தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த படம் கபாலி என கூறப்பட்டது.
ஆனால் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாக்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், “கபாலி” யால் தங்களுக்கு சுமார் 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர்கள் தயாரிப்பாளர் தாணுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதில் முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.
எனவே அடுத்த கட்ட முயற்சியாக 2.ஓ சூட்டிங்கில் இருந்த ரஜினியை தியேட்டர் உரிமையாளர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கலந்து ஆலோசித்து பிரச்சினையை கவனத்தில் கொள்வதாக ரஜினி உறுதியளித்துள்ளார்.