தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் நரேன்.
அதன்பின்னர் நரகாசூரன் படத்தை எடுத்தார். இவருக்கும் அப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் அப்படம் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது 3வது படமாக லைகா தயாரிப்பில் மாஃபியா படத்தை எடுத்துள்ளார்.
இந்த படம் வருகிற பிப்ரவரி 21ல் வெளியாக உள்ளது.
இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரசன்னா பேசியதாவது…
“இந்தப் படத்தை 33 நாட்களில் முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.
இதன் கிளைமாக்ஸ் காட்சிக்காக பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 லட்ச ரூபாய் வாடகை கொண்ட ஒரு சூட்டில் படப்பிடிப்பு நடந்தது.
அங்கு மூன்று நாட்களில் எடுக்க வேண்டிய ஒரு காட்சிகளை ஒரே நாளில் எடுத்து முடித்தார். இவர் எப்படி எடுப்பார் என காத்திருந்த அனைருவருக்கும் அதிர்ச்சி.
3 நாள் படப்பிடிப்பு செலவை தயாரிப்பாளருக்கு மிச்சப்படுத்தினார்.
இதற்கு முன் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி சுந்தர் சி ஆகியோரின் திட்டமிடல் இப்படிதான் இருக்கும். அதான் அவர்கள் இன்றும் படங்களை இயக்குகிறார்கள்.
எனவே என்னை பொறுத்த கார்த்திக் நரேன் தான் அடுத்த கே.எஸ்.ரவிக்குமார், ஹரி சுந்தர் சி” என்பேன்.