தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் இறுதியாக ரஜினிகாந்த் மேடை ஏறி பேசினார்.. அவர் மேடை ஏறும்போது ரசிகர்கள் கரகோஷத்தில் விசில் சத்தத்தில் நேரு ஸ்டேடியம் அதிர்ந்தது.
ரஜினி பேசியதாவது…
“அண்ணாத்த படத்திற்குப் பிறகு நிறைய இடைவெளி விட்டு விட்டேன். நிறைய கதைகள் வந்தன. அவையெல்லாம் பாட்ஷா அண்ணாமலை டைப்பில் இருந்தன.
எனவே நிறைய கதைகளை தவிர்த்து வந்தேன். ஒரு கட்டத்தில் நிறைய கதைகளை தவிர்ப்பது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது.. எனவே கதைகள் கேட்பதை நிறுத்தி வைத்தேன்.
ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் அம்மா போன்றவர் என்றால் இயக்குனர் அப்பா போன்றவர்.
என் வாழ்க்கையில் பல இயக்குனர்கள் எனது சினிமா பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளனர்.
முத்துராமன் மகேந்திரன் சுரேஸ் கிருஷ்ணா பி வாசு கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ். இவர்கள் வரிசையில் தற்போது நெல்சன் இணைந்துள்ளார்.
நெல்சன் இடம் கதை கேட்க அவரை நான் வர சொன்னேன். காலை 10 மணிக்கு அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் நான் லேட்டாக எழுந்திருப்பவன். எனவே லேட்டாக வருகிறேன் என்றார்.
எனவே நான் அவருக்கு காலை 11:30 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தேன். ஆனால் அவர் அப்போதும் வரவில்லை. 12 மணிக்கு மேல் தான் வந்தார். வந்தவுடன் என்ன வேண்டும் என கேட்டேன். நல்லதா ஒரு காபி சொல்லுங்க என்று சொன்னார் நெல்சன்.
நெல்சன் எனக்கு ஒன் லைன் ஸ்டோரி சொன்னார். நான் கதையை விரிவாக கேட்டேன்.. பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து வந்து முழுக்கதை சொன்னார். கதை சிறப்பாக இருந்தது.
நாங்கள் ‘ஜெயிலர்’ படத்தின் அறிவிப்பை வெளியிடும்போது ஒரு பிரமோ வீடியோ வெளியிட்டோம். அதன் பிறகு தான் ‘பீஸ்ட்’ படம் வந்தது. ‘பீஸ்ட்’ படம் தோல்வி அடைந்ததால் பல விநியோகஸ்தர்கள் என்னை தொடர்பு கொண்டு இயக்குனரை மாற்ற சொன்னார்கள்.
அதன் பின்னர் நாங்கள் சில பேர் சன் நிர்வாகத்தை சந்தித்து பேசினோம். அப்போது அவர்களும் ஆமாம் படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் தான் வருகின்றன. ஆனால் எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் படம் லாபம் தான் என்றனர்.
அதன் பின்னர் ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். அப்போது முதல் காட்சி எடுத்த பின்னர் எனது முதல் காதலை பற்றி கேட்டார் நெல்சன். ஏன்? என் காதல் பற்றி கேட்கிறீர்கள் என கேட்டேன்.
எனக்கு கொஞ்சம் எனர்ஜி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றார் நெல்சன். இது என்னடா புதுசா இருக்கே.? என்று நினைத்தேன்.
இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.
Rajini open talk about Vijays Beast movie failure