தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொதுவாகவே மக்கள் பயன்படுத்தும் ஒரு ஒரு சொல்.. கணவன் மனைவி பிரச்சினை இருந்தால் நடுவே யாரும் வரக்கூடாது என்பதுதான்.. ஒருவேளை மூன்றாம் மனிதன் வந்தால் என்னவாகும் என்பதுதான் இந்த படத்தின் கதை கரு.
ஸ்டோரி…
கணவர் விதார்த்.. மனைவி பூர்ணா..
இவர்களின் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் திடீரென பிரச்சனை வருகிறது.. கணவர் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என வருத்தத்தில் இருக்கிறார் மனைவி பூர்ணா.. அப்போது பூர்ணாவின் வாழ்க்கையில் நட்பாக நுழைகிறார் திரிகுண்.. இருவருக்கும் நாளடைவில் நெருக்கம் ஏற்படுகிறது..
இந்த நிலையில் திடீரென மனம் திருந்திய விதார்த் மீண்டும் பூர்ணாவின் வாழ்க்கையில் மெல்ல நுழைகிறார்..
ஒரு பக்கம் கணவன்.. ஒரு பக்கம் நண்பன் என்ன செய்தார் பூர்ணா? மீண்டும் தம்பதியரின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததா? பூர்ணா என்ன செய்தார்?நண்பன் என்ன செய்தான்? கணவர் என்ன செய்தான்? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
விதார்த்.. பூர்ணா.. திரிகுண் இவர்கள் மூவரும் தான் படத்தின் ஆணிவேர் இவர்கள் சுற்றிய கதைகளத்தை திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆதித்யா.
ஆனாலும் சுபாஸ்ரீ மற்ற நட்சத்திரங்கள் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.. முக்கியமாக இந்த படத்தின் இசையமைப்பாளர் மிஷ்கினும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் அவரது கேரக்டர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை..
டெவில் பட சந்திப்பில் தான் மிஷ்கினின் பள்ளி மாணவி என்று பேசி இருந்தார் பூர்ணா.. அன்று அவர் சொன்னது மிகையாக காணப்பட்டாலும் அதை நிரூபித்திருக்கிறார் பூர்ணா..
கணவன் செய்த துரோகம்.. புதிய நண்பன் நுழைந்த வாழ்க்கை.. தவிப்பு ஏக்கம் சஞ்சலம் சபலம் என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக தெறிக்கவிட்டுள்ளார் பூர்ணா..
கதையின் நாயகன் பூர்ணாவின் கணவன் என்ற சராசரி கேரக்டர் என்றாலும் அதை தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்திருக்கிறார்.. தன்னுடைய வித்தியாசமான முயற்சிகளை அவர் எடுப்பது பாராட்டுக்குரியது..
மூன்றாவதாக திரிகுண்.. விதார்த் மற்றும் பூர்ணாவுக்கு போட்டியாக நடிப்பு இல்லை என்றாலும் அதற்கு ஈடான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்..
Director : Aathityaa
Music : Director Mysskin
Producer : R. Radhakrishnan & S. ஹரி
படத்தொகுப்பாளர் இளையராஜா..
ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார்.. பொதுவாகவே மிஸ்கின் படங்கள் என்றால் இருட்டில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல..
இசையமைப்பாளராக மிஷ்கினுக்கு இது முதல் படம் என்றாலும் அதற்கான இசை பயிற்சியை முறையாக கற்று இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் பாராட்டுப்படியாக இருக்கிறது..
இந்தப் படத்தின் இயக்குனர் ஆதித்யா மிஷ்கினின் தம்பி ஆவார்.. ஆனாலும் அவர் உதவி இயக்குனராகவே இருந்துதான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
99% எவரும் நல்லவர் இல்லை.. நல்லவராக வாழ்வதும் கெட்டவராக மாறுவதும்அவரது சூழ்நிலையை பொறுத்து தான்.
தான் எதிர்பார்க்கும் அன்பு அரவணைப்பு பாசம் எதுவும் தன் துணைவனிடமிருந்து கிடைக்காத நிலையில் ஒரு மனைவி என்ன செய்வாள் என்பதை தான் பூர்ணாவின் கேரக்டர் செய்திருக்கிறது. அது எந்த தவறான கண்ணோட்டமும் இல்லாமல் அழகாகவே சொல்லி இருக்கிறார் ஆதித்யா.
அதேபோல தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது தெய்வீக குணம் எனவும் ஒரு கருத்தை சொல்லி இந்த டெவிலுக்கு நியாயம் சேர்த்து இருக்கிறார்.
ஆக இந்த படத்திற்கு ஏன் டெவில்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. எது நிஜமான பேய் என்பதை கிளைமாக்ஸ் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா.
Devil movie review and rating in tamil