‘புஷ்பா’ பாடல்களை முனுமுனுத்த கமல்.; அதுவே பெரிய விருது என தேவிஸ்ரீ பிரசாத் பதிவு

‘புஷ்பா’ பாடல்களை முனுமுனுத்த கமல்.; அதுவே பெரிய விருது என தேவிஸ்ரீ பிரசாத் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஆகஸ்ட் 24ஆம் தேதி 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை ‘புஷ்பா’ படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் பெறுகிறார் என அறிவிக்கப்பட்டது.

‘கங்குபாய்’ படத்தில் நடித்ததற்காக ஆலியா பட் சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார் என அறிவிக்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது புஷ்பா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்திற்காக கீரவாணியும் பெறுகின்றனர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன்.

புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் @ThisIsDSP அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!

எனவே கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து புஷ்பா படத்தின் பாடல்களை நீங்கள் அடிக்கடி முணுமுணுப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தீர்கள். அதுவே எனக்கு பெரிய விருதாக இருந்தது” என தேவி ஸ்ரீ பிரசாத் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

Kamala wishes Devi Sri Prasad for National Award

தென்னிந்தியாவின் அனஸ்டாசியா ஸ்டீல்.; மசூம் சங்கர் கண்ணீரை பார்த்த 20 லட்சம் பேர்.;

தென்னிந்தியாவின் அனஸ்டாசியா ஸ்டீல்.; மசூம் சங்கர் கண்ணீரை பார்த்த 20 லட்சம் பேர்.;

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நடிப்பில் தயாரான ‘டிடி ரிட்டன்ஸ்’ எனும் திரைப்படத்தில் பிரெஞ்சு பெண் கிளாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மசூம் சங்கர்.

இணையத்தில் வைரலான இவருடைய நேர்காணல் ஒன்றின் மூலம் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

டெல்லியில் பிறந்த மசூம் சங்கர், ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார். அதன் போது தொகுப்பாளர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த இடத்திலேயே கிளிசரின் இல்லாமல் கண்ணீர் விட்டு அழும் படி கேட்டுக் கொண்டார்.

உடனேயே மாசூம் சங்கர் கண் சிமிட்டாமல் கிளிசரின் இல்லாமல் கண்ணீர் விட்டு அழுது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த காணொளி இதுவரை இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

அவரது ஆளுமை மற்றும் ஈடுபாடு குறித்து அறியப்பட்ட அந்த வீடியோவை பார்வையிட்ட பல சர்வதேச பார்வையாளர்கள்.. ’50 ஷேட்ஸ் ஆப் கிரே’ எனும் திரைப்படத்தில் நடிகை டகோட்டா ஜான்சன் நடித்த அனஸ்டாசியா ஸ்டீல் எனும் கதாபாத்திரத்தை நினைவு படுத்துவதாகவும், நீங்கள் அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தனர்.

ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான ‘நாகேஷ் திரையரங்கம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை மசூம் சங்கர்.. அப்படத்தைத் தொடர்ந்து ’90 எம்எல்’, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘டெடி’ மற்றும் ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘டி டி ரிட்டன்ஸ்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பணியாற்றுவது குறித்து கேட்டபோது…

”நான் தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக இருப்பதை மட்டும் நம்பவில்லை, என்னுள் ஒரு தமிழன் ஆன்மா இருக்கிறது என்று நான் உணர்கிறேன். அதனால் தான் நான் தமிழ் கற்றுக் கொள்வதை ஒரு குறிக்கோளாக கொண்டேன்.

மேலும் எனது கதாபாத்திரங்களுக்கு பின்னணி பேசுவதிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்‌. அதை நான் உறுதியாக நம்புகிறேன். மொழி தெரியாமல் நடிப்பது அநியாயம்” என்றார் நடிகை மசூம் சங்கர்.

இவர் நடிகை மட்டுமல்ல இயல்பிலேயே மிகவும் துணிச்சலான சாகச பெண்ணும் கூட. சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அசாதாரணமான சந்தர்ப்பங்களில் ஏதேனும் உடல் ரீதியான சவால்கள் வந்தால், அதனை எதிர்கொள்வதற்காக தற்காப்பு கலைகளிலும் பயிற்சி பெற்றிருக்கிறார் நடிகை மாசூம் சங்கர்.

தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல விரைவில் தெலுங்கு ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொள்ள தயாராகி வருகிறார். இது தொடர்பான முக்கியமான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. தெலுங்கு மொழியிலும் இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இவரே பின்னணி பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

DD returns fame Masoom Shankar new movie updates

இமான் இசையில் லோகேஷ் இயக்கும் திரில்லர் படம் அப்டேட்

இமான் இசையில் லோகேஷ் இயக்கும் திரில்லர் படம் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சுந்தர் சியிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘ஆக்ஷன்’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ்

லோகேஷ் அஜில்ஸ் தற்போது இயக்குனர் அறிமுகமாகி உருவாகும் படம் `லெவன்’.

