நரகாசூரன் படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்த கார்த்திக் நரேன்

நரகாசூரன் படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்த கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

naragasooran release

ரகுமான் நடிப்பில் ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.
அதன் பின்னர் அரவிந்த்சாமி மற்றும் ஸ்ரேயா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தை கௌதம் மேனன் தயாரித்திருந்தார்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

அண்மையில் அருண் விஜய், பிரசன்னா நடித்த ‘மாஃபியா: சேப்டர் 1’ படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் நரகாசூரன் படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

கிரிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ பட டிரெய்லரிலிருந்து ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

அதில் “நரகாசூரன்’ வெளிவரும் ஆனால்…..இந்தப் பகுதி சற்று நாடகத்தன்மையாக இருக்கும்” என்ற டயலாக்கை இணைத்துள்ளார்.

அதாவது ‘நரகாசூரன்’ படத்தை நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நடிகை மைனா நந்தினி வீட்டுல விசேஷம்… ரசிகர்கள் வாழ்த்து

நடிகை மைனா நந்தினி வீட்டுல விசேஷம்… ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

myna nandhiniடிவி சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் மிகப் பிரபலமானவர் நடிகை நந்தினி.

மேலும் சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி உள்ளிட்ட ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் சின்னத்திரையை பொறுத்தவரை இவரை மைனா நந்தினி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.

இவர் வெண்ணிலா கபடி குழு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது பிறந்தநாளை தன் வீட்டில் சிறப்பாக கொண்டாடியுள்ளார் மைனா நந்தினி.

மேலும் இவர் தற்போது கர்ப்பமாகியிருக்கிறார்.

அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். எனவே ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது வழக்கமான பரிசோதனை தான் என தெரிய வந்துள்ளது.

அவர் நேற்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்பதால் அதிமுக தொண்டர்களிமையே இது பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்.க்கு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதால் இன்று மே 25 மாலை வரை மருத்துவமனையிலேயே இருக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

துணை முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடல் நலம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Eps ops

சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி; விதிமுறைகள் என்ன?

சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி; விதிமுறைகள் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

industrial estate in chennaiகொரோனா வைரசை கட்டுப்படுத்த கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்த நிலையில் சில தளர்வுகள் தற்போது வணிக நிறுவனங்களை திறக்க மாநில அரசுகள் அனுமதித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை, கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

25 சதவீத தொழிலாளர்களுடன் ஆலைகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை.

மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் விடுப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசின் வழிகாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஹிந்தியை தமிழாக்கும் போனி கபூர்; அஜித்தை அடுத்து கை கொடுக்கும் உதயநிதி

ஹிந்தியை தமிழாக்கும் போனி கபூர்; அஜித்தை அடுத்து கை கொடுக்கும் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

boney kapoor udhayanidhiவினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்திருந்தனர்.

தற்போது அஜித் நடிப்பில் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு சூப்பர் ஹிட்டான ஹிந்தி படத்தையும் தமிழுக்கு கொண்டு வருகிறார் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. அயுஷ்மன் குரானா நடித்திருந்த இந்த படத்தில் ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கதை இருக்கும.

அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு சாதி தடங்கல்கள் வருவதும், அதனை அவர் முறியடிப்பதுமே படமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க போனி கபூர் தயாரிக்க அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ரீமேக் தொடர்பான செய்தியை நாம் 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தோம்.

அதற்கான லிங்க் இதோ…

https://www.filmistreet.com/cinema-news/ajith-movie-producer-team-up-with-arunraja-kamaraj-and-udhayanidhi/

நேரு ஸ்டேடியத்தை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவு

நேரு ஸ்டேடியத்தை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nehru stadium chennaiதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது.

நேற்று மட்டும் 760 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

தமிழகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,510 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே 624 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,989 கடந்துள்ளது.

இந்த நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்கள் அங்கு தங்க வைக்கப் படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows