ரெட் சாண்டல் வுட் விமர்சனம் 3.5/5..; ரத்த போராட்டம்

ரெட் சாண்டல் வுட் விமர்சனம் 3.5/5..; ரத்த போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

மாரிமுத்துவின் மகன் கபாலி விஸ்வந்த். இவர் வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கும் போது நண்பர் ஒருவர் மூலமாக வேலை தேடி ஆந்திராவுக்கு செல்கிறார்.

அங்கு வேறு வழியில்லாமல் செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் இவர் அந்த கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் மாரிமுத்துக்கு விபத்து ஏற்படவே விஷ்வந்தை தொடர்பு கொள்ள முயல்கின்றனர். ஆனால் அவரை காணவில்லை என தகவல் வருகிறது.

இதனையடுத்து நாயகன் தன் நண்பனை தேடி ஆந்திராவுக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்னர் தான் நண்பனைப் போல பல தமிழர்கள் செம்மரம் கடத்தல் சம்பவத்தில் சிக்கிக் கொண்டனர் என்பது தெரிய வருகிறது. மேலும் அவர்களை என்கவுண்டர் செய்யவும் ஆந்திரா போலீஸ் திட்டமிடுகிறது.

இதற்குப் பின்னணியில் சமூகப் போராளி போர்வையில் ‘KGF’ வில்லன் ராம் ஈடுபட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரிய வருகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது.? தன் நண்பனை மீட்டாரா வெற்றி? ஆந்திராவில் இருந்து தமிழர்கள் தப்பித்தார்களா? தமிழர்களை மீட்டுக் கொண்டு வந்தாரா வெற்றி? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த ரெட் சாண்டல் திரைப்படம்.

——
Red Sandal Wood

நடிகர், நடிகைகள் :

வெற்றி (பிரபாகரன்) , தியா மயூரிக்கா ( வினிதா ), கேஜிஎப் ராம் (அரிமாறன் ), எம் எஸ் பாஸ்கர் ( முத்தையா ), கணேஷ் வெங்கட்ராமன்( ராமைய்யா ) , மாரிமுத்து ( இளவரசு ), கபாலி விஷ்வந்த் (கருணா ), ரவி வெங்கட்ராமன் ( SP), மெட்ராஸ் வினோத் ( தீனா ) ,வினோத் சாகர் ( புரோக்கர் பாஸ்கர் ), லட்சுமி நாராயணன்( நரசிம்மன் ), சைதன்யா ,விஜி, அபி , கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் .

கேரக்டர்கள்…

வெற்றி மேல் வெற்றி என்று தன் பெயருக்கு ஏற்ப வெற்றிகளை குவித்து வருகிறார் நாயகன் வெற்றி.

இதற்கு முக்கிய காரணம் அவர் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக கதைகளை தேர்வு செய்து அதில் தன்னை பொருத்திக் கொண்டு நடித்து வருவது என்பதுதான் மிகையில்லாத உண்மை.

வேலை கிடைக்காத விரக்தியில் யதார்த்த குடும்ப இளைஞனை பளிச்சிடுகிறார் கபாலி விஸ்வந்த். இவரது காட்சிகள் நம்மை கொஞ்சம் கலங்க அடிக்கிறது.

மாரிமுத்து கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் முத்திரை பதிக்கிறார். (தற்போது அவர் மறைந்துவிட்டார்.)

மிரட்டல் வில்லனாக கேஜிஎப் ராம். வேற லெவல் மிரட்டல். ஹீரோயினுக்கு பெரிதாக வேலை இல்லை.. ஆனாலும் கலர் ஆடைகளை விட ஸ்கூல் யூனிபார்மில் அழகாகவே இருக்கிறார் தியா மயூரிக்கா.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – குரு ராமானுஜம்
இசை – சாம் CS
பாடல்கள் – யுகபாரதி
கேமரா – சுரேஷ் பாலா
சவுண்ட் டிசைன் – ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி.
எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின்.
சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல் .
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
தயாரிப்பு – J.பார்த்தசாரதி

வேலை தேடி வேறு மாநிலத்திற்கு செல்லும் இளைஞர்கள் நம் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் விவரங்களை கொடுத்து விட்டு செல்வது நடைமுறையில் இருந்தாலும் பலருக்கு தெரிவதில்லை. ஆனால் இதை ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம்

