கார்த்திக் நரேன் தான் அடுத்த ரவிக்குமார்-ஹரி-சுந்தர் சி… பிரசன்னா

கார்த்திக் நரேன் தான் அடுத்த ரவிக்குமார்-ஹரி-சுந்தர் சி… பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna Director Karthick Narenதுருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் நரேன்.

அதன்பின்னர் நரகாசூரன் படத்தை எடுத்தார். இவருக்கும் அப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் அப்படம் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது 3வது படமாக லைகா தயாரிப்பில் மாஃபியா படத்தை எடுத்துள்ளார்.

இந்த படம் வருகிற பிப்ரவரி 21ல் வெளியாக உள்ளது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரசன்னா பேசியதாவது…

“இந்தப் படத்தை 33 நாட்களில் முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.

இதன் கிளைமாக்ஸ் காட்சிக்காக பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 லட்ச ரூபாய் வாடகை கொண்ட ஒரு சூட்டில் படப்பிடிப்பு நடந்தது.

அங்கு மூன்று நாட்களில் எடுக்க வேண்டிய ஒரு காட்சிகளை ஒரே நாளில் எடுத்து முடித்தார். இவர் எப்படி எடுப்பார் என காத்திருந்த அனைருவருக்கும் அதிர்ச்சி.

3 நாள் படப்பிடிப்பு செலவை தயாரிப்பாளருக்கு மிச்சப்படுத்தினார்.

இதற்கு முன் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி சுந்தர் சி ஆகியோரின் திட்டமிடல் இப்படிதான் இருக்கும். அதான் அவர்கள் இன்றும் படங்களை இயக்குகிறார்கள்.

எனவே என்னை பொறுத்த கார்த்திக் நரேன் தான் அடுத்த கே.எஸ்.ரவிக்குமார், ஹரி சுந்தர் சி” என்பேன்.

ஹர்பஜன்சிங் & லாஸ்லியா கூட்டணியில் இணைந்தார் அர்ஜுன்

ஹர்பஜன்சிங் & லாஸ்லியா கூட்டணியில் இணைந்தார் அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjunஇந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஹர்பஜன் சிங்.

இவர் முதன்முறையாக ‛பிரண்ட்ஷிப்’ என்ற படத்தின் முமூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

ஷேண்டோ ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா தயாரிக்கிறார்கள்.

இதில் ஹர்பஜன்சிங்குக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லொஸ்லியா நடிக்கிறார்.

தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார்.

இவர் வழக்கம்போல போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

உங்க இஷ்டத்துக்கு கோர்ட் செய்யனுமா..? தர்பார் டைரக்டருக்கு நீதிபதி கண்டனம்

உங்க இஷ்டத்துக்கு கோர்ட் செய்யனுமா..? தர்பார் டைரக்டருக்கு நீதிபதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth AR Murugadossரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் இணைந்த ‘தர்பார்’ படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியானது.

இந்தியளவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் தமிழகத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சில விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் ரஜினி மற்றும் முருகதாஸை சந்திக்க சென்றனர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி போலீஸ் கமி‌‌ஷனருக்கு உத்தரவிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது முருகதாஸின் வக்கீல், ‘போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை’ என கூறினார்.

முதலில், ‘பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும்.

போலீசாரும் அதன்படி வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்படனுமா’ என்று கண்டனம் தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

விவேக் & சார்லியின் ‘வெள்ளைப்பூக்கள்’ 2ஆம் பாகம் தயாராகிறது

விவேக் & சார்லியின் ‘வெள்ளைப்பூக்கள்’ 2ஆம் பாகம் தயாராகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vellai Pookkal 2புதிய கதை எதுவும் கிடைக்காவிடில் ஏற்கெனவே ஹிட்டான படங்களை ரீமேக் செய்வது அல்லது ஹிட்டான படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை சில இயக்குனர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இரண்டாம் பாக படங்கள் பெரும்பாலும் தோல்வியை தழுவி வருகிறது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான படம் வெள்ளைப் பூக்கள்.

இதில் விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இவரின் நண்பராக சார்லி நடித்திருந்தார்.

அமெரிக்கா செல்லும் விவேக் அங்கு நடக்கும் மர்ம கொலைகளை கண்டுபிடிப்பதாக கதை இருக்கும்.

