ரீலீசுக்கு முன்பே விஜய் படைத்த சாதனை.; இங்கு இல்லை இங்கிலாந்துல.!

ரீலீசுக்கு முன்பே விஜய் படைத்த சாதனை.; இங்கு இல்லை இங்கிலாந்துல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

சென்னை, செப்டம்பர் 08, 2024: இன்று, அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ” இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த “வாரிசு”, திரைப்படம் ஜனவரி 2023-ல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் “லியோ” திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

“லியோ” திரைப்பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பிரமாண்டமானதாக இருந்து வருகிறது. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லியோ படத்தின் யூகே மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ளது.

பட வெளியீட்டிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே முன்பதிவுகளை தொடங்கி முன்னோடியான நகர்வை மேற்கொண்டது. இந்த உத்தி மிகப் பிரமாதமாக பலனளிப்பதாக தெரிகிறது.

“லியோ” இப்போது இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

“லியோ” திரைப்படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பால், அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மிகவும் உற்சாகமடைந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் கூடுதலான டிக்கெட்கள் விற்பனையாகி சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தளபதி விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. ‘பீஸ்ட்’ படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் விஜய்யின் அதிக வசூலையும் பெற்றது.

இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட “வாரிசு” அதே மைல்கல்லை எட்டியதோடு, இங்கிலாந்தில் தளபதி விஜய்க்கு மற்றொரு சிறந்த வருவாயை ஈட்டி காட்டி சாதனை படைத்தது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “ லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள்.

இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

வெளிநாட்டு தமிழ் திரைப்பட விநியோகத்தில் புகழ்பெற்ற நிறுவனமான, அஹிம்சா என்டர்டெயின்மென்ட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுடன் புதுமையான அணுகுமுறையில் “பீஸ்ட்”, “வாரிசு”, “மாமன்னன்”, “போர் தொழில்”, “கோப்ரா”, உட்பட பல படங்கள் பிரமாண்ட சாதனைகள் படைத்துள்ளது.

“நானே வருவேன்”, “வெந்து தணிந்தது காடு”, “காத்து வாக்குல ரெண்டு காதல்”, “லவ் டுடே”, மற்றும் “விடுதலை பார்ட் 1” போன்ற படங்களும் இந்த வரிசையில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays LEO Sets Pre release Record in the UK

லைக்கா தொடர்ந்த வழக்கில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட கோர்ட் தடை

லைக்கா தொடர்ந்த வழக்கில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

இந்த படத்தில் ரித்து வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக வினோத் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இந்தப் படத்தில் டி ராஜேந்தர் பாடிய அதிருதா என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது

செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது

லைக்கா நிறுவனத்துக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்தாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

High Court Ban Vishals Mark Antony release

2ஆம் சந்திரமுகியை பாராட்டிய முதல் சந்திரமுகி.; படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

2ஆம் சந்திரமுகியை பாராட்டிய முதல் சந்திரமுகி.; படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டில் பி வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா வடிவேலு, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.

இந்த படம் ஒரே திரையரங்கில் 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது.

தற்போது 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் பி வாசு.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க எம் எம் கீரவாணி இசை அமைத்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கங்கா ரனாவத், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, மகிமா நம்பியார், சுபிக்ஸா, சிருஷ்டி டாங்கே, லட்சுமிமேனன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் 2023 செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா, ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தைப் பாராட்டி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,

” இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன்.

சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள்.

நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி. வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

சந்திரமுகி 2

Chandramukhi 2 release date pushed to 28th September

JUST IN முதல் நாளிலேயே 130 கோடியை வசூலித்த ‘ஜவான்’.; ஷாருக் – அட்லி ஹாப்பி

JUST IN முதல் நாளிலேயே 130 கோடியை வசூலித்த ‘ஜவான்’.; ஷாருக் – அட்லி ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தயாரித்து நடித்த ‘ஜவான்’ படம் வெளியானது.

இந்த படத்தை தமிழக இயக்குனர் அட்லி இயக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைக்க ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு இருந்தார்.

