First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்

First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அக்சய் கிருஷ்ணன், ராதிகா, சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய்பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், அஞ்சலி உபசனா மற்றும் பலர்.
ஒளிப்பதிவு & இயக்கம் – தினேஷ் பாபு
எடிட்டர் – அபிலாஷ் பாலசந்திரன்
இசை – ஹரி பிரசாத்
சொந்த உண்மை கதை மற்றும் தயாரிப்பு – பி.என். பலராம்
பிஆர்ஓ – விஜய்முரளி மற்றும் சக்தி சரவணன்
வெளியீடு – ஜெனிஷ்

கதைக்களம்..

நாயகன் அக்சய் மற்றும் நாயகி ராதிகா இருவரும் ஒரே காலேஜில் படிக்கின்றனர். இருவருக்கும் காதலும் மலர்கிறது.

நாயகன் வீட்டில் இந்த காதலுக்கு ஆதரவு இருந்தாலும், நாயகி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

ஒரு நாள் காலேஜ் கல்சுரல் புரோம்கிராம்கள் நடக்கும் போது நாயகன் மயங்கி விழுகிறான்.

பின்னர் தான் அவனுக்கு இதயத்தை சுற்றி ஒரு கட்டி இருப்பது தெரிய வருகிறது. கட்டியை அகற்றினாலும் அகற்றாவிட்டாலும் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால் கடவுள் குருவாயூரப்பனையே நம்பி உள்ளனர் பெற்றோர். அப்போதுதான் ஒரு அதிசயம் நடக்கிறது.

அது என்ன? ஹீரோ உயிர் பிழைத்தானா? அது எப்படி? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்..

இதுவொரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கமர்சியல் எதையும் கலக்காமல் அப்படியே சொல்ல முயற்சித்துள்ளனர்.

நாயகன் தான் அந்த நோயில் இருந்து குணமானவர். எனவே அவரையே நாயகனாக்கி அவரது அப்பா இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கில் வெளியிடுகிறார்.

தன் மகன் பிழைக்க காரணமான குருவாயூரப்பன் மகிமை இந்த நாட்டுக்கு தெரிய வேண்டும் என்பதால் இதை தயாரித்துள்ளார். எனவே அவரை வெகுவாக பாராட்டலாம்.

நாயகன் நாயகி இருவரும் அழகான தேர்வு. காதல் மற்றும் நடனத்தில் அசத்துகின்றனர். நாயகியின் கண்களும் கூந்தலும் நம்மை ஈர்க்கின்றன. இவர்களின் நண்பர்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

சாய்குமார் மற்றும் சாந்தி கிருஷ்ணா இருவரும் நாயகன் பெற்றோர்களாக நடித்துள்ளனர். ஒரு பிள்ளைக்கு தீராத நோய் இருந்தால் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை தங்கள் உணர்வுகளில் கொடுத்துள்ளனர்.

ஓரிரு பாடல்கள் ரசிகர்களை கவரும். பின்னணி இசை ஒரு சில இடங்களில் பேசப்படும் வகையில் உள்ளது.

இரண்டாம் பாதி முழுவதும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சென்றதால் அதில் நாடகத்தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே கமர்சியல் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை கொடுக்கும்.

தன் மகனின் உயிரை காப்பாற்றிய கடவுள் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இந்த படத்தை எடுத்துள்ளார் பலராம். இன்னும் சிறப்பாக திரைக்கதை அமைத்து எடுத்திருந்தால் எல்லாரையும் இந்த கிருஷ்ணன் கவர்ந்திருப்பார்.

குருவாயூரப்பன் மகிமையை உணர இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ஆக மொத்தம்.. கிருஷ்ணம்.. குருவாயூரப்பன் மகிமை

Krishnam review rating

நடைபாதை வாசிகளின் வலி… ‘கபிலவஸ்து’ விமர்சனம்

நடைபாதை வாசிகளின் வலி… ‘கபிலவஸ்து’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பொது கட்டண கழிப்பிடத்தை கவனித்து வருகிறார் நாயகன் நேசம் முரளி. இவரின் அம்மா மீரா கிருஷ்ணன் தவறான வழியில் இவரை பெற்று இங்கு இவரை போட்டு விட்டு சென்றுவிட்டதால் அந்த கக்கூஸை கூட கோயிலாக நினைத்து வழிப்பட்டு வருகிறார்.

