தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாக உள்ளது.
சுமார் 600 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் கர்நாடகாவில் இப்படத்தை வெளியிடக்கூடாது என கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடத்தினர்.
மற்ற மொழி திரைப்படங்கள் கர்நாடகாவில் அதிக தியேட்டர்களில் வெளியாவதால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்படுவதாக இவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ரஜினி படங்கள் வெளியாகும் சமயத்தில் காவிரி நீர் பிரச்சினையை இந்த வாட்டாள் நாகராஜ் கையில் எடுப்பார்.
காலா ரிலீஸ் சமயத்தில் கூட காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதை அவர் கண்டித்து தான் போராட்டம் நடத்தினார்.
இந்த முறை அவர் புதிய காரணத்தை கையில் எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஆக.. ரஜினி படங்களை எதிர்ப்பது இவருக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது எனலாம்.
Vatal nagaraj opposes 2.O movie release in Karnataka