‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இணையும் ‘பீஸ்ட்’ பிரபலங்கள்

‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இணையும் ‘பீஸ்ட்’ பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தை தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் ஜெய் மற்றும் பிரேம்ஜி நடிக்க உள்ளனர்.

ஏற்கனவே விஜய்யுடன் ‘பகவதி’ படத்தில் ஜெய் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஜெயிக்கு ஜோடியாக நடிகை அபர்ணாதாஸ் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது நிலையில் சண்டைப் இயக்குனர்களாக அன்பறிவ் சகோதரர்கள் இணைந்துள்ளனர். அன்பறிவ் மாஸ்டர்கள் ஏற்கெனவே ‘பீஸ்ட்’ & ‘லியோ’ ஆகிய படங்களில் விஜய்யுடன் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stunt Masters Anbarivu will join in Thalapathy 68

‘மஞ்சள் வீரன்’ நாயகன் TTF வாசன் மனு தள்ளுபடி.; நீதிபதி அதிரடி

‘மஞ்சள் வீரன்’ நாயகன் TTF வாசன் மனு தள்ளுபடி.; நீதிபதி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 17ம் தேதி சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து விபத்தில் சிக்கிகால் டிடிஎஃப் வாசன்.

எனவே அவர் மீது பொது மக்களுக்கு இடையூராகவும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனையடுத்து மாவட்ட நீதிபதி செம்மல், டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கூடுதல் தகவல்..

சமீபத்தில் தான் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நாயகனாக ஒப்பந்தமானார் டிடிஎஃப் வாசன்.

அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில் அவர் விபத்தில் சிக்கியது.. தற்போது கைதாகி சிறையில் இருப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் படம் தொடருமா? என்பது கேள்விக்குறிதான்.

TTF Vasan arrest and Court order news

‘சந்திரமுகி 2’ ரிலீஸை முன்னிட்டு ரஜினி காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ ரிலீஸை முன்னிட்டு ரஜினி காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 வருடங்களுக்கு முன்பு வெளியாகி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் ‘சந்திரமுகி’.

ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேல் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன் சார்பாக பிரபு தயாரிக்க பி வாசு இயக்கிருந்தார்.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது.

தற்போது 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரே தொடர்பு பி வாசு மற்றும் வடிவேலு தான்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கேரக்டர்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் தேதி சந்திரமுகி 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடையாத காரணத்தினால் அதன் ரிலீஸ் செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Ragava Lawrence got blessing from Rajinikanth

OFFICIAL ரஜினியை அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கும் முருகதாஸ்

OFFICIAL ரஜினியை அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘தர்பார்’ படத்தை இயக்கியிருந்தார் ஏ ஆர் முருகதாஸ். இந்த படத்திற்கு பிறகு அண்ணாத்த & ஜெயிலர் என 2 ரஜினி படங்கள் வெளியாகி விட்டன.

ஆனால் முருகதாஸுக்கு எந்த பட வாய்ப்பு வரவில்லை. விஜய் படத்தை இயக்குவார் முருகதாஸ் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது.

தற்போது சிவகார்த்திகேயன் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவது உறுதியாகிவிட்டது. அதன் விவரம் வருமாறு…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படம் அடுத்த ஆண்டு 2024 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார்.

எனவே காஷ்மீரில் இதன் படபிடிப்பு நடந்து வந்தது. இதில் நாயகியாக சாய்பல்லவி நடித்து வருகிறார்.

இதன் பின்னர் சிவகார்த்திகேயன் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்..

“எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”.

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Official Sivakarthikeyan and Murugadoss teamsup for first time

பாலாவின் வணங்கான் லுக்.; கையில் பிள்ளையார் – பெரியார் சிலைகளுடன் அருண்விஜய்

பாலாவின் வணங்கான் லுக்.; கையில் பிள்ளையார் – பெரியார் சிலைகளுடன் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்துக் காட்டுபவர் பாலா. சிறந்த நடிகர்களாக போற்றப்படும் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், சசிகுமார் உள்ளிட்ட பல நடிகர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தவர் பாலா என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆனால் சமீப காலமாக பாலாவின் படங்கள் வெளியாகவில்லை. விக்ரமின் மகன் துருவ் நடித்த வர்மா என்ற படத்தை இயக்கியிருந்தார் பாலா.

ஆனால் அந்தப் படம் பிடிக்கவில்லை என ரிலீஸ் செய்ய மறுத்து விட்டது தயாரிப்பு நிறுவனம்.

இதன் பின்னர் பாலா & சூர்யா கூட்டணி இணைந்தது. ‘வணங்கான்’ என்ற படத்தின் சூட்டிங் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்படவே படத்திலிருந்து விலகினார் சூர்யா.

ஆனாலும் வணங்கான் படம் கைவிடப்படாது என அறிவித்திருந்தார் பாலா.

அதன் பின்னர் அருண் விஜய் வைத்து படத்தை இயக்கியுள்ளார் பாலா.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 25ஆம் தேதி காலை ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் பாலா.

இந்த போஸ்டரில் உடல் முழுக்க சேரும் சகதியுமாக காணப்படுகிறார் அருண் விஜய். அவரது கைகளில் பிள்ளையார் சிலையும் பெரியார் சிலையும் உள்ளது. இது இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது எனலாம்.

இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

வணங்கான்

Vanangaan first look creates huge expectations

‘இறைவன்’ மேடையில் விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி

‘இறைவன்’ மேடையில் விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

நடிகர் ஜெயம் ரவி…

“இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, ‘இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது.

கோவிட் காரணமாக ‘ஜனகனமண’ நின்றது. அதன் பின்புதான் ‘இறைவன்’ தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள். வந்ததற்கு நன்றி.

வினோத் சாரின் படங்கள் இண்டஸ்ட்ரியை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. அகமது சாரின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. அழகர் சாருக்கு இந்தப் படம் மிகப்பெரிய லாபம் கொடுக்கும்.

விஜயலட்சுமி, நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். அப்பாதான் நான் உருவான இடம். நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் சுதன் எங்களுக்கு சிறப்பாக செய்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படமெல்லாம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் ‘தனி ஒருவன்2’ பண்ண மாட்டாயா எனக் கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான். ‘இறைவன்’ படம் எல்லாருக்கும் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் யுவனும் அதற்குக் காரணம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் ” என்றார்.

Will you give me call Sheet Jayamravi asking Vijaysethupathi

More Articles
Follows