்தில் மரணங்கள் நடைபெற்றுள்ளன என்கின்றனர்.

இதனால் சந்தேகம் அடையும் த்ரிஷா தனது கணவருக்கு ஏற்பட்டது விபத்தா கொலையா என்பதை ஆராய விசாரணையில் இறங்குகின்றார். அதன் பின்னர் என்ன நடந்தது? ஷபீர் யார்? அதன் பிறகு என்ன செய்தார்? திரிஷாவுக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்ஸ்…

இடைவேளை வரை சாந்தமான த்ரிஷா இடைவேளைக்குப் பிறகு அதிரடி ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார். தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் காவல்துறையோ சட்டமோ கை கொடுக்காது நாமே களத்தில் இறங்கி போராடினால் தான் வெற்றி கிடைக்கும் என சிங்க பெண்ணாக நடித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவருக்கு தான் வலி தெரியும் மற்றவர்களுக்கு அந்த சம்பவம் ஒரு செய்தி என்பதை எம் எஸ் பாஸ்கர் பேசும் வசனம் காட்டுகிறது.

தோழிக்கு கை கொடுத்து கதைக்கும் கை கொடுத்து இருக்கிறார் மியா ஜார்ஜ். இவரது கணவராக விவேவ் பிரசன்னா. ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்.

வேல ராமமூர்த்தி & செம்மலர் அன்னம் ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

திரிஷாவின் கதை.. சபரின் கதை என மாற்றி மாற்றி காட்டிக் கொண்டே இருப்பதால் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்பது புரியவில்லை. ஆனால் கிளைமாக்ஸ் இல் அதற்கான விடை கொடுத்திருக்கிறார்.

இடைவேளை முடிந்து 1 1/2 நேரம் படம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நீளத்தை எடிட்டர் வெட்டியிருக்கலாம். ஒருவேளை பெரிய ரோடாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

சமீபகாலமாக ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் இதில் மாணவிக்கு ஆசிரியர் மீது மாணவி பாலியல் தொல்லை பொய் புகார் கொடுப்பது வித்தியாசமானது. இப்படியும் சில மாணவிகளா என புரிய வைக்கிறது?! கிளைமாக்ஸ்சில் இந்த கதையின் திருப்பம் எதிர்பாராத ஒன்று.

டெக்னீசியன்ஸ்…

ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சிவராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நெடுஞ்சாலை பயணம் நமக்கு நெடுந்தயரம் எனலாம். சாதாரணமாக காரில் ஜாலி ட்ரிப் என நினைக்கும் நாம் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கிறதா என வியக்க வைக்கிறது.

சாலை பயணமும் கல்லூரி காட்சிகளும் ஒளிப்பதிவாளர் கைவண்ணத்தில் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மிரட்டலான பின்னணி இசை கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ்.

அருண் வசீகரன் இயக்கியிருக்கும் இந்த படம் வித்தியாசமானது. அவர் அறிமுக இயக்குனர் என்றாலும் அது எங்கேயும் தெரியாத வண்ணம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருப்பது பாராட்டுக்குரியது.

ஆக… தி ரோடு.. நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தி ரோடு

The road movie review and rating in tamil

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்..; அப்படியென்ன தப்பில்லாத க்ரைம்.??

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்..; அப்படியென்ன தப்பில்லாத க்ரைம்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘இந்த கிரைம் தப்பில்ல’.

கதைக்களம்…

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இரண்டு கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். அதன் பின்னர் இறுதியாக இரண்டையும் இணைத்து ஒரு முடிச்சு போட்டு இருக்கிறார்.

ஒரு பக்கம்.. ஒரு பெண்ணை துரத்தி துரத்தி மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். அந்த நண்பர்களுக்கே தெரியாமல் தன் பெயரை மாற்றி சொல்லி மூவரையும் காதலிப்பதாக சொல்கிறார் நாயகி மேக்னா.

இந்த கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்… ஆடுகளம் நரேன் தலைமையில் சில இளைஞர்கள் சமூகத்திற்காக போராடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் காதலிப்பதாக சொன்ன 3 ஆண்களையும் ஒரு பாழடைந்த பங்களாவிற்கு வரச் சொல்கிறார் நாயகி மேக்னா. அங்கு மூவருக்கும் தண்டனை கொடுக்கப்படுகிறது.