சாம்பிராணி போடுவது முதல் நாயகி நந்தினியுடன் காதல் செய்வது வரை எல்லாத்தையும் அந்த கழிப்பிடத்திலேயே செய்து வருகிறார்.

அந்த கழிப்பிடத்தில் அருகே உள்ள நடைபாதையிலேயே நாயகி உள்பட பலரும் வசிக்கின்றனர்.

இதுபோல் ஒரு சிறுமியும் பாட்டியுடன் வசிக்கிறார். பள்ளி சென்று நன்றாக பயிலும் இவர், ஒரு வாடகை வீட்டிலாவது வசிக்க நினைக்கிறார். இதனால் இவர்களை அனைவரும் ஒரு வாடகை வீடு பிடிக்கவும் அட்வான்ஸ் கொடுக்கவும் படாதப்பாடு படுகின்றனர்.

அந்த சிறுமி படித்து முன்னேறினால் தாங்கள் அனைவரும் முன்னேறி விடலாம் என்பதால் ஒரு தங்கையாக நினைத்து சிறுமிக்கு நாயகன் உதவுகிறார்.

இவர்கள் நடைபாதை வாசிகள் என்பதாலும் இவர்களுக்கு யாருமில்லை என்பதாலும் அடிக்கடி போலீஸ் இவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிறையில் அடைக்கின்றனர்.

ஒரு நாள் ஒரு பிரச்சினையில் நாயகனை போலீஸ் 2 வருடம் சிறையில் அடைத்து விடுகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? சிறுமி படித்தாரா? கழிப்பிடம் என்ன ஆனது? காதலி என்ன ஆனார்? வாடகை வீட்டுக்கு சென்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தவறான வழியில் பிறக்கும் படும் அவலநிலையை அழகாக சொல்லி இருக்கிறார் நேசம் முரளி. இவரே இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

அடிக்கடி கழிப்பிடத்தை காட்டுவதும், அதற்கு பூஜை செய்வதும் எல்லாம் ரொம்ப எரிச்சலை உண்டாக்குகிறது.

சிறுமி ஐஸ்வர்யா அனைவரையும் கவர்கிறார். இவரது கேரக்டர் நம் மனதில் நிறைந்கு இருக்கும். சின்ன வயதிலயே முன்னேற துடிக்கும் இவரது கேரக்டர் பேசப்படும் வகையில் உள்ளது.

போலீஸ் அதிகாரியாக மன்சூர் அலிகான் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

நாயகி நந்தினியை பாராட்டியே ஆகவேண்டும். படம் முழுவதும் கழிப்பிடத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் எப்படி எல்லாம் நடித்தார்களோ? தெரியவில்லை. ஆனால் அவர்களின் சகிப்புத்தன்மையை பாராட்ட வேண்டும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலம். அதுபோல் பட பாடல் வரிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.

உங்களுக்கு கழிப்பிடம் எங்களுக்கு இருப்பிடம் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.

உதவி செய்ய அனுமதி கேட்கனுமா? என்று சிறுமி கேட்கும் வசனங்கள் நம்மை ஈர்க்கிறது.

விஜியின் ஒளிப்பதிவு பிளாட்பாரத்தில் வாழ்பவர்களை யதார்த்தம் மீறாமல் காட்டியிருக்கிறார்.

30 வருடத்திற்கு முன்பு தவறவிட்ட குழந்தையை இப்போது தாய் தேடி வர என்ன காரணம்? என்பதை தெளிவாக சொல்லவில்லை.

தான் பிறந்த இடம் என்பதால் டாய்லெட்டில் உள்ள மலத்தை கையால் க்ளீன் செய்வது எல்லாம் முகம் சுழிக்க வைக்கிறது.

கபிலவஸ்து என்றால் புத்தர் இடம் என்பது நமக்கு தெரிந்திருக்கலாம். எனவே படத்தையும் புத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் எடுத்துள்ளனர்.

மொத்தத்தில் ‘கபிலவஸ்து’ நடைபாதை வாசிகளின் வலி

Kabilavasthu review rating

ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்

ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

நாயகன் கௌசிக். இவர் போலீஸ் அதிகாரியின் மகன். தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி உற்சாகமாக இருக்கிறார்.

அப்போது ஒரு பிரச்னையில் இருக்கும் நாயகி அக்னி பவருக்கு உதவ நேரிடுகிறது.

என்ன காரணம் என்பதை கூட அறியாமல் அக்னி பவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு நண்பர்களுடன் ஆந்திரா வரை பயணிக்கிறார்.

