‘நாட்டு நாட்டு’ பாட்டு இனி எங்க பாட்டு இல்ல.; ஆர்ஆர்ஆர் பட நடிகர் அறிக்கை

‘நாட்டு நாட்டு’ பாட்டு இனி எங்க பாட்டு இல்ல.; ஆர்ஆர்ஆர் பட நடிகர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் தான் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருது பெற்றதை பற்றி ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘நாட்டு நாட்டு’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட ‘ஆர்ஆர்ஆர்’ குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். பாடலை சிறப்பாக பாடிய ராகுல் சிபில்கஞ்ச் மற்றும் காலபைரவா, நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் மற்றும் இந்த பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. சிறந்த கதை மற்றும் சிறந்த பாடல் மொழி மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இந்தப் பாடல் இனி எங்களின் பாடல் அல்ல, ‘நாட்டு நாட்டு’ இனி பொதுமக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்ட அனைத்து வயது மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானது.

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோரையும் வாழ்த்துகிறேன். இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த தருணம்!”

The song ‘Naatu Nathu’ is no longer our song says RRR actor

ஆஸ்கார் விழாவில் பங்கேற்ற தீபிகா படுகோனைப் பாராட்டிய கங்கனா ரனாவத்

ஆஸ்கார் விழாவில் பங்கேற்ற தீபிகா படுகோனைப் பாராட்டிய கங்கனா ரனாவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 95வது அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டதைக் கண்டு உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்தனர், அங்கு அவர் தொகுப்பாளராக
திறம்பட செயல்பட்டார். உலக அரங்கில் அவரது நேர்த்தியான தோற்றம் நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றது. நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனைப் பாராட்டினார், இந்தியப் பெண்கள் இணையற்றவர்கள் என்பதற்கு அவர் ஒரு சான்றாக விளங்குகிறார் என்று கூறினார். கங்கனா தனது சமூக ஊடக பதிவில், தீபிகாவின் அசத்தலான அழகையும் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

Oscar 2023: Kangana Ranaut lauds Deepika Padukone

தனுஷின் ‘வாத்தி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் ‘வாத்தி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.

இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், கென் கருணாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

‘வாத்தி’/’சார்’ படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இப்படத்தின் வசூலை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், ‘வாத்தி’ படம் வரும் மார்ச் 17 முதல் பிரபலமான நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்தி

Dhanush’s ‘Vaathi’ OTT Release Date Announcement

ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கை தட்டி தூக்கிய ஹேக்கர்கள்

ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கை தட்டி தூக்கிய ஹேக்கர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல கோலிவுட் நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இருப்பினும், தொழில்நுட்ப ஆதரவு குழுக்களின் உதவியுடன் அவை மீட்டமைக்கப்படுகின்றன. இப்போது, ​​இந்த பட்டியலில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்துள்ளார்.

கடந்த மார்ச் 10ம் தேதி ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு பெயர் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவரது பக்கத்தின் பெயர் மற்றும் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் பக்கம் இன்று காலை வெற்றிகரமாக மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Music composer Harris Jayaraj’s Twitter account gets hacked

இந்திய கிரிக்கெட் வீரரின் 21 ஆண்டுகால கனவை நனவாக்கிய ரஜினிகாந்த்

இந்திய கிரிக்கெட் வீரரின் 21 ஆண்டுகால கனவை நனவாக்கிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமைக்கு பெயர் பெற்ற சஞ்சு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தலைவரை சந்தித்தார். பின் தன் ட்விட்டரில் , “ஏழாவது வயதில் ரஜினி ரசிகன் நான் என பெற்றோரிடம் சொன்னேன் .. ஒரு நாள் நான் ரஜினி சாரை அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பேன் என கூறினேன் . 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாள் வந்துவிட்டது என நெகிழ்ச்சியாக பதிவிட்டார்.

Sensational Indian cricketer’s 21 year old dream of meeting Superstar Rajinikanth comes true

யார் சூப்பர் ஸ்டார்.? ஸ்ரேயா பதிலால் உஷாரான உபேந்திரா.; ‘கப்ஜா’ விழா சுவராஸ்யம்

யார் சூப்பர் ஸ்டார்.? ஸ்ரேயா பதிலால் உஷாரான உபேந்திரா.; ‘கப்ஜா’ விழா சுவராஸ்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Siddeshwara Enterprises & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”.

உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர்.

“கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது

நடிகை ஸ்ரேயா சரண் கூறியதாவது….

” சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷலாக தான் இருக்கும். இந்த கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன்.

இந்த படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துரு அவர்களுக்கு நன்றி. உபேந்திரா சார் போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மார்ச் 17 அன்று படம் வெளியாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். நன்றி ”

நடிகர் உபேந்திரா கூறியதாவது..,

“இந்த படத்தை வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ், GKM தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி.

இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. அவருடைய பெருங்கனவு இந்த படத்தின் டிரெய்லரில் தெரிகிறது.

இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். ” என்றார்.

இதன்பின்னர் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு ஸ்ரேயா மற்றும் உபேந்திரா இருவரும் பதில் அளித்தனர்.. அப்போது ரஜினி மற்றும் உபேந்திரா பற்றி கேள்வியை ஸ்ரேயாவிடம் கேட்டனர்.

அப்போது ரஜினி சூப்பர் ஸ்டார்.. உபேந்திரா ரியல் ஸ்டார் என்றார். அப்படி என்றால் இவர் மட்டும் தான் ரியல் ஸ்டார் என்ற சலசலப்பு ஏற்பட்டது.

இதனை புரிந்து கொண்ட உபேந்திரா.. “சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான்” என அந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகர்கள்

உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண்

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு நிறுவனம் – Sri Siddeshwara Enterprises & Invenio Origin
தயாரிப்பு – R.சந்துரு
இணை தயாரிப்பு – அலங்கார் பாண்டியன்
இயக்கம் – R.சந்துரு
ஒளிப்பதிவு – A. J. ஷெட்டி
எடிட்டிங் – தீபு S. குமார்
இசை – ரவி பஸ்ருர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Who is the superstar? Upendra alerted by Shreya’s reply.; ‘Kabzaa’ festival is interesting

More Articles
Follows