அவர்கள் யார்? அவர்களை தண்டிக்க என்ன காரணம்.? இந்த பெண் யார்? ஆடுகளம் நரேன் அவரின் பங்கு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

அழகு மேனகையாக மேக்னா. தன் பெயருக்கு ஏற்ப அழகாக ஜொலிக்கிறார். ஆனால் அவர் 3 பேரை காதலிப்பதிலேயே அவரின் சூழ்ச்சி தெரிகிறது. இவரே கதையின் நாயகி என்பதால் கூடுதல் சிரமம் எடுத்து சிறந்த நடிப்பை கொடுத்திருக்கலாம். ஆனால்..??

மேக்னாவை சுற்றும் 3 ஆண்களுமே நாடகத்தனமான நடிப்பை கொடுத்துள்ளனர். நடிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை.

ஆடுகளம் நரேன் நன்றாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.. ஒரு காட்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்ற வாருங்கள் என நாயகி இவரை அழைக்கிறார். ஆனால் வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்கிறார். இப்படி ஒரு சமூக போராளி பேசுவாரா? என்று தெரியவில்லை.

ஒரு குற்றவாளியை தண்டிக்க நாமும் ஒரு குற்றம் செய்யலாம் என சொல்ல வருகிறது இந்தக் கிரைம் தப்பு இல்லை.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாலும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.. சட்டம் ஒழுங்கும் சரியில்லை.. காவல் துறையும் பெண்களை பாதுகாக்கவில்லை என சொல்கிறார் இயக்குனர் தேவகுமார்.

கற்பழிப்புக்கு நிரந்தர தீர்வு குற்றவாளிகளை தண்டிப்பது மட்டும்தான். எனவே தண்டிப்பவர்களுக்கு ஆதரவாக இந்த க்ரைம் தப்பில்லை என்று சொன்னாலும் அதை சொன்ன விதத்தில் திரைக்கதை அமைத்த விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவு பாடல்களும் பெரிதாக கை கொடுக்கவில்லை. படத்தின் படத்தொகுப்பாளரும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

ஆக இந்த கிரைம் தப்பில்லை.. படத்தை பார்க்கலேனாலும் தப்பில்லை..

Indha Crime Thappilla movie review and rating in tamil

ரத்தம் விமர்சனம் 3.75/5.. சத்தமில்லாத யுத்தம்

ரத்தம் விமர்சனம் 3.75/5.. சத்தமில்லாத யுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன் மனைவியை இழந்த விஜய் ஆண்டனி ஒரே மகளை பாசமாக வளர்த்து வருகிறார். இவரது தொழில் குதிரை வளர்ப்பது.

வட இந்தியாவில் வாழும் விஜய் ஆண்டனியை சந்திக்க வரும் நிழல்கள் ரவி அப்போது தன் மகன் கொல்லப்பட்டதை சொல்கிறார். நீ மீண்டும் சென்னைக்கு வந்து இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் செய்ய வேண்டும் என அழைக்கிறார்.

அதன்படி விஜய்ஆண்டனி வானம் என்ற பத்திரிகையில் மீண்டும் இணைகிறார். அங்கு கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறார் நந்திதா.

தன் நண்பன் செழியனை கொன்றவர் ஒரு நடிகரின் ரசிகர் என்றாலும் அந்த கொலையில் சந்தேகம் இருப்பதை அறிந்து மீண்டும் அது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி.

செழியன் கொலை போலவே அடுத்தடுத்து கொலைகள் நடக்கவே இவை எல்லாம் ஒரே நெட்வொர்க்கில் நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார் விஜய்.

அப்படி என்றால் அந்த நெட்வொர்க்கின் தலைவன் யார்? அவனின் நோக்கம் என்ன?. பத்திரிகையால் என்ன செய்ய முடிந்தது? மீடியா பவரை காட்டினாரா விஜய் ஆண்டனி? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இடைவேளை வரை நீண்ட தாடி இறுக்கமான முகம் என தன் வழக்கமான பாணியில் அமைதியாக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் கொலை வழக்கு வேகம் எடுக்கவே அதற்கு ஏற்ப ஷேவ் செய்து முறுக்கிய மீசையுடன் வெரைப்பாக காணப்படுகிறார்.

