தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகர் சரவணசக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப் நடித்துள்ள படம் ‘குலசாமி’. இந்த படம் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஏப்ரல் 17ஆம் தேதி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த விழாவில் ‘மாநாடு’ பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசியதாவது
“நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயது முதலே நண்பர்கள் தான்..
ஒருமுறை ஜோசியரை பார்த்தேன். எனக்கு ஏழரை சனி நடப்பதாகவும் கடல் தாண்டி வெளிநாடு சென்றால் ஏழரை சனி பாதிப்பு இருக்காது என்றார்.
மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு நம்பிக்கை இருந்தது. எனவே கடல் தாண்டி வெளிநாடு சென்றேன். ஏழரை சனி ஒன்றும் செய்யவில்லை.
மலேசியாவில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தேன்.. அதன் பின்னர்தான் இங்கு திரும்பினேன். அப்போது பிரேம் பாண்டியன் என்ற தன் பெயரை சரவண சக்தி என்று மாற்றி ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் என் நண்பன்.
நல்ல திறமைசாலி பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
Suresh Kamatchi speech at kulasami press meet