முதன்முறையா காமெடி ஹாரர் படம்.; ரசம் சாதம் புடிக்கும்.; கங்கனா லக லக லக..

முதன்முறையா காமெடி ஹாரர் படம்.; ரசம் சாதம் புடிக்கும்.; கங்கனா லக லக லக..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.

பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ‘சந்திரமுகி 2’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ் குமரன், இயக்குநர் பி. வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரங்கள் மானசி, தீக்ஷா, நடிகர்கள் ரவி மரியா, விக்னேஷ், கூல் சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில்,…

‘ நான் முதன்முதலாக ‘சந்திரமுகி 2’ என்ற காமெடி ஹாரர் படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் இந்தி பதிப்பில் நான் பின்னணி பேசி இருக்கிறேன். பின்னணி பேசும்போது கடினமாகவும், சவாலாகவும் இருந்தது.

குறிப்பாக லக லக லக பேசும்போது. இந்தப் படத்தில் நடனம் ஆடி இருக்கிறேன். பேயாயாகவும் நடித்திருக்கிறேன்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை எனக்கு ரசம் சாதம் மிகவும் பிடிக்கும்.

ராகவா லாரன்ஸ் என்னை ‘ஹாய் கங்கு’ என்று அழைத்ததால், நான் அவரை ‘ஹாய் ராகு’ என அழைக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸ் செய்யும் சில குறும்புகள் ரசிக்கும் படி இருக்கும்.

ஜோக்குகள், குட்டிக்கதை என சொல்லி கலகலப்பாக வைத்திருப்பார். இந்தப் படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். மறக்க இயலாது ” என்றார்.

Kangana Ranawat speech at Chandramukhi 2 Trailer launch

‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட கூட்டணி மீண்டும் இணைந்தது

‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட கூட்டணி மீண்டும் இணைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது.

கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ் ரவியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு Production No. 2 என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், சுரேஷ் ரவி, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


,
இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா, பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா, கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

தொழில் நுட்ப குழு விபரம்…

இயக்கம் – K பாலையா
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – N R ரகுநந்தன்
படத்தொகுப்பு – தினேஷ் போனுராஜ்
கலை – C S பாலச்சந்தர்
ஆடை வடிவமைப்பாளர் – N J சத்யா
PRO – Sathish (AIM)

Kavalthurai Ungal Nanban Producer & Actor Collaborate Again

ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடியின் உறைய வைக்கும் ‘இறைவன்’

ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடியின் உறைய வைக்கும் ‘இறைவன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார்.

2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ் நடித்துள்ளார்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார்.

இயக்குநர் அகமதுவின் முந்தைய படங்களான ‘மனிதன்’, ‘என்றென்றும் புன்னகை’ ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு, புதிய ஜானரில் தனது இயக்கத் திறமையை நிரூபிக்கும்படி டிரெய்லர் அமைந்திருப்பது பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இதில் ஜெயம் ரவியுடன் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது. ராகுல் போஸ், நரேன், விஜயலட்சுமி, ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ் மற்றும் பல பிரபலமான நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

‘இறைவன்’ படம் செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

*தொழில்நுட்ப குழு விவரம்:*

தயாரிப்பு : சுதன் சுந்தரம் & ஜெயராம் . G,
எழுத்து மற்றும் இயக்கம்: ஐ. அகமது,
இசை : யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: ஹரி.கே.வேதாந்த்,
எடிட்டர் : ஜே.வி.மணிகண்ட பாலாஜி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஜாக்கி,
நிர்வாக தயாரிப்பாளர்: அருணாசலம்
சண்டைப் பயிற்சி: டான் அசோக்,
வசனம்: சச்சின், கார்த்திகேயன் சேதுராஜ்,
உடைகள்: அனு வர்தன் (நயன்தாரா),
பிரியா கரண் & பிரியா ஹரி,
விளம்பர வடிவமைப்புகள்: கோபி பிரசன்னா

Jayam Ravi Nayanthara starrer Iraivan trailer goes viral

மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றங்கள் நிகழும்.; நம்பிக்கையில் தங்கர்பச்சான்

மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றங்கள் நிகழும்.; நம்பிக்கையில் தங்கர்பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன.

படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன.

இதனால் நேற்று பல திரையரங்கங்கள் நிரம்பி இருக்கின்றன.

இன்றிலிருந்து கூடுதலான காட்சிகளை ஒதுக்கியதுடன் அதிகப்படியான காட்சிகளை குடும்பத்தினருடன் காண்பதற்கு வசதியாக 2.30, 6.30 காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை திரையிடாத பல ஊர்களிலும் நேற்றிலிருந்து புதிய அரங்கங்களில் படத்தை திரையிடத் தொடங்கி விட்டனர்.

எத்தகைய மாற்றங்களும் மக்கள் நினைத்தால் மட்டுமே நிகழும். ‘கருமேகங்கள் கலைகின்றன’ இப்பொழுது படம் பார்ப்பவர்களின் கைக்கு சென்றுவிட்டது.

யாருக்காக இப்படைப்பு உருவாக்கப்பட்டதோ அவர்கள் இனி இதைக் கொண்டு சென்று அனைவருக்கும் சேர்த்து விடுவார்கள் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.

– தங்கர் பச்சான்

தங்கர்பச்சான்

Change happens only when people think says thankarbachan

இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்.? சிவகார்த்திகேயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்.? சிவகார்த்திகேயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட ‘மாவீரன்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார்.

அப்போதே அவர் இது ‘எஸ் கே 21’ படத்திற்கான கெட்டப் என்று கூறி வந்தார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக தான் இந்த புதிய கெட்டப் என்று கூறி வந்தார். இதன் ஷூட்டிங் கடந்த சில தினங்களாகவே காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீர் சூட்டிங் முடிவடைந்தது என தெரிவித்திருந்தது படக்குழு.

அப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் தலைப்பாகை அணியவில்லை. மிலிட்டரி மேனாக சிவகார்த்திகேயன் நடிப்பதால் அதற்காக தலைமுடியை ஒட்ட வெட்டி உள்ளார்.

இதற்காகத்தான் இத்தனை நாள் இவ்வளவு பில்டப் கொடுத்தாரா சிவகார்த்திகேயன்? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Why so buildup for Sivakarthikeyan 21 movie getup

இசையமைப்பாளர் வீ. தஷி விபத்தில் மரணம்.; நடந்தது என்ன.? வாழ்க்கை குறிப்பு

இசையமைப்பாளர் வீ. தஷி விபத்தில் மரணம்.; நடந்தது என்ன.? வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சேஸிங்’, ஒத்த வீடு, ஆடவர், சாதனை பயணம் என நூற்றுக்கும் மேலான படங்களுக்கு இசையமைத்துள்ளார். நிறைய கவிஞர்கள், நிறைய பாடகர்களை உருவாக்கியவர்.

கேரளாவில் இருந்து காரில் சென்னைக்கு வரும் போது, கோயமுத்தூர் அருகே கார் டயர் வெடித்து, ஏற்பட்ட விபத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி மதியம் சம்பவ இடத்திலேயே காலமானார்.

வாழ்க்கை குறிப்பு…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாக்குடியில் வீரப்பன் என்கிற பாரதி மோகன் – ரத்தினம்மாள் தம்பதியின் மகனாக 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிறந்தார் சிவக்குமார்.

ஆரம்பப்பள்ளிக் கல்வியை வாட்டாக்குடியில் முடித்தவர், மேல்நிலைக் கல்வியை சென்னை ஆவிச்சி பள்ளியில் தொடர்ந்தார்.

அப்பா பாரதி மோகன் ‘யார் குற்றவாளி’, ‘அத்தான்’ ஆகிய படங்களைத் தயாரித்து, பாடல்கள் எழுதியவர். அவருடைய அறைத் தோழர்களாக இசையமைப்பாளர் ரவீந்திரன், பாடகர் ஜெயச்சந்திரன் மற்றும் நடன இயக்குநர் சலீம் ஆகியோர் இருந்தனர்.

ஸ்டுடியோக்களுக்கு அப்பா போகும்போது உடன் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார் சிவக்குமார்.