அக்னி பவரை கொல்ல கராத்தே கோபால் கும்பல் இந்த காரை துரத்துகிறது.

பின்னர் தான் காரணம் தெரிகிறது. அதன்பின்னர் என்ன ஆனது? நாயகியை காப்பாற்றினாரா? என்ன பிரச்சினை அது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஆக்சன், டான்ஸ் மட்டுமே போதும் என நினைத்துவிட்டார் போல நாயகன் கௌசிக்.படம் முழுவதும் முகத்தை கோபமாகவே வைத்துள்ளார். குளிர்ச்சியான நாயகி இருந்தும் அவரிடம் ஒரு ரொமான்ஸ் கூட இல்லை. முடி மற்றும் தாடியை குறைத்து கொள்வது நல்லது.

அக்னி பவர் நாயகியின் ஆடை போலவே அவரது நடிப்பும் அரை குறைதான்.

கொல்ல திட்டமிடும் தலைவனாக நாசர் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பெரிதாக வேலையில்லை. இதுபோன்ற படங்களில் அவர் நடிப்பதை தவிர்க்கலாம்.

வில்லத்தனத்தில் நம்மையும் பயப்படும் வகையில் கத்து கத்து என்று மிரட்டி இருக்கிறார் கராத்தே கோபால். இவர் நிஜத்தில் நாயகன் கௌசிக்கின் தந்தையாவார். ஆனால் பார்ப்பதற்கு அண்ணன் போலவே இருக்கிறார். இவரது இன்னொரு மகனும் படத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் சரவணன், சங்கிலி முருகன் ஆகியோரும் உள்ளனர்.

கார் சேசிங் இடையில் காதல் மற்றும் பைட் என விறுவிறுப்பான திரைக்கதையை படமாக்க முயற்சித்துள்ளார் டைரக்டர் விஆர்ஆர். இவரே தான் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

படத்தில் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. லாங் சாட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

விஜய் சங்கர் இசையில் தாஜ்மஹால் பாடல் தாளம் போட வைக்கிறது. மோகன் ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

மொத்தத்தில் ‘ஸ்பாட்’… ஓவர் ஸ்பீடு

Spot movie review rating

கம்பீரமான கதிர்… சத்ரு விமர்சனம் 3.25/5

கம்பீரமான கதிர்… சத்ரு விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கதிர், ஸ்ருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், நீலிமா ராணி, மாரிமுத்து, லகுபரன் (வில்லன்), சுஜா வருணி மற்றும் பலர்.
இயக்கம் – நவீன் நஞ்சுண்டன்
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரீஷ்
பிஆர்ஓ – மௌனம் ரவி

கதைக்களம்…

சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் கதிர். இவருக்கு ஓர் அழகான காதலி ஸ்ரூஷ்டி டாங்கே. இவருக்கு அப்பா, அண்ணா, அண்ணி, குழந்தை என அழகான குடும்பம்.

இவரின் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் ஒரு கேஸ் வருகிறது.

அதாவது பெரிய பணக்கார வீட்டுக் குழந்தைகளை கடத்தி ஒரு கும்பல் பணம் பறிக்க முயல்கிறது.

ஒரு குழந்தையை கடத்தி ரூ. 5 கோடி வரை கேட்கின்றனர். பெற்றோர் பணம் தர சம்மதிக்க அந்த பண்த்தை கொண்டு செல்கிறார் போலீஸ் கதிர்.

ஆனால் பணம் கொடுப்பது போல் சென்று அந்த கும்பலில் உள்ள ஒருவனை கொன்று விட்டு குழந்தையையும் பணத்தை மீட்டு வருகிறார்.

தங்கள் நண்பனை போலீஸ் கதிர் கொன்றதால் அவரின் குடும்ப உறுப்பினர்களை 24 மணி நேரத்திற்குள் கொல்ல திட்டமிடுகிறார் வில்லன் லகுபரன்.

இந்த சவாலை கதிரிடம் தெரியப்படுத்தவும் செய்கிறார்.

அதன்பின்னர் கதிர் என்ன செய்தார்? குடும்பத்தை காப்பாற்றினாரா? வில்லன் லகுபரன் சொன்னதை செய்தாரா? அந்த கும்பல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கம்பீரம், நேர்மை, என மிடுக்கான அதிகாரியாக கலக்கியிருக்கிறார் கதிர்.

பன்ச் டயலாக் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாகவும் அதே சமயம் கண்ணியம் தவறாக அதிகாரியாகவும் சிறப்பாக செய்துள்ளார் கதிர்.

ராட்டினம் பட ஹீரோ லகுபரன் தான் இப்படத்தில் வில்லன். பழிவாங்கத் துடிக்கும் அவரின் கண்கள், நண்பன் மீது பாசம் என தெறிக்க விட்டுள்ளார்.

லகுபரனுக்கு இனி வில்லன் வேடங்கள் அதிகம் வந்தாலும் ஆச்சரியமில்லை.

கதிரின் போலீஸ் நண்பர்களாக வரும் அர்ஜீன் ராம் நல்ல தேர்வு.

ஸ்ருஷ்டிக்கு பெரிதாக வேலையில்லை. அவருக்கு கொடுத்த சம்பளத்தை தயாரிப்பாளர் மிச்சம் செய்திருக்கலாம்.

இவர்களுடன் உயர் அதிகாரி மாரிமுத்து, அண்ணா பவன், அண்ணி நீலிமா ராணி, சுஜா வருணி ஆகியோர் தங்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு நாளில் நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதை என்பதால் படத்தில் பாடல்களை வைக்கவில்லை என்பதால் டைரக்டரை பாராட்டலாம்.

எனவே படத்தின் பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார் அம்ரீஷ். வில்லன் வரும்போது எல்லாம் வரும் பின்னணி இசை செம மிரட்டல்.

நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளதால் கதையில் சில பலவீனம் தெரிகிறது.

குழந்தையை கொல்ல திட்டமிடும் கொலைக்காரனை பார்த்த நர்ஸ் ஒருவர் இருங்க.. உங்கள மாட்டிவிடுறேன் என்று சொல்வது எல்லாம் நம்புப்படியாக இல்லை.

அதன் பின்னர் அந்த நர்ஸ் டிரெசை சுஜா வருணி போட்டுக் கொள்வதற்காகவே காட்சி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

அதுபோல் குழந்தையை அழைக்க செல்லும் பள்ளி பேருந்து காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.

போலீஸ் குடும்பத்தை வில்லன் மிரட்டுவது என வழக்கமான டெம்ப்ளேட் கதை இல்லாமல் இன்னும் மாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனாலும் விறுவிறுப்பான படத்தை கொடுத்த நவீன் நஞ்சுண்டைனை பாராட்டலாம்.

சத்ரு.. கம்பீரமான கதிர்

நீதி கிடைக்க வீதியில் போராடு… பூமராங் விமர்சனம் 3.25/5

நீதி கிடைக்க வீதியில் போராடு… பூமராங் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர் ஜே பாலாஜி, ரவி மரியா மற்றும் பலர்.
இயக்கம் – கண்ணன்
ஒளிப்பதிவு – பிரசன்னா குமார்
இசை – அர்ஜீன் ரெட்டி புகழ் ரதன்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

சிவா என்றொரு நபர் ஒரு தீ விபத்தில் தன் முகத்தை இழக்கிறார். அப்போது அதே மருத்துவமனையில் உயிரை விடும் நிலையில் இருக்கிறார் சக்தி (அதர்வா).

எனவே முகம் மாற்று அறுவைசிகிச்சையின் படி அதர்வாவின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர்.

இவரை காதலிக்கிறார் ஒரு நாயகி மேகா ஆகாஷ். இவரின் நண்பன் சதீஷ்.

இந்த புதிய முகத்தை பார்த்த சிலர் இவரை எங்கு பார்த்தாலும் கொல்ல துடிக்கின்றனர்.

இதுவரை யாருமே தனக்கு எதிரி இல்லாத நிலையில் இந்த முகத்தை பார்த்த இவர்கள் ஏன்? நம்மை கொல்ல வேண்டும் என அந்த காரணத்தை அறிய நினைக்கிறார் அதர்வா.

அதன்படி சில காரணத்தை புரிந்து திருச்சி செல்கிறார்.

அந்த ப்ளாஷ்பேக்கில் அதர்வா, ஆர் ஜே பாலாஜி, இந்துஜா இவர்கள் வருகின்றனர்.

ஐடி வேலையை திடீரென இழக்கும் இவர்கள் கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்ய முற்படுகின்றனர்.

அங்கு தண்ணீர் இல்லாத காரணத்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்து போராடுகிறார் அதர்வா. மக்கள் ஆதரவு பெறுகிறது.