விசாரணையில் வீரம் முக்கியம் இல்லை. விவேகமே முக்கியம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு பிரேமிலும் தன் பாடி லாங்குவேஜில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நந்திதா & ரம்யா நம்பீசன் என இரண்டு அழகிய ஹீரோயின்கள் இருந்தாலும் அதிகமாக ஸ்கோர் செய்வது மகிமா நம்பியார். எவருமே எதிர்பாராத கேரக்டரில் மலைக்க வைக்கிறார் மஹிமா.

வாடகைக்கு வீடு பார்க்க வரும் விஜய் ஆண்டனியிடம் மகிமா.. அவர் யார் என்று தெரிந்து பேசும் காட்சிகள் வேற லெவல். அதிலும் சிரித்துக் கொண்டே மிரட்டும் தோணியில் பேசும் நடிப்பு மகா நடிப்பு.

அழகுமிக்க ரம்யா ரசிக்க வைக்கிறார். அவரின் மாமா ஓ ஏ கே சுந்தர் பிளாஷ்பேக் காட்சியை சொல்லும்போது கண்கலங்க வைக்கிறார் ரம்யா.

ஸ்டைலிஷ் ஆன உடைகளுடன் அழகிய கண்ணாடி போட்டு நம்மை அசர வைக்கிறார் நந்திதா. இப்படி ஒரு பியூட்டி நம் அருகே இருந்தால் தாராளமாக ஓவர் டூட்டி பார்க்கலாம் என ரிப்போர்ட்டர்களை நினைக்க வைப்பார்.

ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல் என அனைவரும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்துள்ளனர்.

வானம் என்ற பத்திரிகை நடத்தும் நபராக நிழல்கள் ரவி. அவரது குரலே தனித்துவமானது. அதற்கு ஏற்ப ஒரு பத்திரிக்கை அதிபராக நடிப்பில் கெத்து.

இன்றைய இளைஞர்கள் பத்திரிக்கை துறையில் சிறப்பாக செயல்பட நினைத்தாலும் எங்களைப் போன்ற நபர்களால் அவர்களால் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதை இன்றைய மீடியாக்களின் நிலையை சொல்லி இருக்கிறார்.

டெக்னீசியன்கள்…

ஒளிப்பதிவாளர் : கோபி அமர்நாத், இசையமைப்பாளர் : கண்ணன் நாராயணன்

படத்தொகுப்பாளர் : டி.எஸ்.சுரேஷ்

கலை இயக்குநர் : செந்தில் ராகவன் ஆகியோரது பணி நிறைவான ஒன்று.

ஒளிப்பதிவாளர் தன் பணியில் கச்சிதம். ஆனால் எடிட்டர் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு ஏற்ப காட்சிகளை வெட்டி இருக்கலாம்.

இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் பின்னணி இசை விறுவிறுப்பை அதிகரித்து க்ரைம் த்ரில்லர் படத்தை உணரவைக்கிறது.

பத்திரிக்கை நடத்தும் நபராக நிழல்கள் ரவி. அவருடைய வீட்டு பொருட்களில் வண்ணமும் பத்திரிக்கை ஆபீசின் வண்ணமும் ஒரே கலராக இருப்பதை கலை இயக்குனர் செந்தில் ராகவன் ரசனையில் காண முடிகிறது.

படத்திற்கு ரத்தம் என டைட்டில் வைக்கப்பட்டாலும் ரத்தத்திற்கு பெரிதாக வேலையில்லை.. அதுபோல யுத்தத்திற்கும் சத்தத்திற்கும் வேலை கொடுக்கவில்லை. ஆனாலும் டீசன்டாக ஒரு கிரைம் திரில்லரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சி எஸ் அமுதன்.

