தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துருவங்கள் 16 என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நரகாசூரன்.
இதில் அரவிந்த்சாமி, சந்தீப்கிஷன், இந்திரஜித், கிட்டி, ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இப்படத்தை ஆகஸ்ட் 31-ந்தேதி வெளியிடுகின்றனர்.
இந்த படத்தின் டிலைர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது நாயகன் அரவிந்த்சாமி பேசுகையில்,
இந்த படத்தில் நடிப்பதற்கு கார்த்திக் நரேன் என்னை சந்தித்தார்.
நான் அப்போதே அவரிடம் எனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். உங்கள் கதைக்குள் நான் என்னை பிட் செய்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டேன்.
ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் கதையை நன்றாக படமாக்கியுள்ளார். அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு” என பேசினார்.
I will fit into my character says Arvindsamy to Karthick Naren