இதனால் ரியல் எஸ்டேட் செய்யும் அரசியல்வாதி மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கோபத்தை சம்பாதிக்கிறார்.

இறுதியில் நதிகளை இணைத்தாரா? அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன செய்தனர்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அதர்வாவுக்கு ஒரு கேரக்டர்தான் என்றாலும் இரண்டு கேரக்டர் போல கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையும் சவாலாக ஏற்று அசத்தியிருக்கிறார் அதர்வா. இரண்டு நாயகிகள் இருந்து துளியும் இவரிடம் ரொமான்ஸ் இல்லை.

மேகா ஆகாஷ்க்கு பெரிதாக வேலையில்லை. டூயட் பாடிவிட்டு சில டயலாக்குகளை பேசி செல்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் வரும் இந்துஜாவுக்கு நிறைவான கேரக்டர். ஆனால் சில நேரம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.

சதீஷ் மற்றும் ஆர்ஜே பாலாஜியின் காமெடிகள் கைத்தட்டல்களை பெறுகிறது.

முக்கியமாக ஆர்.ஜே. பாலாஜியின் சோஷியல் மெசேஜ் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. அதர்வாவை விட இவர்தான் நிறைய அரசியல் பன்ச்க்களை பேசியிருக்கிறார். அனைத்தும் அசத்தல். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ரதன் இசையும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. ’முகையாழி’ பாடல் ரசிகர்கள் மனதை கவரும்.

பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல். அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை காட்டும்போது அந்த பசுமை காட்சி மற்றும் வறட்சி காட்சி இரண்டும் மனதை கவர்கிறது.

தேசமே பாடல் விவசாயிகளை கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது அருமை.

இயக்கம் பற்றிய அலசல்…

இவன் தந்திரன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த கண்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு கிராமத்தில் இருந்து தீர்வு சொல்ல முற்பட்டு இருக்கிறார்.

ஒரு ஆறில் இருந்து வெளியாகும் உபரி நீரை கடலில் கலக்க விடாமல் மற்றொரு கிராமத்திற்கு திருப்பினால் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதை அக்கறையுடன் சொல்லியுள்ள இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒன்றும் செய்யவில்லை என்று சமூக வலைத்தளங்களில் போராடாமல் வீதிக்கு வந்து போராடினால் நீதி கிடைக்கும் என ஆணித்தரமாக சொல்லி அடித்திருக்கிறார்.

முதல் பாதியில் கதை பெரிதாக இல்லை என்பதால் அதை ஒரு மணி நேரத்திற்குள் முடித்திருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

ஆனால் ஒரு அதர்வா மட்டுமே இருக்கும் போது இருவருக்கும் ஒரே சாயல் குரல் எப்படி? என்பதுதான் புரியவில்லை.

பூமராங்… நீதி கிடைக்க வீதியில் போராடு

Boomerang review rating

ஆண்களுக்கு எச்சரிக்கை… 90ML விமர்சனம் 3.25/5

ஆண்களுக்கு எச்சரிக்கை… 90ML விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஓவியா மற்றும் பலர்.
இயக்கம் – அனிதா உதீப் (அழகிய அசுரா)
ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா
இசை – சிம்பு
பிஆர்ஓ – யுவராஜ்

கதைக்களம்…

தன் அறிமுக காட்சியிலேயே சிகரெட் அடித்தப் படி ஆட்டோவில் வந்து இறங்குகிறார் ஓவியா.

தன் பாய் பிரெண்ட் உடன் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்கிறார். சரக்கு சிகெரட், ரொமான்ஸ், செக்ஸ் என தன் இஷ்டப்படி இருக்கிறார்.

அங்குள்ள 4 பெண்களின் (3 திருமணமானவர்கள்) நெருங்கி பழகுகிறார்.

தோழிகளில் ஒருவருக்கு மட்டும் திருமணமாகவில்லை. அப்போதுதான் அந்த பெண்ணின் காதல் பிரச்சினை தெரிய வருகிறது. அது என்ன பிரச்சினை, எப்படி தீர்த்து வைக்கிறார்.

அந்த பெண்களுடன் ஓவியா அடிக்கும் லூட்டியே 90 எம்.எல். படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்தையே தன் பக்கம் கவர்ந்தவர் ஓவியா. அப்போது வெட்டப்பட்ட ஹேர் ஸ்டைலுடன் இந்த படத்திலும் நடித்துள்ளார்.

