தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் அரசியல் பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
தற்போது அவர் காலா படத்தில் பிஸியாக இருப்பதால், பரபரப்பு கொஞ்சம் தணிந்துள்ளது.
இந்நிலையில் ஆரம்பம் முதலே ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து வரும் திருமாவளவன் தனியார் டிவி பேட்டியில் கூறியதாவது…
“அரசியல்வாதி என்ற முறையில் ரஜினியை அரசியலுக்கு வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது.
ரஜினிகாந்த் தமிழரல்ல என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்.
தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு நல்ல மனிதர் ஆளவேண்டும்.
ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால் அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார்.
ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார்.
திருமாவளவனின் இந்த பேட்டி அரசியல் உலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.






