தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்..
வித்தியாசமான கதையை படம் பார்க்க வேண்டும் என ஒரு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் அதை படமாக்க முடியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்கிறார். அவர் எழுதி வைத்த கதை ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொள்கிறது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் சித்து அவரது நண்பர்களுடன் அந்த வீட்டிற்கு செல்கிறார். அப்போது அந்த புத்தகம் அவருக்கு கிடைக்கிறது. அந்த புத்தகத்தில் எழுதிய படி ஒவ்வொன்றாக நடக்கிறது.
ஒரு கட்டத்தில் நாயகன் மற்றும் நாயகியை கொலை செய்தால் மட்டுமே நண்பர்களால் தப்பிக்க முடியும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு என்ன நடந்தது? நண்பர்கள் கொலை செய்தார்களா? எப்படி தப்பித்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
நாயகனாக சித்து.. நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர்.. கெமிஸ்ட்ரியும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.. பயம், தவிப்பு, பதட்டம் என ஒவ்வொன்றையும் இருவரும் அழகாக வெளிப்படுத்தி உள்ளனர்.
சாமியாராக மைம் கோபி மற்றும் அகோரியாக சாயாஜி ஷிண்டே.. இருபது நடிப்பும் கவனிக்கப்படும் வகையிலும் ரசிக்கும்படி வகையிலும் உள்ளது. இது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் வெற்றி, ரியாமிகா, சரத், மதனகோபால் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். ஆனால் அதிக இடங்களில் டபுள் மீனிங் காமெடிகள் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தலாம். ஆனால் பேய் படங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை தானே.!?
டெக்னிசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த்..
படத்தொகுப்பாளர் ராஜ்குமார்..
கலை இயக்குநர் சந்திரகாந்த்..
ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்ச மணி
இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார்
பேய் படம்.. திகில் கதை ஆகியவற்றுடன் காமெடி கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் பல கேமரா கோணங்களில் படமாக்கி இருக்கின்றனர். பேய் படங்களுக்கு உள்ள வழக்கமான ஃபார்முலா தான் என்றாலும் அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ல்.
படத்தின் பின்னணி செய்யும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
திடீரென்று இடம்பெறும் அகோரி மற்றும் காட்சிகள் ரசிகர்களை குழப்பமடைய செய்கிறது.
Aghori movie review and rating in tamil