தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துருவங்கள் பதினாறு, மாஃபியா, மாறன் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் மாறன் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை அடுத்து அதர்வா நடிக்கவுள்ள ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.
அதர்வாவுடன் சரத்குமார், ரகுமான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களை மையப்படுத்தியே நிறங்கள் மூன்று என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
வில்லு, ஏகன், பேராண்மை, நந்தலாலா உள்ளிட்ட படங்களை தயாரித்த நிறுவனம் இது.
வரும் 5-ஆம் தேதி முதல் நிறங்கள் 3 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இதுவொரு ஹைப்பர்லிங்க் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
Karthick Naren’s next film is titled Nirangal 3