நாம் வேறு மாநிலத்திற்கு செல்லும் போது அந்த பகுதி ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். உயிருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இரு மாநில அரசுகளுக்கும் அதில் பங்கு உள்ளது என்பதை இயக்குனர் சொல்லி இருப்பது பல இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ரெட் சாண்டல்வுட் படம் ஆரம்பிக்கும் போது மரப்பாச்சி பொம்மைகளை காட்டி இருக்கிறார். இயக்குனர் மரத்திலான பொம்மைகளை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு எந்த விதமான நோயும் ஏற்படுவதில்லை. மாறாக அழகாக காட்டப்படும் சைனீஸ் பொம்மைகளை பயன்படுத்துவதால் பலவிதமான நோய்கள் நம்மையும் தாக்குகின்றன என்பதை அப்பட்டமாக சொன்ன இயக்குனருக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.

தொய்வு இல்லாத திரைக்கதை.. மிரட்டலான (சாம் சி.எஸ்) பின்னணி இசை.. சமூக விழிப்புணர்வை சொல்லும் திரைக்கதை என அனைத்திலும் தொழில்நுட்ப கலைஞர்கள் பளிச்சிடுகின்றனர்.

ஆக குறைந்த நேரத்தில் ஒரு நிறைவான படத்தை கொடுத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்..

ஆக ரெட் சாண்டல் வுட்… ரத்த போராட்டம்

Red Sandal Wood review and rating in tamil

துடிக்கும் கரங்கள் 3.5/5.; யூடியுப் யுத்தம்

துடிக்கும் கரங்கள் 3.5/5.; யூடியுப் யுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கொத்து பரோட்டா என்ற யூடியுப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் விமல். இவரது நண்பர் சதீஷ்.

மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தன் வீடியோவில் பதிவிட்டு நியாயம் கேட்கும் மனிதராக இவர். இது ஒரு புறம் இருக்க காணாமல் போன தன் மகன் சமீரை தேடி சென்னைக்கு வருகிறார் சங்கிலி முருகன். இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.

ஒரு நாள் ஐஜி சுரேஷ் மேனனின் மகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இதில் சமீருக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் சௌந்தரராஜா சந்தேகிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் சங்கிலி முருகன் வீடியோவை தன் யூடியுப்கில் பதிவிடுகிறார் விமல். இதனால் போலீஸ் கவனம் விமல் பக்கம் திரும்புகிறது.

ஐஜி மகள் கடத்தலுக்கு சங்கிலி முருகன் மகனுக்கும் என்ன தொடர்பு? விமல் கண்டுபிடித்தார் ? போலீஸ் வளையத்துக்குள் சிக்கிக் கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

Star Cast: Vimal, Misha Narang, Sathish, Suresh Menon, Sangili Murugan & Soundara Raja

Director: Veludoss
producer: K. Annadurai
Cinematography: Rammy
Music: Ragav Prasath
Editor: Chandrakumar G
Stunt: Siruthai Ganesh
Choreographer: Dinesh
Lyrics: Viveka
Art: S. Kannan

கேரக்டர்கள்…

கிராமத்து இளைஞனாகவே நாம் பார்த்து பழகிப் போன விமலுக்கு இதில் வித்தியாசமான வேடம். அவரும் ஆக்ஷனில் இறங்கி அடித்து தூள் கிளப்பியிருக்கிறார்.

ட்ராபிக் போலீஸ் ஆக வரும் ஜெயச்சந்திரன் இடைவேளை வரை தன் நடிப்பால் கவனம் இருக்கிறார். இவரது கண்களும் இவரது மீசையும் இவருக்கு கூடுதல் பலம்.

மட்டன் ரவியாக பில்லி முரளி நடித்துள்ளார். மிரட்டல் வில்லனாகவும் கவனிக்க வைக்கிறார். தனது முந்தைய படங்களில் தாடியுடன் வலம் வந்த சௌந்தரராஜா இதில் கிளீன் ஷேவ் செய்த நேர்மையான அதிகாரியாக அசர வைத்துள்ளார்.

சதீஷ் இந்த படத்தில் தேவையில்லாத கேரக்டர். அவரது காமெடிகளும் எடுபடவில்லை. நாயகி மிஷாவுக்கும் பெரிதாக வேலை இல்லை.

ரூபினா ரூபிஷா என்ற இரட்டை பெண்கள். சங்கிலி முருகனின் மகள்களாக நடித்துள்ளனர். இருவரும் கொஞ்ச நேரம் என்றாலும் தங்கள் நடிப்பில் பளிச்சிடுகின்றனர்.

