OFFICIAL த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

OFFICIAL த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை த்ரிஷா கடைசியாக ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

த்ரிஷா தற்போது ‘தி ரோட்’ (the road) என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘தி ரோட்’ படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

trisha’s ‘the road’ movie releasing on october 6th

நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு இதான் காரணமா.? ஜோசியர் சாபம் பலித்ததா.?

நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு இதான் காரணமா.? ஜோசியர் சாபம் பலித்ததா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 8ம் தேதி நடிகர் மாரிமுத்து காலமானார். அவர் ‘எதிர்நீச்சல்’ டிவி சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மரணம் அடைந்தார்.

சில மாதங்களுக்கு முன் அவர் ஒரு தனியார் டிவி நடத்திய ஒரு நிகழ்வில் பங்கேற்றார். அப்போது.. “தான் ஒரு நாத்திகவாதி. கடவுளை நம்பாதவன் என்றெல்லாம் பேசி இருந்தார். அந்த வீடியோக்கள் வைரலானது.

அந்த விவாத நிகழ்ச்சியில்.. “ஜோசியருக்கும் நடிகர் மாரிமுத்துக்கும் விவாதம் வந்தபோது.. உங்களுக்கு இடுப்புக்கு மேலே உடலில் ஒரு பிரச்சனை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

அதற்கு மாரிமுத்துவோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.. இடுப்புக்கு மேலே இதயம்தான் இருக்கிறது. அது நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது என தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது.. அதனால்தான் தற்போது அது உங்கள் உயிரை பறித்து விட்டது எனவும் சிலர் கருத்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Reason behind Director Actor Marimuthu death

குணசேகரன் மறைவை தாங்க முடியாமல் ‘எதிர்நீச்சல்’ குழுவினர் குமுறல்

குணசேகரன் மறைவை தாங்க முடியாமல் ‘எதிர்நீச்சல்’ குழுவினர் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை 8.30 மணியளவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.

இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், மாரிமுத்துவின் உடலுக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் நேரில் வந்து செலுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் திருச்செல்வம் கூறியதாவது,

இதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இன்று காலையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதாக சொல்லியிருந்தார். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்படி ஆகியிருந்தால், அது வேறு. ஆனால் இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது குடும்பத்தினர், ‘எதிர்நீச்சல்’ டீம், ரசிகர்கள் அனைவருக்குமே மிகப்பெரிய இழப்பு. நாங்கள் ‘எதிர்நீச்சல்’ குழுவினர் அனைவருமே மருத்துவமனையில்தான் இருக்கிறோம். இதற்கு மேல் என்னால் எதுவும் பேசமுடியவில்லை’.

இவ்வாறு திருச்செல்வம் சோகத்துடன் பேசினார்.

The death of Marimuthu has shocked ethirneechal serial team

ரீலீசுக்கு முன்பே விஜய் படைத்த சாதனை.; இங்கு இல்லை இங்கிலாந்துல.!

ரீலீசுக்கு முன்பே விஜய் படைத்த சாதனை.; இங்கு இல்லை இங்கிலாந்துல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

சென்னை, செப்டம்பர் 08, 2024: இன்று, அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ” இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த “வாரிசு”, திரைப்படம் ஜனவரி 2023-ல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் “லியோ” திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

“லியோ” திரைப்பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பிரமாண்டமானதாக இருந்து வருகிறது. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லியோ படத்தின் யூகே மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ளது.

பட வெளியீட்டிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே முன்பதிவுகளை தொடங்கி முன்னோடியான நகர்வை மேற்கொண்டது. இந்த உத்தி மிகப் பிரமாதமாக பலனளிப்பதாக தெரிகிறது.

“லியோ” இப்போது இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

“லியோ” திரைப்படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பால், அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மிகவும் உற்சாகமடைந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் கூடுதலான டிக்கெட்கள் விற்பனையாகி சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தளபதி விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. ‘பீஸ்ட்’ படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் விஜய்யின் அதிக வசூலையும் பெற்றது.

இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட “வாரிசு” அதே மைல்கல்லை எட்டியதோடு, இங்கிலாந்தில் தளபதி விஜய்க்கு மற்றொரு சிறந்த வருவாயை ஈட்டி காட்டி சாதனை படைத்தது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “ லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள்.

இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

வெளிநாட்டு தமிழ் திரைப்பட விநியோகத்தில் புகழ்பெற்ற நிறுவனமான, அஹிம்சா என்டர்டெயின்மென்ட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுடன் புதுமையான அணுகுமுறையில் “பீஸ்ட்”, “வாரிசு”, “மாமன்னன்”, “போர் தொழில்”, “கோப்ரா”, உட்பட பல படங்கள் பிரமாண்ட சாதனைகள் படைத்துள்ளது.

“நானே வருவேன்”, “வெந்து தணிந்தது காடு”, “காத்து வாக்குல ரெண்டு காதல்”, “லவ் டுடே”, மற்றும் “விடுதலை பார்ட் 1” போன்ற படங்களும் இந்த வரிசையில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays LEO Sets Pre release Record in the UK

லைக்கா தொடர்ந்த வழக்கில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட கோர்ட் தடை

லைக்கா தொடர்ந்த வழக்கில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

இந்த படத்தில் ரித்து வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக வினோத் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இந்தப் படத்தில் டி ராஜேந்தர் பாடிய அதிருதா என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது

செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது

லைக்கா நிறுவனத்துக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்தாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

High Court Ban Vishals Mark Antony release

2ஆம் சந்திரமுகியை பாராட்டிய முதல் சந்திரமுகி.; படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

2ஆம் சந்திரமுகியை பாராட்டிய முதல் சந்திரமுகி.; படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டில் பி வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா வடிவேலு, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.

இந்த படம் ஒரே திரையரங்கில் 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது.

தற்போது 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் பி வாசு.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க எம் எம் கீரவாணி இசை அமைத்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கங்கா ரனாவத், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, மகிமா நம்பியார், சுபிக்ஸா, சிருஷ்டி டாங்கே, லட்சுமிமேனன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் 2023 செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா, ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தைப் பாராட்டி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,

” இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன்.

சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள்.

நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி. வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

சந்திரமுகி 2

Chandramukhi 2 release date pushed to 28th September

More Articles
Follows