தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில தினங்களுக்கு முன்புதான் அருள்நிதி நடிப்பில் டி ப்ளாக் என்ற படம் வெளியானது. தற்போது தேஜாவு என்ற அடுத்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்
நாளை ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘தேஜாவு’ படத்தை பத்திரிகையாளர் அரவிந்த் சீனிவாசன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் அருள்நிதி, மதுபாலா, காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதைக்களம்..
படத்தில் டிஜிபி மதுபாலாவின் மகள் ஸ்மிருதி வெங்கட் ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார்.
ஸ்மிருதி காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுக்கும் போது பூஜா என்ற தன் பெயருடன் நாவல் கதாசிரியர் சுப்ரமணியன் சாய்நகர் என்ற பெயரை கூறுகிறார்.
அதன் பிறகு ஸ்மிருதிக்கு என்ன நடந்தது? என்பது போலீசுக்கு தெரியவில்லை.
அவருடைய மொபைல் ஃபோனையும் அவர்களால் ட்ரேஸ் செய்ய முடியவில்லை.
இதனிடையில் இந்த நாவல் கதாசிரியர் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த கதையில் பூஜா என்பவர் கடத்தப்படுகிறார்.
அவர் எந்த வண்டியில் கடத்தப்பட்டார் அவரை மீட்க ஒரு போலீஸ் அதிகாரி வருகிறார். அதன் பிறகு என்ன என்ன நடக்கிறது என்பதை நடப்பதற்கு முன்பே தெளிவாக தன் கதையில் எழுதுகிறார்.
இவரது கதைக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒத்துப் போவதால் போலீஸ் இவரை கண்காணிக்கிறது. ஆனாலும் அவர்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
பெண்ணை மீட்பதற்காக சிறப்பு அதிகாரியாக நாயகன் அருள்நிதி வரவழைக்கப்படுகிறார்.
இவரது விசாரணையில்… எழுத்தாளருக்கும் கடத்தல் சம்பவத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை உணர்கிறார்.
இந்தக்கதைக்கும் கடத்தல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு.? பூஜாவை கடத்த என்ன காரணம்? கடத்தல் சம்பவத்திற்கு பின்னடி என்ன? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
போலீஸ் ஆபீஸராக அருள்நிதி ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் இரண்டு நாட்கள் விசாரணையிலும் ஒரே மாதிரியான உடையில் வருகிறார். ஆனால் மகளை தொலைத்த மதுபாலாவோ பல ஆடைகளை மாற்றி விடுகிறார். இருவரது கதாபாத்திரமும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
அழகான திறமையான நடிகை ஸ்ருதி வெங்கட் . அவர் ஒரு துணை நடிகை போல ஓரிரு காட்சிகளில் வருகிறார். இரண்டு மூன்று டயலாக் மட்டுமே பேசுகிறார். இயக்குனருக்கு ஸ்மிருத்தி மீது என்ன கோபம்?
காளி வெங்கட்டின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. கார்கி படத்தில் வக்கீலாக நடித்தவர் இந்த படத்தில் போலீஸ் ஆகவும் சில நகைச்சுவைகளை ஆங்காங்கே அள்ளித் தெளிக்கிறார்.
எழுத்தாளராக வருகிறார் அச்யுத் குமார். கொடுத்த குடிகார கேரக்டரில் கச்சிதம். ஆனால் இவருக்கு டப்பிங் கொடுத்துள்ள எம் எஸ் பாஸ்கர் வாய்ஸ் இவருக்கு ஒட்டவில்லை. வேறு ஒரு ஆர்டிஸ்ட் பயன்படுத்தி இருக்கலாம்
டெக்னீஷியன்கள்
படத்திற்கு இருபெரும் தூண்களாக இசையமைப்பாளர் ஜிப்ரானும், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவும் பணியாற்றி உள்ளனர். படத்தை முழுவதுமாகவும் ரசிக்க வைக்க இவர்களின் பங்கு முக்கியமானது.
முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அரவிந்த் படத்தை இயக்கியுள்ளார். இடைவேளை வரை படம் செல்வதே தெரியவில்லை. விறுவிறுப்பாக கதை களத்தை அமைத்து அடுத்தது என்ன அடுத்தது என்ன என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு பார்க்க வைத்து விட்டார்.
ஆனால் கிளைமாக்ஸ் இல் நிறைய ட்விஸ்ட்களை கொடுத்து நிறைய லாஜிக் மீறல்கள் படத்தில் உள்ளன. அதை சொன்னால் படத்தின் கதை புரிந்து விடும் என்பதால் நாம் சொல்லவில்லை.
ஒரு குற்றவாளிக்கு அவரின் விவரங்களை அறிந்து கொள்ளும் காவல்துறை காவல்துறையில் இருக்கும் ஒருவரின் விவரங்களை அறிய நினைக்க மாட்டார்களா.?
ஆக.. இந்த தேஜாவு.. தேர்ச்சி..
Dejavu movie review and rating.