தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 70வது இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இதுபோன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் கிராண்ட் பரேட் நடைபெற்றது.
பெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோஷியேசன் (எஃப்.ஐ.ஏ) சார்பில் நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு அபிஷேக்பச்சன், விக்ரம் உள்ளிட்டோர் சென்றனர்.
இவ்விழாவில் விக்ரம் யாரையும் கண்டு கொள்ளாமல் செல்போனையே பார்த்து கொண்டிருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து எஃப்.ஐ.ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்..
“தன்னுடைய பட ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக இருந்த போதும், ஒரு இந்தியராக இந்தியா டே பரேடில் கலந்து கொண்ட விக்ரமுக்கு நன்றி.
பிரகாஷ் எம். சுவாமி சமூகவலைத்தளத்தில் விக்ரமை பற்றி எழுதியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். அதில் உண்மையில்லை.
அவருக்கும் இந்நிகழ்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால் அவரின் பதிவால் விக்ரம் மிகவும் வருத்தமடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.