டெக்னீசியன்கள்…

ராகவ் பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படி வகையில் உள்ளது. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவில் குறையில்லை. துடிக்கும் கரங்கள் டைட்டிலுக்கு ஏற்ப காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் வேலுதாஸ்.

மீடியாக்களை போல தனி நபர் நடத்தும் யூடியுப்களுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே அவர்களும் பொறுப்புடன் நடந்து கொண்டு சமூகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்யலாம் என துடிப்பான கதைகளும் அமைத்துள்ளார் இயக்குனர் வேலுதாஸ்.

ஆக.. துடிக்கும் கரங்கள்… யூடியுப் யுத்தம்

thudikkum karangal review and rating in tamil

ஜவான் விமர்சனம் 3.5/5… அட்லி ஃபார்முலாவில் ஷாரூக்

ஜவான் விமர்சனம் 3.5/5… அட்லி ஃபார்முலாவில் ஷாரூக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சமூக விரோதிகளை வேட்டையாடும் ஒரு ஜவானின் கதை.

கதைக்களம்…

சிறை கைதிகளான 6 பெண்களுடன் சமூக விரோதி விஜய் சேதுபதியை எதிர்த்து போராடும் நபராக ஷாருக்கான். மத்திய அமைச்சர்களை கடத்தி வைத்துக் கொண்டு நாட்டிற்கு நல்லது செய்கிறார் ஷாருக்கான்.

இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெறுகிறது. ஆனால் அதேசமயம் அவரை காவல்துறை ஒரு பக்கம் தேட விஜய்சேதுபதி கும்பல் மற்றொரு பக்கம் தேட ஷாருக்கான் போடும் சதித்திட்டமே சவால் நிறைந்த சீன்கள்.

ஷாருக்கானின் நோக்கம் என்ன? சிறை கைதிகளை வைத்துக்கொண்டு அவர் போராடுவதன் நோக்கம் என்ன? ஷாருக்கானின் பின்னணி என்ன? விஜய் சேதுபதி யார்? அவருக்கும் ஷாருக்கானுக்கும் மோதல் பின்னணி என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த ஜவான்.

கேரக்டர்கள்…

தந்தை – மகன் என இரு வேடங்களில் அசத்தியிருக்கிறார் ஷாருக்கான். இரண்டுக்கும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

இதுவரை ஷாருக்கானை இப்படி பார்க்காத ரசிகர்களுக்கு இந்த கேரக்டர்கள் பரவசத்தை உண்டாக்கும்.

டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் ஆக்ஷனிலும் அதகளம் செய்து இருக்கிறார் நயன்தாரா.

யோகி பாபு சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால் மந்திரியிடம் வேலை பார்க்கும் யோகி பாபு மந்திரியை மரியாதை இல்லாமல் பேசுவது எல்லாம் ரொம்ப ஓவர்.

எந்த கேரக்டரையும் அசால்ட்டாக செய்பவர் விஜய் சேதுபதி இதில் வில்லத்தனத்தையும் வித்தியாசமாக செய்துள்ளார்.

பிரியாமணி உள்ளிட்ட ஐந்து நாயகிகள் ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ளனர்.

விவசாயத்துறை அமைச்சராக நடித்திருப்பவருக்கு விடிவி கணேஷ் குரல் கொடுத்திருக்கிறார். அந்த குரலும் நம்மை கலகலப்புக்கு உண்டாக்கிறது.

பிளாஷ்பேக் சீன்களில் தீபிகா படுகோனே வருகிறார். அவரது காட்சிகள் எமோஷனலாக கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் தத் சில நிமிடங்களை வந்தாலும் அவரது கேரக்டர் ரசிக்கும்படியாக உள்ளது.

டெக்னீசியன்கள்…

அனிருத்தின் இசையில்.. “வந்த இடம் என் காடு… & ராமையா வஸ்தாவைய்யா ஆகிய பாடல்கள் ஆட்டமும் தாளமும் போட வைக்கின்றன .பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் அனிருத்.

பொதுவாகவே ஷங்கர் படங்களில் மிகப் பிரம்மாண்டம் இருக்கும்.. ஆனால் அதில் யதார்த்த வாழ்வியல் இருக்கும்.. அவரின் உதவியாளர் அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டங்கள் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

காட்சிகள் ஜெட் வேகத்தில் மாறிக் கொண்டே இருப்பதால் எந்த காட்சியிலும் பெரிதாக ஒன்ற முடியவில்லை. ஆனால் ஒரு தமிழ் இயக்குனரால் ஹிந்தி ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்து கிடைத்துள்ளது எனலாம்.