தமிழ் படம் 1&2 ஆகிய படங்களை இயக்கியவர் இவர்? என சந்தேகிக்கும் அளவிற்கு வித்தியாசமான திரைக்கதையை அமைத்திருக்கிறார். ஒரு போலீசுக்கு அந்த வட்டத்திற்குள் மட்டும்தான் விசாரணை. ஆனால் ஒரு ரிப்போர்ட்டருக்கு மாநிலம் நாடு முழுவதும் விசாரணை இருக்க வேண்டும் என்பதை தன் வசனங்கள் மூலம் நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அமுதன்.

ஜீவா நடித்த ‘கோ’ & விஜய்சேதுபதி நடித்த ‘கவண்’ ஆகிய படங்கள் பத்திரிகை துறையை பற்றி இருந்தாலும் ‘ரத்தம்’ படம் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசத்தை ஆழமாக சொல்லி இருக்கிறது.

முக்கியமாக இன்று சோசியல் மீடியாக்களில் அதிக அளவில் காணப்படும் மதவெறுப்பு அரசியல்… ஜாதி வெறுப்பு அரசியல்.. நடிகர்கள் ரசிகர்கள் மோதல் அரசியல்.. இதனால் தூண்டப்படும் விஷமிகள்.. இதற்கான நெட்வொர்க்.. அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என அனைத்தையும் அலசி இருக்கிறார் இயக்குனர் அமுதன்.

ஆக ரத்தம்.. சத்தமில்லாத யுத்தம்

Raththam movie review and rating in tamil

இறுகப்பற்று விமர்சனம் – 3.5/5.. உறவே உயிர்.!

இறுகப்பற்று விமர்சனம் – 3.5/5.. உறவே உயிர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமண தம்பதிகளின் காதலும் மோதலும் கலந்த கலவை ‘இறுகப்பற்று’.

கதைக்களம்..

3 தம்பதிகள்…

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு ஜோடி.

விதார்த் – அபர்னதி ஒரு ஜோடி..

ஸ்ரீ – சானியா ஐயப்பன் ஒரு ஜோடி..

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி வசதியான தம்பதிகள். இவர்களுக்கு குழந்தை இல்லை.

பிரச்னைகளுடன் வரும் தம்பதிகளுக்கு Couples Therapy’ கொடுக்கும் பணி செய்கிறார் ஷ்ரத்தா. எனவே தன் கணவருடன் சண்டை போடாமல் முன்னெச்சரிக்கையுடன் வாழ்கிறார் ஷ்ரத்தா.

விதார்த் – அபர்னதி தம்பதியருக்கு ஒரு கைக்குழந்தை. இவர்கள் நடுத்தர குடும்பம். மனைவி அபர்னதி குண்டாக இருப்பதால் விவகாரத்தை வேண்டும் என்கிறான் விதார்த்.

அடுத்த ஜோடி ஸ்ரீ – சானியா ஐயப்பன். இவர்கள் இளவயது தம்பதியர். இதில் ஸ்ரீ மீடியாவில் வேலை செய்கிறார். இல்லத்தரசியாக இருப்பதால் கணவன் அசிங்கப்படுத்தவே சானியா ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

இந்த ஜோடிகளுக்கு வில்லனே அவர்களின் ஈகோ மோதல்தான்..

இந்த தம்பதிகளிடையே சின்ன சின்ன மோதல்கள் எழவே பிரச்சனைகளை தீர்க்க ஷ்ரத்தாவிடம் செல்கின்றனர். அவர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயல ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஸ்ரத்தாவுக்கும் பிரச்சனை வருகிறது.

மற்றவர்கள் பிரச்சினைக்காக தன்னைத் தேடி வரும் போது தனக்கே ஒரு பிரச்சனை வருகிறதே என தவிக்கிறார் ஷ்ரத்தா. அதன்பிறகு அவர் என்ன செய்தார்.? என்பதுதான் படத்தின் மீதி கதை

கேரக்டர்கள்…

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஜோடியை சண்டையே போடாத ஹைடெக் தம்பதிகள். ஆனால் ஜோடிகளின் புரிதலை அறிய மொபைல் ஆப் கிரியேட் செய்த பின் ஏற்படும் மாற்றங்களை அழகாக சித்தரித்துள்ளார். அதன் பின்னர் விக்ரம் பிரபு காட்டும் ரியாக்சன் கணவனுக்கே உரித்தான கம்பீரம்.