ஆண்கள் மட்டும்தான் சரக்கு, கஞ்சா, சிகரெட் அடிக்கனுமா? நாங்களும் செய்வோம்ல என்று ஓபனாக பேசி மணிக்கு ஒரு முறை பாட்டில்களை ஓப்பன் செய்கிறார்.

சரக்கு அடித்துவிட்டு ஆண்கள் என்ன வெல்லாம் பேசுவார்கள்? என்பதை எல்லாம் பெண்களும் பேசுவார்கள்.. என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் பெண் இயக்குனர் அனிதா உதீப்.

மார்பு சைஸ் முதல் செக்ஸ் வரை அனைத்தையும் பேசுவார்கள் என்பதையும் ஓபனாக பேசி இளைஞர்களை சூடேற்றியிருக்கிறார்கள். மேலும் ஆண்கள் இல்லாமலும் செக்ஸ் செய்துக் கொள்ள லெஸ்பியன் இருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டார்கள். (அதான் இந்திய அரசே அதற்கு ஓகே சொல்லிவிட்டதே..)

ஓவியாவை விட அப்பார்ட்மெண்ட் பெண்களும் அழகாகவே இருக்கிறார்கள். அதிலும் தாமரை மற்றும் பாரு என இரண்டு ஆன்டிகள் ரசிகர்களை அதிகம் ஈர்க்கிறார்கள்.


தொழில்நுட்ப கலைஞர்கள்…

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்.

சிம்பு இசையில் மரண மட்டை, பீப் பிரியாணி பாடல்கள் பட்டைய கிளப்புகிறது. அதுவும் பெண்களின் ப்ரெண்ட் ஷிப்புக்காக உருவாக்கப்பட்ட ப்ரெண்ட்டி டா பாடல்கள் இனி தோழிகளின் தேசிய கீதம் பாடலாக இருக்கும்.

இசையில் கலக்கிய சிம்பு பின்னணி இசையில் தேறவில்லை. முக்கியமாக கார் சேசிங் சீனில் ஆக்சன் வராமல் ஆட்டம் போட வைக்கும் இசையாக உள்ளது.

சிம்புவும் ஒரு காட்சியில் வந்து எனக்கு லவ் செட்டாகாது. லிவிங் டுகெதர் ஓகே என்று டயலாக் எல்லாம் பேசி ஓவியாவுக்கு லிப் கிஸ் அடித்து செல்கிறார்.

இயக்கம் பற்றிய அலசல்…

இதற்கு முன் இப்படியொரு படம் வந்திருக்குமா? தெரியாது. அந்தளவுக்கு பெண்கள் பற்றிய அனைத்தையும் அக்கு வேறு பிரிச்சி மேய்ந்திருக்கிறார் டைரக்டர்.

தைரியமாக சொன்ன இயக்குனர் அனிதாவுக்கு ஹாட்ஸ் ஆஃப் என்றே சொல்ல வேண்டும்.

ஆண்கள் சரக்கு அடித்துவிட்டு என்ன வேணாலும் செய்யலாம். அதையே பெண்களும் செய்தால் குடும்பம் என்னவாகும் என்பதையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

இந்திய சட்டப்படி பெண்களின் லெஸ்பியனை ஆதரித்து இருக்கிறார் அனீதா. ஆனால் திருமணமான பெண்களோ அல்லது ஆண்களோ கள்ளக்காதல் வைக்க கூடாது என்பதையும் சொல்லியிருக்கிறார்.

அதாவது… கல்யாணம் ஆகிவிட்டால் ஒருவன் ஒருத்தியுடன் வாழு. அதாவது கள்ளக்காதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார். ஒரு வேளை (கணவனோ அல்லது மனைவியோ) பிடிக்கவில்லை என்றால் ஒரேடியாக அவரை பிரிந்து சென்றுவிட்டு என்ன வேணாலும் செய்துக் கொள் என்ற தத்துவத்தையும் பேசியிருக்கிறார்.

பெண்களை அரைகுறை ஆடையுடனும் செக்ஸியாகவும் காட்டியுள்ளார். சேலையில் இருந்தாலும் அதிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்தப்படத்தை பாருங்கள். இல்லை என்றால் உங்களுக்கு ஒரு சதவிகிதம் கூட படம் பிடிக்காது.

90 எம்எல்… ஆண்களுக்கு எச்சரிக்கை…

More Articles
Follows