ஜவான் படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. கலை இயக்குனரின் பணிகளும் நம்மை வியக்க வைக்கிறது.

படத்தின் பிரம்மாண்ட செட்களுக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். தமிழில் நாம் பார்த்த இந்தியன், கத்தி உள்ளிட்ட பல படங்களின் கலவையாக இது தோன்றலாம்.
காரணம் கதைக்களம் அப்படி..

விவசாயிகள் கடனை ஒரு சில நிமிடங்களில் அடைப்பது.. நாட்டின் ஒட்டு மொத்த மருத்துவ தேவைகளை ஐந்து மணி நேரத்தில் சரி செய்வது என்பதெல்லாம் ஓவர் கற்பனை.. ஆனால் இப்படி எல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்பதை காட்டி இருக்கிறார் இயக்குனர் அட்லி.

ஜெயில் என்பது அரசு அரசின் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இதில் ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது போலவே காட்டப்பட்டுள்ளது. கைதிகளை பார்த்தால் மாடலிங் பெண்கள் போலவே உள்ளனர். உள்ளே ஒரு டீ ஷர்ட் அணிந்து கொண்டு வெளியே பட்டன் போடாமல் சட்டை போட்டிருப்பது கைதிகளுக்கான உடையா? என்பது தெரியவில்லை. ஒருவேளை வட இந்தியாவில் அப்படி கைதிகள் இருக்கிறார்களா?

அதுபோல 6000 பெண் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையில் எல்லாரிடமும் துப்பாக்கி வந்தது எப்படி? இப்படியான பல கேள்விகளுக்கு விடை இல்லை.

ஆக்சன் சீன்களில் பிரம்மாண்டம் பிரம்மிக்க வைக்கிறது. ஆனால் அதை நம்புவது தான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

இப்படத்தின் இறுதியில் ‘ஜவான் 2’ படத்திற்கான க்ளூ கொடுக்கப்பட்டுள்ளது.

அது சுவிட்சர்லாந்தில் உள்ள கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் கதையாக இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. எனவே ‘ஜவான் 2’ படத்தில் சிவாஜி 2 படத்தை பார்க்கலாம்.

வங்கியில் கடன் பெற்ற தொழிலதிபர்கள் கடனை அடைக்காமல் தள்ளுபடி செய்யும் காட்சிகளும்.. விவசாய கடன்களால் விவசாயிகள் நசுக்கப்படும் காட்சிகளும் கலங்க வைக்கிறது.

அதுபோல பிஎம்டபிள்யூ காருக்கு வரி 7%.. ஆனால் டிராக்டர் கடனுக்கு 12% கடன் உள்ளிட்ட காட்சிகள் மக்களை யோசிக்க வைக்கும்.

அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை கொஞ்சம் கொஞ்சமாக காட்டியிருக்கிறார். அதேசமயம் பொருளை வாங்கும் போதும் தரம் பார்த்து வாங்கும் மக்கள் அரசியல்வாதிகளை தரத்தை சோதித்துப் பார்க்க வேண்டும் என சொல்லி இருக்கிறார் இயக்குனர் அட்லி.

ஆக ‘ஜவான்’ அட்லி ஃபார்முலாவில் ஷாரூக்

Jawan movie review and rating in tamil

நூடூல்ஸ் பட விமர்சனம் 3.75/5… திகட்டாத சுவை

நூடூல்ஸ் பட விமர்சனம் 3.75/5… திகட்டாத சுவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு பில்டிங்கில் 3 – 4 வீடுகள் உள்ளன. அதில் தரைத்தளத்தில் ஹரீஷ் உத்தமன் – ஷீலா ராஜ்குமார் தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகள்.

சனிக்கிழமை இரவு அந்த பில்டிங்கில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இரவு ரோந்து செல்லும் போலீஸ் மொட்டை மாடிக்கு வந்து விசாரிக்கின்றனர்.

அப்போது போலீசுக்கு பயப்படாமல் திமிராக பேசுகின்றனர் ஹரீஸ் & ஷீலா.. யாராச்சும் கம்ப்ளைன்ட் கொடுத்தாங்களா? கொடுத்தா எங்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்துக் கொள்ளுங்கள் என வீராப்பாக பேசி விடுகிறார்.