‘சரபம்’, ‘சிவப்பு’, ‘பிரம்மன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக ரியா ஹரி நடிக்கிறார். அபிராமி, திலீபன், ரித்விகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லெவன்

இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை ஏ.ஆர். எண்டர்டைன்மெண்ட் சார்பில் அஜ்மல்கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகிறது.

இந்நிலையில், `லெவன்’ படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் படமாக தயாராகிறது” என்றார்.

லெவன்

Naveen Chandra takes the hero role in director Lokesh Ajls’s thriller movie ‘Eleven’

கௌதம் – சரத்குமார் இணைந்த ‘கிரிமினல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கௌதம் – சரத்குமார் இணைந்த ‘கிரிமினல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கிரிமினல்’ படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார் தக்ஷிணா மூர்த்தி. படத்தை பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி கூறுகையில்…

“எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்த போது, ஒன்றிரண்டு கதைகளை எழுதியிருந்தேன்.

அவற்றை நிறைவேற்றுவதற்கு நிறைய தடைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில், ஒரு டீக்கடையில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதுதான் ‘கிரிமினல்’ ஆரம்பித்த புள்ளி. தயாரிப்பாளர்களான பர்சா பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் ஆகியோர் இந்தக் கதையைக் கேட்டபோது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கதைக்குள் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் வர படம் இன்னும் பெரிதாகியது. படத்தில் எந்த விதத்திலும் தலையிடாமல் எனக்கு தேவையான சுதந்திரத்தைத் தயாரிப்பாளர்கள் கொடுத்தனர். மிகப் பெரிய பொருட்ச்செலவில் படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

அவர் தொடர்ந்து கூறும்போது…

“மதுரையை களமாகக் கொண்ட பல காதல் திரைப்படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் இருந்து ‘கிரிமினல்’ திரைப்படம் விதிவிலக்காக இருக்கும்.

நகரத்தில் நடக்கும் க்ரைம்-த்ரில்லரையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவும் படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்கு மறக்க முடியாத நினைவாக இருக்கும். இந்தப் படத்துக்காக மதுரையைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகளை சொந்தக் குரலில் நடிக்கவும், டப்பிங் செய்யவும் வைத்துள்ளோம்.

ஒரு வயதான பெண்மணி டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஆச்சரியமடைந்து…

’உண்மையிலேயே மதுரையில் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டார். படப்பிடிப்பின் போது எனக்கு இருந்த மன அழுத்தம் முழுவதும் அவரது பாராட்டு வார்த்தைகளால் காற்றில் மறைந்தது. திரையரங்குகளில் வெளியாகும் முன்பே படம் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்வையாளர்களுக்கும் சீக்கிரம் படத்தைக் காட்ட ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து இருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியிருக்க, ஒளிப்பதிவை பிரசன்னா எஸ் குமார் கையாண்டுள்ளார். படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கிரிமினல்

Gautham karthik and sarathkumar’s ‘Criminal’ movie first look release

JUST IN கேப்டனை இப்படி பார்க்க முடியல.; விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் ‘படைத்தலைவன்’ டைட்டில் ரிலீஸ்

JUST IN கேப்டனை இப்படி பார்க்க முடியல.; விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் ‘படைத்தலைவன்’ டைட்டில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் கேப்டன் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய முதல் படத்திலேயே நாயகனாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பல சமூக கருத்துள்ள படங்களில் நடித்து வந்த இவரை தொண்டர்கள் ஒரு தலைவனாகவே பார்த்தனர்.

இவரது படங்களில் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு அதிமுகவுக்கு அடுத்த கட்சியான திமுகவை வீழ்த்தி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆக உருவெடுத்தார் விஜயகாந்த்.

படைத்தலைவன்

அதன் பின்னர் இவரது உடல்நிலை பாதிக்கப்படவே தற்போது சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடி வருகின்றனர்.

விஜயகாந்த்

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீல் சேரில் அமர்ந்தவாறு ரசிகர்களையும் தேமுதிக தொண்டர்களையும் பார்த்து கை அசைத்தார் விஜயகாந்த். இதனால் அவரது தொண்டர்கள்.. “எங்கள் கேப்டனை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை. என கதறி அழுதனர்.

மேலும் தன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படைத்தலைவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் விஜயகாந்த்.

இளையராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை அன்பு என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.

படைத்தலைவன்

Padai Thalaivan title release on Vijayakanth birthday party

ஆஸ்கார் வின்னர் கீரவாணி இசையமைத்த ‘சந்திரமுகி 2’ பட பிரம்மாண்ட இசை வெளியீடு

ஆஸ்கார் வின்னர் கீரவாணி இசையமைத்த ‘சந்திரமுகி 2’ பட பிரம்மாண்ட இசை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘சந்திரமுகி- 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்து உள்ளது.

இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்தது.

raghava Lawrence’s ‘Chandramukhi 2’ audio launch to happen today

More Articles
Follows