முந்தைய படங்களில் ஆக்சனில் தூள் கிளப்பும் விக்ரம் பிரபு இதில் அமைதியின் உருவமாக வாழ்ந்திருக்கிறார்.

ஷ்ரத்தா-வின் கேரக்டர் சில நேரங்களில் ஓவர் அட்வைஸ்.. கொஞ்சம் கட்டிங் போட்டு இருக்கலாம். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது.

3 ஜோடிகள் காண்பிக்கப்பட்டாலும் நமக்கு நெருக்கமானவர்களாக விதார்த் – அபர்னதி ஜோடியை சொல்லலாம்.

குண்டாக இருப்பதால் மனைவியை விவகாரத்தை செய்யும் ஒரு ஐடி ஊழியர் பிரதிபலிக்கிறார் விதார்த். மேலும் லோன் கட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படும் ஆண்மகனை உரித்து வைத்திருக்கிறார.

நிஜத்தில் ஸ்லிம்மாக காணப்படும் அபர்னதி இந்த படத்திற்காக 15+ கிலோ எடையை கூட்டியது பாராட்டுக்குரியது. அதன்பின்னர் படம் முடிவதற்குள் உடலை ஸ்லிம்மாக்கி அசத்தியிருக்கிறார் அபர்னதி. இது வேற லெவல் அர்ப்பணிப்பு அபி.

சின்ன காரணத்துக்காக கணவன் விவகாரத்து கேட்கும் போது அபர்னதி உடைந்து நம்மையும் கண்கலங்க வைக்கிறார்.

இளம் வயது ஜோடி ஸ்ரீ – சானியா. என்னதான் பெண் புத்திசாலியாக இருந்தாலும் கணவனிடம் காட்டிக் கொள்ளாத சாந்தமான பெண்ணாக சானியா. ஒரு கட்டத்தில் இவர் விவாகரத்து கேட்கும் காட்சி நல்ல ட்விஸ்ட்.

மீடியா வேலையில் மனோபாலா தவறுகளை சுட்டிக் காட்டும் போது தன் தவறை உணர்கிறார் நாயகன் ஸ்ரீ. மனைவிக்கு கொடுத்த வலிகளை ஸ்ரீ உணரும் காட்சி ஓகே. ஆனால் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம்.

ஸ்ரீ – மனோபாலா காட்சிகள் சிரிப்பு ரகம்.. ரியலி மிஸ் யூ மனோபாலா சார்.

மனைவியை அறிவு கெட்ட முண்டம் என திட்டியதற்கு சாரி கேட்டுவிட்டு பின்னர் போனை வைக்கும்போது முண்டம் என திட்டும் காட்சி சிரிப்பலை.

டெக்னீசியன்கள்…

ஜஸ்டின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கார்த்திக் நேத்தா எழுதிய பாடல் வரிகள் கை கொடுத்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினாய் கவனிக்க மணிகண்டன் பாலாஜி படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இடைவேளைக்கு பிறகு நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் எடிட்டர்.

வடிவேலு நடிப்பில் 8 வருடங்களுக்கு முன்பு வெளியான தெனாலிராமன் & எலி ஆகிய படங்களை இயக்கியவர் தான் இந்த யுவராஜ் தயாளன். தற்போது வேறு ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தம்பதிகளுக்கு வாழ்வியல் இடைவெளியை குறைத்து இருக்கிறார்.

உண்மையான சந்தோஷம் என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை.. என்ன சாப்பிட்டாய்? என்ன செய்கிறாய்? சுற்றுலா செல்வது… இரவில் பயணிப்பது.. வீட்டு வேலையில் கை கொடுப்பது.. என பாடம் எடுத்துள்ளார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.

படத்தில் வில்லனே இல்லை. ஆனால் தம்பதிகளுக்குள் புரிதல் இல்லை என்றால் அதுவே வில்லன் என் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ்.

ஆக இறுகப்பற்று.. உறவே உயிர்..

Irugapatru movie review and rating in tamil

More Articles
Follows