அப்பாவின் பரிந்துரையில் ரவீந்திரனிடம் மார்க்கிங் உதவியாளராகச் சேர்ந்தார். ஒரு படத்துக்கு பின்னணி இசை சேர்ப்பதற்கு, காட்சிகளை ஓடவிட்டு, எந்த இடத்திலிருந்து எதுவரை இசை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பு எழுதுவதுதான் மார்க்கரின் வேலை. அதில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றினார் சிவக்குமார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் குருநாதர் நித்யானந்தம் இவருக்கு கீபோர்டு வாசிக்க கற்றுக்கொடுத்தார். இளையராஜாவிடமிருந்த சக்திவேலிடம் ஆர்மோனியம் கற்றுக்கொண்டார்.

சலீல் சவுத்ரி, லக்ஷ்மிகாந்த்- பியாரிலால், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் ‘மியூசிக் மார்க்கர்’ பணியை 2000 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார் சிவக்குமார்.

ரவீந்திரன் மற்றும் ஸ்யாம் ஆகியோரின் மலையாளப் படங்களில் பணியாற்றியபோது குட்டி கிருஷ்ணன் என்கிற தயாரிப்பு நிர்வாகி அறிமுகமாகியிருக்கிறார். அவரது பரிந்துரையில் சிவக்குமாருக்கு கிடைத்த படம் ‘தந்த்ரா’.

அரவிந்த் ஆகாஷ்- ஸ்வேதா மேனன் நடித்த அந்தப்படத்தை கே.ஜே.போஸ் இயக்கியிருந்தார். அந்தப் படத்துக்கான பின்னணி இசைச்சேர்ப்பை ஒரு ரீல் மட்டும் பார்த்த இயக்குநர், ‘நான் அடுத்த வேலைகளைப் பார்க்கிறேன். உங்கள் விருப்பப்படி இசைப்பணியைச் செய்யுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அந்தப்படத்துக்கு டி.டி.எஸ் எஞ்சினியராக பணியாற்றிய அஜீத், ‘உங்களுக்கு விருது கிடைக்கும்’ என்று வாழ்த்தியிருக்கிறார். அவரது வாக்கு பலித்தது.

இசையமைத்த முதல் படத்துக்கே கேரள அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது சிவக்குமாருக்குக் கிடைத்தது. சினிமாவுக்காக வீ.தஷி என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

மலையாள முரளி நடித்த ‘அச்சன்டே பொன்னுமக்கள்’, மோகன்லால் நடித்த ‘பகவான்’, ‘கோபாலபுரம்’, ‘வெள்ளியங்காடி’, ‘குண்டாஸ்’, ‘டர்னிங் பாய்ண்ட்’ என 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தஷி.

இவரது ‘தந்த்ரா’ படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சந்திரன், ‘மாணவன் நினைத்தால்’ தமிழ்ப்படத்துக்கு இசையமைக்க இவரை நியமித்தார். அந்தப்படத்தில் மாணிக்க விநாயகம் பாடி, மணிவண்னன் நடித்த ‘காதல் கொள்ளாதே பூமணமே…’, சொர்ணலதா- சுபீஷ் பாடிய ‘பேரழகா உன் பேரழகா…’ பாடல்கள் பெயரை வாங்கிக் கொடுத்தன.

கோமளாவை மனைவியாக கைபிடித்த பிறகே தனது இசை வாழ்க்கையில் ஒளி தெரிந்ததாகக் குறிப்பிடுகிறார் தஷி. இரண்டு மகன்களில் ரங்கராஜ் பியானோவில் ஆறு டிகிரி முடித்துள்ளார். இன்னொரு மகன் கிரண், டிரம்ஸ் வாசித்து, பள்ளிக்கூடத்தில் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறார்.

இதுவரை 2400 தெய்வீக ஆல்பங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தஷி. 90 பாடகர்களையும், 80 பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. லைவ் ஆர்க்கெஸ்ட்ராதான் இசைக்கு உயிர் தரும் என்பது இவரது கருத்து.

தனது படங்களில் தில்ரூபா, சிதார், வீணை, தபேலா, டோலக், வயலின், எடக்கை, உடுக்கை ஆகிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி வருகிறார்.

