ரஜினி 169 படத்தில் ‘பீஸ்ட்’ பட பிரபலம்.; சிவகார்த்திகேயனும் இணைவாரா.?

ரஜினி 169 படத்தில் ‘பீஸ்ட்’ பட பிரபலம்.; சிவகார்த்திகேயனும் இணைவாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்திற்கு ரஜினியை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் யார்? என்பதே கோலிவுட்டின் கேள்வியாக இருந்தது.

தேசிங்கு, பாண்டியராஜ், சிவா, கேஎஸ் ரவிக்குமார், பாலிவுட் இயக்குனர் பால்கி என பல இயக்குனர்களின் பெயர்கள் பேசப்பட்ட நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்குவது முடிவானது.

நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படம் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தை இயக்கினார் நெல்சன்.

இந்த படம் வெளியாகி பெரும் வெற்றி பெறும் முன்னரே விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்.

அதுபோல் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாகும் முன்னரே ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

‘தலைவர் 169’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த அறிவிப்பு இணையத்தில் வெளியான வீடியோவோ பெரும் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவே இதிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளாராம்.

இத்துடன் ரஜினி ரசிகரும் நடிகருமான சிவகார்த்திகேயனும் ‘தலைவர் 169’ படத்தில் இணைவார் என தகவல் வந்துள்ளன.

நெல்சனின் வழக்கம்போல பாடலாசிரியராக சிவா வருகிறாரா.? அல்லது நடிகராக வருகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Sivakarthikeyan be part of Thalaivar 169 ?

சாருஹாசன் & நிகில்முருகன் ஹீரோ..; ரீஎன்ட்ரி மோகனுக்கு மீண்டும் ஜோடியாகும் குஷ்பூ..; வித்தியாசமான விஜய்ஸ்ரீ

சாருஹாசன் & நிகில்முருகன் ஹீரோ..; ரீஎன்ட்ரி மோகனுக்கு மீண்டும் ஜோடியாகும் குஷ்பூ..; வித்தியாசமான விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு அறிமுக இயக்குனராக இருந்தாலும் பிரபல நடிகர்களின் படத்தை தான் முதலில் இயக்க ஆசைப்படுவார்கள். அப்போதுதான் தன் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் தனக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என நினைப்பதுண்டு.

ஒருவேளை டாப் ஹீரோ கால்ஷீட் கிடைக்காவிட்டால் மற்ற நாயகர்களுடன் இணைவார்கள். ஆனால் எவரும் எதிர்பாராத நிலையில் 87 வயதான சாருஹாசனை (கமல் அண்ணன்) வைத்து கடந்த 2019ல் தாதா 87 என்ற படத்தை இயக்கினார் விஜய்ஸ்ரீ ஜி.

அதற்கு முக்கிய காரணம் இவர் தன் கதை மீது வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே. மேலும் இந்திய சினிமாவில் முதன்முறையாக பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

இத்துடன் மேலும் உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற படம் என்ற பெருமையும் தாதா87-ஐயே சேரும்.

அண்மையில் தாதா 87 படத்தை தழுவி ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’ என்ற ஹிந்தி படம் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அடுத்த அதிசயத்தை திரையுலகில் நிகழ்த்தவுள்ளார் விஜய்ஸ்ரீ.

பிரபல மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) நிகில் முருகனை ஹீரோவாக்கி ‘பவுடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார்.

இந்த படம் மார்ச் மாதம் 2வது வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் ‘பப்ஜி’ என்ற படமும் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இந்த நிலையில் 1980களின் பிரபல ஹீரோவான மோகனுக்கு ரீஎன்ட்ரி கொடுத்து ‘ஹரா’ என்ற படத்தை இயக்கவுள்ளார் விஜய்ஸ்ரீ. அதிலும் மோகனை ஒரு ஆக்சன் ஹீரோவாக காண்பிக்கவுள்ளார்.

மோகனுக்கு ஜோடியாக குஷ்பூவை ஒப்பந்தம் செய்யவுள்ளார். விஜய்ஸ்ரீ கூறிய கதையும் அவர் சொன்ன விதமும் தன்னை கவர்ந்துவிட்டதாக குஷ்பூவும் தெரிவித்திருந்தார்.

