ரஜினி-விஜய் பட நாயகியுடன் கூட்டணி..; சொன்னதை செய்தார் தனுஷ்

ரஜினி-விஜய் பட நாயகியுடன் கூட்டணி..; சொன்னதை செய்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூலை 28-ம் தேதி தனுஷ் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அப்போது ரஜினியின் ‘பேட்ட’ & விஜய்யின் ‘மாஸ்டர்’ படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனும் வாழ்த்தியிருந்தார்.

அவரின் வாழ்த்தில்.. “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ் சார். உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன்.” என தன் ஆசையை தெரிவித்திருந்தார்.

அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ், “நன்றி. விரைவில் நடக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அந்த வாக்கை காப்பாற்றியுள்ளார் தனுஷ்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி தயாரிக்கும் D43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Malavika Mohanan on board for D43

D 43 heroine

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் பாடிய ஹிந்தி பாட்டு..; ரசிகர்கள் செம குஷி..!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் பாடிய ஹிந்தி பாட்டு..; ரசிகர்கள் செம குஷி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஞ்சனா & ஷமிதாப் ஆகிய இரண்டு ஹிந்தி படல்களை தொடர்ந்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இதில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

‘அத்ரங்கி ரே’ படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

தனுஷ் நடித்த ‘மரியான்’, ‘ராஞ்சனா’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் இதுவரை அவரது இசையில் தனுஷ் பாடவில்லை.

இந்த நிலையில் முதன்முறையாக ‘அத்ரங்கி ரே’ படத்தில் ஏஆர்ஆர் இசையில் தனுஷ் பாடியிருக்கிறாராம்.

Dhanush croons a song for Atrangi Re

Atrangi Re

தொழிலதிபரை மணந்தார் காஜல் அகர்வால்..; வைரலாகும் மேரேஜ் போட்டோஸ்

தொழிலதிபரை மணந்தார் காஜல் அகர்வால்..; வைரலாகும் மேரேஜ் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal Aggarwal marriage picsதமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை காஜல் அகர்வால்.

தமிழில் பேரரசு இயக்கிய பரத்தின் ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதன்பின்னர் தமிழில் மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அப்போது அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதை உறுதி செய்தார்.

தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை மணமுடிக்க உள்ளேன் என அறிவித்தார்.

கௌதம் தொழில்முனைவோர் இண்டெரியர் வடிவமைப்பு வீட்டு அலங்காரம் ஈ-காமர்ஸ் தளமான டிஸ்கர்ன் லிவிங்கின் நிறுவனர் ஆவார்.

அவர் அறிவித்தப்படி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் காஜல் & கவுதம் திருமணம் இன்று நடைபெற்றது.

தனது திருமணத்திற்கு முந்தைய நிச்சயதார்த்தம்.. மருதானி வைப்பது ஆகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் முடிந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என காஜல் அகர்வால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Kajal Aggarwal And Gautam Kitchlu Are Now Married.

பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ‘கன்னுக்குட்டி’..; பேச மறுத்த சுரேஷ்..; ஓவர் ப்லீஃங்கில் அனிதா கணவர்

பிக்பாஸ் வீட்டில் கதறியழுத ‘கன்னுக்குட்டி’..; பேச மறுத்த சுரேஷ்..; ஓவர் ப்லீஃங்கில் அனிதா கணவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anitha sampath husband‘பிக்பாஸ் 4’ தொடங்கி கிட்டதட்ட ஒரு மாதமாகிவிட்டது.

இந்த வீட்டில் நகரவாசி, கிராமவாசி டாஸ்க் நடைபெற்றது.

இதில் போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிந்து டாஸ்க்கில் ஈடுபட்டனர்.

அப்போது சுரேஷ், அனிதாவை சுமங்கலி வாங்க என்று கூறி அவரை முதலில் தொடங்க வைத்தார்.

இதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு, நடனம் & பாடல் போட்டிகள் நடைபெற்றன.

பேச்சு போட்டியின் போது நகரத்தார் தலைப்பில் பேசிய அனிதா..