இதனால் போலீஸ் மதன் ஏதாவது கேஸ் கிடைக்குமா என முறைத்து செல்கிறார்.

மறுநாள் காலை ஹரிஷ் மகள் செல்போனை வைத்து விளையாடும் போது ரோட்டில் செல்லும் ஒரு திருடன் அதை பறிக்க முயல்கிறான்.

மகள் சத்தம் போடவே ஷீலா திருடனின் சட்டை காலரை பிடித்து இழுக்க எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு இறந்து விடுகிறான் திருடன்.. இது நடந்த சில மணி நேரங்களில் வேறொரு பிரச்சனைக்காக போலீஸ் ஹரிஷ் வீட்டிற்கு வருகின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? கொலையை மறைத்தார்களா? போலீஸ் என்ன செய்தார்?என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பல படங்களில் வில்லனாக மிரட்டியவர் ஹரீஷ் உத்தமன். இதில் ஜிம் டிரைனராக யதார்த்த கணவராக தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.. என்னதான் போலீஸிடம் திமிராக பேசினாலும் அடுத்த நாள் தங்கள் வீட்டில் ஒரு கொலை நடக்க அதை எதிர்கொள்ள ஹரிஷ் போடும் திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.

என்ன நடந்தது ? எப்படி நடந்தது? என்று தெரியாமல் தவிக்கும் ஷீலா தன் உணர்வுகளை நம் பக்கத்து வீட்டு பெண்ணாகவே காட்டியிருக்கிறார். எங்கும் மிகைப்படுத்தாத நடிப்பையும் அவர் கொடுத்திருப்பது சிறப்பு.

வக்கீலாக நடித்திருப்பவர் படத்தின் கலகலப்புக்கு பெரிதும் உதவியுள்ளார். ஹரிஷ் நண்பராக வரும் சங்கர் கொஞ்ச நேரமும் என்றாலும் அவருடைய நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

படத்தை இயக்கிய அருவி மதன் என்பவர் தான் இந்த படத்தின் இயக்குனர். இவருக்கும் போலீஸ் கேரக்டருக்கும் அப்படி ஒரு பொருத்தம். ஒரு அப்பாவி கையில் சிக்கினால் எப்படி எல்லாம் போலீஸ் மிரட்டுவார்கள் என்பதை அச்சு அசலாக நடித்துக் காட்டியிருக்கிறார்.

டெக்னீசியன்கள்…

படத்திற்கு பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது. முக்கியமாக கொலை நடந்த இடத்தில் வக்கீலின் கைகள் நடுங்குவதற்கு கூட ஒரு பின்னணி இசை கொடுத்து நம்மை சிரிப்பில் வாழ்த்தியுள்ளார் இசையமைப்பாளர் ராபர்ட்.

ஒரு வீட்டில் நடக்கும் கதை தான் என்றாலும் அதை கிளைமாக்ஸ் இல் இப்படி கூட சுவாரசியமாக கொடுக்க முடியுமா என இயக்க வைக்கிறார் இயக்குனர் அருவி மதன்.

முதல் பாதி கொஞ்சம் போர் அடிக்கிறது என்பது உண்மைதான். ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட நான்கு காட்சிகளே உள்ளது. அதிலும் ரிப்பீட்டாக சில வசனங்கள் வருவது ரொம்பவே போர்.

ஒரு கொலையை மறைக்க என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்த குடும்பத்தின் உணர்வுகளை நூடுல்ஸ் போல குழப்பி இறுதியாக நாம் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு தீர்வை கொடுத்திருப்பது இயக்குனரை புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.

போலீசுக்கு பயப்படனுமா? என ஹரிஷ் கேட்கும்போது.. எங்க மேல் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் பயப்படுகிறோம். அந்த எரிச்சலை நாங்க காட்டும்போது நீங்கள் பயந்து தான் ஆக வேண்டும் என மதன் சொல்லும் போது போலீஸின் அதிகார வர்க்கம் தலை காட்டுகிறது.

ஹீரோவுக்கு எந்த ஒரு ஆக்ஷன் காட்சிகளை கொடுக்காமல் படத்தை முடித்து இருப்பது இயக்குனரின் படைப்புத்திறனை காட்டுகிறது.