இந்த படத்தை விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார்.

தற்போது 2ஆம் பாகத்துக்கான கதையை இவர் எழுதியுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

ஓவரா சிரிச்ச ஹிப் ஹாப் ஆதியை ஓங்கி அடித்த ‘ஓ மை கடவுளே’

ஓவரா சிரிச்ச ஹிப் ஹாப் ஆதியை ஓங்கி அடித்த ‘ஓ மை கடவுளே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oh My Kadavule beats Naan Sirithal in box office கடந்த வாரம் வெள்ளியன்று காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமா களைகட்டியது.

காதலர்களுக்கு விருந்தளிக்க காதல் இளசுகளுக்கான படங்கள் வெளியானது.

அஸ்வத் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே படம் வெளியானது.

ஆக்சஸ் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.

சிரிப்பா சிரிக்குது… நான் சிரித்தால் விமர்சனம் 3/5

இத்துடன் ஹிப் ஹாப் ஆதி இசையைமத்து நடித்த நான் சிரித்தால் படமும் வெளியானது.

சுந்தர் சி தயாரித்த இந்த படத்தை ராணா என்பவர் இயக்கியருந்தார்.

ஹிப் ஹாப் ஆதி படங்களுக்கு க்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருப்பதால் முதல் நாள் நல்ல வசூலானது.

ஆனால் அடுத்தடுத்து கலவையான விமர்சனங்களையே பெற்றது. படம் முழுவதும் கெக்கே பேக்கே என சிரித்துக் கொண்டே இருப்பார் ஹீரோ.

இதற்காக 50 வகையான சிரிப்புகளை அவர் ஹோம் ஓர்க் செய்தாராம்.

கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

ஆனால் எல்லாம் சிரிப்பும் ஒரே மாதிரிதான் இருந்தன. நாயகியும் கவர்ச்சியான உடைகளை தோன்றினார்.

இந்த படத்துடன் மோதிய ஓ மை கடவுளே படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இது முழுக்க முழுக்க காதலர்களுக்கான படமாக இருந்தாலும் கொஞ்சம் கூட கவர்ச்சியே இல்லாமல் படமாக்கப்பட்டது.

எனவே இதனை அனைத்து தரப்பு குடும்பத்தினரும் ரசித்தனர்.

இதனால் தற்போது தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நான் சிரித்தால் படத்தை விட ஓ மை கடவுளே நல்ல வசூலையும் விமர்சனங்கள் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரு படங்களுக்கும் இன்று ஒரே நாளில் வெற்றி மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Oh My Kadavule beats Naan Sirithal in box office

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayalaan first look“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது. தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய கனவு. ஹாலிவுட்டின் வெற்றி சரித்தரமாக விளங்கும் இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது “அயாலான்” குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பாக 17.02.2020 அன்று “டாக்டர்” படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் முன், அவர்களுக்கு அடுத்ததொரு இன்ப அதிர்ச்சியாக, “அயலான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் படக்குழு. ஏற்கனவே A. R. ரஹ்மான் இசைத்துணுக்குடன் வெளியிடப்பட்ட டைட்டில், பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் வேற்றுகிரக வாசியுடன் வெளிவந்திருக்கும் “அயாலான்” ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

“அயலான்” படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. மொத்த படப்பிடிப்பும் முடிய இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் படப்பிடிப்புடன் இணையாக நடைபெற்று வருகிறது.தமிழின் பிரமாண்டமான அறிவியல் புனைகதை ( சயின்ஸ் ஃபிக்‌ஷன் ) படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிகளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுதும் முன்னணி நாயகியாக வலம் வரும் ராகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். காமெடி ராஜாக்களாக வலம் வரும் கருணாகரன், யோகிபாபு ஆகிய இருவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்கிறார்கள். பாலிவுட்டில் மிக சிறந்த நடிகராக விளங்கும் சரத் கேல்கர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்க KJR Studios நிறுவனர் கொட்டாப்படி J ராஜேஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் “அயலான்” அகாடமி அவார்ட் வின்னர் A. R. ரஹ்மான் சிவகார்த்திகேயனின் அறிமுகப்பாடலை பாடியுள்ளார். மாயஜால விஷ்வல்களை திரையில் கொண்டு வரும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

More Articles
Follows