எனவே ஜவான் படத்தின் வெற்றிக்காக ஹிந்தி ரசிகர்களைப் போல தமிழக ரசிகர்களும் காத்திருந்தனர்.

இந்த படம் ஹிந்தி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே அட்லீ இயக்கிய அனைத்து படங்களிலும் அவர் பல படங்களை காப்பி அடித்து எடுப்பதாக குற்றச்சாட்டு எழுவது வழக்கம். எனவே ‘ஜவான்’ படத்திற்கும் பல விமர்சனங்கள் எழுந்தன.

பத்திரிகையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ‘ஜவான்’.

இந்த நிலையில் இந்த படம் உலக அளவில் நேற்று 129.6 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. ஹிந்தி சினிமா வரலாற்றில் இது மிகப்பெரிய ரெக்கார்டு எனவும் கூறப்படுகிறது.

Jawan movie crossed Rs 130cr collection in box office

இயக்குனர் நடிகர் மாரிமுத்து மறைவு.; ரஜினி சிம்பு கார்த்தி விஷால் உள்ளிட்டோர் இரங்கல்

இயக்குனர் நடிகர் மாரிமுத்து மறைவு.; ரஜினி சிம்பு கார்த்தி விஷால் உள்ளிட்டோர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.

இவர் பல படங்களில் நடித்துள்ளார். ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஏற்ற குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.

இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மயக்கம் போட்டு விழுந்துள்ளது மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது.

இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், சிம்பு, கார்த்தி, விஷால் உள்ளிடோர் தங்கள் சமூக வலைதளத்தில் மாரிமுத்துவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் பதிவில்,

“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என்று பகிர்ந்துள்ளார்.

நடிகர் சிம்பு பதிவில்,

என பகிர்ந்துள்ளார்.

நடிகர் கார்த்தி பதிவில்,

என பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஷால் பதிவில்,

rajini simbu karthi vishal mourn the demise of actor Marimuthu

இசையமைப்பாளருக்கு இது முதன்முறை.. அது பொக்கிஷம்.; ‘ஜெயிலர்’ சக்சஸ் குறித்து அனிருத்

இசையமைப்பாளருக்கு இது முதன்முறை.. அது பொக்கிஷம்.; ‘ஜெயிலர்’ சக்சஸ் குறித்து அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் உலகளவில் 600 கோடிக்கு மேல் வசூலித்து இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நேற்று செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

இருந்தபோதிலும் மக்கள் ஆர்வத்துடன் தியேட்டர்களிலும் கண்டு களித்து வருகின்றனர். படத்தின் மிகப்பெரிய வெற்றியை முன்னிட்டு நடிகர் ரஜினி, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசளித்திருந்தார் சன் டிவி கலாநிதி மாறன்.

தனக்கு கிடைத்துள்ள விலை உயர்ந்த கார் பற்றி நடிகர் அனிருத் சமீபத்தில் பேசுகையில்…

“என்னிடம் பலரும் ‘விக்ரம்’ படத்தில் இயக்குனருக்கு கார் பரிசளிக்கப்பட்டது உங்களுக்கு ஒன்றுமில்லையா என்று கேட்டனர். அது போல சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்திற்கும் கேட்டனர். தற்போது ஜெயிலர் படத்திற்காக கார் கிடைத்துள்ளது.

என்னைப் பொருத்தவரை எனக்கு ‘விக்ரம்’ படம் கிடைத்ததே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். அது போல ‘ஜெயிலர்’ படம் கிடைத்ததும் மிகப்பெரிய சந்தோஷம்தான்.

பொதுவாக படத்தின் வெற்றிக்கு காரணமான நடிகர் இயக்குனர்களுக்கு பரிசுகள் கிடைத்திருக்கிறது. முதன்முறையாக ஒரு இசை அமைப்பாளருக்கு கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த கார் எனக்கு ஒரு பொக்கிஷம் போன்றது” என தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

Anirudh talks about Car gift for Jailer success

More Articles
Follows