ஒரு போலீஸ் நினைத்தால் சாமானியனை எப்படி வேண்டுமானாலும் மிரட்டலாம்.. அதே சமயம் அந்த சாமானியன் நினைத்தால் அதிகார வர்க்கத்தை காலி செய்யலாம் என்பதையும் இயக்குனர் காட்சிப்படுத்திருப்பது இந்த நூடுல்ஸிற்கு சுவை கூட்டுகிறது.

ஆக நூடூல்ஸ்… திகட்டாத சுவை

Hero character name Saravanan/ Harish

Heroine. ; Sakthi/Sheela

Daughter ; Priyu/Aazhiya

Neibourhood Characters first floor family

1)Shankar age 49

Artiste Thirunaavukkarasu(aruvi film aruvi father)

Jayanthi age 30, Sankar wife

Artiste Haritha

Sankar jayanthi son
Yeshwanth / sooraj

Second floor family

Meera age 48 artiste Mahina,,

Meera daughter Swetha age 30 artiste Suba

Suba cousin prakash age 24, Artiste prakash

Neighborhood lawyer

Thiru age 50,,
artiste Vasant Marimuthu

Auto man artiste imthiyas

Police inspector Elango
MadhanDakshinamoorthy

Police Head constable
ShobanMiller,

Noodles movie review and rating in tamil

தமிழ்குடிமகன் விமர்சனம் 3.5/5.. சாதிகள் இல்லாத தமிழன்

தமிழ்குடிமகன் விமர்சனம் 3.5/5.. சாதிகள் இல்லாத தமிழன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் தன் அம்மா மனைவி பிரியங்கா தங்கை தீபிஷ்கா ஆகியோருடன் வாழ்கிறார் சேரன். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்.

இவர் கழுதை மேய்ப்பதால் இவரது குடும்பத்தை எவரும் மதிப்பதில்லை. எனவே பால் வியாபாரம் செய்கிறார். ஆனால் அதையும் சாதி பெயரை குறிப்பிட்டு எவரும் பால் வாங்க மறுக்கின்றனர்.

இந்த நிலையில் சேரனின் தங்கைக்கும் மேல்ஜாதியை சேர்ந்த மேல் லால் மகன் துருவாக்கும் காதல் வளர்கிறது.

இதனையறிந்த லால் மற்றும் அருள்தாஸ் இருவரும் தீபக்ஷிகாவை அடித்து துவைத்து விடுகின்றனர். இதனால் தவிக்கிறார் சேரன்.

இந்த சூழ்நிலையில் லால் தந்தை ஊர் பெரியவர் மரணம் அடைகிறார். அவருக்கு இறுதி சடங்கு செய்ய சேரனை அழைக்கவே அவர் மறுக்கிறார். எனவே அவரது குடும்பத்தை துன்புறுத்துகின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது.? மேல் சாதி மிரட்டலுக்கு அடிபணிந்தாரா சேரன்.? கீழ் சாதி – மேல் சாதிக்கு நடக்கும் பிரச்சனைக்கு முடிவு எப்படி கிடைத்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அழகான குடும்பம்.. நேர்மையான மனிதர் என கட்டுப்பாட்டில் வாழ்கிறார் சேரன். எங்களது முன்னோர்கள் இந்த குலத் தொழிலை செய்து வந்தாலும் தனக்கு துளியும் விருப்பமில்லை என சேரன் பேசும் ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பு.

ஒரு தொழிலை செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என போலீஸ் அதிகாரி சுரேஷ் காமாட்சி பேசும் போது அடடா இப்படி ஒரு அதிகாரியை நாம் சந்திக்க மாட்டோமா? என நினைக்க வைக்கிறார்.

சேரன் மனைவி ஸ்ரீ பிரியங்கா.. தங்கை தீபிகா இருவரும் கொள்ளை அழகு.. இருவரின் கண்களுமே அவர்களின் உணர்வுகளை சொல்லி விடுகிறது. ஆனால் இருவருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை என்பது வருத்தம்.

மற்றொரு நாயகனாக துருவா நடித்துள்ளார். அவரும் அப்பாவுக்கு பயந்த பிள்ளையாகவே காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.

லால் மற்றும் அருள் தாஸ் ஆகிய இருவரின் நடிப்பு மிரட்டல்.. சாதிவெறி தலைக்கேறி அவர்களின் ஆட்டம் கவனிக்க வைக்கிறது.

