தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன்பு தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம், வருணின் ஜோஷ்வா’ ஆகிய படங்கள் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார் இயக்குனர் கௌதம் மேனன்.
இந்த 3 படங்களையும் இவர் இயக்கியிருந்தார். ஆனால் இவர் தயாரித்த நரகாசூரன் படம் ரிலீஸ் பற்றிய தகவல் எதையும் அதில் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் நரகாசூரன் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அவர்கள் படம் குறித்து கௌதம் மேனனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்தப் படம் (‘நரகாசூரன்’) எப்போது பகல் வெளிச்சத்தைப் பார்க்கும் என்பதைப் பற்றிய ஒரு தெளிவைச் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும். ஆம், இந்தப் படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம்” எனத் தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் என்ன சொல்வாரோ? பார்ப்போம்.
Karthik Narains question to Gautham Menon about Naragasooran