மோகன் குஷ்பூ இருவரும் தமிழில் இணைவது முதன்முறை என்றாலும் தெலுங்கில் (1988) ஆத்ம கதா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இத்துடன் தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தை வித்தியாசமான கோணத்தில் படமாக்கவிருக்கிறாராம் விஜய்ஸ்ரீ.

நிஜமாகவே வித்தியாசமான சிந்தனை கொண்டவர் தான் டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி என்று சொன்னால் அதுமிகையல்ல.

Kushboo to pair up with Mohan for the second time

அனிருத்துடன் இணைந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அனிருத்துடன் இணைந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தன் கணவரும் நடிகருமான தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினி தற்போது ஒரு மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கெனவே தனுஷ் நடித்த 3 மற்றும் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முஷாஃபிர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள மியூசிக் ஆல்பத்தின் டீஸரை ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழில் அனிருத் பாடியுள்ளார். தெலுங்கில் சாகர் மற்றும் மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர்கள் பாடியுள்ளனர்.

இந்த ஆல்பத்திற்கு அன்கித் திவாரி என்பவர் இசையமைக்க பே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த மியூசிக் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.

Anirudh and Aishwarya Rajinikanth joins for music album

ஒருவழியாக விக்ரமின் ‘கோப்ரா’ ஓவர்..; அஜய் ஞானமுத்து ஹாப்பி

ஒருவழியாக விக்ரமின் ‘கோப்ரா’ ஓவர்..; அஜய் ஞானமுத்து ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ஆம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்க தொடங்கிய படம் ’கோப்ரா’.

இதில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், கனிகா, மிருளாணி ரவி, ஆனந்த்ராஜ், ரேணுகா, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு சூழ்நிலையால் இப்பட சூட்டிங் தள்ளிக் கொண்டே போனது.

சில நாட்களுக்கு முன் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் இல்லாத காட்சிகளையும் மற்றும் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளில் என் மேல் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

’கோப்ரா’ பட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

Chiyaan Vikram’s Cobra Shoot Completed

‘அஞ்சல’ இயக்குனருடன் இணைந்த சசிகுமார் – அனன்யா ஜோடி

‘அஞ்சல’ இயக்குனருடன் இணைந்த சசிகுமார் – அனன்யா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசிகுமார் நடிப்பில் உருவான ’கொம்பு வச்ச சிங்கம்’ படம் அண்மையில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறவில்லை.

இதனையடுத்து சசிகுமார் நடிப்பில் ’பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் ’காமன்மேன்’ படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக விமல் நடித்த ’அஞ்சல’ என்ற படத்தை இயக்கிய தங்கம் பா சரவணன் என்பவரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் சசிகுமார்.

சசிகுமார் ஜோடியாக அனன்யா நாகல்லா என்ற தெலுங்கு சினிமா பிரபல நடிக்கிறாராம்.

இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

மோகன் என்பவர் இந்த படத்தை தயாரிக்க சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

மற்ற நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இப்பட பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

Sasikumar joins with Anjala director for his next

சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி

சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சி.எஸ். அமுதன் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கியவர் அமுதன்.

இவர்கள் இணையும் இந்த படத்திற்கு ‘ரத்தம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்துடன் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கி வருகிறார் விஜய்ஆண்டனி.

இவையில்லாமல் ‘அக்னி சிறகுகள்’ & ‘காக்கி’ ஆகிய படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவன சார்பில் தாய் சரவணன் தயாரிக்க இமான் இசையமைக்கிறார்.

பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் சசீந்திரன் இமான் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளனர்.

தற்போது 7 வது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் விஜய் ஆண்டனி இணைந்துள்ளது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மூன்று மாதங்களில் இப்படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சுசீந்திரன். 1984ல் நடைபெற்ற ஒரு கொலைக் களத்தை மையப்படுத்தி இப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறதாம்.

Vijayantony next with Dir Suseenthiran is going to be murder mystery

More Articles
Follows