தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கும் ‘இரும்புத்திரை’ படத்தில் விஷால் மற்றும் சமந்தா இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தை முழுக்க முழுக்க டிஜிட்டல் குற்றங்களைப் பின்னணியாக கொண்டு உருவாக்கி வருகிறாராம் இயக்குனர்.
சைபர் குற்றங்கள் எனப்படும் டிஜிட்டல் குற்றங்களான ஏ.டி.எம் மெஷின் கொள்ளை மற்றும் மோசடி உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இதன் கதைக்களத்தை அமைத்து இருக்கிறார்.
இப்படத்தில் நெகட்டிவ்வான கேரக்டரில் அர்ஜீன் நடித்து வருகிறார்.
இக்கேரக்டரில் முதலில் ஆர்யா நடிப்பதாக கூறப்பட்டது.
இக்கதை மிகவும் பிடித்துவிட்டதால் தயாரிப்பு பொறுப்பையும் விஷாலே ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.