சுரேஷ் சார் என்னை சுமங்கலி வாங்க என்று அழைத்தார். சில கிராமங்களில் விதவைகளை தனித்து விடும் பழக்கம் இருக்கிறது.

இதுவே நான் சுமங்கலி இல்லை என்றால் என்னை முதலில் அழைத்திருக்க மாட்டார்கள் என ஒருவிதமாக பேசினார்.

இதனால் சில போட்டியாளர்கள் முகம் சுளித்தனர்.

ஷிவானி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் அதில் தவறு இல்லை என்றனர்.

மேலும் சுரேஷ் கோபமடைந்தார்.

பின்னர் அனிதா அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் சுரேஷ் பேச மறுத்துவிட்டார்.

இதன் பின்னர் “யாரை அதிகமாக மிஸ் பண்ணுறீங்க” என்ற ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது.

அதில் போட்டியாளர்கள் பலரும் அழுதபடியே பேசினர்.

பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத அனிதா, தனிமையாக உணர்வதாகவும் தன் மீது தவறுகள் இருப்பதாக நினைப்பதாகவும் தன் கணவர் பிரபாவை ரொம்ப மிஸ் செய்வதாக பேசினார்.

அவர் எப்போதும் என்னை கன்னுக்குட்டி தான் அழைப்பார். உங்களுக்கு எல்லாம் இது ஜஸ்ட் வார்த்தை. ஆனால் எனக்கு அது செண்டிமென்ட் என எமோசனலாக பேசினார்.

இதனை சக போட்டியாளர்கள் கிண்டலடித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் அனிதா கணவர் பிரபாகரன்.

அதில்..இது எல்லாம் சரியாகி விடும். கவலை வேண்டாம் செல்லம்மா.” என பதிவிட்டுள்ளார்.

Anitha husband Prabakaran’s reply to her crying

மருத்துவ படிப்புக்கு கட்ஆப் மார்க் அதிகரிப்பு..: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு..; ஆளுநர் அனுமதி

மருத்துவ படிப்புக்கு கட்ஆப் மார்க் அதிகரிப்பு..: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு..; ஆளுநர் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதிக்காக நேற்று வரை காத்திருந்தது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

45 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார்.

இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அவரின் ஒப்புதலுக்கு ஏற்கனவே கால தாமதம் ஆன நிலையில், மேலும் அதற்கான அவகாசம் கேட்டிருந்தார் ஆளுநர்.

இதனிடையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து, ஆளுநர் மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்தார்.

எனவே ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று நன்றி தெரிவித்தார்.

எனவே 7.5% ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால், மருத்துவப்படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு பொது பிரிவினருக்கு 520, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் மதிப்பெண் இருந்தது.

இந்தாண்டு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும்.

அதேசமயம் இந்த முறை 500க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிகமாக உள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை சரி செய்ய 7.5% இடஒதுக்கீடு போக மீதிமுள்ள இடத்துக்கான கட்ஆப் மதிப்பெண்ணை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 70 முதல் 100 மதிப்பெண்கள் வரை கட்ஆப் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

High cut-off likely for medical admissions this year in TN

விஷால் & ஆர்யா கூட்டணியில் இணைந்தார் மிருணாளினி

விஷால் & ஆர்யா கூட்டணியில் இணைந்தார் மிருணாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mirnaliniஅரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.

இவரின் புதிய படத்தில் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு ஆர்யா & விஷால் இணைந்து நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இது விஷாலுக்கு 30வது படம். ஆர்யாவுக்கு 32வது படமாகும்.

மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் இப்படத்தை தயாரித்து வருகிறார்

இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் கடந்த அக். 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமன் இசையமைக்க ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பிருந்தா நடனத்தை கவனிக்கிறார்.

இந்த நிலையில் மிருணாளினி இப்பத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இவர் ஏற்கெனவே ஆரண்ய காண்டம், சாம்பியன் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

Actress Mirnalini joins the sets of Vishal and Arya’s next

More Articles
Follows