சலீல் சவுத்ரியின் படத்துக்கு பணியாற்றியபோது, உணவு இடைவேளையில் அவரது ஆர்மோனியத்தை எடுத்து வாசித்திருக்கிறார் தஷி. அதைப் பார்த்துவிட்ட சலீல் சவுத்ரி, மறுநாள் அழைத்திருக்கிறார்.

பயந்துகொண்டே போனவரிடம், புதிய ஆர்மோனியப் பெட்டியைக் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார் சலீல். இன்றுவரை அந்த ஆர்மோனியத்தில்தான் இசைப்பணிகளைச் செய்கிறார் தஷி.

ஆர்.சி.சக்தி இயக்கிய ‘தாலிதானம்’ படத்துக்கு மார்க்கிங் பணி செய்தபோது, ‘படவா நீ நல்லா வருவே’ என்று பாராட்டியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

கார்த்திக் கார்டனில் நடந்த ஒலிப்பதிவுக்கு, சைக்கிள் மிதித்து வந்த களைப்போடும், வியர்வை முகத்தோடும் வந்துசேர்ந்த தஷியை ஒருமாதிரி பார்த்த லக்ஷ்மிகாந்த் – பியாரிலால், ஒரு ரீலுக்கு இவர் குறிப்பெடுத்த மார்க்கிங்கைப் பார்த்து, தோள்தட்டி பாராட்டியிருக்கிறார்கள்.

புகழேந்தியின் மேற்பார்வையில் இசைச்சேர்ப்பு நடத்தும் கே.வி.மகாதேவனுக்கு தபேலா மைக்கேல் மூலம் ஒரு படத்துக்குப் பணியாற்றி பாராட்டுகளை அள்ளியிருக்கிறார் இவர்.

இசையமைப்பாளர் சங்கத்திலிருந்து ‘கோல்டன் ஜூபிளி’ விருது வாங்கியிருக்கும் இவருக்கு, உலக பெண்கள் அமைப்பு ‘இசை அரசர்’ பட்டத்தை வழங்கியிருக்கிறது.

‘கருவறை’, ‘தீ விலங்கு’, ‘பயணங்கள் தொடரும்’, ‘காதல் தோழி’, ‘சங்கர் ஊர் ராஜபாளையம்’, ‘சக்ரவர்த்தி திருமகன்’. ‘ஒத்த வீடு’, ‘என் பெயர் குமாரசாமி’, ‘ஒளடதம்’, ‘அலையாத்தி காடு’, ‘அஸ்திரம்’, ‘பாதசாரிகள்’, ‘கல் பாலம்’, ‘நுகம்’, ‘பயம்’, ‘நீதான் ராஜா’, ‘‘படை சூழ வா’, ‘‘நானாக நானில்லை’, ‘அபூர்வ மகான்’ என வீ.தஷி பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

===================

கார் விபத்தில் காலமான தஷி அவர்களின் பேட்டி சுருக்கம்

வாட்டாகுடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம், மட்டுமல்லாது பிற நாட்டு மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளேன். நான் இசை அமைத்து 100 படங்களுக்கு மேல் வெளிவந்து விட்டன.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஒரியா, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அடங்கும். ஒரு மொழியில் இசை அமைத்திருந்தால் புகழும் பணமும் கிடைத்திருக்கும். நான் பல மொழிகளிலும் கால் பதித்ததனால் பணமும் புகழும் ஒரு சேர எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் நான் வருத்தப்படவில்லை.

இன்று வரை பக்தி மனம் கமழும் பாடல்கள் கொண்ட 2000 இசைத்தட்டுக்கள் (2000 ஆல்பம்) வெளியாகி உள்ளன. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், என்னுடைய பின்னணி இசை சேர்ப்பு தான். நான் மார்கிங்கில் மன்னன் என்று பெயர் பெற்றுள்ளேன்.

நான் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் ஷியாம்,ரவீந்திரன் மாஸ்டரில் இருந்து தொடங்கி, சலீல் சவுத்ரி, பரத்வாஜ் வரை எல்லாருமே இதை ஒப்புக் கொள்வார்கள். சுமார் 90 புது பாடகர்கள் (ஆண்,பெண் ) மற்றும் 160 கவிஞர்களை இந்த இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளேன்.

Music composer V. thashi died in car accident

More Articles
Follows