ஆணவப்படுகொலை செய்த வேல ராமமூர்த்தியும் தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

டெக்னீசியன்கள்…

சாம் சி.எஸ்.. பின்னணி இசையும் பாடல்களும் ஒன்ற வைக்கிறது.. பாடல் வரிகளும் பாடலுக்கு அழகு சேர்க்கிறது.

திருநெல்வேலி மாவட்ட பகுதிகளை நமக்கு நேர்த்தியாக கொடுத்துள்ளார்.

முதல் பாதி ஏனோ தானோ என்று செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில்தான் சூடு பிடிக்கிறது. கோயில் கொடை நிகழ்ச்சி படத்துடன் பெரிதாக ஒன்றவில்லை. இதுபோன்ற சில காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம் எடிட்டர்.

மேலும் முதல் பாதியில் எந்த விறுவிறுப்பும் இல்லை என்பதால் டிவி சீரியல் போலவே உள்ளது.

இதுபோன்ற பல சாதி படங்களை நாம் ஏற்கனவே பார்த்து இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் இந்த வன்முறைக்கு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

ஒரு படத்தின் இரண்டாம் பாதியை பார்க்க வைப்பதற்கு இடைவேளை காட்சி மிக முக்கியம். ஆனால் சர்வ சாதாரணமான ஒரு காட்சியாகவே அது உள்ளது.

ஆக தமிழ் குடிமகன்.. சாதிகள் இல்லாத தமிழன்

Tamilkudimagan movie review and rating in tamil

A SOLO ACT FILM ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா விமர்சனம்.. –

A SOLO ACT FILM ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா விமர்சனம்.. –

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா

தயாரிப்பு : அர்த்தநாரீஸ்வரர் மீடியா ஒர்க்ஸ்

நடிகர் : ஜி சிவா

இயக்கம் : ஜி. சிவா

‘விருகம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஜி. சிவா கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’.

ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் திரையில் தோன்றினாலும்.. எதிரில் இருக்கும் கதாபாத்திரத்தின் கை, கால் ஆகியவற்றை காண்பிப்பதும், காதலியை காண்பிப்பதும், காதலியுடன் பாட்டு பாடுவதும் வித்தியாசமான முயற்சியை கையாண்டு இருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சிவா.

கதைக்களம்…

நாயகன் சிவா ஒரு பெண் மீது காதல் கொள்கிறார். ஆனால் அவளோ இவரை ஏமாற்றி மற்றொருவருடன் தொடர்பில் இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் நாயகன், காதலியையும் அவரது காதலனையும் கொன்று விடுகிறார்.

இது வழக்கமான காதல் கதை தானே என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் இதன் பிறகுதான் படத்தில் பெரிய ட்விஸ்ட் வைத்திருக்கிறார் சிவா.

கொலை செய்தபின் தன் தம்பிக்கு தகவல் கொடுத்துவிட்டு, சட்டத்திற்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்.

ஒரு புள்ளியில் தன்னுடைய தோற்றமும் தன் தம்பி தோற்றமும் ஒரே மாதிரியாக இருப்பதால் குற்ற வழக்குகளில் அவனை சிக்க வைக்க நினைக்கிறார்.

இதனை அறிந்த தம்பி என்ன செய்தார்.? அண்ணன் தம்பி இருவரும் மீண்டும் சந்தித்தார்களா? கொலை வழக்குகளில் இருந்து தப்பித்தார்களா.?

கேரக்டர்..

ஒரே ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநரான ஜி. சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனாலும் இரட்டை வேடத்தில் அசத்துகிறார்.

காதலனாக, டான்சாராக பல பரிமாணங்களில் மிளிர்கிறார் இயக்குனர் சிவா

படத்தின் எடிட்டர் அரவிந்த் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.ஓகி ரெட்டி, ௮ருண் சுசிஆகிய இரு கேமராமேன்களும் காட்சிகளை அழகாக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றி அவருடைய கோணத்தில் கதை நகர்வது சிறப்பு

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா- வித்தியாசமான புது முயற்சி…

வித்தியாசமான முயற்சிகளுக்கு கை கொடுத்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து சினிமாவில் வரும்..

இல்லை என்றால் வேறு கதையே கிடைக்கவில்லையா என்று ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள். ரசிகர்களுக்கும் அரைத்த மாவு தான் மீண்டும் மீண்டும் கிடைக்கும்.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா

oongi adichaa ondra tonnu weightudaa movie review and rating in tamil

More Articles
Follows